search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fish"

    • பயனர்களின் தனித்திறமையை வெளிக்காட்டும் வீடியோக்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது.
    • வீடியோ வைரலாகி ஆயிரக்கணக்கானவர்களின் பார்வைகளையும், விருப்பங்களையும் குவித்து வருகிறது.

    சமூக வலைதளங்களில் நாள்தோறும் பரவி வரும் வித்தியாசமான வீடியோக்களில் சில வீடியோக்கள் பயனர்களை மிகவும் கவர்கின்றன.

    குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான பலரும் பகிரும் வீடியோக்களில் பயனர்களின் தனித்திறமையை வெளிக்காட்டும் வீடியோக்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது.

    அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு குளத்தில் இருந்து வாலிபர் ஒருவர் எந்த பொருளையும் பயன்படுத்தாமல் வெறும் கைகளால் மீன்களை பிடிக்கும் காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ வைரலாகி ஆயிரக்கணக்கானவர்களின் பார்வைகளையும், விருப்பங்களையும் குவித்து வருகிறது.

    • பாலூட்டும் தாய்மார்கள் உணவில் அதிகளவு கருப்பட்டியை சேர்த்து கொள்ளுங்கள்.
    • காய்கறிகள் சாப்பிடுவதை விட இறைச்சி வகைகளில் அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருக்கிறது.

    குழந்தைகளுக்கு எல்லா ஊட்டச்சத்துகளும் நிறைவாக கிடைக்கும் உணவு தாய்ப்பால் மட்டுமே. குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு தாய்ப்பால் தான். மற்ற உணவுகளை உண்ணும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மையான உணவாகும்.

    குறிப்பிட்ட காலம் வரை குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்டவது குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியமானது. தாயிடமிருந்து கிடைக்கும் இந்த இயற்கையான உணவு ஆரோக்கியம், குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒரு சிலருக்கு தாய்பால் சுரப்பதில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. எளிதில் சுரப்பை அதிகரிக்க சில உணவு முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதை பற்றி பார்ப்போம்.

    தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்க கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல், பட்டாணி மற்றும் பச்சை பயிறு, தட்டை பயிறு, இதுபோன்ற உணவுகளை ஊறவைத்து தாளித்து இதை சாப்பிட்டு வரலாம். இதில் ப்ரோட்டீன் சத்து அதிகமாக உள்ளதால் பால் சுரப்பி அதிகமாக ஆகும்.

    அதுமட்டும் அல்லாமல் நாட்டு கருது, வேகவைத்த வேர்க்கடலை இதெல்லாம் மாலை நேரத்தில் பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிட்டால் ப்ரோட்டீன் சத்து அதிகமாய் கிடைக்கும்.

    கீரையை சுத்தம் செய்து கைப்பிடி அளவு பாசிப்பருப்பை அதனுடன் வேக வைத்து கூட்டாக சாப்பிட்டு வந்தால் தாய்ப் பால் சுரக்கும்.


    தாய்ப்பால் அதிகமாக சுரக்க தாய்மார்கள் அனைவரும் மட்டன், சிக்கன், கருவாடு, மீன் போன்றவை சாப்பிட வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் அனைவரும் முட்டை, சிக்கன், குழம்பு மீன் முக்கியமாக சாப்பிட வேண்டும்.

    காய்கறிகள் சாப்பிடுவதை விட இறைச்சி வகைகளில் அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருக்கிறது. அதோடு சரியான தூக்கம் இல்லாமல் இருந்தாலும் பால் சுரக்கும் தன்மை இருக்காது. பகலில் கண்டிப்பாக தூங்கவேண்டும்.

    வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும். இது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.

    வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் முதலியவற்றை தினமும் உணவுடன் ஒரு வேளை சேர்த்துக் கொள்வது நல்லது.

    முருங்கைக்கீரையை கூட்டாகவோ, பொரியலாகவோ, சூப்பாகவோ ஏதோ ஒரு வகையில் சமைத்து சாப்பிடலாம். இதை சரியான முறையில் சமைக்காவிட்டால் வயிற்றுப் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

    பால் சுறா என்னும் கருவாடு (அ) மீன் மிகச்சிறந்த உணவு. தாய்ப்பால் கொடுப்பவர்கள் சமைத்த உடனே சாப்பிட வேண்டும் பதப்படுத்தி வைத்து சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.

    பால் சுரக்க என்ன உணவுகளை சாப்பிடவேண்டும் என்று யோசிக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் 500 மில்லி பாலினை உணவில் அவசியம் சேர்த்து கொள்ளுங்கள். இதனால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்.

    கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பாலை சுரக்க செய்வதுடன், இவற்றின் சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது.


    எனவே பாலூட்டும் தாய்மார்கள் உணவில் அதிகளவு கருப்பட்டியை சேர்த்து கொள்ளுங்கள்.

    கிழங்கு வகைகள் நல்லது தான் என்றாலும் குறைவாக சாப்பிடவும். அதிகம் சாப்பிட்டால் குழந்தைக்கு மந்தம் வரும்.

    தாய்ப்பால் உற்பத்தி குறைவிற்கு கால்சியம் குறைபாடும் ஒரு காரணம். இச்சத்தில் குறைபாடு இருந்தால் தாய்ப்பாலை வறட்சியடையச் செய்து விடும்.

    மன அழுத்தம் வந்தால் ஹார்மோன்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு இறுதியில் தாய்ப்பால் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மனதை ரிலாக்ஸாக, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது அவசியம்.

    அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகள், எண்ணெயில் பொரித்தவை மற்றும் செயற்கை நிறங்கள் மற்றும் ரசாயணக் கலவை சேர்த்த உணவுகளை தவிர்க்கவும். குறிப்பாக குளிர் பானங்களைத் தவிர்க்கவும். சீதாப்பழத்தை கண்டிப்பாக தவிர்க்கவும்.

    குழந்தையின் ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் போடும் முதல் அடித்தளம் இந்த தாய்ப்பாலில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அதனால் வீட்டில் உள்ள நம்முடைய ஆரோக்கியமான சமையல் மூலமாகவே தாய்ப்பாலை அதிகரிக்க செய்யலாம்.

    • சில குழந்தைகள் மீன் வறுதால்தான் சாப்பிடுவார்கள்.
    • வேகவைத்து சாப்பிடுவதுதான் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

    குழந்தைகளுக்கு முட்டை, மீன் போன்றவற்றை கொடுப்பதில் தாய்மார்களுக்கு பெரும் சாவாலாக உள்ளது. மீன் மற்றும் முட்டையில் அதிகப்படியாக சத்துக்கள் உள்ளன. சில குழந்தைகள் மீன் வறுதால்தான் சாப்பிடுவார்கள். ஆனால் மீன் வறுவலில் அதிக எண்ணெய் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். எந்த உணவாக இருந்தாலும் அதை வேகவைத்து சாப்பிடுவதுதான் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். அந்த வகையில் மீன் மற்றும் முட்டையை எப்படி குழந்தைகளுக்கு எளிய முறையில் செய்து கொடுக்கலாம் என்பதை பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை - 5

    சதை அதிகம் உள்ள மீன் - 3

    வெங்காயம் - 2

    தக்காளி - 2

    பச்சைமிளகாய் - 5

    கறிவேப்பிலை - 2 கொத்து

    எண்ணெய் - தேவையான அளவு

    சீரகம் - 1 ஸ்பூன்

    மிளகு தூள் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    • முதலில் நன்கு சதை பகுதி உள்ள மீனை சுத்தம் செய்து கொள்ளவும்

    • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    • இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்திருந்த மீன்களை வைத்து நன்கு ஆவி வரும் வரை (15 நிமிடம்) வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

    • வேக வைத்த மீன்களை எடுத்து பொடி பொடியாக மீன் முள்களை நீக்கிவிட்டு உதிர்த்து கொள்ளவும்.

    • ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சீரகம், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    • பின்னர் வதக்கிய இந்த கலவையுடன் உதிர்த்து வைத்துள்ள மீனை சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும்.

    • இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.

    • பின்னர் இந்த மீன் கலவையை தனியாக எடுத்து வைக்கவும்.

    • ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.

    • முட்டையுடன் தயாரித்து வைத்திருந்த முன் கலவையை சேர்த்து நன்கு டிப் செய்யவும்.

    • இதனுடன் முட்டைக்கு தேவையான உப்பு சேர்க்கவும்.

    • ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் நன்கு சூடு ஆனதும். சிறிது எண்ணெயை கல்லின் மீது பூசவும்.

    • பின்னர் முட்டை ஆம்லெட் செய்வதற்கான கலவையை எடுத்து கல்லில் ஊற்றவும்.

    • ஒரு புறம் வெந்தவுடன், மறுபுறம் திருப்பவும்.

    • இதோ இப்போது சுவையான ஃபிஷ் ஆம்லெட் ரெடி.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆரோக்கியமான உணவும் ஆகும்.

    • தொழிற்சாலை கழிவுநீர் கலந்த நீரால் அணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.
    • அணையில் மீதம் உள்ள மீன்களை பிடிக்க முடியாத அளவுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த மழைநீருடன், அங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ரசாயன கழிவுநீரும் சேர்ந்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன் நுரை பொங்க தண்ணீர் வந்தது.

    கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 15-ந் தேதி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைக்கு வந்தது. தொழிற்சாலை கழிவுநீர் கலந்த நீரால் அணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் மீன் பிடிப்பவர்கள் கவலை அடைந்தனர்.

    இந்த தண்ணீர் அணையின் ஷட்டர் பகுதி வரையில் சென்ற நிலையில் நேற்று காலை 7 டன் அளவிற்கு மீன்கள் அணையில் செத்து மிதந்தன. இதனால் கடும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:-

    கடந்த வாரம் அணைக்கு வந்த கழிவுநீர் கலந்த நீரால் மீன்கள் செத்தன. நேற்று முன்தினம் இரவிலும் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்தன. தற்போது யாருமே அணைக்கு செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அணையில் மீதம் உள்ள மீன்களை பிடிக்க முடியாத அளவுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மீன் பிடி தொழிலை நம்பி உள்ள 500-க்கும்மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இது தொடர்பாக மீன் வளத்துறை உதவி இயக்குனர் ரத்னம் கூறியதாவது:-

    ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் இறந்திருக்கலாம். அணையில் இருந்து நீரை எடுத்து ஆய்வுக்காக அனுப்பி உள்ளோம். ஆய்வு முடிவுக்கு பிறகே மீன்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.
    • கடந்த வாரத்தில் கிலோ ரூ.900-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.1300-க்கு விற்பனை ஆனது.

    ராயபுரம்:

    காசிமேட்டில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். வார விடுமுறை நாட்களில் காசிமேட்டில் மீன்வாங்க கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. தொடர்ந்து 61 நாட்கள் இது நடைமுறையில் இருக்கும். மீன்பிடி தடைகாலத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்பி வரத்தொடங்கி விட்டனர்.

    விசைப்படகு மீனவர்கள் சுமார் ஒருவாரம் முதல் 15 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி மீன்பிடிப்பது வழக்கம். எனவே குறைந்த அளவிலான விசைப்படகு மீனவர்களே கடலுக்குள் சென்று உள்ளனர்.

    மேலும் கடலுக்குள் சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்பி வரத் தொடங்கி உள்ளதால் விடுமுறை நாளான இன்று குறைந்த விசைப்படகுகளே திரும்பின. 80 முதல் 90 விசைப்படகுகள் மட்டுமே கரைக்கு திரும்பியதால் பெரிய வகை மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வரவில்லை. இதனால் மீன்விலை அதிகரித்தது.

    வருகிற 15-ந்தேதி முதல் மீன்பிடி தடை காலம் தொடங்கி விடும் என்பதால் விடுமுறை நாளான இன்று காசிமேட்டில் மீன் பிரியர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. எனினும் பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். சிறிய மீன்களும் விலை அதிகமாக இருந்தது. வஞ்சிரம், கொடுவா, கானாங்கத்தை, நண்டு, இறால் உள்ளிட்ட மீன்கள் மட்டும் விற்பனைக்கு இருந்தது.

    கடந்த வாரத்தில் கிலோ ரூ.900-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.1300-க்கு விற்பனை ஆனது. இதேபோல் ரூ.400-க்கு விற்பனை ஆன கொடுவா ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நண்டு-ரூ.450, இறால்-ரூ.500, நெத்திலி-ரூ.350, கானாங்கத்தை- ரூ.250-க்கு விற்கப்பட்டது. அடுத்த வாரம் முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்கிவிடும் என்பதால் மீன்விலை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    • தயிர் ஒரு குளிரூட்டியாக அறியப்படுகிறது.
    • மீனுடன் தயிர் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    கோடை காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கும், உடலில் குளிர்ச்சித்தன்மையை தக்கவைப்பதற்கும் பலரும் மதிய உணவுடன் தயிரையும் சேர்த்து உட்கொள்ள விரும்புவார்கள். தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் செரிமான செயல்பாட்டுக்கு உதவக்கூடியவை.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வைட்டமின்களும், தாதுக்களும் தயிரில் நிறைந்துள்ளன. உண்ணும் மற்ற உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகளையும் உடல் விரைவாக உறிஞ்சுவதற்கு தயிர் உதவும். அதே வேளையில் தயிருடன் சில உணவுகளை சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். தயிருடன் தவிர்க்கவேண்டிய அத்தகைய உணவுகளில் சில உங்கள் கவனத்திற்கு...

     மாம்பழம்:

    மாம்பழம் வெப்பத்தன்மை கொண்டது. தயிர் குளிரூட்டியாக அறியப்படுகிறது. இவை இரண்டையும் ஒன்றாக சேர்க்கும்போது செரிமான செயல்பாட்டில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். சரும பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். மேலும் இந்த இரண்டு உணவுகளும் சேர்ந்து உடலில் நச்சுகளை உண்டாக்கும்.

     பால்:

    பால் மற்றும் தயிரை சேர்த்து உட்கொள்வது அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த இரண்டு பால் பொருட்களிலும் கொழுப்பு மற்றும் புரதம் உள்ளன.

     மீன்:

    மீனுடன் தயிர் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை இரண்டும் புரதச்சத்து நிறைந்தவை. மீன் விலங்கு வகை புரதமாகவும், தயிர் காய்கறி வகை புரதமாகவும் கருதப்படுகிறது. இந்த இரண்டு புரதங்களும் ஒன்றாக இணைந்தால் அதனை ஜீரணிப்பது உடலுக்கு கடினமாகிவிடும். அத்துடன் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படும்.

     எண்ணெய் உணவுகள்:

    பூரி உள்பட எண்ணெயில் பொரித்த உணவுகளுடன் தயிர் சேர்த்து உட்கொள்வது, செரிமான செயல்முறையை மெதுவாக்கும். நாள் முழுவதும் சோம்பலாக உணர வைக்கும். அதனால் எண்ணெய் வகை உணவுகள் மற்றும் தயிரை ஒருபோதும் ஒன்றாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

     வெங்காயம்:

    மாம்பழத்தைப் போலவே, வெங்காயமும் இயற்கையாகவே சூடான பொருளாக அறியப்படுகிறது. இந்த இரண்டு உணவுகளையும் ஒன்றாக சேர்க்கும்போது பலருக்கு ஒவ்வாமை பிரச்சினைகளை உண்டாக்கும். சொறி, தோல் அழற்சி, சொரியாசிஸ் போன்ற தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

    • வாரம்தோறும் மீன் உணவு சாப்பிடுபவர்களில் அசாம் மற்றும் திரிபுரா ஆகிய 2 மாநிலங்களும் 69 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
    • பஞ்சாப்பில் கடந்த 15 ஆண்டுகளில் மீன் சாப்பிடுவது 3.9 சதவீதம் குறைந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தற்போது மீன் உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து மீன் உணவு சாப்பிடுபவர்கள் தொடர்பாக இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மற்றும் சர்வதேச மீன்கள் ஆமைப்பு ஆகியவை சமீபத்தில் புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. அந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த ஆய்வின்படி இந்திய மக்கள்தொகையில் 72.1 சதவீதம் மீன் உணவு சாப்பிடுவது தெரிய வந்துள்ளது. அதாவது இந்தியாவில் 96 கோடி பேர் மீன் உணவு சாப்பிடுகிறார்கள்.

    மேலும், தினமும் மீன் உணவு சாப்பிடுபவர்களில் கேரள மக்கள் 53.5 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளனர். கோவாவில் 36.2 சதவீதம் பேரும், மேற்கு வங்காளத்தில் 21.90 சதவீதம் பேரும், மணிப்பூரில் 19.70 சதவீதம் பேரும், அசாமில் 13.10 சதவீதம் பேரும், திரிபுராவில் 11.50 சதவீதம் பேரும் தினமும் மீன் உணவு சாப்பிடுகிறார்கள்.

    மேலும் வாரம்தோறும் மீன் உணவு சாப்பிடுபவர்களில் அசாம் மற்றும் திரிபுரா ஆகிய 2 மாநிலங்களும் 69 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஒடிசாவில் 66.8 சதவீதம் பேரும், மேற்கு வங்காளத்தில் 65.75 சதவீதம் பேரும், அருணாச்சல பிரதேசத்தில் 65.25 சதவீதம் பேரும், தமிழ்நாட்டில் 58.2 சதவீதம் பேரும் வாரம் ஒருமுறை மீன் உணவு சாப்பிடுகிறார்கள்.

    வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்கள், தமிழ்நாடு, கேரளா மற்றும் கோவாவில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மீன் நுகர்வோர் உள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மீன் நுகர்வு 20.9 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே சமயம் பஞ்சாப்பில் கடந்த 15 ஆண்டுகளில் மீன் சாப்பிடுவது 3.9 சதவீதம் குறைந்துள்ளது.

    மொத்த நுகர்வு விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே மீன் சாப்பிடுவதில் அதிக வித்தியாசம் உள்ளது. ஆண்கள் வெளியில் உள்ள ஓட்டல்களில் அதிகம் மீன் சாப்பிடுகிறார்கள். மேற்கு வங்காளம், கேரளா மற்றும் திரிபுரா போன்ற அதிக மீன் நுகர்வு விகிதங்களை கொண்ட மாநிலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் சம அளவிலேயே மீன் சாப்பிடுகிறார்கள்.

    ஆனாலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைந்த அளவிலேயே மீன் சாப்பிடுபவர்கள் உள்ளனர். மீன் சாப்பிடுபவர்களை கொண்ட 183 நாடுகளில், இந்தியா 129-வது இடத்தில் உள்ளது. ஆனாலும் உலகின் 3-வது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். உலக அளவில் மீன் உற்பத்தியில் இந்தியா சுமார் 8 சதவீதம் பங்கு வகிக்கிறது. மீன் வளர்ப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

    • விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது.
    • மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டிருக்கிறதா? மீன் விற்பனைக்கு தகுதியானதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரம் மற்றும் வடசேரி பகுதி மீன் மார்க்கெட்களில் கெட்டுப்போன, பார்மலின் கலந்து கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட்ட பார்மலின் கெமிக்கல் மனம் கொண்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.

    அந்த புகார் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நாகர்கோயில் மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமார பாண்டியன், சங்கரநாராயணன், மீன்வளத்துறை ஆய்வாளர் மரிய பிரான்ஸ்கோ விவின் மற்றும் மேற்பார்வையாளர் கார்த்தீபன், நாகர்கோவில் மாநகர மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் சத்யராஜ், மாதேவன் பிள்ளை ஆகியோர் கொண்ட குழுவினர் கணேசபுரம்-வடசேரி மீன் சந்தையில் விற்பனை செய்யப்படும் மீன்களை இன்று ஆய்வு செய்தனர்.

    விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது. மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டிருக்கிறதா? மீன் விற்பனைக்கு தகுதியானதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு சில வியாபாரிகள் உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற மீன்களை விற்பனை செய்திருந்தது தெரியவந்தது.

    அந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை மினி டெம்போவில் ஏற்றி கொண்டு சென்றனர். உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற கெட்டுப்போன சுமார் 230 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த மீன்களை சுண்ணாம்பு தூள் மற்றும் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டு மாநகராட்சி உரக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களில் பார்மலின் கெமிக்கல் தடவப்பட்ட மீன்கள் எதுவும் இல்லை என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
    • உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம் பட்டினம், தாழங்குடா, அக்கரைகோரி உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிரா மங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

    இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி பரபரப்பாக காணப்பட்டு வரும். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியா பாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்படும்.

    அதன்படி ஞாயிற்றுக் கிழமையான இன்று அதிகாலை முதலே துறைமுகத்தில் மீன் விற்பனை தொடங்கியது. வழக்கமாக 250 ரூபாய்க்கு விற்கப்படும் சங்கரா மீன் இன்று 450 ரூபாய்க்கும், சீலா மீன் 400 ரூபாய்க்கும், பாறை மீன் 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைக்கும், வஞ்சிரம் மீன் 800 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்கப்படும் கானாங்கத்தை கிலோ 200 ரூபாய்க்கும், 150 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படும் நெத்திலி மீன் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மீன் விலை அதிகரித்து காணப்பட்டாலும் விலை யை பொருட்படுத்தாமல் வியாபாரிகளும், பொது மக்களும் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.

    • கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது.
    • வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சென்னை:

    சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக மீன்வாங்க பொதுமக்கள் கூட்டம் அலை மோதும். இந்நிலையில், 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    விசைப் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினர். சுமார், 500-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர். மீனவர்களுக்கு கடலில் அதிக அளவு மீன்கள் கிடைத்ததால், காசிமேடு மீன் மார்க்கெட்டில் நேற்று மீன் விற்பனைகளை கட்டியது.

    வஞ்சிரம், வவ்வால், சீலா, பாறை, சூறை, பால் சுறா உள்ளிட்ட பெரிய வகை மீன்களும் மற்றும் சிறிய வகை மீன்களான சங்கரா, நண்டு, இறால், கானாங் கத்தை, நவரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களின் வரத்தும் அதிகமாக காணப்பட்டது. காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஏலம் முறையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் மீன்களின் விலையும் அதிகரித்தது.

    இதுவரை கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900 ஆக அதிகரித்தது. வெள்ளை நிற வவ்வால், கொடுவா மீன் ஆகியவை ரூ.600-க்கும், சிறிய வகை வவ்வால், சங்கரா மீன் ஆகியவை ரூ.500-க்கும், பாறை ரூ.400-க்கும், சீலா, இறால், நண்டு, கடமா பெரியது ஆகியவை தலா ரூ.300-க்கும், நவரை, கானாங்கத்தை, நெத்திலி மீன்கள் தலா ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து, காசிமேடு மீனவர்கள் கூறியதாவது:-

    விடுமுறை நாளான நேற்று மீன்களை வாங்க அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். இதனால், மீன்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது. கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. வாடிக்கையாளர்கள் மீன் வாங்க பயந்ததால் மீன்களை விலையை குறைத்து விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் மீன் விற்பனை அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த வாரத்தை விட நேற்று மீன் விலை அதிகமாக காணப்பட்டது. மீன்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • மீன் விலையும் கடந்த சில நாட்களாக கடுமையாக குறைந்து வருகிறது.
    • வஞ்சிரம், வவ்வால், சங்கரா, சீலா, இறால், நண்டு போன்றவை கடந்த வாரத்தை விட இன்று விலை மிக குறைவாக விற்கப்பட்டது.

    ராயபுரம்:

    சென்னை, காசிமேடு, நொச்சிக்குப்பம் உள்ளிட்ட மீன் மார்க்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக மீன் விற்பனை மிகவும் குறைந்து வருகிறது. எண்ணூர் பகுதியில் கடலில் எண்ணை கழிவு கலந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இதற்கு முன்பு ஒருமுறை கடலில் கச்சா எண்ணெய் கலந்த போதும் விற்பனை குறைந்து காணப்பட்டது. அப்போது மீன் உண்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு விற்பனை அதிகரித்தது. ஆனால் தற்போது அது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததால் பொதுமக்கள் பலர் மீன் வாங்க தயங்குகிறார்கள் என்று மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருவதாலும் மீன்வரத்து மற்றும் விற்பனை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் மீன் விலையும் கடந்த சில நாட்களாக கடுமையாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில் காசிமேடு மீன் பிடி துறைமுகத்துக்கு 200 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து இன்று அதிகாலையில் கரைக்கு திரும்பினர். ஞாயிற்றுக்கிழமையான இன்று கிருத்திகை மற்றும் பிரதோஷம் என்பதால் மீன் வரத்து குறைவாகவே இருந்தது. மேலும் மீன்கள் விலையும் மிக குறைவாக காணப்பட்டது. அதே நேரத்தில் இன்று மீன் வாங்க அதிக கூட்டம் காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், சங்கரா, சீலா, இறால், நண்டு போன்றவை கடந்த வாரத்தை விட இன்று விலை மிக குறைவாக விற்கப்பட்டது.

    கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்ற வஞ்சிரம் மீன் இன்று ரூ.350 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டது. கடந்த வாரம் ரூ.1,000-க்கு விற்கப்பட்ட வவ்வால் இன்று ரூ.200-க்கு விற்பனையானது. ரூ.500-க்கு விற்கப்பட்ட சங்கரா ரூ.100-க்கும், ரூ.450-க்கு விற்கப்பட்ட இறால் ரூ.200-க்கும், ரூ.600-க்கு விற்கப்பட்ட சீலா ரூ.300-க்கும், ரூ.300-க்கு விற்கப்பட்ட நண்டு ரூ.80 முதல் 90-க்கும் விற்கப் பட்டன. இந்த நிலையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் நாளை மீன்வரத்தும் அதிகமாக இருக்கும், மேலும் மீன் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    • அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்
    • நவீன மீன் அங்காடியில் நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலமாக புரட்டாசி என்பதால் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதி பெரிய மார்க்கெட்டில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது.

    அதன் வெளிப்பகுதியான நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில் வெளியூர்களில் இருந்து லாரிகளில் வரும் மீன்கள் இறக்கப்பட்டு காலை நேரத்தில் ஏலம் விடப்படும். சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி நேரு வீதியில் நடந்து வந்த மீன் ஏலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு கடந்த மாதம் 12-ந் தேதி மாற்றப்பட்டது.

    அது முதல் மீன் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை நவீன மீன் அங்காடியில் நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலமாக புரட்டாசி என்பதால் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடவில்லை. இதனால் நவீன மீன் அங்காடியில் மீன் வரத்து குறைவாக இருந்தது.

    புரட்டாசி மாதம் நேற்றுடன் முடிந்தது. இந்த நிலையில் இன்று புதன்கிழமை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடியில் மீன் வரத்து அதிகமாக இருந்தது. ஏராளமான வியா பாரிகள் குவிந்து மீன்களை வாங்கி சென்றனர். கொடுவா, சங்கரா, வாளை, வஞ்சிரம், வவ்வா, இறால், கனவா போன்ற மீன் வகைகள் அதிகளவில் வந்திருந்தது.

    அதே வேளையில் நவீன மீன் அங்காடி அசுத்தமான சூழலில் காணப்படுகிறது. மீன் கழிவு நீர் வெளியேற வாய்ப்பு இல்லாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருக்கிறது.நவீன மீன் அங்காடியின் ஐஸ் பிளான்ட்டில் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக மீன் வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    ×