search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meteorite"

    • குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைத்தனத்தை விட இந்த விண்கல் பெரியது என்று கூறப்படுகிறது.
    • இந்த விண்கல் அளவுக்கு பெரியதாக இதுவரை வேறு எந்த விண்கல்லும் பூமிக்கு மிக அருகில் வந்ததில்லை என்று அவர் தெரிவித்தார்

    அபோபிஸ் [Apophis] என்பது எகிப்திய நாகரிகத்தில் அழிவின் கடவுளுக்கு [God of Chaos] வழங்கப்பட்டுள்ள பெயர். தற்போது இந்த பெயர் தற்போது பூமியை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் பெரிய விண்கல் ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த விண்கல் மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

    கடந்த 2002 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல் ஆனது வரும் 2029 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி பூமியைத் தாக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விண்கல்லை Space Objects Tracking and Analysis (NETRA) உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்த அச்சறுத்தலில் இருந்து தப்பிக்க இந்தியா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

    தற்போது பூமிக்கு 32,000 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த விண்கல் அளவுக்கு பெரியதாக இதுவரை வேறு எந்த விண்கல்லும் பூமிக்கு மிக அருகில் வந்ததில்லை என்று அவர் தெரிவித்தார். குஜராத்தின் அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைத்தனத்தை விட இந்த விண்கல் பெரியது என்று கூறப்படுகிறது. சுமார் 350 முதல் 450 மீட்டர்கள் வரை இதன் விட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 2029 இல் பூமிக்கு மிக அருகில் வரும் இந்த விண்கல் பூமி மீது மோதும் பட்சத்தில் பேரழிவு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

    • இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது.
    • இந்த ஆய்வானது நாசாவின் DART (Double Asteroid Redirection Test) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும்.

    பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று என்று அஞ்சப்படும் விண்கல் ஒன்று  பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புகள் இருபதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விண்கல் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை என்று நாசா எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    கடந்த ஏப்ரல் மாதம் நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு, மாரிலாந்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட, கிரகங்களின் பாதுகாப்பு தொடர்பான சோதனையில், பூமிக்கு விண்வெளியிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது.

     

     

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'உலகுக்கு வருங்காலங்களில் விண்கற்களால் அதிக ஆபத்து இருந்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பதற்கு இந்த ஆராய்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விண்கலின் எடை, அளவு மற்றும் தன்மைகள் குறித்து ஆய்வில் தெரிந்துகொள்ள முடியவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இந்த ஆய்வானது நாசாவின் DART (Double Asteroid Redirection Test) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும். விண்கற்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பூமியைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமே DART. இதற்கிடையில், விண்கற்களை தொலைவில் இருந்து பார்க்க NEO Surveyor (Near-Earth Object Surveyor). எனப்படும் இன்பிராரெட் தொலைநோக்கியை நாசா உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    • சந்திரனுக்கு வெளியில் இருந்து ரோவர் இந்த அச்சுறுத்தலை எதிர் கொள்கிறது.
    • நிலவின் மேற்பரப்பில் தொடர்ந்து விழும் நுண் விண் கற்களால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டும் பாதிக்கப்படலாம்.

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சார்பில் சந்திராயன்-3 விண்கலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆகஸ்டு 23-ந்தேதி அதன் ரோவர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

    நிலவில் தரையிறங்கிய ரோவர் தொடர்ச்சியான சோதனை நடத்திய பிறகு அது தற்போது நிலவில் தூக்க நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் நிலவில் ரோவர் தூக்க நிலையில் இருப்பதால் அதற்கு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. சந்திரனுக்கு வெளியில் இருந்து ரோவர் இந்த அச்சுறுத்தலை எதிர் கொள்கிறது.

    நிலவின் மேற்பரப்பில் அடிக்கடி நுண் விண் கற்கள் விழும். நிலவில் நுண் விண் கற்கள் விழும் போது குண்டு வெடித்தால் ஏற்படுவது போன்ற பாதிப்பு ஏற்படும்.

    தற்போது நிலவில் நுண் விண் கற்கள் விழுகிறது. சந்திராயன்3 ரோவர் நிலவில் தூங்கும் நிலையில் அந்த பகுதியில் நுண் விண்கல் விழுந்தால் அது ரோவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. ரோவர் மீது நுண் விண்கல் விழுந்தால் அது வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "நிலவின் மேற்பரப்பில் தொடர்ந்து விழும் நுண் விண் கற்களால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டும் பாதிக்கப்படலாம். அப்பலோ விண்கலம் கடந்த காலங்களில் இதே போன்ற பிரச்சினையை சந்தித்தது. இதனால் ரோவர் சில சேதங்களை சந்திக்கலாம்" என்றனர்.

    • வெளவால் தாக்கியது என நினைத்தேன். பிறகு அதை ஒரு சிமெண்ட் துண்டு என்று நினைத்தோம்
    • அப்பொருளின் உள்ளே இரும்பு மற்றும் சிலிக்கான் கலவை இருந்தது

    மிகவும் அரிதான வானியல் நிகழ்வாக கருதப்படும் ஒரு சம்பவம் பிரான்ஸ் நாட்டில் நடந்திருக்கிறது. சுமார் 10 நாட்களுக்கு முன்பு, அங்கு ஒரு பெண் மொட்டை மாடியில் அமர்ந்து தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். திடீரென கூழாங்கல் போன்ற ஒரு பொருள் அவர் விலா எலும்பை தாக்கியிருக்கிறது.

    "பக்கத்து கூரையின் அருகில் 'பூம்' என பெரிய சத்தம் கேட்டது. அடுத்த வினாடி என் விலா எலும்பில் ஒரு அதிர்ச்சியை உணர்ந்தேன். என்னை ஒரு வெளவால் தாக்கியது என நினைத்தேன். பிறகு அதை ஒரு சிமெண்ட் துண்டு என்று நினைத்தோம். அது நிறம் எதுவும் இல்லாமல் இருந்தது" என அந்த பெண் கூறியிருக்கிறார்.

    தொடர்ந்து அப்பெண் அந்த பொருள் என்ன என தெரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறார். அதில் அது சிமெண்ட்டால் செய்யப்பட்டதல்ல என்றும் அது ஒரு விண்கல் போல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    தியர்ரி ரெப்மான் (Thierry Rebmann) எனும் புவியியலாளரிடம் இதுகுறித்து அவர் கேட்டிருக்கிறார். அதனை பரிசோதித்த ரெப்மான், அது பூமியை சேர்ந்த பொருளல்ல என உறுதிப்படுத்தினார்.

    "அப்பொருளின் உள்ளே இரும்பு மற்றும் சிலிக்கான் கலவை இருந்தது. அது விண்கல்தான். விண்கற்கள் பூமியில் விழுவது அரிதானதல்ல. ஆனால், விண்கல்லை கண்டெடுப்பதும், அதிலும், விண்கல் ஒருவர் மேலே வந்து விழுவது போன்ற சம்பவங்களும் மிக அரிதான நிகழ்வாகும். வழக்கமாக பாலைவன பகுதிகளில் விழும் விண்கற்கள், பிரான்ஸ் போன்ற மிதமான வானிலையை கொண்டிருக்கும் நாடுகளில் விழுவது வழக்கமான ஒன்றல்ல" என்று டாக்டர் ரெப்மான் கூறியிருக்கிறார்.

    பூமியின் வளிமண்டலத்தில் பல நாட்கள் பயணம் செய்து தரையைத் தாக்கும் விண்வெளிப் பாறைகள்தான் விண்கற்கள் எனப்படும். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 50 டன் விண்கற்கள் பூமியில் விழுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மே மாதம், அமெரிக்காவின் நியூஜெர்சியில் ஓல்ட் வாஷிங்டன் கிராசிங் பென்னிங்டன் சாலையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் 4x6 அங்குல அளவில் ஒரு விண்கல் தாக்கியது. இதனால் அவ்வீட்டின் கடினமான மரத்தாலான தரைப்பகுதி சேதம் அடைந்தது. அப்போது அவ்வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை.

    விண்கல் மனிதர்கள் மீது விழும் சம்பவம் முதன்முதலாக 1954-ல் நடந்தது. இதில் 3.6 கிலோ எடையுள்ள ஒரு விண்கல் அமெரிக்காவில் ஒரு பெண் மீது விழுந்ததில் அவர் காயமடைந்தார்.

    ×