search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RB Udayakumar Interview"

    • ஆக்டோபஸ் அரைவேக்காடு அட்டைப்பூச்சி அண்ணாமலை தன்னுடைய முகவரியை, விலாசத்தை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
    • அண்ணாமலை போன்ற பைத்தியங்கள் பகல்கனவு கானும் இந்த காலத்தையும் நாம் கவனமாக கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.

    தமிழக பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை பேசும் போது, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார்.

    இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், அண்ணாமலை மனநல மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும் என்று சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:-

    அண்ணாமலை மனநல மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும். அப்படி சந்திக்க முடியவில்லை என்றால் சொல்லுங்கள் நாங்கள் சைக்காலஜி படித்திருக்கிறோம். எனவே, நாங்கள் மனநல மருத்துவத்தை பற்றி அறிந்திருக்கிறோம். உங்களக்கு மதுரையிலேயே கூட ஒரு பைசா கட்டணம் இல்லாமல் சேர்த்துவிட்டு அந்த புண்ணியத்தை ஏற்றுக் கொள்கிறோம்.

    தமிழ்நாட்டு மக்களை உங்களின் பைத்தியக்காரதனத்தில் இருந்து மீட்டெடுத்து உதவுகின்ற வகையில் அதை செயவதற்கு நாங்கள் முன்வருகிறோம்.

    பாரதிய ஜனதா கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த கட்சியுடைய விலாசத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு, ஆக்டோபஸ் அரைவேக்காடு அட்டைப்பூச்சி அண்ணாமலை தன்னுடைய முகவரியை, விலாசத்தை முன்னிலைப்படுத்தி, சுயநலத்தோடு எடுத்து வரும் அத்தனை முயற்சிகளும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்பட்டமாக வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறது.

    தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக கடுகளவும் உழைப்பை தந்திடாத ஆக்டோபஸ் அண்ணாமலை போன்ற பைத்தியங்கள் பகல்கனவு கானும் இந்த காலத்தையும் நாம் கவனமாக கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விவசாயிகள் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது.
    • மதுரை மேற்கு ஒன்றிய அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் இன்று நடந்தது.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மேற்கு ஒன்றிய அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் இன்று நடைபெற்றது.

    மதுரை மேற்கு அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் வயலூர் எம்.சுரேஷ், அதலை ஊராட்சி செயலாளர் அன்புவேலன், வயலூர் ஊராட்சி செயலாளர் வினோத்குமார், அதலை கிளைச் செயலாளர் செல்வேந்திரன் ஆகியோர் சட்டமன்ற எதிர்க்கட்சித்துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

    பின்னர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, மேல்மா கிராமத்திலே தொழில் பூங்கா விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்களை கையப்படுத்த, அரசு முடிவு எடுத்ததன் அடிப்படையிலே, எதிர்ப்பு தெரிவித்து 124 நாட்கள் தொடர்ந்து போராடிய 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிலே 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து இதில் அருள் ஆறுமுகத்தை தவிர ஆறு பேர் மீதான குண்டர் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.

    எடப்பாடியார் இது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டார். அதனை தொடர்ந்து 24 மாவட்டங்க ளில் விவசாயிகள் தி.மு.க. அரசை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தினர்.

    போராட்டத்தில் பங்கெ டுக்கும் விவசாயிகளுடைய தீவிரத்தை குறைக்க வேண்டும் என்றும் அதனு டைய ஆர்ப்பாட்டத்தை தடுக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளிலே அந்த பகுதிகளில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மீதும், விவசாய பெருங்குடி மக்கள் மீதும் தி.மு.க. அரசு தொடர் வழக்குகளை பதிவு செய்து வருகிறது. விவசாய பெருங்குடி மக்களின் போராட்டத்தை கட்டுப் படுத்த இந்த அரசு தவறான முறைகளை கையாண்டு வருகிறது.

    திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்த போது பல அமைப்புகளை திட்டமிட்டு தூண்டிவிட்டு தவறான பொய்யான தகவல்களை எல்லாம் வெளியிட்டு அன்றைக்கு அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை எல்லாம் அரசியல் உள்நோக்கத்தோடு நடத்தப்படுகிறது என்றாலும் அந்த போராட்டங்களுக்கு அனுமதி வழங்கி காவல் துறை பாதுகாப்பு வழங்கி னார் எடப்பாடியார்.

    ஆனால் இன்றைக்கு இருக்கிற தி.மு.க. அரசு விவசாயிகளுடைய போராட்டத்திற்காக காரணத்தை கண்டறிந்து அதை தீர்ப்பதற்கான நடவ டிக்கைகளை எடுக்காமல் விவசாயிகளுடைய போராட்டங்களை எல்லாம் ஒடுக்குவதற்கு காவல் துறையை தொடர்ந்து ஏவல் துறையாக பயன்படுத்தி வருவது. இதன் மூலம் தி.மு.க. அரசு விவசாயிகள் பிரச்சினையில் இரட்டை வேடம் போடுகிறது.

    திருமங்கலம் சிவரக் கோட்டை சிப்காட் பிரச்சினையில் விவசாயிகள் உச்சநீதிமன்றம் வரை எல்லாம் போராடினார்கள். அனைத்து கட்சிகள் போரா டினாலும் கூட அதற்கு தீர்வு கண்டவர் எடப்பாடி யார். அதனால் தான் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் என்று மக்கள் பேசுகிறார்கள். காலம் மாறும் காட்சிகள் மாறும் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடியார் வருவார் அப்போது விவசாயிகளுடைய எண்ணத்தை நிறைவேற்றுகின்ற வகையில் இந்த திட்டங்களையே ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை விவசாயிகள் விரும்புகிற நடவடிக்கைகளை எடப்பாடியார் எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×