search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Para Olympics"

    • உயரம் தாண்டுதலில் மாரியப்பன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
    • அவருக்கு விமான நிலையத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் (டி.63 பிரிவு) வெண்கலப் பதக்கம் வென்றார். இதனையடுத்து இன்று மாரியப்பன் சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மாற்றுத்திறன் தடகள வீரர் தம்பி, பாரீஸ் #Paralympics2024-ன் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித்தந்துள்ளார்.

    தாயகம் திரும்பியுள்ள அவரை இன்று நேரில் சந்தித்துப் பாராட்டினோம். நினைவுப்பரிசினை வழங்கி அவரின் சாதனையைப் போற்றினோம்.

     

    தம்பி மாரியப்பன் தங்கவேலு தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்திட நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத்துறை அவருக்கு என்றும் துணை நிற்கும். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும்.

    இவ்வாறு உதயநிதி கூறினார்.

    மாரியப்பன், ரியோ ஒலிம்பிக்கில் (2016-ம் ஆண்டு) தங்கமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) வெள்ளியும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
    • பிரதமரிடம் கையெழுத்து பெற்ற வீரர்கள் அவருக்கு பரிசுகளும் வழங்கினர்.

    புதுடெல்லி:

    17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பாரீசில் சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. இதில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,400-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இதில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 18-வது இடம் பிடித்தது.

    இதையடுத்து, பதக்கம் வென்ற இந்திய அணியினருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பாரா ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியா அதிக அளவு பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. கடந்த டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா 19 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் அதிகபட்ச பதக்கமாக இருந்தது. அந்த எண்ணிக்கையை இந்த முறை முந்திய இந்திய வீரர்கள் மொத்தம் 29 பதக்கங்களை வென்று அசத்தினர்.

     

    இதற்கிடையே, பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு பரிசுத்தொகை அறிவித்து கவுரவித்தது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்துக்கு பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினர் சென்றனர். அவர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பிரதமரிடம் கையெழுத்து பெற்ற வீரர்கள் அவருக்கு பரிசுகளும் வழங்கினர்.

    • இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 29 பதக்கங்களை வென்று அசத்தினர்.
    • நாம் நமது திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்த வேண்டும்.

    பிரான்ஸ் நாட்டின் பாரீசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்று அசத்தியது. முன்னதாக கடந்த டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் இந்தியா 19 பதக்கங்கள் வென்று இருந்த நிலையில், இந்த முறை முந்திய இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 29 பதக்கங்களை வென்று அசத்தினர்.

    இதில் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். பாராஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு பரிசுத்தொகை அறிவித்தது. அதன்படி தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.75 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.50 லட்சமும், வெண்கல பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.

     


    பரிசு தொகைக்கான காசோலையை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கினார். இதுதவிர அணிகள் பிரிவில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.22.5 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

    பரிசு தொகை வழங்கி பிறகு பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "2028 லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக்ஸில் அதிக பதக்கங்கள் மற்றும் தங்கப் பதக்கங்களை வெல்வதற்கு ஏதுவாக நம் பாரா-தடகள வீரர், வீராங்கனைகளுக்கு அனைத்து வசதிகளையும் வழங்குவோம்."

    "நாட்டிற்கு விருதுகளை பெற்றுத்தந்துள்ளீர்கள், வாழ்வின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் இதோடு நிறுத்தக்கூடாது. லாஸ் ஏஞ்சல்ஸில் (2028) அடுத்த பாராலிம்பிக்ஸ் போட்டிக்காக பயிற்சியை துவங்க வேண்டும். இதன் மூலம் நாம் அதிக பதக்கங்களை வெல்ல முடியும்."

    "2036-இல் இந்தியா ஒலிம்பிக்ஸ் மற்றும் பாரா ஒலிம்பிக்ஸ் நடத்தும் போது, நாம் நமது திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்த வேண்டும்," என்று தெரிவித்தார். 

    • இந்தியா மொத்தம் 29 பதக்கங்களைப் பெற்றது.
    • இதில் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

    பாரீஸ்:

    17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 9-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்க பெற்றிருந்தது.

    10-வது நாளான நேற்று இந்தியாவுக்கு 7-வது தங்கப் பதக்கமும், மேலும் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்தது.

    ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (எப் 41) நவ்தீப் சிங் தங்கம் வென்றார். அரியானாவை சேர்ந்த அவர் 47.32 மீட்டர் தூரம் எறிந்தார். முதல் இடத்தை பிடித்த ஈரான் வீரர் ஆட்சேபணைக்குரிய கொடியை மீண்டும் மீண்டும் காட்டியதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

    இதனால் 2-வது இடத்தில் இருந்த நவ்தீப் சிங்குக்கு தங்கம் கிடைத்தது.

    அவனி லெகரா (துப்பாக்கிச்சுடுதல்), நிதேஷ் குமார் (பேட்மிண்டன்), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), ஹர்வீந்தர் சிங் (வில்வித்தை), தரம்பிர நைன் (உருளை எறிதல்) ஆகியோர் தங்கம் வென்றனர். அவர்களது வரிசையில் நவ்தீப் சிங் இணைந்தார்.

    பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் (டி12) சிம்ரன் சர்மா 24.75 வினாடி யில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கத்துடன் 16-வது இடத்தில் இருந்தது.

    இந்நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாளான இன்று இந்தியாவுக்கு பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கத்துடன் 18-வது இடம் பிடித்துள்ளது.

    பாரா ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா இன்று இரவு 11.30 மணிக்கு நடக்கிறது. வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங், தடகள வீராங்கனை பிரீத்தி பால் நிறைவு விழாவில் இந்தியக் கொடியை ஏந்திச் செல்கிறார்கள்.

    பதக்கப் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. 94 தங்கம், 76 வெள்ளி, 50 வெண்கலம் என மொத்தம் 220 பதக்கம் பெற்றுள்ளது.

    இங்கிலாந்து 49 தங்கம், 44 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 124 பதக்கத்துடன் 2-வது இடத்திலும், அமெரிக்கா 36 தங்கம், 42 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 105 பதக்கத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன.

    • இந்தியா இதுவரை 27 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • இதில் 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது. நாளையுடன் இந்தப் போட்டிகள் முடிவடைகின்றன்.

    இதுவரை இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் பாரீசில் இருந்து இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.

    துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அவனி லெகரா மற்றும் பிரனவ், மோனா அகர்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


    • இந்தியா இதுவரை 27 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • இதில் 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இதுவரை இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    இந்நிலையில், ஆண்கள் குண்டு எறிதலில் இந்தியாவின் ஹகோடா சேமா வெண்கலப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த 12-வது வெண்கலப் பதக்கம் ஆகும்.

    ஈரான் தங்கமும், பிரேசில் வெள்ளிப் பதக்கமும் வென்றது.

    நாகாலாந்தில் இருந்து பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரே வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா இதுவரை 26 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • இதில் 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இதுவரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    இந்நிலையில், ஆண்கள் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு 6வது தங்கப் பதக்கம் ஆகும்.

    அமெரிக்கா வெள்ளிப் பதக்கமும், உஸ்பெகிஸ்தான் வெண்கலமும் வென்றது.

    • இந்தியா இதுவரை 25 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • இதில் 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இதுவரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    இந்நிலையில், பெண்கள் 200 மீட்டர் டி-12 காலிறுதி ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சிம்ரன் 25.41 வினாடிகளில் ஓடி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    • இந்தியா இதுவரை 25 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பிரான்ஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இதில் இந்தியா இதுவரை 25 பதக்கங்களை வென்றிருந்தது. இதில் 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 11 வெண்கல பதக்கங்கள் அடங்கும்.

    பாரீஸ் ஆண்கள் கிளப் த்ரோ எஃப் 51 இல் பாரா ஒலிம்பிக்கில் தரம்பிர் தங்கம் வென்றார்.

    அவர் கூறுகையில்: - "நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு வீரருக்கும் இருக்கும். இன்று ஆசிரியர் தினம், அமித் சரோஹா இல்லாவிட்டால், நாங்கள் இங்கு இருந்திருக்க மாட்டோம், இந்தியாவிலும் இந்த விளையாட்டு இருந்திருக்காது என்பது உண்மைதான்..."


    • பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.
    • பாரா ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 25 பதக்கங்களை வென்றுள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    ஆண்கள் பாரா ஜூடோ விளையாட்டின் 60 கிலோ எடை பிரிவில் பிரேசில் நாட்டின் எலிடன் டி ஒலிவெய்ராவை எதிர்த்து விளையாடிய கபில் பர்மார் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை பெற்றார். இதன் மூலம் இதில் 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 11 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

    ஜூடோவில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலம் வென்றதை அடுத்து பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்த பதிவில், "பாரிஸ் 2024 பாராலிம்பிக்ஸில் பாரா ஜூடோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கபில் பர்மருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பல தடைகளைத் தாண்டி, பாராலிம்பிக்ஸில் ஜூடோ போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். எதிர்காலத்தில் அவர் இன்னும் பெரிய சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்," என திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.

    "மிகவும் மறக்கமுடியாத விளையாட்டு திறன் மற்றும் ஒரு சிறப்பான பதக்கம்!

    பாராலிம்பிக்ஸில் ஜூடோவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் கபில் பார்மருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பாராலிம்பிக்ஸ்2024ல் ஆடவருக்கான 60கிலோ J1 போட்டியில் வெண்கலம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள்! அவருடைய முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்," என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியா இதுவரை 25 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • இதில் 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இதுவரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    இந்நிலையில், பாரா வில்வித்தை கலப்பு ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங்-பூஜா ஜோடி ஸ்லோவேனியா ஜோடியை

    எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்திய அணி வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

    • பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.
    • பாரா ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 25 பதக்கங்களை வென்றுள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இதில் இந்தியா இதுவரை 24 பதக்கங்களை வென்றிருந்தது. இதில் 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கங்கள் அடங்கும். தற்போது ஜூடோவில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலம் வென்றதை அடுத்து இந்தியா தனது 25 ஆவது பதக்கத்தை பெற்றது.

    ஆண்கள் பாரா ஜூடோ விளையாட்டின் 60 கிலோ எடை பிரிவில் பிரேசில் நாட்டின் எலிடன் டி ஒலிவெய்ராவை எதிர்த்து விளையாடிய கபில் பர்மார் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார்.

    ×