search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jharkhand assembly"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜார்க்கண்ட் சட்டசபையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், பா.ஜ.க.வும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சோரன் பதிலளிக்க மறுத்ததால் அதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பின.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கும் முன் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அதன்பின், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சில முக்கிய பிரச்சனைகள் தொடர்பான கேள்விகளுக்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் பதிலளிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் சட்டசபையில் பரபரப்பு நிலவியது.

    எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சோரன் பதிலளிக்க மறுத்ததையடுத்து, அதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பின.

    இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் நாளை பிற்பகல் 2 மணி வரை சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

    ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சபையை விட்டு வெளியேற மறுத்தனர். இதனால் அவர்களை சபை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.

    நேற்று இரவு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் சட்டசபையின் லாபியில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல்வர் பதவியை சம்பய் சோரன் கடந்த 3-ம் தேதி ராஜினாமா செய்தார்.
    • சுயேட்சை உறுப்பினர் சரயுராய் பங்கேற்கவில்லை.

    ராஞ்சி:

    ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்-மந்திரியாக இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனை நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ய முடிவு செய்தது.

    இதையடுத்து ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி 31-ந்தேதி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அன்றே அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. அவரது கட்சியை சேர்ந்த சம்பய் சோரன் முதல்வராக பதவியேற்றார். இதற்கிடையே ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு கடந்த மாதம் 28-ந்தேதி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியது.

    இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், முதல்வர் பதவியை சம்பய் சோரன் கடந்த 3-ம் தேதி ராஜினாமா செய்தார். அதன்பின் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

    இந்நிலையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபை யில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 27 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 17 எம்.எல்.ஏ.க்கள், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 1 எம்.எல்.ஏ., பா.ஜனதாவுக்கு 24 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

    நம்பிக்கைத் தீர்மானத்தை முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தாக்கல் செய்தார். நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஒரு மணி நேரத்தை சபாநாயகர் ரவீந்திரநாத் மஹ்தோ ஒதுக்கினார். இதையடுத்து விவாதம் நடந்தது.

    பின்னர் நடந்த வாக்கெடுப்பில் நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 45 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதையடுத்து ஹேமந்த் சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. சுயேட்சை உறுப்பினர் சரயுராய் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    • அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவு.
    • ஜார்கண்டில் முதல்வர் பதவியை தக்க வைத்தார் சம்பாய் சோரன்.

    ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை நிலக்கரி ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்தது.

    ஹேமந்த் சோரன் கைதான நிலையில், சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றார்.

    தொடர்ந்து, சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில், ஜார்க்ண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றுள்ளது.

    அதன்படி, ஜார்கண்ட் சட்டபேரவையில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், சம்பாய் சோரன் அரசுக்கு 47 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இதன்மூலம், முதல்வர் பதவியை தக்க வைத்தார் சம்பாய் சோரன்.

    • நாங்கள் கண்ணீர் வடிக்க மாட்டோம். சரியான நேரத்தில் பதிலடி கொடுப்போம்.
    • மத்திய அரசின் சதிக்குப் பிறகு எனது கைது நடவடிக்கையில் ராஜ்பவன் கருவியாக செயல்பட்டது.

    ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்தில் சம்பாய் சோரன், நம்பிக்கை வாக்கெடுப்பான தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அப்போது சம்பாய் சோரன் "ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்கண்ட் அரசை சீர்குலைக்க பா.ஜனதா முயற்சி செய்தது. பொய் வழக்குகளில் ஹேமந்த் சோரனை சிக்க வைக்க பா.ஜனதா விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது. என்னுடைய அரசு ஹேமந்த் சோரனின் நிர்வாகத்தில் 2-ம் பகுதி ஆகும்" என்றார்.

    ஹேமந்த் சோரன் பேசும்போது "நாங்கள் கண்ணீர் வடிக்க மாட்டோம். சரியான நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும். மத்திய அரசின் சதிக்குப் பிறகு எனது கைது நடவடிக்கையில் ராஜ்பவன் கருவியாக செயல்பட்டது.

    நான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31 இந்திய வரலாற்றில் கருப்பு நாள். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகுகிறேன். இதை பா.ஜனதாவுக்கு சவலாக விடுகிறேன்" என்றார்.

    • குஜராத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காங்கிரசார் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
    • ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்ததற்கு பாஜகதான் பொறுப்பு என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டினர்.

    ராஞ்சி:

    மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்துடன், அவர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரசார் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விவகாரம் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்ததற்கு பாஜகதான் பொறுப்பு என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.

    காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்களும் குரல் எழுப்பி, அவையின் மையப்பகுதிக்கு வந்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

    சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜார்கண்ட் சட்டசபையில் இன்று அமளி ஏற்பட்டது. #Agnivesh
    ராஞ்சி:

    சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜார்கண்ட் சட்டசபையில் இன்று அமளி ஏற்பட்டது.

    கொத்தடிமை முறை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூகச்சேவைகளில் ஈடுபட்டு வருபவர் சுனாமி அக்னிவேஷ்(79). சமீபகாலமாக இந்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இவர் பேசி வருவதாக இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் லதிபாராவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக  சுவாமி அக்னிவேஷ் இங்கு வந்திருந்தார்.

    பாக்கூர் பகுதியில் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து நேற்று காலை சுவாமி அக்னிவேஷ் வெளியே வந்தபோது அங்கு கூடியிருந்த, பா.ஜ.க இளைஞர் அணியினர், ஆர்.எஸ்.எஸ். விஷவ இந்து பரிஷத் அமைப்பினர் அவரை சரமாரியாக தாக்கினர். காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சுவாமி அக்னிவேஷ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தொண்டர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. ஜார்க்கண்டில் பழங்குடி மக்களை தூண்டிவிடும் கிறிஸ்தவ மிஷனரிகளுடன் சுவாமி அக்னிவேசுக்கு தொடர்புள்ளது என பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

    மாட்டிறைச்சி பற்றி கருத்து தெரிவிக்கும் அவர் சனாதன் தர்மத்துக்கு எதிராக செயல்படுவதாகவும் வலதுசாரி ஆர்வலர்கள்  குற்றம் சாட்டுகிறார்கள். அரியானா மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ.வான அக்னிவேஷ்  அரசியலில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக அம்மாநில மந்திரிசபையிலும் இடம் பெற்று இருந்தார்.

    மேலும், அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு குழுவிலும் இடம்பெற்றிருந்த அக்னிவேஷ் பா.ஜ.க.வினரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    இந்த பரபரப்பு ஜார்கண்ட் மாநில சட்டசபையிலும் இன்று எதிரொலித்தது. இந்த சம்பவம் தொடர்பாக விவாதிப்பதற்காக அவையில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா எம்.எல்.ஏ. பிரதிப் யாதவ்  தாக்கல் செய்தார். ஆனால், இதனை ஏற்க சபாநாயகர் தினேஷ் ஓரவுன் மறுத்து விட்டார்.

    அக்னிவேஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்று ஜனநாயகத்தின் மாண்பை சிதைக்கும் சம்பவங்கள் இனியும் இம்மாநிலத்தில் நடக்க கூடாது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைத்து முதல் மந்திரி ரகுபர் தாஸ், உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி நில்காந்த் சிங் முன்டா குறிப்பிட்டார்.

    எனினும், இந்த பதிலால் சமாதானம் அடையாத எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அவையில் கூச்சலிட்டவாறு சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர்.

    அக்னிவேஷ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எதிர்கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதனால் பொறுமை இழந்த மந்திரி நில்காந்த் சிங் முன்டா, இந்த விவகாரத்துகாக இவ்வளவு அமளி செய்யும் நீங்கள், கடந்த மாதம் குந்தியில் நடந்த கூட்டுக் கற்பழிப்பு சம்பவத்தின்போது எங்கே சென்றீர்கள்? என்று காட்டமாக கேட்டார்.

    இதனால் ஆவேசம் அடைந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பதாகைகளை ஏந்தியவாறு நின்று அமளியில் ஈடுபட்டனர்.

    இதைதொடர்ந்து அவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

    பின்னர், சட்டசபை வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கிராமப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி சி.பி. சிங் சுவாமி அக்னிவேஷ் ஒரு மோசடிப் பேர்வழி, வெளிநாட்டு உளவாளி என்று குற்றம்சாட்டினார்.

    இதற்கிடையே, ஜார்கண்ட் கவர்னரை சந்திக்கப் போவதாக முன்னர் திட்டமிட்டிருந்த சுவாமி அக்னிவேஷ், அந்த சந்திப்பை ரத்து செய்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளார். #Agnivesh
    ×