search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dravidian model"

    • அன்னைத்தமிழை அகற்ற திமுக அரசு முனைவது பெருங்கொடுமையாகும்.
    • தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமென்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தொல்லியல்துறை தொழில்நுட்பப் பணியாளர் தேர்வுக்கான புதிய அறிவிக்கையில் 'சமஸ்கிருதம்' தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சமஸ்கிருதம் தெரிந்திருப்பதுதான் தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய ஒரே தகுதியா? தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமா அல்லது சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இத்தகைய அறிவிக்கை யாருடைய உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது? மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலின் பேரில்தான் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா? அப்படியென்றால் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதுபோல் உண்மையிலேயே ராமரின் ஆட்சியின் நீட்சிதான் தற்போது நடைபெறும் திமுக ஆட்சியா? திராவிட மாடல் என்பது உண்மையிலேயே சமூகநீதியா? அல்லது மனுநீதியா?

    அதுமட்டுமின்றி தொல்லியல் பணிக்கு திராவிட மொழி தெரிந்திருக்க வேண்டுமென்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. அப்படி ஒரு மொழி இருக்கிறதா? தமிழ்மொழி என்று குறிப்பிடுவதில் தமிழ்நாடு அரசிற்கு என்ன தயக்கம்? என்ன தடை? திராவிட மொழி என்றால் அது எந்த மொழி என்பதை திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் முதலில் விளக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுக 6 முறை ஆட்சிக்கு வந்து, 54 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் தமிழ்நாட்டின் 'தமிழ்த்தெருக்களில் தமிழ் இல்லையென்று யாரும் கூறக்கூடாது' என்று ஒரு வெற்று அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்கள். தமிழ்த்தெருக்களில் தமிழ் வரவே இத்தனை ஆண்டுகாலம் ஆகியுள்ளது, அதுவும் இன்னும் முழுமையாக நிறைவேறியபாடில்லை. அதற்குள் தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து அன்னைத்தமிழை அகற்ற திமுக அரசு முனைவது பெருங்கொடுமையாகும். இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? 'எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!', 'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்!' என்பதெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் வெற்று முழக்கங்கள் என்பது இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நிறுவப்பட்டுள்ளது.

    ஆகவே, தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அறிவிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமென்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • வழக்கம் போல் கேலியும் கிண்டலும் பேசுவது தான் திராவிட மாடல்.
    • அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும் என்று யாரும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

    சென்னை:

    முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்த வர்களை தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறோம் என்று பெருமை பேசும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே கடந்த காலங்களில் திராவிட இயக்கத்தின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அன்று திராவிட இயக்கத்தின் தலைவர் பெரியார் சமூக நீதிக்கு அரசியலமைப்புச் சட்டம் எதிரானது என்று அதை எரித்தார்.

    அதன் பின்னர் வந்த முன்னாள் முதல்வர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கிழித்து அவமரியாதை செய்தார்கள். அன்றைய சூழ்நிலையில் அச்சம்பவத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டபோது நீதிமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கிழிக்கவில்லை காகிதத்தை தான் கிழித்தோம் என்று கூறி வெளிவந்த வரலாறும் உண்டு.

    அப்படிப்பட்ட வரலாற்றில் வந்த தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்று அரசியலமைப்பை காக்கப்போகிறோம் என்று கூறுவது வேடிக்கை.

    ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கள் பாராளுமன்றத்தில் நேரத்தை வீணடித்தார்கள், வெளிநடப்பு செய்தார்கள், வாக்குவாதம் செய்தார்கள், சபையில் கூச்சலிட்டார்கள், பாராளுமன்றத்திற்கு வெளியே சென்று மறியல் செய்தார்கள். இதைத்தவிர தமிழகத்திற்கு தி.மு.க. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் நலத்திட்டங்களுக்கு ஏதாவது செய்தார்களா?

    அதைத்தான் நான் முன்னரே கூறினேன் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறும் காதறுந்த ஊசிகள்... தைக்க உதவாது... குத்தத்தான் உதவும் என்று.

    அதைப்போல இன்றைக்கு வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வார்களே தவிர வழிநடத்த மாட்டார்கள்.

    பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நாட்டு பயணத்தின் போது நியூயார்க் நகரத்தில் ஆற்றிய உரையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறி அதற்கான பாதுகாப்பையும் நன் மதிப்பையும் உலகறிய செய்திருக்கிறார். இந்தியாவே கோவில் அரசியல் அமைப்பு சட்ட புத்தகமே புனித நூல் என்று கூறினார்.

    பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது மிகுந்த பெருமதிப்பும், மரியாதையும் வைத்துள்ளது உலகறிந்த செய்தி.

    இந்த முறை தேசிய ஜன நாயக கூட்டணி வெற்றி பெற்றால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்து மக்களை குழப்பி வாக்குகளை பெற்றுக்கொண்டு மக்களை சமாதானப் படுத்துவதற்காக இப்போது இது போன்ற பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

    எந்த நிகழ்விலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும் என்று யாரும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

    மோடி பிரதமராக பதவிஏற்கும் முன்னர் உள்ளார்த்த பூர்வமாக இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வணங்கியதை வழக்கம் போல் கேலியும் கிண்டலும் பேசுவது தான் திராவிட மாடல்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வரைபடங்கள் மூலம் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழ்நாடே முதலிடம்.
    • குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னனியில் உள்ளது.

    பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணிகள் சுகாதாரம், மகப்பேறுக்குப் பின் கவனிப்பு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், கணினி பொருள்கள் ஏற்றுமதி ஆகிய பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த மத்திய அரசின் அறிக்கைகள் அனைத்திலும் தமிழ்நாடே முதலிடம் என்று திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

    பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணி பெண்கள் சுகாதாரம் நிறுவனங்கள் வழங்கும் பயன்கள்.

    மகப்பேற்றுக்குபின் கவனிப்பு கணினி பொருள்கள் ஏற்றுமதி இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் மத்திய அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன.

    அவை அனைத்திலும் தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கைகளும் வரைபடங்களும் தெளிவு படுத்துகின்றன.

    ஏற்றுமதி ஆயத்த நிலைக்கான 2022 ஆம் ஆண்டின் குறியீடுகள் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது மாநில அரசுகள், ஒன்றிய நிர்வாகப் பகுதிகள் அனைத்தையும் குறித்த ஆய்வுகளில் நிதி ஆயோக் நிறுவனம் மாநில வாரியாக நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது,

    அந்த அறிக்கைகள், வரைபடங்கள் மூலம் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழ்நாடே முதலிடம் பெற்றுள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது.

    பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு குறித்த 2022 2023 ஆம் ஆண்டின் அறிக்கையை ஒன்றிய அரசின் தேசிய நிர்யாத் வெளியிட்டுள்ளது.

    இறக்குமதி ஏற்றுமதி பதிவுகள் குறித்து 2022, 2023ம் ஆண்டிற்கான விவரங்களை National Import Export Record for Yearly Analysis of Trade (NIRYAT) என்று ஒன்றிய அரசு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய நாடு முழுவதும் செய்துள்ள ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் மராட்டிய மாநிலத்தை அடுத்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம்

    கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம் தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில்: கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புடன் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் குஜராத் 12.72 புள்ளிகளையும்.

    பிகார் 29.75 புள்ளிகளையும், உத்தரப்பிரதேசம் 30.03 புள்ளிகளையும் பெற்று தமிழ்நாடே முதலிடம் என்பதைப் பறைசாற்றுகிறது. மருத்துவமனைகளில் மகப்பேறுகள் ஆண்டு வாரி சுகாதார ஆய்வு மக்கள் தொகை ஆணையர் மற்றும் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் முக்கியப் புள்ளியியல் பிரிவு ஆய்வுகளின்படி நாட்டி நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக்கூடியது தமிழ்நாட்டில் தான் அதிகம். 

    அதாவது 99 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது.

    குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னனியில் உள்ளது.

    மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீடுகள் பற்றிய ஆய்வில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 89.9 சதவீதங்களைப் பெற்று முன்னணி மாநிலமாகத் திகழ்வதாக கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் தொழில் வளர்ச்சி முதலான பிரிவுகளில் மாநிலங்களை முன்னேற்றுவதில் பெரிதும் துணைபுரிவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

    இதில் தமிழ்நாடு மாநிலம்தான் அதிக அளவில் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பெருக்கி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

    வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை இதைப் புலப்படுத்தியுள்ளது. மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன.

    இப்படி, தமிழ்நாடு எதிலும் முதலிடமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்புக்களையும் உள்ளடக்கி வளர்ச்சியை எய்தியுள்ளதாக ஒன்றிய அரசின் ஆவணங்களே இதற்கு சாட்சியாகும். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் தத்துவமே இந்தியாவின் எழுச்சிக்கு வழிகாட்டியாக விளங்குகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 'தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே!' என்று என்று எண்ணும் வகையிலான மக்கள் நலன் பேணும் ஆட்சியைக் கட்டமைத்து வருகிறோம்.
    • திராவிட மாடல் அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்களை வந்து சேர்வதை உறுதிசெய்திட ‘கள ஆய்வில் முதலமைச்சர்' என உங்கள் மாவட்டங்களுக்கு வந்தேன்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உங்களில் ஒருவனான என்னை, உங்களுக்கான ஒருவனாக உருவாக்கி முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வைத்தீர்கள்.

    நமக்கு வாக்களிக்காத மாற்றுச் சிந்தனை கொண்டோரும் 'தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே!' என்று என்று எண்ணும் வகையிலான மக்கள் நலன் பேணும் ஆட்சியைக் கட்டமைத்து வருகிறோம்.

    * கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    * விடியல் பயணம்

    * முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

    * புதுமைப்பெண் திட்டம்

    * இல்லம் தேடிக் கல்வி

    * இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48

    * நான் முதல்வன்

    - போன்ற நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்களை வந்து சேர்வதை உறுதிசெய்திட 'கள ஆய்வில் முதலமைச்சர்' என உங்கள் மாவட்டங்களுக்கு வந்தேன்.

    இதனை இன்னும் செம்மைப்படுத்திட வேண்டுமல்லவா!

    உங்களின் தேவைகளும் அரசின் சேவைகளும் ஒரு குடையின்கீழ் சந்தித்து விரைவில் தீர்வுகள் கிடைத்தால் அது திராவிட மாடல்-இன் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் என மின்னிடுமே!

    அப்படியான திட்டமாக உருப்பெறுகிறது மக்களுடன் முதல்வர் திட்டம்!

    இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கத் திங்களன்று கோவைக்கு வருகிறேன்...

    அமைச்சர் பெருமக்கள், மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு இந்தத் திட்டத்தின் பயன் மக்களைச் சென்றடைய உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    • கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
    • கல்விப் புரட்சியை ஏற்படுத்தியது தி.மு.க.–வோட ஆட்சி என்றார்.

    மதுரை

    மதுரை புதுநத்தம் சாலை–யில் ரூ.216 கோடி மதிப்பீட் டீல் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூல–கத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்துவைத் தார். அப்போது அவர் பேசி–யதாவது:-

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண் கள் என நான் அடிக்கடி சொல்வது, கல்வியும் சுகா–தாரமும்தான். அதனால் தான், கலைஞர் நூற்றாண்டு தொடக்கமான கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி அன்று கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவம–னையை சென்னை, சைதாப்பேட்டை, கிண்டியில் திறந்து வைத் தேன்.

    ஒரு மாதம் கழித்து ஜூலை 15 ஆம் நாளான இன்றைக்கு (நேற்று) கலை–ஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்தி–ருக்கின்றேன். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததை–யும் செய்வான் இந்த ஸ்டா–லின் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் சென்னையில் மருத்துவமனையும், மதுரை–யில் இந்த நூலகமும். இவை இரண்டும் திராவிட முன் னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்காத வாக்குறுதிகள்.

    தமிழ்நாட்டினுடைய தலைநகர் சென்னை என் றால், இந்த மதுரை, தமிழ் நாட்டினுடைய கலைநகர். தலைநகரில், தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணாவின் நூற்றாண்டில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் தந்தார் கலை–ஞர்.

    இன்று அந்த தலைவர் கலைஞரின் நூற்றாண்டில், இந்தக் கலைநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனும் தென் தமிழ்நாட்டின் அறி–வாலயத்தை நான் அமைத் திருக்கிறேன். இந்த நூல–கத்தை திறந்து வைக்கக்கூடிய பெரும் வாய்ப்பும், பெருமை–யும் எனக்கு கிடைத்திருப் பதை எண்ணி எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

    சங் கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மாமதுரையில் சங்ககால இலக்கியங்களை சாமானியருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சங்கத் தமிழ் இயற்றிய மாமதுரை–யில் நூலகம் வைக்காமல் வேறு எங்கு வைக்க முடியும்.

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொறுத்தவரைக் கும், குழந்தைகள் –மாண–வர்கள் போட்டித் தேர்வர் கள் – மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் பயன்பெ–றக்கூடிய வகையில் ஆறு தளங்கள் மூன்று லட்சம் புத்தகங்களைப் பெற்றிருக் கக்கூடிய இந்த நூலகத்திற்கு அறிவுத் தேடலுடன் நீங்கள் வரும்போது உங்களை அன்போடு வரவேற்க தலை–வர் கலைஞரே சிலை வடி–வமாக இங்கே காட்சிய–ளித் துக் கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தான் என்பதை யாரும் மறந்திடக்கூடாது. அதற்கு திராவிட இயக்கமும், தி.மு.க.வும்தான் காரணம். உங்களைப் போலவே, பள்ளியில் படிக்கின்றபோது தமிழ்ப் பற்று இருந்த–தால்தான் எழுத்தாற்றல் பெற்று, போராட்டக் குணத்தின் காரணமாக மிகப்பெரிய தலைவரானார் கலைஞர்.

    பள்ளியில் நன்றாகப் படி என்று அண்ணா சொன்னா–லும், கலைஞர் படித்தது என்னவோ, அண்ணாவின் கொள்கைப் பள்ளியிலும், பெரியாரின் போராட்ட கல்லூரியிலும்தான். அன் றை அரசியல் சூழலும் கலை–ஞருக்குள்ளே இருந்த போராளியும், அவர் விரும் பிய பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போன–தற்கு காரணம். ஆனால், கலைஞருக்குள்ளே இருந்த அந்தப் போராளிதான் இன்றைக்கு பலரும் படிக்க காரணம்.

    படிப்பை நாம் எல்லோ–ரும் அடையவேண்டும் என்ற தலைவர் கலை–ஞர் உருவாக்கியதுதான் இன் றைய நவீன தமிழ்நாடு. இன்றைக்கு தமிழ்நாட்டில் நீங்கள் பார்க்கின்ற பெரும் பாலானவை கலைஞரால் உருவாக்கப்பட்டவை. நவீன கலைஞரால் உருவாக்கப்பட் டது. ஒரு இனத்தின் வளர்ச் சிக்கு முதலில் தேவை கல்வி. அதை முத–லில் கொடுத்தது, திராவிட இயக் கத்தின் தாய்க்கட்சி–யான நீதிக்கட்சி. கல்விப் புரட் சியை ஏற்படுத்தியது தி.மு.க.–வோட ஆட்சி.

    தரமான கல்வி வழங்கு–வதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முத–லிடத்துக்கு முன்னேற வேண்டும் என்பதற்கான அனைத்து பணிகளையும் செய்து கொண்டு இருக்கி–றோம். இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், 'எண்ணும் எழுத்தும்' இயக் கம், பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய மாண–வர்களின் பசியை போக்க 'முதலமைச் சரின் காலை உணவுத்திட்டம்' என பல்வேறு திட்டங்கள பள்ளிக்கல்வித் துறை சார் பில் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

    அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் உயர்கல்வி படிக்க வேண்டுமென்று சொன்னால், அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற "புது–மைப்பெண் திட்டம்". வரு–கிற செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்த–நாளில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கப் போகிறோம்.

    தகுதியுடைய குடும்பத் தலை–விகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் போகிறது. உங்கள் குடும்பத்தில் உங்கள் அம்மாவே இதனை பெறு–வார்கள். இத்தனை ஆயிரம் கோடி மதிப்பிலான பெரிய சமூகநலத் திட்டம் இதுவரை இல்லை என்று சொல்கின்ற மாதிரி மாபெரும் திட்டமாக அந்தத் திட்டம் உருவாக்கப் பட இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    விழாவில் எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், தலைவர் ரோஷினி நாடார், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன்,

    மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்து–ராமன், மேலக்குயில்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபிரபு, அவைத் தலை–வர் பாலசுப்ரமணியன், பொருளாளர் சோமசுந்தர–பாண்டியன், மாவட்ட பிரதி–நிதி அழகு பாண்டி, இளை–ஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, பகுதி செயலாளர்கள் சசி–குமார், மருதுபாண்டி, ஒன்றிய சேர்மன் வீரரா–கவன், கிழக்கு மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இளங்கோ, வைகை மருது, மாநகர் மாவட்ட இளை–ஞரணி அமைப்பாளர் சௌந்தர், 92-வது வார்டு கவுன்சிலர் கருப்புசாமி, அரசு வக்கீல் ஸ்ரீதர், நியாய விலை கடை தொழிலாளர் சங்க தனுஷ்கோடி, பால–முருகன், மதுரை மாநகர் மாவட்ட 52-வது வார்டு தி.மு.க. விஜி என்ற விஜயகுமார்,

    ஒன்றிய சேர்மன் வேட்டையன், மதுரை மாநகர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் முத்துக்குமார், மதுரை மாநகர் மாவட்ட விளையாட் மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மணிகண் டன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராம பிரசாத், மாநில பொதுக்குழு உறுப்பி–னர் வைகை பரமன், ஊராட்சி தலைவர்கள் கவிப்பிரியா கணபதி, ஆனந்த், சரண்யா ராஜவேல், வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, துணைத்தலைவர் கார்த்திக், அலங்காநல்லூர் பேரூ–ராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, சோழவந் தான் பேரூராட்சி தலைவர் ஜெய–ராமன், துணைத்தலை–வர் லதா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை ஒட்டுமொத்தமாக சீரழிந்து போய் இருந்தது.
    • எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் உங்களின் கோரிக்கையை அரசு நிச்சயம் நிறைவேற்றித்தரும்.

    சென்னை:

    அடையாரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று, போக்குவரத்துத்துறை சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற, இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 414 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு, ஓய்வூதிய ஒப்படைப்பு உள்ளிட்ட பணப் பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை ஒட்டுமொத்தமாக சீரழிந்து போய் இருந்தது. இதை சீரமைக்கும் வகையில் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். போக்குவரத்துத்துறையில் முதலமைச்சர் வகுத்துக்கொடுக்கும் திட்டங்களை அமைச்சர் சிவசங்கர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். போக்குவரத்துத்துறையில் பல திட்டங்களை தொடங்கி வைக்கும் வாய்ப்பை அமைச்சர் சிவசங்கர் எனக்கு வழங்கியுள்ளார்.

    முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பணியாளர்களின் சம்பள விகிதம் சீர்குலைக்கப்பட்டது. இது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி பே-மெட்ரிக்ஸ் முறையில் தற்போது மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, போக்குவரத்து துறையில் பணிபுரிந்த 6 ஆயிரத்து 281 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்டவற்றை வழங்கிட உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக 3 ஆயிரத்து 414 பேருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட உள்ளது.

    இதன் அடையாளமாக 612 பேருக்கு இன்று ரூ.171 கோடியே 23 லட்சம் மதிப்பிலான பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சுகாதாரம், கல்வி போன்ற துறைகள் எப்படி மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறதோ அதுபோல போக்குவரத்துத்துறை மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறது. போக்குவரத்துத்துறை ஊழியர்களின் சிக்கல்களை சரிசெய்யும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

    தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக செவி சாய்த்து தீர்வு கண்டு வருகிறது. பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என்ற நமது திட்டத்தை கர்நாடகாவில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசும் அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் உங்களின் கோரிக்கையை அரசு நிச்சயம் நிறைவேற்றித்தரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி., த.வேலு எம்.எல்.ஏ., போக்குவரத்துத்துறை கூடுதல் செயலாளர் பணீந்திரரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.ஜெ.பிரபாகரன் தலைமை வகித்தார்.
    • திருப்புன்கூரில் திராவிட மாடல் அரசின் 2-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த திருப்புன்கூரில் திராவிட மாடல் அரசின் 2-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.ஜெ.பிரபாகரன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர்கள் இரா.முருகன், கே.சசிக்குமார்,மாவட்ட பிரதிநிதி விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் தியாக.விஜயேஸ்வரன், பேரூர் கழகச் செயலாளர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், கொள்ளிடம் ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சாமிநாதன் ஆகியோர் பேசினர். தலைமை கழக பேச்சாளர் தீக்கனல் என்.செல்வம் சிறப்புறையாற்றினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாட்டைத் தலைநிமிரவைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல, தமிழர் பெற்ற உணர்வு.
    • பேரறிஞர் பெருந்தகையின் லட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:

    நாம் செல்லுகின்ற திராவிட மாடல் பாதைக்கு பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று.

    "ஏ தாழ்ந்த தமிழகமே" எனத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைத் தலைநிமிரவைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல, தமிழர் பெற்ற உணர்வு. பேரறிஞர் பெருந்தகையின் லட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.



    • அடுத்த தேர்தலில் தி.மு.க. காணாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசினார்.
    • இந்த திராவிட மாடல் என்பது பூச்சாண்டி காட்டக்கூடிய வேலை.

    சிவகங்கை

    சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பங்கேற்று பேசியதாவது:-

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப அரசியல் செய்து வருகிறார். ஒரு சாதாரண எளிய தலித் தி.மு.க. தொண்டனை வருகிற 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா?

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தலைவராக ஒரு சாதாரண எளிய தொண்டன் கட்சியின் கிளை செயலாளரை ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா? அப்படி சொன்னால்தான் திராவிட மாடல் ஆகும். இந்த திராவிட மாடல் என்பது பூச்சாண்டி காட்டக்கூடிய வேலை.

    திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப அரசியல் செய்து வரும் தி.மு.க. அடுத்த தேர்தலில் காணா மல் போய்விடும்

    இவ்வாறு அவர் பேசி னார். இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, கருணாகரன், அருள்ஸ்டிபன், சிவாஜி , சிவசிவஸ்ரீதர், சேவியர், பழனிச்சாமி, கோபி, மண்டல தகவல் தொழி ல்நுட்ப இணை செயலாளர் தமிழ்செல்வன்.

    மகளிரணி செயலாளர் ஜாக்குலின், மாவட்ட மகளிரணி வெண்ணிலா சசிகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாலுகோட்டை மணிகண்டன், மணிமுத்து, பாசறை பொருளாளர் சரவணன்.

    பாசறை இணை செயலாளர் சதீஸ்பாலு, கவுன்சிலர்கள் ராபர்ட், கிருஷ்ணகுமார், தாமு, மாணவரணி நகரசெய லாளர் ராஜபாண்டி, பாசறை இணை செயலாளர் மோசஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திராவிட மாடல் என்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. மாடல் என்பது தமிழா?
    • திராவிட மாடலுக்கு நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை கூறினார்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அதன்பின், கன்னியாகுமரியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தூத்துக்குடியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டு வந்தார்.

    வரும் வழியில் அவர் நெல்லை விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவரை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்திருக்க வேண்டும்.

    திராவிட மாடல் என்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. மாடல் என்பது தமிழா?

    திராவிட மாடலுக்கு பதிலாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 3 லட்சம் பேர் பயனடைய இலக்கு
    • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி என்ற 'புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27' என்ற திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

    விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் கார்த்திகேயன் அமலு விஜயன் (குடியாத்தம்), மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் மாற்று கல்வி கொள்கை நுழைந்து விடக்கூடாது என்று முதல்வர் கற்றுத்தந்துள்ளார். திராவிட மாடல் என்பது அனைவரும் படிக்க வேண்டும் என்பதுதான். 2011-ம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் படித்த ஆண்கள் 86 சதவீதம் ஆகவும், பெண்கள் 73 சதவீதம் ஆகவும் இருந்தனர்.

    இதை அதிகரித்து காட்ட வேண்டும். எழுத்தறிவு பெறும் சமுதாயம் மேம்பட்ட சமுதாயமாக இருக்கும். வேலூர் மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் 10,820 பேருக்கு எழுத்தறிவு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் 2021-22 ஆம் ஆண்டில் 3 லட்சம் பேர் பயனடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை கடந்து 3.10 லட்சமாக எட்டப்பட்டுள்ளது. அதேபோல், 2022-23 -ம் ஆண்டின் இலக்காக 4.08 லட்சமாக இருக்கிறது. இதை 5 லட்சமாக மாற்றிக்காட்ட வேண்டும்.

    இதற்காக 9.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2025-ம் ஆண்டுக்குள் வெற்றிபெற்று தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்க வேண்டும். அதேபோல், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தையும் நிரூபித்துக்காட்ட வேண்டும். இதை ஆசிரியர்கள் தொண்டாக செய்து வெற்றிகரமான திட்டமாக மாற்ற வேண்டும்'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒரு நாள் கருத்தரங்கம் நடை பெற்றது.
    • திராவிட இயக்க வரலாறுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை தி.மு.க. இளைஞரணி சார்பில் உடுமலை ராசி திருமண மண்டபத்தில் 'திராவிட மாடல்' பயிற்சி பாசறை ஒரு நாள் கருத்தரங்கம் நடை பெற்றது.

    அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.ஜெயக்குமார் வரவேற்றார். இதில் திராவிட இயக்க வரலாறுகள் குறித்து பேராசிரியர் சபாபதி மோகன், பேராசிரியர் கான்ஸ்டைன், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன், தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த 420 பேர் கலந்து கொண்டனர்.

    ×