search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jharkhand mlas"

    • நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது.
    • பா.ஜ.க. எம்.எல்.ஏவான ஜெய் பிரகாஷ் பாய் படேல் காங்கிரசில் இணைந்தார்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. முதல் மந்திரியாக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி 31-ம் தேதி நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது.

    இதனால் அவரது கட்சியின் சம்பாய் சோரன் முதல் மந்திரியாக பதவியேற்றார். இதற்கிடையே ஜார்க்கண்ட் ஐகோர்ட் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கியது. இதையடுத்து ஜாமினில் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.

    81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபை யில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 27 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 17 எம்.எல்.ஏ.க்கள், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 1 எம்.எல்.ஏ., பா.ஜனதாவுக்கு 24 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

    இதற்கிடையே, ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பில் நடத்தப்பட்டது. நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 45 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்ததால், ஹேமந்த் சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் மூலம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.வான லோபின் ஹெம்ப்ரோம் மற்றும் காங்கிரஸ் எம் எல் ஏவான ஜெய் பிரகாஷ் பாய் படேல் ஆகியோரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    ஜெய் பிரகாஷ் பாய் படேல் பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜார்கண்ட் அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா இழுத்து வருகிறது.
    • காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.

    புதுடெல்லி :

    ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்-ராஷ்டிரீய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    இதற்கிடையே, மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் நேற்று முன்தினம் மாலை, ஒரு கருப்பு நிற சொகுசு காரில் பணம் கடத்தப்படுவதாக அங்குள்ள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஹவுராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, உள்ளே ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சப், நமன் பிக்சல் கொங்காரி ஆகியோர் பயணம் செய்தனர்.

    காரை சோதனையிட்டபோது, கட்டுக்கட்டாக ஏராளமான பணம் சிக்கியது.

    3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் விசாரணைக்கு பிறகு நேற்று பிற்பகலில் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து பா.ஜனதாவை காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள 'டுவிட்டர்' பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா நடத்த திட்டமிட்டிருந்த 'ஆபரேஷன் தாமரை' திட்டம் அம்பலமாகி விட்டது. மராட்டிய மாநிலத்தில் ஆட்சியை கவிழ்த்ததுபோல், ஜார்கண்ட் மாநிலத்திலும் செய்வதுதான் டெல்லியில் உள்ள இருவரின் சதித்திட்டம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதுபோல், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் மந்திரி ஆலம்கிர் ஆலம் ராஞ்சியில் பேட்டி அளித்தபோது திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    ஜார்கண்ட் அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா இழுத்து வருகிறது. அங்கு பா.ஜனதா ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தால், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ரூ.10 கோடியும், மந்திரி பதவியும் அளிக்கப்படும் என்று மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மேற்கண்ட 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆசை காட்டுகிறார்கள்.

    இதுதொடர்பாக அவர்கள் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ. குமார் ஜெய்மங்கள், போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அருகில் இருந்த குமார் ஜெய்மங்களும் அதே கருத்தை தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தவறை மறைக்க போலீசில் அக்கட்சி பொய்ப்புகார் அளித்திருப்பதாக பா.ஜனதா மூத்த தலைவர் பாபுலால் மராண்டி பதில் அளித்துள்ளார்.

    பணம் கைப்பற்றப்பட்ட இடம், மேற்கு வங்காள மாநிலம் என்பதால், அந்த புகாரை மேற்கு வங்காளத்துக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

    இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் பணத்துடன் பிடிபட்ட ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும் காங்கிரஸ் மேலிடம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.

    ஜார்கண்ட் மாநிலத்துக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக கூறினார்.

    • மேற்குவங்காளத்தில் காரில் 50 லட்ச ரூபாய் பணத்துடன் ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் பிடிபட்டனர்.
    • அவர்கள் 3 பேரையும் கட்சியில் இருந்து காங்கிரஸ் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் முதல் மந்திரியாக செயல்பட்டு வருகிறார்.

    இதற்கிடையே, மேற்குவங்காள மாநிலத்தின் ஹவுராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காரில் மிகப்பெரிய அளவில் பணம் கொண்டு செல்லப்படுவதாக அம்மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்திய போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ராணிஹடி என்ற பகுதியில் வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தினர். அந்தக் காரில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சஷப், நமன் பிக்சல் கொங்கரி ஆகிய 3 பேர் பயணித்தது தெரியவந்தது.

    காரின் பின்பகுதியில் போலீசார் சோதனை நடத்தியபோது இருக்கைக்கு பின்னே கட்டுகட்டாக பணம் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பணத்தைக் கைப்பற்றிய போலீசார் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் உள்பட காரில் பயணித்த 5 பேரை கைது செய்தனர்.

    காரில் இருந்து மொத்தம் 50 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தப் பணம் யாரிடம் பெறப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், மேற்குவங்காளத்தில் காரில் பணத்துடன் பிடிபட்ட 3 எம்.எல்.ஏ.க்களையும் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஆனால், ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சித்து வருவதாகவும், இதற்காக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பா.ஜ.க. மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    ×