search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fish Dead"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று காலை பத்தளம் அணைக்கட்டு மற்றும் கீழக்கரையில் அதிகளவில் மீன்கள் செத்து மிதந்தன.
    • பத்தளம் அணைக்கு அருகில் உள்ள ஆறுகள் கருப்பாக மாறி உள்ளது.

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பெரியாறு ஆற்றில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. திடீரென ஆற்றில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மீன்கள் உயிரிழப்புக்கு காரணம் அப்பகுதியில் உள்ள ஏலூர்-எடையார் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் என சந்தேகிக்கப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலை பத்தளம் அணைக்கட்டு மற்றும் கீழக்கரையில் அதிகளவில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் பெரியாற்றில் கூண்டு அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    கனமழையைத் தொடர்ந்து மே 20-ந்தேதி அணையின் ஷட்டர்கள் திறக்கப்பட்டதையடுத்து, பத்தளம் அணைக்கு அருகில் உள்ள ஆறுகள் கருப்பாக மாறி உள்ளது.

    கேரள தொழில்துறை அமைச்சர் ராஜீவ், பெரியாற்றில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


    • பெங்களூருவில் மழை பெய்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன் நுரை பொங்கியவாறு தண்ணீர் வந்துள்ளது.
    • கடந்த இரண்டு நாட்களாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து 560 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு இந்த ஆண்டில் கடந்த மார்ச் 9-ந் தேதி முதல், மார்ச் 25-ந் தேதி வரை இரண்டு முறை நீர்வரத்து முற்றிலும் நின்றது. மூன்றாவது முறையாக கடந்த மார்ச் 31-ந் தேதி முதல் மே 6-ந் தேதி வரை, 37 நாட்கள் நீர்வரத்து முற்றிலும் நின்றது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது.

    மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால், மே 7-ந் தேதி முதல் 9&ந் தேதி வரை மூன்று நாட்கள் அணைக்கு நீர்வரத்து இருந்த நிலையில் பின்னர் மழையின்றி நான்காவது முறையாக மே 10 முதல் நேற்று வரை 5 நாட்கள் நீர்வரத்து முற்றிலும் நின்றது.

    இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மழை பெய்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன் நுரை பொங்கியவாறு தண்ணீர் வந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து 560 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நீர் நேற்று காலை 1,126 கன அடியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வந்தடைந்தது. கடும் துர்நாற்றத்துடன் கழிவுநீர் கலந்து அணைக்கு நீர் வந்ததால், அணையின் மேல் பகுதியில் ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ எடை வரையில் வளர்ந்திருந்த மீன்கள் செத்து மிதந்தன. கெலவரப்பள்ளி அணையில் இருந்து வந்த அசுத்தமான நீரால், 3 டன் அளவிற்கு மீன்கள் இறந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் மீன்களை பிடித்து வரும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுற வாய்க்காலில் 12 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான 52 அடியில் நேற்று 40.20 அடியாக இருந்தது.

    • புகுஷிமா அணுமின் நிலையத்தின் கதிரியக்க கழிவுகள் கலந்ததால் மீன்கள் இறந்ததாக கூறப்பட்டது.
    • மீன்கள் இறந்தது குறித்து விசாரணை நடத்துவதற்காக அங்கு ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்பட்டனர்.

    டோக்கியோ:

    ஜப்பானுக்கு சொந்தமான ஹகோடேட் தீவு பிரபல சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு திடீரென ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கின. இதனையறிந்த மக்கள் அந்த மீன்களை சேகரித்து விற்பனை செய்ய தொடங்கினர். ஆனால் நேரம் செல்லச்செல்ல லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. எனவே புகுஷிமா அணுமின் நிலையத்தின் கதிரியக்க கழிவுகள் கலந்ததால் மீன்கள் இறந்ததாக கூறப்பட்டது. இதனால் அந்த மீன்களை சாப்பிட வேண்டாம் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தது.

    இதற்கிடையே மீன்கள் இறந்தது குறித்து விசாரணை நடத்துவதற்காக அங்கு ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர். அதன் முடிவு வெளிவந்த பின்னரே மீன்கள் இறந்ததற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    ×