search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pocso Law"

    • 14 வயது சிறுமியை சில ஆண்டுகளுக்கு முன்பே தாயும் தந்தையும் தவிக்க விட்டு விட்டு திசைமாறி சென்றுள்ளனர்.
    • பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் 14 வயது சிறுமியை ஓராண்டாக சிறை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 4 வீடுகளில் சிறுமியை பூட்டி வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் அருகே உள்ள படுவஞ்சேரியில் தங்களது ஒரே மகளை அனாதையாக விட்டு விட்டு தாய்-தந்தை இருவரும் தனித்தனியாக பிரிந்து சென்று விட்டனர். இதனால் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணின் அரவணைப்பில் 14 வயது சிறுமி இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கும், சேலையூர் போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து குழந்தைகள் நல அதிகாரிகள் படுவஞ்சேரியில் உள்ள லட்சுமியின் வீட்டில் இருந்து சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி அளித்த தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

    லட்சுமியும் அவருடன் இருக்கும் சிலரும் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளிவிட்டதாகவும், பலர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் பலர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் திடுக்கிட வைக்கும் வகையில் வாக்குமூலம் அளித்தார்.

    இதுபற்றி சேலையூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபட்டது தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-

    14 வயது சிறுமியை சில ஆண்டுகளுக்கு முன்பே தாயும் தந்தையும் தவிக்க விட்டு விட்டு திசைமாறி சென்றுள்ளனர். இருவரும் வேறு திருமணம் செய்து கொண்டு பெற்ற மகளைப் பற்றி கவலைப்படாமல் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் சிறுமி முழுக்க முழுக்க லட்சுமியின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

    இதையடுத்து லட்சுமி ஆதரவற்ற சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்து உள்ளார். லட்சுமியுடன் சேர்ந்து அவரது சகோதரி கவிதா, மாமியார் கற்பகம், 2-வது கணவரான பிரகாஷ் ஆகியோரும் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்திருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் இவர்கள் 4 பேரையும் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது சேலையூர் படுவஞ்சேரியில் உள்ள சிறுமியின் தாயின் உறவினர் வீட்டில் வைத்து முதலில் சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக அதே பகுதியில் உள்ள இன்னொரு வீடு, செங்கல்பட்டு மற்றும் சென்னை கே.கே.நகரில் உள்ள வீடு என மொத்தம் 4 வீடுகளில் வைத்து ஈவுஇரக்கமின்றி சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதையும் போலீசார் கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து சிறுமியிடம் தகாத முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் யார்-யார்? என்கிற விவரங்களை சேகரித்த போலீசார் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து பூசாரி மற்றும் புரோகிதரான சீனிவாசன் மற்றும் தாமோதரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதன் மூலம் சிறுமி பாலில் வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைதானவர்களில் தாமோதரன், சீனிவாசன் மற்றும் இன்று கைதான 2 பேர் ஆகிய 4 பேரும் சிறுமி என்றும் பாராமல் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து 3 பெண்கள் உள்பட 8 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    பள்ளிக்கரணை துணை கமிஷனர் கவுதம் கோயல் மேற்பார்வையில், சேலையூர் உதவி கமிஷனர் கிறிஸ்டின் ஜெயசீல், இன்ஸ்பெக்டர் சந்துரு, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராக்குமதி மற்றும் போலீஸ் படையினர் இந்த வழக்கில் மேலும் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது போன்று சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.

    • சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் பெரம்பூர் போலீசில் புகார் அளித்தார்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா காவலர் திருநாவுக்கரசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பெரம்பூர் காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு முதல் நிலைக்காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கியுள்ளார்.

    இந்நிலையில் சம்பவதன்று அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் ஆடு மேய்க்க வந்துள்ளார். அந்த சிறுமிக்கு, திருநாவுக்கரசு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து அவரை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் பெரம்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ்காரர் திருநாவுக்கரசை கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகை கிளைச் சிறையில் அடைத்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா காவலர் திருநாவுக்கரசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் போலீஸ்காரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மகளின் உடலில் மாற்றம் ஏற்படுவதை அறிந்த பெற்றோர், அந்த சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
    • இன்ஸ்பெக்டர் ஜோதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பண்ருட்டி:

    நண்பர்கள் என்றால் உயிரையும் கொடுப்பார்கள் என்பார்கள். ஆனால், நண்பரிடம் பழகி அவரது தங்கையையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு விழுப்புரத்தில் நண்பர் உள்ளார்.

    அவரது வீட்டுக்கு அச்சிறுவன் அடிக்கடி சென்று வருவார். அப்போது நண்பரின் 15 வயது தங்கையிடம் பழக்கம் ஏற்பட்டது.

    நண்பரிடம் பழகுவது போல்தான் சிறுமியிடமும் பழகி வந்துள்ளார். திடீரென அவர் அந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி தனது சொந்த கிராமத்துக்கு அழைத்து வந்தார். அங்கு வைத்து அந்த சிறுமியை பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானார்.

    மகளின் உடலில் மாற்றம் ஏற்படுவதை அறிந்த பெற்றோர், அந்த சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறினர். இதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அந்த சிறுமியிடம் கேட்டபோது தன்னை அண்ணனின் நண்பர்தான் கர்ப்பமாக்கினார் என்று கூறினார்.

    இது தொடர்பாக பண்ருட்டி யூனியன் சமூக நல விரிவாக்க அலுவலர் காவேரிக்கு தகவல் தெரிய வர அவர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசாரிடம் கூறினார். இன்ஸ்பெக்டர் ஜோதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அவரை அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் தாய் மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் அந்த தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பண்ருட்டி பகுதியில் தொடர்ந்து இதேபோன்று சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • விசாரணையில் அண்ணன் முறையிலான உறவினர்களே மாணவியை சீரழித்து இருப்பது தெரிந்தது.
    • அஜய் மற்றும் கண்ணா பாண்டா ஆகியோரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    சிறுமிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்த போது மாணவி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. விசாரணையில் அண்ணன் முறையிலான உறவினர்களே மாணவியை சீரழித்து இருப்பது தெரிந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் வந்து மாணவியிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளனர்.

    இது தொடர்பாக ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் தாயின் அக்கா மகனான மனோஜ், சிறுமியின் தந்தையின் அண்ணன் மகன்களான அஜய், கண்ணா பாண்டா ஆகிய 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இதில் மனோஜை போலீசார் கைது செய்தனர். அவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது.

    அஜய் மற்றும் கண்ணா பாண்டா ஆகியோரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    விருகம்பாக்கம் குமரன் காலனியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

    விசாரணையில் அவரது அக்காள் கணவர் அத்துமீறியது தெரிந்தது. இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கருத்து வேறுபாடு காரணமாக ஆசிரியரின் மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
    • ஆசிரியர் சோமராஜூ மீது பாலியல் வன்முறை உள்ளிட்ட போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டியில் ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் இந்தி ஆசிரியராக கே.சோமராஜூ (வயது46) பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

    இந்த நிலையில் ஆசிரியர் தனது பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவியிடம் 4 மாதங்களாக பழகி வந்துள்ளார். அவருக்கு தனது ஸ்மார்ட்போனை வழங்கியுள்ளார்.

    சமீபத்தில் அந்த மாணவியை தனது வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாலி கட்டி தன்னுடன் வைத்துக் கொண்டார்.

    இருப்பினும், அந்த மாணவி அவரிடமிருந்து தப்பி தனது வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். நடந்த சம்பவம் பற்றி அவர் தனது பெற்றோரிடம் கூறினார்.

    அதைத் தொடர்ந்து அந்த மாணவி, தனது தந்தையுடன் வந்து போலீசில் புகார் அளித்தார்.

    ஆசிரியர் சோமராஜூ மீது பாலியல் வன்முறை உள்ளிட்ட போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    முதல்கட்ட விசாரணைக்குப் பின்னர் ஆசிரியர் சோமராஜூவை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இருவரும் கடந்த 1 மாதமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
    • போலீசார் சுரேஷ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவருக்கும் களக்காடு அருகே உள்ள மூங்கிலடியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இருவரும் கடந்த 1 மாதமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று மாணவி களக்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்து சுரேசை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது சுரேஷ் வீட்டிற்கு வெளியே வந்து நிற்கும் படி கூறியுள்ளார். இதற்கு மாணவி மறுத்துள்ளார்.

    இதையடுத்து சுரேஷ் நீ வெளியே வராவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று மிரட்டினாராம். இதனால் அச்சமடைந்த மாணவி உறவினர் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    பின்னர் சுரேஷ் மாணவியை மூங்கிலடி வயல் காட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மாணவியை களக்காட்டில் விட்டு, விட்டு சென்று விட்டார்.

    இதுபற்றி மாணவி நாங்குநேரி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சுரேஷ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    • கைதான சத்யமூர்த்தி துவாக்குடி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
    • சத்தியமூர்த்தியின் பாலியல் தொல்லையால் பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    திருச்சி:

    திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 68). இவர் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் தட்டச்சு பயிற்சி மையம் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த இன்ஸ்டிட்யூட்டிற்கு அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவிகள் மற்றும் திருமணமான இளம் பெண்கள் தட்டச்சு பயில்வதற்காக சென்றனர். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த இன்ஸ்டிட்யூட் இயங்கி வந்தது.

    இந்த நிலையில் தட்டச்சு பயில்வதற்கு வந்த ஒரு கல்லூரி மாணவிக்கு சத்தியமூர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சடைந்த அந்த மாணவி பயிற்சிக்கு செல்வதை பாதியில் நிறுத்தினார்.

    இதையடுத்து பெற்றோர் மகளிடம் கேட்டபோது, நடந்த விவரத்தை கூறி அழுதுள்ளார். உடனே அந்த மாணவியின் பெற்றோர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சத்தியமூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரது ஆண்ட்ராய்டு செல்போனை வாங்கி சோதனையிட்டபோது அதில் தட்டச்சு பயில்வதற்காக வந்த இளம்பெண்கள் மற்றும் மாணவிகளின் புகைப்படங்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த மாணவிகளுக்கு தெரியாமல் அங்கங்களை புகைப்படம் எடுத்து ரசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கைதான சத்யமூர்த்தி துவாக்குடி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தின் போதே இந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டை தொடங்கி நடத்தி வந்துள்ளார். 30 ஆண்டுகளாக இந்த இன்ஸ்டிட்யூட் இயங்கி வருகிறது. ஆகவே சத்தியமூர்த்தியின் பாலியல் தொல்லையால் பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    பாலியல் குற்றச்சாட்டில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வயதான பின் வந்த விபரீத ஆசையால் முதியோர் இல்லம் நடத்தி வந்த சூரியகலா தற்போது சிறைக்கு பின்னால் கம்பி எண்ணி கொண்டு உள்ளார்.
    • பருவ வயதில் ஏற்படும் எண்ணங்களை நாம் சிறிது நேரம் சிந்தித்து செயல்பட்டால் நலமுடன் வாழலாம் என்பதே பொதுவான கருத்து.

    தமிழகத்தில் சிறுவர், சிறுமிகளின் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போக்சோ உள்ளிட்ட பல கடுமையான சட்டங்கள் மூலம் அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் சிறார்கள் மீதான பாலியல் தொல்லை பல்வேறு இடங்களில் அரங்கேறி வருகிறது. அதைப்போல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 15 வயது சிறுவனை மயக்கி 55 வயது பெண் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதன் பற்றிய விவரம் வறுமாறு:-

    கும்பகோணம் அருகே சோழன் மாளிகையை சேர்ந்தவர் வீரசோழன். இவரது மனைவி சூரியகலா (வயது55). இவர் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் முதியோர் காப்பகத்தை நடத்தி வருகிறார்.

    கும்பகோணம் பேட்டை ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் முருகன் (52). இவர்கள் இருவரும் நண்பர்கள். முருகன் அந்த பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குடும்ப வறுமை காரணமாக வீட்டில் சமையல் செய்து அந்த பகுதியில் உணவு வழங்கி வந்துள்ளார். இவரது 15 வயதுகுட்பட்ட மகன் ஒரு பள்ளியில் படித்து வந்தான், மேலும் இரவு நேரங்களில் அம்மாவிற்கு உதவியாக இரவு உணவு தயார் செய்தும் அப்பகுதியில் வினியோகம் செய்து வந்தான். அவ்வாறு இரவு உணவை முதியோர் இல்லம் நடத்தி வரும் சூரியகலாவிற்கு கொடுத்து வந்துள்ளான். இந்நிலையில் தான் சூரியகலாவிற்கு விபரீத ஆசை உருவானது. அவர் பள்ளி மாணவனை தனது காதல் (காம) வலையில் வீழ்த்த நினைத்தார். அதற்காக அவர் அச்சிறுவனிடம் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியும், ஆபாச வீடியோக்களை காட்டியும் உள்ளார். பருவவயதில் எதையும் சிந்திக்காமல், பின்விளைவுகள் பற்றியும் அறியாமல் அந்த பள்ளி மாணவன் சூரியகலாவின் வலையில் சிக்கி கொண்டான்.

    இந்நிலையில் சுறுசுறுப்பாக சுற்றி திரியும் தனது மகன் சிலநாட்களாக ஒரு அறையில் தனிமையில் இருப்பதும், உடல் மெலிந்து காணப்படுவதும் அவரது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து மகனிடம் விசாரித்த போது அவன் எதையும் கூறாமல் மறைத்து உள்ளார்.

    இதனால் மகனின் விபரீத நிலைமை உணர்ந்த பெற்றோர் அவனை உடனடியாக சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனுக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் அந்த பள்ளி மாணவன் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து டாக்டர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவனிடம் விசாரித்ததில் சூரியகலா தன்னிடம் தவறாக நடந்து கொண்டாக கூறினான்.

    இதைத் தொடர்ந்து இது குறித்து சுவாமிமலை போலீசாரிடம் சிறுவனின் பெற்றோர் புகார் அளிக்க சென்றனர்.

    அவர்கள் இந்த வழக்கை விசாரித்து பெண்ணால் பாதிக்கப்பட்ட சிறுவன் 18 வயதுக்கு கீழ் உள்ளவர் என்பதால் இந்த வழக்கை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

    அதன்படி கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி இந்த வழக்கை விசாரித்து சிறுவனிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சூரியகலா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த முருகன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தார். தொடர்ந்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் திருச்சி மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

    வயதான பின் வந்த விபரீத ஆசையால் முதியோர் இல்லம் நடத்தி வந்த சூரியகலா தற்போது சிறைக்கு பின்னால் கம்பி எண்ணி கொண்டு உள்ளார். பருவ வயதில் ஏற்படும் எண்ணங்களை நாம் சிறிது நேரம் சிந்தித்து செயல்பட்டால் நலமுடன் வாழலாம் என்பதே பொதுவான கருத்து.

    • சிறுவனின் பெற்றோர் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சூர்யகலாவையும், உடந்தையாக இருந்த முருகனையும் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் சோழன்மாளிகை பகுதியை சேர்ந்த வீரசோழன். இவரது மனைவி சூர்யகலா (வயது 55). இவர் அதே பகுதியில் முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். இவரது நண்பர் கும்பகோணம் பேட்டை ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த முருகன் (52).

    அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் வீட்டில் சமையல் செய்து அப்பகுதியில் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த பெண்ணின் 15 வயது மகன் இரவு நேர உணவை முதியோர் இல்லத்திற்கு சென்று சூர்யகலாவிற்கு வழங்குவது வழக்கமாக இருந்தது.

    இந்நிலையில் சிறுவன் திடீரென உடல்நிலை சோர்வுற்று காணப்பட்டான். இதனை கவனித்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து விசாரித்தனர். அப்போது சிறுவன் கூறிய பதில் அவர்களை தூக்கி வாரி போட்டது.

    முதியோர் இல்லம் நடத்தி வரும் சூர்யகலா தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். அதற்கு உடந்தையாக முருகன் செயல்பட்டார். இதனால் உடல்நிலை சரியில்லாமல் போனது என கூறினார்.

    இதையடுத்து சிறுவனின் பெற்றோர் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சூர்யகலாவையும், உடந்தையாக இருந்த முருகனையும் கைது செய்தனர்.

    பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவ சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுமியின் குடும்பத்தினர் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு இடம்பெயர்ந்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் சிறுமியிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் 18 வயது பெண். இவர் கடந்த 2020-ம் ஆண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.

    அப்போது சிறுமிக்கு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பிரவீன் என்ற அரவிந்த் (23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த சில தினங்களுக்கு மாதங்களுக்கு முன்பு பிரவீனுக்கு பிறந்த நாள் என்பதால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் சொல்வதற்காக சிறுமி சென்றார்.

    அப்போது பிரவீன் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதற்கிடையே சிறுமியின் குடும்பத்தினர் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு இடம்பெயர்ந்தனர். அவர்களுடன் சிறுமியும் சென்றார்.

    இந்தநிலையில் சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை பெற்றோர் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்த போது அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் சிறுமியிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரணை நடத்தினர். அப்போது பிரவீன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

    சம்பவம் நடந்தது கோவை மாவட்டம் சூலூர் என்பதால் எர்ணாகுளம் போலீசார் இந்த வழக்கை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி 18 வயது சிறுமியை பிறந்த நாளுக்கு அழைத்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிழக்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கியது ராமநாதபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் 16 வயது மாணவி.

    இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 10-ந்தேதி மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து டாக்டர்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    சிங்காநல்லூர் போலீசார் இந்த வழக்கை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.

    கிழக்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கியது ராமநாதபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரஷேஷ்(வயது19)என்பது தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    எனக்கும், மாணவிக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    நாங்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை அங்கு அழைத்துச் சென்றேன்.

    அப்போது அவரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தேன். இதில் அவர் கர்ப்பமானார்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.

    இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட பிரஷேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • இரண்டாவது முறையாக தாக்கல் செய்த முன்ஜாமின் மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
    • திரை மறைவில் ஒளிந்து கொண்டு தாம் ஒரு அப்பாவி என மனுதாரர் கூற முடியாது என நீதிபதி கருத்து.

    சென்னை:

    கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியின் மகள் தந்தையின் அரவணைப்பில் இருக்கும் நிலையில், தாய் வீட்டில் உள்ள தனது உடமைகளை எடுக்க சென்ற போது, தாய் மாமாவால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதில் பதிவான போக்சோ வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் சிறுமியின் தாய் மாமா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இரண்டாவது முறையாக தாக்கல் செய்த முன்ஜாமின் மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாக மனுதாரர் தரப்பில் கூறினாலும், இறுதி அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் அவர் போலீஸ் விசாரணைக்கு தேவைப்படுகிறார்.

    திரை மறைவில் ஒளிந்து கொண்டு தாம் ஒரு அப்பாவி என மனுதாரர் கூற முடியாது.

    இதுபோன்ற போக்சோ வழக்குகளில் தாய், தந்தை, உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனும், அந்த குழந்தையின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டியதும் தான் முக்கியம். அதனால் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்கிறேன்" என்று உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த நிலையில் முன் ஜாமின் மறுக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர் சமீபத்தில் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

    ×