search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HDFC"

    • இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணிக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை.
    • ஆக்சிஸ் வங்கியின் துணை நிறுவனம் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது.

    இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணங்காத காரணத்திற்காக ஹெச்.டி.எஃப்.சி. வங்கிற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்த ஆர்பிஐ, ஆக்சிஸ் வங்கிற்கு 1.92 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

    டெபாசிட் பணத்திற்கான வட்டி விகிதம், கடன் வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஏஜென்ட், கஸ்டமர் சர்வீஸ் ஆகியவற்றில் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு ஹெச்.டி.எஃப்.சி. வங்கி இணங்காதது தெரியவந்தது. 2002 மார்ச் 31, வங்கியின் நிதி நிலை தொடர்பாக ஆர்பிஐ ஆய்வில் இந்த குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது.

    ஹெச்.டி.எஃப்.சி. இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணிக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதை உறுதி செய்வதில் வங்கி தோல்வியடைந்து விட்டதாக ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

    ஆக்சிஸ் வங்கி தகுதியற்ற நிறுவனங்களுக்கு கணக்கு தொடங்கியது. தனிப்பட்ட வாடிக்கையாளர் அடையாளக் குறியீட்டிற்குப் பதிலாக பல வாடிக்கையாளர் அடையாளக் குறியீடுகளை வழங்கியது. 1.60 லட்சம் வரையிலான விவசாய கடன்களுக்கு பிணையம் (ஓரிரு வழக்கில்) ஏற்றுக் கொண்டது உள்ளிட்ட காரணத்திற்காக அபராதம் விதித்துள்ளது. மேலும், ஆக்சிஸ் வங்கியின் துணை நிறுவனம் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது. இது வங்கி நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படாத வணிகமாகும்.

    இந்த நடவடிக்கையானது சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 5-ம் தேதி காணாமல் போன எச்டிஎப்சி வங்கியின் துணைத்தலைவர் சித்தார்த் சங்வியின் உடல் மும்பை கல்யான் ஹாஜி மலாங் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. #HDFC
    மும்பை:

    மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கியின் துணை தலைவராக உள்ளவர் சித்தார்த் சங்கி. கடந்த 5-ம் தேதி மாயமான இவரை குடும்பத்தினரும், போலீசாரும் தேடி வந்த நிலையில், சிங்வியின் சடலம் மும்பை கல்யான் ஹாஜி மலாங் பகுதியில் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

    சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து விசாரணை நடத்திய போலீசார் சர்பராஸ் ஷேக் என்ற டாக்ஸி டிரைவரை கைது செய்தனர். சங்வியின் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் உத்தரவின் பெயரிலேயே சர்பராஸ், கொலையை செய்திருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதன் அடிப்படையில், சங்கி உடன் பணியாற்றும் சிலரையும் போலீசார் விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ளனர். கடந்த 2007-ம் ஆண்டில் வங்கியில் இணைந்த சங்வி, 10 ஆண்டுகளில் மூன்று புரமோஷன்களை பெற்று தற்போது துணை தலைவராக உள்ளார். இந்த வளர்ச்சி பிடிக்காமல் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
    ×