search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harmanpreet Singh"

    • பாரீஸ் ஒலிம்பிக் போட்டியுடன் மூத்த கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வு பெற்றார்.
    • அவருக்கு பதிலாக புதிய கோல் கீப்பராக கிரிஷன் பகதூர் பதாக் இடம் பிடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவில் உள்ள ஹூலன்பியர் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் போட்டியை நடத்தும் சீனா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

    இந்த போட்டி தொடரில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் செப்.8-ந்தேதி சீனாவுடன் மோதுகிறது. 9-ந்தேதி ஜப்பானுடனும், 11-ந் தேதி மலேசியாவுடனும், 12-ந்தேதி தென்கொரியாவுடனும், 14-ந்தேதி பரம எதிரி பாகிஸ்தானுடனும் மோதுகிறது.

    இந்த போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக தொடருகிறார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியுடன் மூத்த கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வு பெற்றதை அடுத்து எதிர்பார்த்தபடியே பிரதான கோல்கீப்பராக கிரிஷன் பகதூர் பதாக் இடம் பிடித்துள்ளார். மாற்று கோல் கீப்பராக சுரஜ் கர்கெரா அங்கம் வகிக்கிறார்.

    நடுகள வீரர் விவேக் சாகர் பிரசாத் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆடிய ஹர்திக் சிங், மன்தீப் சிங், லலித் உபாத்யாய், ஷம்ஷெர்சிங், குர்ஜந்த் சிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் அணியில் இடம் பெற்றிருந்த 10 வீரர்கள் நீடிக்கின்றனர்.

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

    கோல்கீப்பர்கள்: கிரிஷன் பகதூர் பதாக், சுரஜ் கர்கெரா, பின்களம்: ஜர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), ஜூக்ராஜ் சிங், சஞ்சய், சுமித், நடுகளம்: ராஜ்குமார் பால், நீலகண்ட ஷர்மா, விவேக் சாகர் பிரசாத் (துணை கேப்டன்), மன்பிரீத் சிங், முகமது, ரஹீல் முசீன், முன்களம்: அபிஷேக், சுக்ஜீத் சிங், அரைஜீத் சிங் ஹூன்டல், உத்தம் சிங், குர்ஜோத் சிங்.

    • பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது.
    • இந்தப் போட்டியின் 2 கோல்களையும் ஹர்மன்பிரித் சிங் அடித்து அசத்தினார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.

    இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது.

    இந்த இரண்டு கோல்களையும் கேப்டன் ஹர்மன்பிரித் சிங் அடித்தார்.

    இதன்மூலம் 3 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 7 புள்ளிகள் பெற்றுள்ளது. இதன்மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

    • பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.
    • போட்டியின் 22-வது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் லூகாஸ் அபாரமாக கோல் அடித்தார்.

    2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தமாக 12 அணிகள் பங்கேற்றன. இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் அடிக்க முடியாமல் இரு அணி வீரர்களும் திணறினர்.

    இந்த நிலையில் போட்டியின் 22-வது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் லூகாஸ் அபாரமாக கோல் அடிக்க அதனை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ் தடுக்க முடியவில்லை. இதையடுத்து அர்ஜென்டினா அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    இதனையடுத்து இந்திய அணி கடுமையாக போராடியும் முதல் பாதியில் அர்ஜென்டினாவால் கூட சமன் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் அர்ஜென்டினாவுக்கு ஒரு பெனால்டி ஸ்ட்ரோக் கிடைத்தது. அதனை அந்த அணி கோலாக மாற்ற தவறியது. இதனை அடுத்து கோல் கீப்பராக இருந்த ஸ்ரீஜேஸ் மாற்றப்பட்டார். இது இந்தியா எடுத்த தைரியமான முடிவாக பார்க்கப்பட்டது. போட்டி இந்தியாவின் கையை விட்டு நழுவ போகிறது என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கேப்டன் ஹர்மன் பிரீத்துக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

    இதனை அவர் கோலாக மாற்ற போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதன் மூலம் இரண்டு போட்டிகளில் விளையாடி நான்கு புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. பி பிரிவில் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியா முதல் இரண்டு இடங்களிலும் ஏ பிரிவில் நெதர்லாந்து பிரிட்டன் அணி முதல் இரண்டு இடங்களிலும் இருந்தது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி இருக்கிறது.
    • சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நமது அணி நன்றாக விளையாடி கோப்பையை வென்றது.

    பெங்களூரு:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகுவதற்காக பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் பயிற்சி பெற்று வந்த இந்திய ஹாக்கி அணி நேற்று விமானம் மூலம் சீனாவுக்கு புறப்பட்டு சென்றது.

    முன்னதாக இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அளித்த பேட்டியில், 'ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நமது அணி நன்றாக விளையாடி கோப்பையை வென்றது. அத்தகைய சிறந்த செயல்பாட்டை தொடர வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்களது பிரிவில் சில கடினமான அணிகள் இடம் பெற்று இருக்கின்றன. இருப்பினும் நாங்கள் சிறப்பாக தயாராகி இருப்பதால் பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறோம்' என்றார்.

    இதேபோல் துணைகேப்டன் ஹர்திக் சிங் கூறுகையில், 'ஆசிய போட்டிக்காக கடுமையான பயிற்சியை மேற்கொண்டு இருப்பதுடன் எல்லோரும் ஒரே இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம். நாங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நல்ல நிலையில் போட்டிக்கு செல்கிறோம். கடந்த சில மாதங்களை போல் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன் சீனாவில் இருந்து பதக்கத்துடன் திரும்புவதே எங்களது இலக்கு' என்றார்.

    ஆண்கள் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. சிங்கப்பூர், ஜப்பான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். 'பி' பிரிவில் தென்கொரியா, மலேசியா, சீனா, ஓமன், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 24-ந் தேதி உஸ்பெகிஸ்தானை (காலை 8.45 மணி) சந்திக்கிறது. அடுத்த ஆட்டங்களில் 26-ந் தேதி சிங்கப்பூரையும் (காலை 6.30 மணி), 28-ந் தேதி ஜப்பானையும் (மாலை 6.15 மணி), 30-ந் தேதி பாகிஸ்தானையும் (மாலை 6.15 மணி), அக்டோபர் 2-ந் தேதி வங்காளதேசத்தையும் (பகல் 1.15 மணி) எதிர்கொள்கிறது.

    ஆசிய விளையாட்டில் இந்திய ஹாக்கி அணி 3 முறை தங்கப்பதக்கமும், 9 முறை வெள்ளிப்பதக்கமும், 3 தடவை வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளது. இதில் கடைசியாக 2018-ம் ஆண்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றதும் அடங்கும்.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி வருமாறு:-

    கோல்கீப்பர்கள். ஸ்ரீஜேஷ், கிரிஷன் பஹதுர் பதக், பின்களம்: வருண்குமார், அமித் ரோஹிதாஸ், ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், சஞ்சய், நடுகளம்: நீலகண்ட ஷர்மா, ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், சுமித், ஷாம்ஷெர் சிங், முன்களம்: அபிஷேக், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், சுக்ஜீத் சிங், லலித்குமார் உபாத்யாய்.

    ×