search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "K kavitha"

    • பா.ஜ.க.-வுக்கும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கவிதாவுக்கு ஜாமின்- ரேவந்த் ரெட்டி.
    • அரசியல் காரணங்களுக்காக உத்தரவு பிறப்பிக்கிறோம் என எப்படி சொல்ல முடியும்?- உச்சநீதிமன்ற நீதிபதி.

    ஒரு முதல் மந்திரி இப்படி பேசலாமா? நீதித்துறையை மதிக்காவிடில் விசாரணையை வேறு எங்கேயாவது மாற்றுவோம் என உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்தள்ளார்.

    டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் பாரத் ராஷ்டிரிய சமிதியைச் சேர்ந்த கவிதாவுக்கு (சந்திரசேகர ராவ் மகள்) உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கவிதா திகார் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    கவிதாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி "பா.ஜ.க.-வுக்கும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கவிதாவுக்கு ஜாமின் கிடைத்தது'' எனக் கூறியிருந்தார்.

    இதற்கிடையே ரேவ்ந்த் ரெட்டி, கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தபோது தெலுங்கானா சட்ட மேலவைக்கு நடந்த தேர்தலின்போது ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த வழக்கை மத்திய பிரதேச மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.கே. மிஸ்ரா, கே.வி. விஸ்வநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.

    அப்போது, ரேவந்த் ரெட்டியின் கருத்து குறித்து நீதிபதி கவாய் கூறியதாவது:-

    ரேவந்த் ரெட்டி என்ன சொன்னார் என்பதை படித்து பார்த்தீர்களா? முதல்வரின் இத்தகைய அறிக்கைகள் ஒரு அச்சத்தை ஏற்படுத்தக்கூடும். அரசியல்வாதிகளுக்கும் நீதித்துறையில் உள்ளவர்களுக்கும் பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். அரசியல்சாசன பதவியில் இருக்கும் ஒருவர் கூறலாமா? அரசியல் காரணங்களுக்காக உத்தரவு பிறப்பிக்கிறோம் என எப்படி சொல்ல முடியும்? நீதித்துறையை மதிக்காவிட்டால், விசாரணையை வேறு எங்காவது மாற்றுவோம். நாட்டில் உச்சபட்ச நீதிமன்றம் இதுதான்.

    இவ்வாறு நீதிபதி கவான் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    "நான் நீதித்துறை செயல்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். எனது அறிக்கைக்காக நிபந்தனையின்றி எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நீதித்துறை மற்றும் அதன் சுதந்திரத்தின் மீது எனக்கு நிபந்தனையற்ற மரியாதையும் உயர்ந்த மரியாதையும் உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் நெறிமுறைகள் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட நான், நீதித்துறையை அதன் மிக உயர்ந்த மதிப்பாகக் கருதுகிறேன்" என ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • கடந்த மார்ச் 15-ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது.
    • கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சி.பி.ஐ.யும் திகார் சிறையில் வைத்து கவிதாவை கைது செய்தது.

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தெலுங்கானா மாநிலத்தின் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த இரண்டு வழக்குகளில் கடந்த மார்ச் 15-ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் திகார் சிறையில் இருந்தார். கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சி.பி.ஐ.யும் திகார் சிறையில் வைத்து கைது செய்தது.

    இதனையடுத்து ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கவிதா மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது அவரது ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில் அமலாக்கத்துறை, சிபிஐ தொடர்ந்த 2 வழக்குகளில் இருந்தும் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கவிதா மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கவிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆஜரானார்.

    இதே வழக்கில் கைதான ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியாவிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது, அதே போல் கவிதாவிற்கும் ஜாமின் வழங்கவேண்டும் என்று அவர் வாதிட்டார்.

    கவிதா ஏற்கனவே 5 மாதங்கள் சிறையில் உள்ளார். விசாரணை காவல் அவருக்கு தண்டனையாக மாறக்கூடாது என்று கூறி கவிதாவிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    • டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா திகார் சிறையில் உள்ளார்.
    • முன்னாள் முதல் மந்திரி மகளான கவிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தெலுங்கானா மாநிலத்தின் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த இரண்டு வழக்குகளில் கடந்த மார்ச் 15-ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் திகார் சிறையில் உள்ளார்.

    கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சி.பி.ஐ.யும் திகார் சிறையில் வைத்து கைது செய்தது. இவர் மீதான வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், கவிதா திகார் சிறையில் இன்று திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனே அவரை டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விசாரணையில், தீவிர காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என தெரிய வந்தது.

    • ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
    • நீதிமன்ற காவல் வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம், நீதிமன்ற அனுமதியுடன் சிபிஐ ஜெயிலில் வைத்து விசாரணை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக சிபிஐ அவரை கைது செய்துள்ளது.

    திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்ற காவலை நீதிமன்றம் வருகிற 20-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது கே. கவிதா பத்திரிகையாளர்களிடம் "பிரஜ்வல் ரேவண்ணா போன்றோரை விசாரணை அமைப்புகள் விட்டுவிடுகின்றன. எங்களை போன்றோரை கைது செய்கிறது" என ஆவேசமாக தெரிவித்தார்.

    இதே வழக்கில் அரவிந்த கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 14-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கில் ஜாமின் கேட்டு கவிதா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மார்ச் 15-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அதன்பின் சிபிஐ ஏப்ரல் 11-ந்தேதி கைது செய்தது.

    • டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது.
    • திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கே. கவிதாவிடம் கடந்த சனிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    டெல்லி மாநில மதுபான கொள்கை மோசடியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிக்கியுள்ளனர். சமீபத்தில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மதுபான லைசென்ஸ் பெற 100 கோடி ரூபாய் அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் கொடுத்ததாக சவுத் குரூப்பின் முக்கிய குற்றவாளியாக சந்திரகேசர ராவின் மகள் கே.கவிதா மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 15-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    திகார் சிறையில் இருக்கும் அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தது. நீதிமன்றமும் அனுமதி அளித்தது. அதனடிப்படையில் கடந்த சனிக்கிழமை சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தியது. கே.கவிதா உடன் குற்றம் சாட்டப்பட்ட புச்சி பாபுவின் போனில் இருந்து நிலம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் 100 கோடி ரூபாய் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் ஜெயிலுக்குள் இருக்கும் கே.கவிதாவை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.

    சிபிஐ விசாரணை நடத்தியது தொடர்பாக கே.கவிதா நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் சிபிஐ-யின் விசாரணை ஊடக விசாரணை. அது என்னுடைய நற்பெயரை பாதிப்பதாகவும், தனியுரிமையை மீறுவதாகவும் தெரிவித்திருந்தார்.

    மேலும், நான் பாதிக்கப்பட்டவர். எனனுடைய தனிப்பட்ட மற்றும் அரசியல் நற்பெயர் குறி வைக்கப்படுகிறது. என்னுடைய டெலிபோன் அனைத்து டி.வி. சேனல்களிலும் காண்பிக்கப்பட்டுள்ளது. இது தன்னுடைய தனியுரிமையை நேரடியாக மீறுவதாகும்.

    நான் ஏஜென்சியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன. வங்கி கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளேன். நான் அழித்துவிட்டதாக அமலாக்கத்துறை கூறும் அனைத்து போன்களையும் ஒப்படைப்பேன்.

    இவ்வாறு கே.கவிதா அதில் தெரிவித்துள்ளார்.

    • மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டனர்.
    • கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதில் ஆம் ஆத்மி ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகினர்.

    இதற்கிடையே, தெலுங்கானா முதல் மந்திரியும் பாரத ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான கே.சந்திரசேகரராவ் மகள் கவிதா மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறை அதிகாரிகளும் கவிதாவிடம் 3 முறை விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரியின் மகளும், பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.சி.யுமான கவிதாவை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளனர் என தகவல் வெளியானது.

    இதையடுத்து, அவரது வீட்டின் முன் பி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் குவிந்தனர். அக்கட்சி எம்.எல்.ஏ. ஹரீஷ் ராவ் அங்கு வந்து தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கவிதா வீட்டின் முன் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு 30-ந்தேதி நடைபெற இருக்கிறது.
    • தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் கட்சி தீவரமாக தேர்தல் வேலை செய்து வருகிறது.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் சூறாவளி பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் சந்திரசேகர ராவின் மகளும், அம்மாநில எம்.எல்.சி.யுமான கே. கவிதா கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி எங்களுடன் நட்பாக இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் கூட்டணி அமைத்தது கிடையாது. அவர்களுடன் நட்பு முறையில் அணுகுகிறோம்.

    பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளை பொறுத்தவரை, மற்ற அரசியல் கட்சி அதிகாரத்திற்கு வருவதை அவர்கள் விரும்புவதில்லை. பி.ஆர்.எஸ் கட்சியின் வளர்ச்சி நாடு முழுவதும் பெருகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் முறையும் விவசாயிகளை பற்றி சிந்திக்க தொடங்கியது. எங்கள் வளர்ச்சியை இரு கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் யாருடைய பி டீம் அல்ல. நாங்கள் தெலுங்கானா மக்களுடைய அணி.

    ×