search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nirmala Sitharama"

    • பாலமுருகன் கோவிலில் புதிதாக பாலமுருகன் அடிமை சாமிகளுக்கு திருவுரு சிலை நிறுவப்பட்டுள்ளது.
    • பெண்களுக்கு மன அழுத்ததை போக்க கல்வி நிறுவனங்களே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாடாளுமன்றத்தில் செங்கோலை பார்க்கும் போதெல்லாம் ஒரு தமிழராக பூரித்து போவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

    சென்னை அடுத்த தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவக் கல்லூரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் புதிதாக பாலமுருகன் அடிமை சாமிகளுக்கு திருவுரு சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா சவிதா பல்கலைக்கழக வேந்தர் எம்.வீரையன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பாலமுருகனடிமை சிலையை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் குன்னகுடி திருவண்ணாமலை ஆதினம் பொன்னம்பல அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பேருர் ஆதினம்

    சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மன அழுத்ததை போக்க கல்வி நிறுவனங்களே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆன்மீகம் மற்றும் தெய்வீகத்தை சொல்லி தருவதன் மூலமே மாணவர்களின் மன அழுத்ததை குறைக்க வேண்டும் . தமிழகத்தில் உள்ள ஆதினங்களின் ஒத்துழைப்புடன் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார்.

    நாடாளுமன்றத்தில் செங்கோலை காணும் போதெல்லாம் ஒரு தமிழராக தான் மகிழ்ச்சியில் பூரிப்படைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சொகுசு எலெக்ட்ரிக் காருக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி.
    • இரு சக்கர வாகனங்கள் கூட 28 சதவீத வரியை எதிர்கொள்கின்றன.

    கோவை கொடிசியாவில் கடந்த 11-ந்தேதி தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும்.

    அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்லை.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். சீனிவாசன் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதையடுத்து, ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    கேள்வி கேட்டவரை அழைத்து வந்து வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த செய்தி இந்தியா அளவில் தீயாக பரவி தேசிய தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கேரள மாநில காங்கிரஸ் ஒரு படத்தை வெளியிட்டு என்னையா நிர்மலா சீதாராமன் கொள்கை? என கேள்வி கேட்பதுபொல் எக்ஸ் தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளது.

    கேரள மாநில காங்கிரஸ் அதனுடைய எக்ஸ் பக்க பதிவில் "க்ரீம் உடன் கூடிய பன்னுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி எனும்போது, சுமார் 2.20 கோடி ரூபாய் மதிப்பிலான அல்ட்ரா- சொகுசு மெர்சிடெஸ் எலெக்ட்ரிக் காருக்கு நிர்மலா சீதாராமனின் கொள்கையின் கீழ் வெறும் 5 சதவீதம்தான் ஜிஎஸ்டி.

    ஒவ்வொரு நாளும் பெட்ரோல் கார்களுக்கு செஸ் வரியுடன் 29 சதவீதம் முதல் 50 சதவீதம் ஜிஎஸ்டி என விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அடிப்படையிலான இரு சக்கர வாகனங்கள் கூட 28 சதவீத வரியை எதிர்கொள்கின்றன. வரி ஏழைகளுக்கு, மானியம் பணக்காரர்களுக்கு" எனக் குறிப்பிட்டுள்ளது.

    • கடந்த 20-ஆம் தேதி முதல் மத்திய குழு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் தென் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டு வருகிறது.
    • தென் மாவட்ட பாதிப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டதற்கும் அது குறித்த துரித நடவடிக்கை எடுத்தற்கும் நன்றிகள்.

    சென்னை :

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றிகள்..!

    தமிழக தென் மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு இருக்கும் கனமழை பெருவெள்ளம் குறித்து ஏற்கனவே கடந்த 20-ஆம் தேதி முதல் மத்திய குழு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் தென் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டு வருகிறது.

    இந்த நிலையில் தங்களின் கடுமையான பணிச்சுமைக்கு மத்தியில் தென் மாவட்டங்கள் பாதிப்பு குறித்து, தமிழக பாஜக

    இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருடன் இணைந்து தென் மாவட்ட பாதிப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டதற்கும் அது குறித்த துரித நடவடிக்கை எடுத்தற்கும் நன்றிகள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×