search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KC Venugopal"

    • இந்திய ரெயில்வேவில் வடக்கு ரெயில்வே சிறப்பு அதிகாரியாகத் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்தார் வினேஷ் போகத்
    • ''நாங்கள் ரோட்டில் இழுத்து செல்லப்பட்டபோது பாஜகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எங்களுடன் நின்றன'

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 50 கிலோவுக்கும் கூடுதலாக 100 கிராம் எடை அதிகரித்திருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரிய அவரின் மேல் முறையீடும் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரியானாவில் தனது கிராமத்தில் ஓய்விலிருந்த வினேஷ் போகத் அரியானா பஞ்சாப் இடையே அமைந்துள்ள ஷம்பு எல்லையில் பயிர்களுக்கு ஆதார விலை கோரி 200 நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

    அரியானா சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் வினேஷ் போகத் அரசியலுக்கு வரலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் நேற்று முன் தினம் சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் ராகுல் காந்தியை சந்தித்தார். இந்நிலையில் இன்று இந்திய ரெயில்வேவில் வடக்கு ரெயில்வே சிறப்பு அதிகாரியாகத் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியாவுடன் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் காங்கிரசில் இணைந்துள்ளார்.

    தனது சொந்த காரணங்களுக்காக ரெயில்வே பதவியை விட்டு விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் வினேஷ் போகத் குறிப்பிட்டுள்ள நிலையில் அவரின் செயலுக்கு விளக்கம் கேட்டு ரெயில்வே ஷோ காஸ் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், வினேஷுக்கு வாட்ஸப்பில் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது. இதன் பின்னால் உள்ள காரணம் என்ன, வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாவும் ராகுல் காந்தியை சந்தித்ததை ஊடகங்கள் பெரிதாக காட்டியபிறகே இவ்வாறு நடந்துள்ளது. நாட்டின் எத்ரிர்க்கட்சித் தலைவரை சந்திப்பதும் குற்றமாகுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதற்கிடையே காங்கிரசில் சேர்ந்தது குறித்து பேசிய வினேஷ் போகத், நான் காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், [கடந்த வருடம் போராட்டத்தின்போது] நாங்கள் ரோட்டில் இழுத்து செல்லப்பட்டபோது பாஜகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எங்களுடன் நின்றன. பெண்களுக்காக முன்வந்து சண்டையிடும் ஒரு கட்சியில் சேர்வதை பெருமையாக நினைக்கிறன் என்று தெரிவித்துளார். கடந்த வருடம் பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்க்காட்டை விசாரிக்கக்கோரி 6 மதஹக்லாமாக நடந்த போயிராட்டத்தில் வினேஷ் போகத் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.    

    • என்டிஏ கூட்டணி சார்பில் ஓம் பிர்லா நிறுத்தப்பட்டுள்ளார்.
    • இந்தியா கூட்டணி கே. சுரேஷை நிறுத்தியுள்ளது.

    மக்களவை தேர்தலில் பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. 230-க்கும் அதிகமான இடங்களை எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி பெற்றுள்ளதால் எந்த விவகாரத்தையும் ஒருமனதாக தேர்வு செய்ய ஏற்றுக் கொள்ளாத நிலையில் உள்ளது.

    நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற இருக்கிறது. சபாநாயகர் பதவிக்கு என்டிஏ கூடட்ணி சார்பில் ஓம் பிர்லா நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு கொடுக்க இந்தியா கூட்டணியிடம் என்டிஏ கேட்டுக்கொண்டது. ஆதரவு கொடுக்க வேண்டுமென்றால் துணை சபாநாயகர் பதவி வேண்டும் எனத் தெரிவித்தது. ஆனால் பாஜக துணை சபாநாயகர் பதவியை கொடுக்க மறுத்து வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி எதிர்வேட்பாளாராக கே. சுரேஷ் என்பவரை நிறுத்தியுள்ளது.

    இதனால் தேர்தல் நடைபெறும் நிலை உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி கேசி வேணுகோபால் கூறியதாவது:-

    நாங்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் துணை சபாநாயகர் பதவி தர தயராக இருந்தால், நாங்கள் என்டிஏ வேட்பாளரை ஒருமனதாக தேர்வு செய்ய தயாராக இருக்கிறோம். இரு அவைகளும சமூகமாக நடைபெற பிரதமர் மோடி நேற்று ஒருமித்த கருத்து குறித்து பேசினார்.

    அரசு தரப்பில் இருந்து பரிந்துரை செய்யும் சபாநாயகருக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருக்கிறோம். அவர்களும் எதிர்க்கட்சிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

    சபாநாயகர் அரசு தரப்பில் இருந்து பரிந்துரை செய்யப்படும். துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நாங்கள் துணை சபாநாயகர் பதவியை 10 ஆண்டுகளுக்கு என்டிஏ-வுக்கு வழங்கினோம். நேற்று ராஜ்நாத் சிங் மல்லிகார்ஜூனாவிடம் பேசினார். அப்போது கார்கே, உங்களுடைய வேட்பாளரை ஆதரிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் துணை சபாநாயகர் பதவியை விரும்புகிறோம் என்றார். அப்போது ராஜ்நாத் சிங், மோடியிடம் ஆலோசனை நடத்துவதாக தெரிவித்தார்.

    இவ்வாறு வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    • ராகுல் எடுத்த முடிவு நாளை மறுநாள் (ஜூன் 17) திங்கள்கிழமை தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்று பாராளுன்றத்தில் தங்களது கைகளை ஓங்கச் செய்துள்ளது.

    காங்கிரஸ் சார்பில் கேரளாவின் வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டில் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ராகுல் நீடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் எந்த தொகுயை அவர் தேர்ந்தெடுப்பார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே எழத் தொடங்கியது.

    இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான் எந்த தொகுதியில் தொடர் வேண்டும் என்று மக்களைக் கேட்டே முடிவெடுப்பேன் என்று தெரிவித்தார். வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் காங்கிரஸூக்கு உள்ளதால் ராகுல் ரேபரேலியையே தேர்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

    அப்படி நடக்கும் பட்சத்தில் வயநாட்டில் மறுதேர்தல் நடக்கும்போது பிரியங்கா காந்தி அங்கு போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராகுல் எடுத்த முடிவு நாளை மறுநாள் (ஜூன் 17) திங்கள்கிழமை தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பேசுகையில், ஜூன் 17 க்குள் இதுகுறித்து முடிவெடுப்பது அவசியம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது.
    • இதில் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகச் செயல்பட்டன. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், கிராமப் புறங்களில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடித்தது. ஆனால் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்க உழைக்க வேண்டும் என்றார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தருவதற்காக நிதிஷ் குமார் பிரதமர் பதவி கேட்டார் என ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் கே.சி.தியாகி கூறியுள்ளது குறித்து கேட்டனர்.

    இதற்கு பதிலளித்த கே சி வேணுகோபால், இதுதொடர்பாக எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை என தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என காரிய கமிட்டி விடுத்த வேண்டுகோளை ஏற்ற ராகுல் காந்தி, விரைவில் பதில் அளிப்பதாக தெரிவித்தார்.

    • இந்தியா கூட்டணிக்கு 300 இடங்கள் கிடைக்கும்.
    • கேரளாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்த லுக்கு பிறகு அதாவது ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்தியா கூட்டணிக்கு 300 இடங்கள் கிடைக்கும்.

    இந்த தேர்தலில் மக்கள் மனநிலை இந்தியா கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது. தென் மாவட்டங் களில் பா.ஜனதாவை விட நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம். கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    2019 தேர்தலில் தெலுங் கானாவில் 3 இடங்களை மட்டுமே பெற்றோம். ஆனால் இந்த முறை 11 முதல் 12 இடங்கள் கிடைக்கும். கேரளாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும்.

    தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு ஒரு தொகுதி ஒரு இடம் கூட கிடைக்காது. இந்தியா கூட்டணி அனைத்து தொகுதியிலும் அங்கு வெற்றி பெறும். மராட்டியத்தில் மகாவிகாஸ் அகாரி (இந்தியா கூட்டணி) மொத்த இடத்தில் பாதியை யாவது பெறுவதற்கு தயாராக உள்ளது. பீகாரில் நாங்கள் சிறப்பான நிலையை பெறுவோம்.

    உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா 15 முதல் 20 இடங்களை இழக்கும். இந்தியா கூட்டணி 40 இடங்களை பிடிக்கும்.ராஜஸ்தானில் 10, அரியானாவில் 5 முதல் 6 இடங்களும் கிடைக்கலாம் என்பது எங்கள் கணக்காகும்.

    பா.ஜனதாவை வீழ்த்து வதற்காக போட்டியிடும் இடங்களை குறைத்து நாங்கள் தியாகம் செய்துள்ளோம். தேர்தல் முடிவுகள் வெளியான 24 மணி நேரத்தில் பிரதமர் வேட்பாளரை நாங்கள் முடிவு செய்வோம். புதிய பிரதமர் 5 ஆண்டுகள் ஆட்சி செய்வார்.

    ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவதற்கு காங்கிரஸ் முயற்சியா? என்பது பற்றி பேச இது நேரமில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஒன்றாக அமர்ந்து பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வோம்.

    தேர்தலின் தொடக்கத்தில் பா.ஜனதாவுக்கு 400 இடங்கள் கிடைக்கும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்தார். ஆனால் உண்மை நிலை முற்றிலும் மாறி விட்டது. கடந்த முறை வெற்றி பெற்ற பல இடங் களை இழந்து வருவதை பா.ஜனதா உணர்ந்துள்ளது. அந்த கட்சியினர் பீதியில் உள்ளனர்.

    இந்த தேர்தலில் உண்மையான பிரச்சினைகளை பிரதமர் பேச விரும்ப வில்லை. மதம் மற்றும் சமூகங்களின் அடிப்படையில் மக்களை பிளவுப் படுத்துவது அவரது நிகழ்ச்சி நிரலாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமூக வலைத்தளங்களில் மம்முட்டியை அவரது இயற்பெயரான முகமது குட்டி என்ற பெயரில் மத ரீதியாக வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
    • வெறுப்பை பரப்புபவர்களின் இழிவான மனதில் மட்டுமே மம்முட்டி முகமது குட்டியாக இருக்கிறார்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் புழு என்ற திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்தது. அந்த படத்தில் உயர்சாதியினரை இழிவுபடுத்தியுள்ளதாக எழுந்த குற்றசாட்டில் சமூக வலைத்தளங்களில் மம்முட்டி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

    புழு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரதீனா. அண்மையில் இவரது கணவர் ஷர்ஷத் பனியாண்டி ஆன்லைன் மீடியா ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது புழு திரைப்படம் உயர்சாதியினரை இழிவுபடுத்தியுள்ளது. மம்முட்டி ஏன் அந்த திரைப்படத்தில் நடித்தார். அவர் படத்தின் ஸ்க்ரிப்டை படித்து பார்த்தாரா என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், இந்த திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான ஹர்ஷத் ஒரு தீவிரமான இஸ்லாமியர் என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் மம்முட்டியை அவரது இயற்பெயரான முகமது குட்டி என்ற பெயரில் மத ரீதியாக வெறுப்பு பிரசாரத்தில் பலரும் ஈடுபட்டனர்.

    நடிகர் மம்முட்டி மீதான இத்தகைய வெறுப்பு பிரசாரத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது சம்பந்தமாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், மம்முட்டியை மதம் அல்லது சாதியின் பிரிவுகளுக்குள் அடைத்து வைக்க முடியாது. வெறுப்பை பரப்புபவர்களின் இழிவான மனதில் மட்டுமே மம்முட்டி முகமது குட்டியாக இருக்கிறார். கேரளாவின் மதச்சார்பற்ற சமூகம் இந்த பிரச்சாரத்தை ஆதரிக்காது என்று தெரிவித்துள்ளார்.

    இதே போல் கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி, மம்முட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில், "மம்முட்டி மலையாளிகளின் பெருமை" என்று பதிவிட்டுள்ளார்.

    "மம்முட்டியை முகமது குட்டி என்றும், இயக்குநர் கமலை கமாலுதீன் என்றும், நடிகர் விஜய்யை விஜய் ஜோசப் என்றும் அழைக்கும் சங்பரிவார் அரசியல் கேரளாவில் இயங்காது" என்று கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே ஃபஜன் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மோடிக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்துடன் தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது
    • ஒரு பிரதமர் எப்படி எல்லாவற்றிலும் பொய் சொல்லி இப்படி போலியான செய்திகளை பரப்புவார்?

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.

    அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் இத்தகைய பேச்சிற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் நகல்களை பிரதமருக்கு அனுப்பப்போவதாகவும், மோடிக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்துடன் தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    ஒரு பிரதமர் எப்படி எல்லாவற்றிலும் பொய் சொல்லி இப்படி போலியான செய்திகளை பரப்புவார்? இந்த நாட்டில் அதிகம் பொய் சொல்பவர் அவர்தான் என்பதை அவரது நேற்றைய பேச்சு உணர்த்துகிறது என்று அவர் தெரிவித்தார்.

    தேர்தல் ஆதாயத்திற்காக பிரதமர் மதவாத உணர்வுகளைத் தூண்டி இந்திய மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார். நடந்து முடிந்த பாராளுமன்ற முதல் கட்ட தேர்தல் பாஜகவிற்கு சாதகமாக இல்லை என்பதை புரிந்து கொண்ட பிறகு பிரதமர் இதுபோன்ற கீழ்த்தரமான தந்திரங்களை கையாள்கிறார்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேரில் சந்தித்து விளக்குவதற்காக பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "எங்களது தேர்தல் அறிக்கையின் நகலை அவருக்கு வழங்குவோம். எங்கள் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் எங்களது தேர்தல் அறிக்கையின் நகலை அவருக்கு அனுப்பி வைப்பார்கள். எல்லாவற்றிலும் பொய் சொல்ல பிரதமருக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளதா? எல்லாவற்றிலும் தலையிடும் தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் ஏன் மவுனம் காக்கிறது" என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளார்.
    • காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலப்புழா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு கேரள மாநிலத்தில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் அறிவித்தது. இந்தப் பட்டியலில் 14 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டது.

    இதேபோல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலப்புழா தொகுதியிலும், சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். திருச்சூர் தொகுதியில் வி.முரளீதரன் போட்டியிட உள்ளார்.

    இந்நிலையில், கேரள மாநிலத்தின் ஆலப்புழா தொகுதியில் காங்கிரஸ் கட்சி இன்று தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.சி.வேணுகோபால் இன்று ரோடு ஷோவில் கலந்துகொண்டார். தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடி வேனில் நின்றபடி பயணம் செய்து அவர் வாக்கு சேகரித்தார்.

    • நாட்டின் ஏழை எளிய மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
    • நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 10% வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது

    அசாமில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தொடர்பாக காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, "காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் தொடங்க உள்ள யாத்திரை அரசியல் காரணங்களுக்காக அல்ல. நாட்டின் ஏழை எளிய மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. நாட்டில் வெறுப்புக்குப் பதிலாக அன்பு பரவ வேண்டும் " என்பதை இந்த யாத்திரையில் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும், வன்முறை காரணமாக மணிப்பூர் எந்த அளவு பாதிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். மணிப்பூர் மக்களோடு நாங்கள் இருக்கிறோம் என்ற செய்தியை நாட்டுக்கு சொல்லவே யாத்திரையை மணிப்பூரில் இருந்து தொடங்குவதாக அவர் தெரிவித்தார்.

    நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு குறித்தும், நமது நாட்டின் விவசாயிகள் சந்தித்து வரும் பேரழிவு குறித்தும் இந்த யாத்திரையில் நாங்கள் பேசு இருக்கிறோம். இளைஞர்களுக்கு நீதி வேண்டும், பெண்களுக்கு நீதி வேண்டும், விவசாயிகளுக்கு நீதி வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு நீதி வேண்டும். இதை வலியுறுத்தவே இந்த யாத்திரையை தொடங்குகிறோம். மக்கள் தங்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்கான மிகப் பெரிய மேடையாக இந்த யாத்திரை திகழும் என்றார்.

    நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 10% வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய கே.சி வேணுகோபால், இந்திய ஒற்றுமை நியாய யாத்திரைக்கு அனுமதி கோரி மணிப்பூர் தலைமைச் செயலருக்கு மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் விண்ணப்பம் கொடுத்த நிலையில், அனுமதியை தங்களால் வழங்க முடியாது என்றும், டெல்லியில் இருந்து அனுமதி அளிக்க வேண்டும் எனவும் மணிப்பூர் அரசு கூறுவதாக காங்கிரஸ் அமைப்பு செயலாளர் குற்றம் சாட்டுகிறார். ஒரு மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சி கூட்டம் நடத்த விரும்பினால் அதற்கு டெல்லி அனுமதி வழங்க வேண்டுமா?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

    • காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க முடியும்.
    • நாங்கள் உண்மையான ஜனநாயகத்தை வெளிபடுத்துகிறோம்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசி தரூர் போட்டியிட்டனர். டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.  வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. டெல்லியில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வாக்களித்தனர், கர்நாடகா மாநிலத்தில் ராகுல்காந்தி தமது வாக்கை பதிவு செய்தார்.

    மாலை 4.30 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அக்டோபர் 19-ந்தேதி (நாளை மறுநாள்) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் கேரளா மாநிலத்தில திருவனந்தபுரத்தில் தமது வாக்கை பதிவு செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கட்சித் தலைவரை ஜனநாயக முறையில் தேர்வு செய்யும் நிகழ்வில் பங்கேற்றிருப்பது என்பது ஒட்டுமொத்த காங்கிரஸுக்கும் பெருமையளிக்கும் தருணம் என்றார்.

    காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க முடியும் என்றும், நாங்கள் உண்மையான ஜனநாயகத்தை வெளிபடுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். கட்சியில் ரப்பர் ஸ்டாம்ப் தலைவராக யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் அவர் உறுதிபட கூறினார். இதனிடையே, ஜனநாயக முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படியே வாக்களித்தனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்தன் திரிவேதி குறிப்பிட்டார். இதுபோன்ற தேர்தல் வேறு எந்த கட்சியிலும் நடந்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    ×