search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajya Sabha members"

    • பதவிக்காலம் வருகிற ஜூலை 1-ந்தேதியுடன் முடிவடைகிறது.
    • தமிழ்நாட்டை சேர்ந்த பத்தராஜனும் மனு சமர்ப்பித்திருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 3 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஜூலை 1-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்த பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டியிருந்தது. அது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. மேலும் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அந்த பதவிகளுக்கு கேரள காங்கிரஸ்(எம்) கட்சி ஜோஸ் கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சுனீர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஹரிஸ் பீரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த பத்தராஜனும் மனு சமர்ப்பித்திருந்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் ஜோஸ் கே.மணி, சுனீர், ஹரிஸ் பீரன் ஆகிய 3 பேரும் ராஜ்யசபா உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வானார்கள்.

    பாஜக தலைவர் அமித் ஷா, ரவி சங்கர் பிரசாத், கனிமொழி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தலைவர் அமித் ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதேபோல் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியிலும், திமுகவைச் சேர்ந்த கனிமொழி தமிழகத்தின் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

    அவர்கள் மூவரும் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தனர். தற்போது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.



    இதேபோல் தமிழகத்தின் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார், தனது பதவியை ராஜினாமா செய்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

    ×