search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Immanuvel Sekaran Memorial Day"

    • தீண்டாமையை ஒழிக்கவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று.
    • நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தீண்டாமையை ஒழிக்கவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று.

    நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம். சமத்துவமும் சமூக நல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பீகாரிலும், குஜராத்திலும் மதுவிலக்கு அமலில் இருக்கும்போது ஏன் தமிழகத்தில் இருக்கக்கூடாது.
    • திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    விழுப்புரம்:

    தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், செல்லூர் கிராம மக்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் விழுப்புரத்தில் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மது விலக்கை ஆதரிக்கின்றன.

    * பீகாரிலும், குஜராத்திலும் மதுவிலக்கு அமலில் இருக்கும்போது ஏன் தமிழகத்தில் இருக்கக்கூடாது.

    * மதுவிலக்கில் தமிழகம் ஏன் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கக்கூடாது.

    * மதுவிலக்கு என்ற குரலுக்கு எல்லா கட்சியினரும் ஆதரவு தர வேண்டும்.

    * மதுவிலக்கு கோரிக்கையை தமிழகத்தை ஆளும் திமுக அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும்.

    * திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    * அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்கும்போது மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம்?

    * மதுவிலக்கு என்பது திமுகவிற்கும் உடன்பாடான கருத்துதான்.

    * மதுவிலக்கு விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம்.

    * திமுகவுக்கு முரணான கருத்தை நாங்கள் சொல்லவில்லை. மக்களின் கோரிக்கையை தான் முன்வைக்கிறோம் என்று கூறினார்.

    • சுதந்திரப் போராட்டத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான சமூகப் போராட்டத்திலும் பெரும்பங்கு வகித்தவர் ஐயா இமானுவேல் சேகரன்.
    • ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்குவதை, அவரது நினைவு தின உறுதிமொழியாக ஏற்றுச் செயல்படுவோம்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ தள பதிவில் கூறியிருப்பதாவது:

    சுதந்திரப் போராட்டத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான சமூகப் போராட்டத்திலும் பெரும்பங்கு வகித்த ஐயா இமானுவேல் சேகரன் அவர்கள் நினைவு தினம் இன்று.

    ஒடுக்கப்பட்ட மக்கள், அரசியல் அதிகாரம் பெறவும், சமத்துவ சமூகம் உருவாகவும் போராடிய ஐயா இமானுவேல் சேகரன் அவர்களது நினைவைப் போற்றி வணங்குகிறோம்.

    அனைவரும் சமம் என்ற உயரிய லட்சியத்தைக் கொண்டு, ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்குவதை, அவரது நினைவு தின உறுதிமொழியாக ஏற்றுச் செயல்படுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேவேந்திரர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தீண்டாமையை எதிர்த்தவர்.
    • நீண்ட பயணத்திற்குப் பிறகு இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று பார்த்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சி.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில்,

    நாளை செப்டம்பர் 11...

    தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-ஆம் நினைவு நாள்!

    அதை நினைக்கும்போது எனது மனதில் பழைய நினைவுகள் நிழலாடுகின்றன.

    தியாகி இமானுவேல் சேகரனார் போற்றுதலுக்கு உரியவர்.

    ஆங்கிலம், இந்தி, ரஷிய மொழி உள்ளிட்ட 7 மொழிகளை கற்றறிந்தவர்.

    தேவேந்திரர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தீண்டாமையை எதிர்த்தவர். இவ்வளவு சிறப்பு மிக்க இவரது நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய நிகழ்வுகள் எதுவும் இல்லை என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை.

    அந்த நிலையை மாற்றி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை சீரமைத்து அங்கு முதன்முறையாக மரியாதை செலுத்தியது இந்த இராமதாசு தான். அதன்பிறகு தான் அங்கு மற்ற கட்சிகளின் தலைவர்கள் செல்லத் தொடங்கினார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய சில மாதங்களில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்காக மதுரை அனுப்பானடியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற என்னிடம் சிலர் இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று வரலாம் என்று கூறினார்கள். ஆனால், அங்கு செல்வது சரியானதல்ல என்று வேறு சிலர் கூறினார்கள். ஆனால், இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று வருவது என்று தீர்மானித்து விட்டேன். கூட்டம் முடிந்ததும் கட்சி நிர்வாகிகளுடன் இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு பயணித்தேன்.

    நானும், பா.ம.க. நிர்வாகிகளும் பரமக்குடி சென்றடைவதற்கு முன்பாகவே அங்குள்ள 5 முனை சாலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு விட்டனர். மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலருக்கு இது குறித்து தகவல் தெரியும் என்பதால் அவர்கள் தங்களின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து ஆட்களைக் கூட்டி விட்டனர். பரமக்குடியில் கூடி நின்றவர்களில் ஒரு பிரிவினர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அங்கிருந்தவர்களில் பலர் என் மகிழுந்தின் கார் மீது ஏறிக் கொண்டனர். எங்கள் மகிழுந்துகளைத் தொடர்ந்து ஏராளமான தானிகளிலும் பலர் அணிவகுத்து வந்தனர். அதனால் எங்களின் பயணம் அறிவிக்கப்படாத ஊர்வலமாகவே மாறி விட்டது.

    நீண்ட பயணத்திற்குப் பிறகு இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று பார்த்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சி. ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடிய அந்த மாவீரனின் நினைவிடம் பராமரிப்பின்றி கிடந்தது. அந்த இடத்தை நெருங்க முடியாதவாறு ஒரே துர்நாற்றம் வீசியது. கழிவு நீர் தேங்கிக் கிடந்தது. அந்த இடத்தில் பன்றிகளின் கழிவுகள் தான் நிரம்பிக் கிடந்தன. இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த எனது கண்களில் நினைவிடத்தின் அவலநிலையைக் கண்டு கண்ணீர் கசிந்தது.

    அந்த இடத்திலேயே இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை சீரமைக்க வேண்டும் என்று நினைத்தேன். உடனடியாக எனது சொந்தப் பணம் ரூ. 15 லட்சத்தை மதுரையைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகி ஒருவரிடம் கொடுத்து நினைவிடத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டேன். அந்த நிர்வாகியை பின்னாளில் வட தமிழகத்தில் உள்ள வந்தவாசி சட்டப்பேரவைத் தேர்தலில் நிறுத்தி, தேர்தலுக்கான செலவை முழுவதும் கட்சி சார்பில் செய்து அவரை சட்டப்பேரவை உறுப்பினராக்கி அழகு பார்த்தேன்.

    எனது சொந்தப் பணத்தில் இமானுவேல் சேகரனாரின் நினைவிடம் தூய்மைப்படுத்தப்பட்டு, கிரானைட் கற்கள் பொருத்தப்பட்டு அழகூட்டப்பட்டது. அதன்பின்னர் அடுத்து வந்த அவரது நினைவிடத்திற்கு சென்று நான் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்தினேன். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்று ஆணையிட்டேன். அதன்பிறகு தான் அவரது நினைவிடத்தில் மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள். இமானுவேல் சேகரனார் 1957-ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். அதன்பின் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் அஞ்சலி செலுத்தியதில்லை. அவரது நினைவிடத்தை நான் சீரமைத்து, மரியாதை செலுத்திய பிறகு தான் அங்கு மற்ற தலைவர்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள்.

    இதற்கெல்லாம் முன்பாகவே 29.02.1988-ஆம் நாள் புதுச்சேரியில் நடைபெற்ற வன்னியர் சங்கத்தின் மத்தியக் குழுக் கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தை இமானுவேல் தேவேந்திரர் மாவட்டம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி 17&ஆவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலில் வன்னியர் சங்கம் சார்பிலும், பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் நடத்தப்பட்ட அனைத்துக் கடிதத் தொடர்புகளிலும் இராமநாதபுரம் மாவட்டம் இமானுவேல் தேவேந்திரர் மாவட்டம் மாவட்டம் என்றே குறிப்பிடப்பட்டு வந்தது நினைவுகூரத் தக்கதாகும்.

    இந்த நினைவுகளுடன் தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-ஆம் நினைவு நாளில் அவருக்கு நான் வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர் கண்ட கனவுப்படியே தேவேந்திரகுல வேளாளர்களின் முழுமையான விடுதலைக்காக போராட அனைவரும் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

    இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையடுத்து பரமக்குடியில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். #ImmanuvelSekaran
    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு குருபூஜை விழா நடந்தது.

    காலை முதலே போலீசார் ஒதுக்கிய நேரத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் ராஜலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதில் அன்வர்ராஜா எம்.பி., மாவட்டச் செயலா ளர் எம்.ஏ. முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



    இதே போல் தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், சுப.த. திவாகர் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் குணா தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    காங்கிரஸ், தே.மு.தி.க., விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

    இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரமக்குடி மற்றும் முக்கிய பகுதிகளில் 6,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அஞ்சலி செலுத்த வந்தவர்களின் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. #ImmanuvelSekaran

    ×