search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gharke"

    • ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 28.2 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.
    • 2019 முதல் காஷ்மீரில் 65 சதவீத அரசுப் பணிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.

    ஜம்மு-காஷ்மீர்  தேர்தல் 

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ்- பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்கின்றன. பாஜகவும், மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் களத்தில் இருக்கின்றன. தேர்தல் தேதி நெருங்குவதால் பிரச்சாரக் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 4-ந் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி அண்ட் கம்பெனி

    காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்த பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. எனவே இந்த விவகாரம் பிரதான பிரச்சனையாக முன்னிறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை மோடி ஏமாற்றி வருவதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஏமாற்றுதல் என்பதே ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் விஷயத்தில் பாஜக கடைப்பிடிக்கும் ஒரே கொள்கை. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அண்ட் கம்பெனிக்கு இங்கிருந்து வெளியேறும் கதவை இளைஞர்கள் நிச்சயம் காண்பிப்பார்கள். கடந்த மார்ச் மாத நிலவரப்படி ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 28.2 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.

     

     

    2019 முதல் காஷ்மீரில் 65 சதவீத அரசுப் பணிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. பணியில் உள்ள 60,000 அரசு ஊழியர்களுக்கும் நாளொன்றுக்கு ரூ.300ம் என்ற வீதமே வருமானம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இருப்பினும் பலருக்கு பணி உறுதி செய்யப்படாமல் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றி வருகின்றனர். விவசாயம், மருத்துவம், என அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். 

    • 378 நாள் போராட்டத்தில் 700 சக விவசாயிகளைத் தியாகம் செய்த்தவர்கள் பலாத்கார வாதிகள் என்றும் அந்நிய நாட்டு சதிகாரர்கள் என்றும் பாஜக எம்.பி கூறுகிறார்
    • உயிரிழந்த விவசாயிகளுக்குப் பாராளுமன்ற அவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தக் கூட மோடி மறுத்துவிட்டார்.

    பாலியல் பலாத்காரங்களும் தூக்கில் தொங்கிய உடல்களும்

    பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டத்தை வங்கதேச வன்முறையோடு ஒப்பிட்டு பாஜக எம்.பி கங்கனா ரனாவத் சர்ச்சையில் சிக்கியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால், வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து தேசம் அறியாது. போராட்டத்தில் பாலியல் பலாத்காரங்களும், கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. எங்கும் சடலங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது, இல்லை என்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும்" என்று கங்கனா பேசியுள்ளார்.

     வெட்ட வெளிச்சம் 

    விரைவில் அரியானா சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் கங்கானாவின் இந்த கருத்துக்கு பாஜக மேலிடமே கண்டனம் தெரிவித்துள்ளது. தான் பேசியதற்கு கங்கனா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் கங்கானாவின் கருத்து பாஜகவின் விவசாயிகளுக்கு எதிரான மனநிலையை வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். 

     

    கீழ்த்தரமான கருத்து 

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டு எக்ஸ் தள பதிவில், அளித்த வாக்குறுதிகளை நிறவேற்றத் தவறிய மோடி அரசின் பிரச்சார இயந்திரம் விவசாயிகளை தொடர்ச்சியாக அவமானப் படுத்தி வருகிறது. தங்களின் 378 நாள் போராட்டத்தில் 700 சக விவசாயிகளைத் தியாகம் செய்த்தவர்கள் பலாத்கார வாதிகள் என்றும் அந்நிய நாட்டு சதிகாரர்கள் என்றும் ஒரு பாஜக எம்.பி கூறுவது பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டுள்ள மனநிலையை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

    இதுபோன்ற விவசாயிகளுக்கு எதிரான இதுபோன்ற கீழ்த்தரமான கருத்துக்கள் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட பெருத்த அவமானம் ஆகும். போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உருவாக்கிய கமிட்டி இன்னும் செயல்படாமல் உறைந்து கிடக்கிறது. இதுநாள் வரை தங்களின் நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை. உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இன்றைய தேதி வரை எந்த நிவாரணமும் வழங்கப்பட வில்லை. இதற்கெல்லாம் உச்சமாக விவசாயிகளைத் தவறாகச் சித்தரித்துக் கொண்டிருக்கிறது பாஜக என்று கடுமையாக சாடியுள்ளார்

     

    பாஜகவின் மரபணு

    கங்கனா ரணாவத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியே பாராளுமன்றத்தில் வைத்து விவசாயிகளை கிளர்ச்சிக்காரர்கள் என்றும் ஒட்டுண்ணிகள் என்றும் கீழ்த்தரமாகப் பேசினார். பொய்யான வாக்குறுதிகளால் விவசாயிகளை ஏமாற்ற முற்பட்டார். உயிரிழந்த விவசாயிகளுக்குப் பாராளுமன்ற அவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தக் கூட மோடி மறுத்துவிட்டார். எனவே மோடி அரசின் மரபணுவிலேயே ஊறியுள்ள இந்த விவசாய எதிர்ப்பு மனநிலை கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

    மதவாத ஆங்கிலேய கைக்கூலிகள் 

    கங்கனா ரணாவத்தின் இந்தக் கருத்துக்கு அகில இந்திய கிசான் சபா (ஏஐகேஎஸ்) விவசாய சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா, காலநிலை என எல்லாவற்றையும் தாண்டி விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 736 பேர் உயிர்த் தியாகம் செய்தனர். ஆனால் சுதந்திரப் போராட்டத்துக்குத் துரோகம் இழைத்து, ஆங்கிலேயர் பக்கம் நின்ற மதவாத கைக்கூலிகளுக்கு விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் தேசபக்தி குறித்து கேள்வியெழுப்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ள கருத்துகளுக்காகப் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர் தெரிவித்தார். 

    ×