search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "election failure"

    • ஆலோசனைக் கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • மக்கள் மனதை வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று தொடங்கி உள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்பு தூர் பாராளுமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் சிவகங்கை, வேலூர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.

    மாலையில் திருவண்ணா மலை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். இந்த ஆலோசனையின் போது பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது ஏன்? என்பது பற்றி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டுள்ளார்.

    அப்போது பலர் காரசாரமாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகள் சிறப்பாக செயல்படாவிட்டால் பதவியில் நீடிக்க முடியாது என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

    எப்போதுமே நடந்து முடிந்த ஒரு விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்காமல் அடுத்து நடக்கப்போவதை பற்றியே சிந்திக்க வேண்டும்.

    இதன்படி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நமக்கெல்லாம் மிகவும் முக்கியமான தேர்தலாகும். அதில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் இப்போதே சிறப்பாக செயல்படத் தொடங்குங்கள்.

    கூட்டணி சரியாக அமையாத காரணத்தாலேயே தோற்றுப்போய் விட்டோம் என்று இங்கு பலரும் கூறியுள்ளீர்கள். வரும் காலங்களில் நீங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத வகையில் கட்சி உரிய முயற்சிகளை மேற்கொள்ளும்.

    நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நிச்சயமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    கீழ்மட்ட நிர்வாகிகளை மேல் மட்டத்தில் இருப்பவர்கள் அரவணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் கீழ்மட்ட நிர்வாகிகள் சுறுசுறுப்போடு பணியாற்றுவார்கள். மக்கள் மனதை வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

    • வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொகுதி வாரியாக ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.
    • ஒவ்வொரு நாளும் 2 முதல் 3 தொகுதி நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து வரும் 10ம் தேதி முதல் ஈபிஸ் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    அதன்படி, வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொகுதி வாரியாக ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.

    10ம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், 11ம் தேதி சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

    ஒவ்வொரு நாளும் 2 முதல் 3 தொகுதி நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.

    ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர், மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பொறுப்பாளர்களிடம் தோல்விக்கான காரணங்களை கேட்டறியவுள்ளார்.

    • தொகுதி வாரியாக ஆய்வு நடத்தும்படி மேலிடம் உத்தரவிட்டது.
    • அறிக்கை தயார் செய்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்குகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாதது கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் கூட 2-ம் இடத்தையே பெற்றது. ஏற்கனவே இந்த தொகுதிகளில் நடத்தி இருந்த தேர்தலுக்கு முந்தைய ஆய்வுகள், கணிப்புகள் எல்லாம் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருந்தும் அந்த தொகுதிகள் கை நழுவியது எப்படி? என்று மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

    இதையடுத்து தொகுதி வாரியாக ஆய்வு நடத்தும்படி மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் ஆய்வு நடந்தது.

    இந்த கூட்டங்களில் வேட்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் அழைக்கப்பட்டு காரணங்கள் கேட்கப்பட்டது.

    தென் சென்னையில் கனகசபாபதி முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது கட்சி தேர்தல் செலவுக்காக வழங்கிய பணத்தை முறையாக விநியோகிக்கவில்லை. கோஷ்டிகளால் தேர்தல் வேலைகளில் உள்ளடி வேலைகளும் நடந்தன என்று பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.

    இதனால் சில தொகுதிகளில் நிர்வாகிகளிடையே மோதல், கைகலப்பு வரை நடந்தது. மாநிலம் முழுவதும் நடத்தப்படும் இந்த ஆய்வு கூட்டம் நாளையுடன் முடிவடைகிறது. தொகுதி வாரியாக தோல்விக்கான காரணம், நிர்வாகிகள் செயல்பாடு பற்றிய விரிவான அறிக்கை தயார் செய்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்குகிறார்கள்.

    நாளை மறுநாள் (6-ந் தேதி) பா.ஜனதா மாநில செயற்குழுக் கூட்டம் மதுரவாயல் ஸ்ரீவாரி மண்டபத்தில் நடக்கிறது. இதில் மாநில நிர்வாகிகள், அணிகளின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மண்டலத் தலைவர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்திலும் தேர்தல் தோல்வி தொடர்பாக விவாதிக்க திட்டமிட்டு உள்ளார்கள்.

    செயற்குழு கூட்டத்துக்கு பிறகு மாவட்ட வாரியாக தேர்தல் பணியில் புகாருக்கு ஆளான நிர்வாகிகள் பதவிகளை பறிக்க திட்டமிட்டுள்ளனர். செயற்குழு முடிந்ததும் இந்த வேலைகள் தொடங்கும் என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.
    • மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தமிழக எல்லையோரம் உள்ள நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ரோஜா 3-வது முறையாக போட்டியிட்டார்.

    ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்த ரோஜாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என நகரி தொகுதியில் உள்ள அவருடைய சொந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனையும் மீறி ஜெகன்மோகன் ரெட்டி ரோஜாவுக்கு போட்டியிட வாய்ப்பளித்தார். நகரி தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ரோஜா பிரசாரம் செய்தார்.

    பிரசாரத்தின் போது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தார்.மேலும் அவர் தனது ஆட்சி காலத்திலும் சட்டமன்றம் மற்றும் பொதுக்கூட்டங்களிலும் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரை விமர்சித்து வந்தார்.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரிடம் 40 ஆயிரத்து 687 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா படுதோல்வி அடைந்தார்.

    ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நடிகை ரோஜாவுக்கு திருப்பதி மற்றும் நகரி ஆகிய இடங்களில் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் ஆந்திர மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் மோதல் காரணமாக தொடர்ந்து ஆந்திராவில் பதட்டம் நிலவுவதால் ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.

    அவர் தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மகன், மகளுடன் சென்னையில் உள்ள வீட்டில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    தேர்தல் தோல்வியால் ரோஜா ஆந்திராவில் உள்ள வீடுகளை காலி செய்து தமிழகத்துக்கு சென்றிருப்பது ஆந்திர மாநிலத்தில் பரப்பரப்பாக பேசப்படுகிறது.

    • பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளில் போட்டியிட்டது.
    • பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் தொடர்ந்து இருக்கும்.

    சென்னை:

    தேர்தலுக்கு தேர்தல் பா.ம.க. போடும் கூட்டணி கணக்கு அந்த கட்சிக்கு சில நேரங்களில் சாதகமாக அமைந்தாலும் பல நேரங்களில் பாதகமாக அமைந்து முதலுக்கே மோசம்போன கதையில் கட்சிக்கே சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தர்மபுரி தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் மற்ற கட்சிகளுக்கு போட்டியாகவே பா.ம.க. இல்லை.

    வாக்கு வங்கி அதிகம் உள்ள வடமாவட்ட தொகுதி களில் கூட பா.ம.க.வால் சாதிக்க முடியவில்லை. திண்டுக்கல் தவிர 9 தொகுதி களும் பா.ம.க.வுக்கு செல் வாக்கு மிக்க தொகுதிகள். இதில் காஞ்சீபுரத்தில் பா.ம.க. வேட்பாளர் ஜோதி 1 லட்சத்து 64 ஆயிரத்து 931 வாக்குகள் பெற்று 3-வது இடத்துக்கு சென்றார்.

    அரக்கோணம், ஆரணி, கடலூர் தொகுதிகளில் 3-வது இடத்துக்கு தள்ளப் பட்டது. கள்ளக்குறிச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகளை பெற்று 4-ம் இடத்தை பெற்றது.

    10 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க. 18 லட்சத்து 77 ஆயிரத்து 490 வாக்குகளை பெற்றது. போட்டியிட்ட 10 தொகுதி களில் 6 தொகுதிகளில் பா.ம.க. டெபாசிட்டையும் இழந்தது. அதே போல் வாக்கு வங்கியும் 4.33 சதவீதமாக குறைந்துள்ளது.

    1989-ம் ஆண்டு முதல் முறையாக பா.ம.க. பாராளு மன்ற தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்டது. தனித்து போட்டியிட்டு 5.82 சதவீதம் வாக்குகளை பெற்று யானை சின்னத்தையும் தக்க வைத்தது. அதன் பிறகு நடந்த தேர்தல்களில் வாக்கு சதவீதத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களால் யானை சின்னத்தை இழந்தது.

    2016 சட்டமன்ற தேர்த லில் தனித்து போட்டியிட்டது. 2019 பாராளுமன்ற தேர்தலி லும், 2021 சட்டமன்ற தேர்த லிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. இதில் 2019 பாராளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனாலும் 5.42 சதவீத வாக்கு வங்கியை தக்க வைத்து கொண்டது.

    கடந்த சட்டமன்ற தேர்த லில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிக ளில் வென்றது. ஆனால் வாக்கு சதவீதம் 3.8 சத வீதமாக குறைந்தது. இதற்கு காரணம் தேர்தலுக்கு தேர் தல் கூட்டணி மாறுவ தால் வன்னியர் சமூக ஓட்டு களும் முழுமையாக கிடைக்கவில்லை என்கி றார்கள்.

    இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர் தலில் யாருடன் கூட்டணி என்று எதிர்பார்த்த நிலையில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது.

    கூட்டணி விசயத்தில் அ.தி.மு.க.வுடன் செல்ல வேண்டும் என்ற கருத்து பா.ம.க.வினரிடம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்பட்ட வெறுப் பில்தான் சொந்த கட்சியினர் வாக்குகளே முழு அளவில் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் ஏற்க னவே மாநில கட்சி அங்கீகா ரத்தை இழந்த நிலையில் மாம்பழம் சின்னத்தையும் இழக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு கூறியதாவது:-

    பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் தொடர்ந்து இருக்கும். தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு விதி 1968-பத்தி 10-ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் தெளிவாக தெரிவித்துள்ளது.

    பதிவாகும் மொத்த வாக்குகளில் ஒரு சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குகளை பெற்றிருந்தால் அந்த கட்சி முன்பு பயன்படுத்திய சின்னத்தை தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதியோடு தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள எந்த தடையும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
    • அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

    மேலும் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், தேனி, ராமநாதபுரம், வேலூர், தென்சென்னை, புதுச்சேரி ஆகிய 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இதனால் தொண்டர்கள், நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் சேலம் வடக்கு தொகுதியை தவிர மற்ற 10 சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வசம் உள்ளது. அப்படி இருந்தும் சேலம் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றிருந்தார்.

    அதேபோல் கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் குறைந்த வாக்குகள் பெற்றிருந்தார்.

    இதையடுத்து முதல் கட்டமாக சேலம், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (8-ந்தேதி) ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இதில் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதனால் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி ஒரு இடம் கூட வெற்றி பெறாததால் சிறையில் உள்ள லாலு பிரசாத் யாதவ் சாப்பிட மறுத்து கண்ணீர் விட்டு அழுதார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா- நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கும் காங்கிரஸ்-லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணிக்கும் இடையே இந்த 40 தொகுதிகளிலும் கடும் போட்டி ஏற்பட்டது.

    இந்த 40 தொகுதிகளில் பாரதிய ஜனதா - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. ஒரே ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

    லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 19 இடங்களில் போட்டியிட்டும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாள் முதல் பாராளுமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி அலை வீசியபோது கூட ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இந்த தடவை ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அந்த கட்சியின் வரலாற்றில் பாராளுமன்ற தேர்தலில் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போனது இதுவே முதல் முறையாகும்.

    லாலு பிரசாத் யாதவின் மகன்கள் தேஜஸ்விக்கும், தேஜ்பிரதாப்புக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சிக்கு பீகாரில் கடும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. லாலுவின் மகன் மிசா கடும் தோல்வியை சந்தித்துள்ளார்.


    ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தற்போது மாட்டுத் தீவன ஊழலில் 14 ஆண்டுகள் தண்டனை பெற்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி ஜெயிலில் இருக்கிறார். பீகாரில் தனது கட்சி ஒரு இடம் கூட ஜெயிக்காமல் படுதோல்வி அடைந்ததை அறிந்ததும் அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

    பீகாரில் தீவிர அரசியலில் இருந்தவரை தனது கட்சி ஒரு தேர்தலில் கூட தோல்வி அடைந்தது இல்லை என்பதால் பாராளுமன்ற தேர்தல் தோல்வியை அவரால் ஜீரணிக்க இயலவில்லை. ஒரு நேரத்தில் பீகாரில் பெரும்பான்மையான தொகுதிகள் அவரது வசமே இருந்தன. சட்டசபையிலும் அவரது கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்தது.

    ஆனால் சட்டசபை தேர்தலிலும் சமீப காலமாக அவரது கட்சிக்கு இறங்கு முகம் ஏற்பட்டு உள்ளது. இதனால் லாலு பிரசாத் ஜெயிலுக்குள் தவித்தபடி உள்ளார். கடந்த 3 நாட்களாக அவர் மதியம் உணவு சாப்பிடாமல் தவிர்த்து வருகிறார். டாக்டர்கள் எவ்வளவோ வலியுறுத்தியும் அவர் மதிய உணவு சாப்பிடவில்லை.

    லாலு பிரசாத் யாதவுக்கு சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக அவர் மூன்று நேரமும் இன்சுலின் மருந்து எடுத்துக் கொள்கிறார். கடந்த 3 நாட்களாக அவர் மதிய உணவு சாப்பிடாததால் அவர் உடல்நிலையில் சற்று தளர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    ஜெயிலுக்குள் முன்பு எல்லாம் லாலு பிரசாத் கலகலப்பாக இருப்பார். பாராளுமன்ற தோல்விகாரணமாக அவர் அமைதியாகி விட்டார். பெரும்பாலான நேரங்களில் அவர் மவுனமாகவே இருக்கிறார்.

    இதனால் அவரது குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர். லாலுவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். என்றாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்காததால் லாலுவின் சோகம் ஜெயிலுக்குள் தொடர்கிறது.

    தேர்தல் தோல்வி குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிர்வாகிகளுடன் வருகிற 1-ந்தேதி ஆலோசனை நடத்துகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. படுதோல்வி அடைந்தது.

    அ.தி.மு.க. வாக்கு வங்கியை அ.ம.மு.க. பிரித்து நெருக்கடி கொடுக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அ.ம.மு.க. வால் எந்த நெருக்கடியும் கொடுக்க முடியவில்லை. அக்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டுகளை இழுந்தனர்.

    சட்டமன்ற இடைத்தேர்தலில் சாதிக்க வேண்டும் என்று அ.ம.மு.க.வின் எண்ணம் நிறைவேறவில்லை. இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிர்வாகிகளுடன் வருகிற 1-ந்தேதி ஆலோசனை நடத்துகிறார்.

    இதுகுறித்து அ.ம.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் தலைமையில் வருகிற ஜூன் 1-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை அசோக் நகர் நடேசன் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் கட்சி தலைமை கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×