search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sivapoojai"

      சிவ பூஜைக்குரிய மலர்கள் நான்கு வகைப்படும். அவை

      1. கோட்டுப்பூ, 2. கொடிப்பூ, 3. நீர்ப்பூ, 4. நிலப்பூ.

      ஒவ்வொரு வகையிலும் இடம் பெற்றுள்ள பூக்கள் வருமாறு:

      1. கோட்டுப் பூ

      வன்னி, பலா, எலுமிச்சை, நார்த்தை, கோங்கு, மந்தாரை, கருஊமத்தை, மாவிலிங்கை, நொச்சி, பன்னீர், அகில், மாதுளை, அசோகு, பாதிரி, வெள்ளெருக்கு, இலந்தை, பலாசு, நுணா, நறவம், புன்னை, விளா, மருது, கொன்றை, நெல்லி, குரா, செருந்தி, பொன்னாவரை, கிளுவை, குருந்து, வில்வம், நாவல் இவைகள் கோட்டுப்பூ எனப்படும்.

      2. கொடிப்பூ

      நாட்டு மல்லிகை, முல்லை, மௌவல், வெற்றிலை, தாளி, கருங்காக்கொன்றை, வெண்காக்கொன்றை, குருக்கத்தி, இருவாட்சி (ஜாதிமல்லி), கொகுடி, பிச்சி இவை கொடிப்பூக்கள் எனப்படும்.

      3. நீர்ப்பூ

      செந்தாமரை, அதிக இதழில்லாத தாமரை, வெண்தாமரை, செங்கழுநீர், நீலோற்பவம், கருநெய்தல், செந்நெய்தல், வெண்நெய்தல் போன்றவை நீர்ப்பூ என்றழைக்கப்படுகிறது.

      4. நிலப்பூ

      பட்டி, நாயுருவி, கண்ணுப்பூ, பச்சை, சிவந்திப்பூ, தும்பை, வெட்டிவேர், மருக்கொழுந்து, சிவகரந்தை, விஷ்ணு கரந்தை, துளசி, செங்கீரை, கருஊமத்தை, செம்பரத்தை கொக்கிறகு, அனிச்சம், நந்தியாவட்டை இவை நிலப்பூ வகைகளாகும்.

      • ஈஸ்வரனை சாதாரண நாளில் இடமிருந்து வலமாக மூன்று முறை வலம் வந்தால் போதுமானது.
      • பிரதோஷ நாளில் “சோமசூக்த பிரதட்சன” முறையை கையாள வேண்டும்.

      ஈஸ்வரனை சாதாரண நாளில் இடமிருந்து வலமாக மூன்று முறை வலம் வந்தால் போதுமானது.

      ஆனால் பிரதோஷ நாளில் அப்படி வலம் வருதல் கூடாது.

      பிரதோஷ நாளில் "சோமசூக்த பிரதட்சன" முறையை கையாள வேண்டும்.

      சோமசூக்த பிரதட்சணம் என்றால் என்ன?

      ஆலால விசமானது தேவர்களை துரத்தியது. தேவர்கள் ஈசனை வலமாக ஓடி வந்தனர்.

      ஆலால விசம் இடமாக வந்து எதிர்த்தது. விசம் எதிர்ப்பதை கண்டு தேவர்கள் அப்படியே திரும்பி இடமாக வந்தனர்.

      ஆலாலம் வலமாக வந்து எதிர்த்தது. ஆக ஆலாலம் முன்னும், பின்னும் தேவர்களை எதிர்த்ததால் பிதோஷ நாளன்று ஈஸ்வரனை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் தரிசனம் செய்ய வேண்டும்.

      இந்த முறையே "சோம சூக்த பிரதட்சணம்".

      • ஞாயிறு- சர்க்கரைப் பொங்கல்,
      • சிவபூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.

      ஞாயிறு- சர்க்கரைப் பொங்கல்,

      திங்கள்- பால் (அல்லது) தயிர் அன்னம்,

      செவ்வாய்- வெண்பொங்கல்,

      புதன்- கதம்பசாதம்,

      வியாழன்-சித்ரான்னம்,

      வெள்ளி-பால் பாயசம்,

      சனி-புளிசாதம்.

      சிவபூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.

      சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவபக்தர்களுக்கு அன்னம் அளிப்பது மிகவும் விசேஷம்.

      108 ருத்ர காயத்ரி ஜபிப்பது விசேஷம்.

      • நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.
      • ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வகை வகையான மலர்கள் சிரசில் வைக்க வேண்டும்.

      நல்லெண்ணை-சுகம் அளிக்கும், பஞ்சகவ்யம்- தூய்மையை அளிக்கும், பால்-ஆயுளை வளர்க்கும்,

      தேன்-மகிழ்ச்சி, இன்குரல் கொடுக்கும், சர்க்கரை- திருப்தியைக் கொடுக்கும்,

      எலுமிச்சை ரசம்-ஞானம் அளிக்கும், இளநீர்- ஆனந்தத்தையும் சிவபோகத்தையும் கொடுக்கும்,

      பஞ்சாமிருதம்- ஜயம் கொடுக்கும், தயிர்-செல்வம் அளிக்கும், கருப்பஞ்சாறு- பலம்,

      ஆரோக்கியம் கொடுக்கும், மஞ்சள் தூள்- ராஜவசியத்தைக் கொடுக்கும்,

      திராட்சை ரசம்-பணம் கொடுக்கும், மாதுளை-அரச பதவி கொடுக்கும்,

      நெய்- மோட்சத்தைக் கொடுக்கும், அன்னம்- வயிற்று நோயை நீக்கும், அரிசி மாவு- கடனைப் போக்கும்,

      நெல்லிக்கனி-பித்தம் நீக்கும், பழ ரசங்கள்- வறட்சியைப் போக்கும்,

      கங்காஜலம்-சாந்தியைக் கொடுக்கும், பன்னீர் கலந்த சந்தனம்- பக்தியையும், ஞானத்தையும் கொடுக்கும்,

      ஆவாகன கலச தீர்த்தம்- மந்திர சித்தியைக் கொடுக்கும், விபூதி- செல்வத்தைக் கொடுக்கும்,

      சொர்ணாபிஷேகம்- மோட்ச சாம்ராஜ்யத்தைக் கொடுக்கும்.

      நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.

      ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வாசனை கலந்த சுத்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, அடுத்தது தொடங்க வேண்டும்.

      ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வகை வகையான மலர்கள் சிரசில் வைக்க வேண்டும்.

      ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் போது சல்லடைக் கண்கள் உள்ள தாராபாத்திரத்தில் அபிஷேகம் செய்யதால் நன்மைகள் பல உண்டு. சத்ருத்ரம், ஏகாதச ருத்ரம், ருத்ரம், புருஷசூக்தம், ம்ருத்யுஞ்ஜம், காயத்ரி, சிவநாமாக்கள் ஆகியவை சொல்லி அபிஷேகம் செய்வது நல்லது.

      சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும்.

      சுகம், சந்தான விருத்தி ஏற்படும். நெய் அபிஷேகம் செய்ய சர்வரோகங்களும் நீங்கி வம்சவிருத்தி ஏற்படும். சர்க்கரை கலந்த பாலாபிஷேகம் செய்ய மந்திர லோபங்களால் பாதிப்பு ஏற்படாது.

      வாசனைத் திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் சத்ருக்களை அழிக்கும். தேன், வியாதிகளை நீக்கும்.

      கருப்பஞ்சாறு துக்கங்களை நீக்கி சந்தோஷத்தைக் கொடுக்கும்.

      • அபிஷேகம்- பாவம் அகலும், பீட பூஜை-சாம்ராஜ்யம் சித்தரிக்கும்,
      • நமஸ்காரம்- நான்கு புருஷார்த்தங்களையும் தரும், ஜபம்-அஷ்ட ஐஸ்வர்யம் தரும்,

      ஆவாகனம், ஆசனம், பத்யம், அர்க்யம், ஆசமனம், மதுவர்க்கம், ஸ்நானம், வஸ்த்ரம், யக்ஞோபவீதம், கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம், நீராஞ்சனம்.

      பலன்கள்

      அபிஷேகம்- பாவம் அகலும், பீட பூஜை-சாம்ராஜ்யம் சித்தரிக்கும்,

      கந்தம்- சகல சவுபாக்கியத்தையும் அளிக்கும், புஷ்பம்- சவுக்கியம் தரும்,

      தூபம்- நல்ல வாசனை தரும், தீபம்- தேக காந்தியைத் தரும்.

      நைவேத்தியம்- மகாபோகத்தைத் தரும், தாம்பூலம்- லட்சுமி கடாசத்தைத் தரும்,

      நமஸ்காரம்- நான்கு புருஷார்த்தங்களையும் தரும், ஜபம்-அஷ்ட ஐஸ்வர்யம் தரும்,

      ஹோமம்- சர்வ காமஸ்கிருமிதியைத் தரும், அன்னதானம்- சர்வ தேவ திருப்திகரம்.

      • தாமரை ஏழு நாட்கள், அரளி மூன்று நாள், வில்வம் ஆறுமாதம், துளசி ஒரு வருடம் வைத்து பூஜிக்கலாம்

      தாமரை ஏழு நாட்கள், அரளி மூன்று நாள், வில்வம் ஆறுமாதம், துளசி ஒரு வருடம் வைத்து பூஜிக்கலாம் என்றும்,

      ஒருமுறை அர்ச்சித்த துளசி, வில்வம், கருஊமத்தை, நீலோத்பல் ஆகியவற்றைப் பொன் மலரைப் போல கழுவிச் சாற்றலாம் என்றும் சிவபூஜா பத்ததி என்ற நூல் கூறுகிறது.

      எடுத்தபின் மலர்ந்த பூ, பழம், எருக்கு மற்றும் ஆமணக்கு இலையில் கட்டிவைத்த பூ,

      கட்டிய ஆடையிலும் கையிலும் வைத்த பூ, கீழே உதிர்ந்த பூ, இடுப்புக் கீழ் உள்ள உறுப்புகளில் பட்ட பூ,

      புழுகடித்த பூ, சிலந்தி மற்றும் பறவைகள் எச்சமிட்ட பூ, மயிர்பட்ட பூ, இரவில் எடுத்த பூ, நீரில் மூழ்கிய பூ, அசுத்தரால் எடுக்கப்பட்ட பூ முதலானவை பூஜைக்கு ஏற்காதவை.

      • சிவனை பத்துக்கோடி மலர்களால் அர்ச்சிப்பவன் ராஜயோகம் அடைவான்.
      • லட்சம் கருஊமத்தை அர்ச்சிப்பின் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

      சிவனை பத்துக்கோடி மலர்களால் அர்ச்சிப்பவன் ராஜயோகம் அடைவான்.

      ஐந்துகோடி மலர்களால் அர்ச்சித்தால் முக்தி பெறுவான்,

      ஒரு கோடி மலர்களால் அர்ச்சித்தால் ஞானம் பெறுவான்.

      அரைக்கோடி மலர்களால் அர்ச்சித்து மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஐந்து லட்சம் ஜபித்தால் சிவன் பிரத்யட்மாவான், லட்சம் அருகம்புல் அர்ச்சித்தால் நீண்ட ஆயுள் ஏற்படும்.

      லட்சம் கருஊமத்தை அர்ச்சிப்பின் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

      லட்சம் கரவீர புஷ்பத்தால் அர்ச்சிப்பின் சர்மராகங்கள் நிவர்த்தியாகும். லட்சம் மல்லிகை அர்ச்சிப்பின் அழகிய மனைவி கிடைப்பாள்.

      ஐம்பதினாயிரம் மலர்களால் அர்ச்சித்தால் ரோகம் நிவர்த்தியாகும். பன்னீராயிரத்து ஐந்தூறு மலர்களால் அர்ச்சிப்பின் கல்வி, கேள்விகளில் சிறந்தவனாவான்.

      பத்தாயிரம் மலர்களால் அர்ச்சிக்க சத்ருபயம் நீங்கப் பெறுவான் என்று சிவபுராணம் கூறுகிறது.

      • ஐப்பசியில் தும்பையினால் அர்ச்சனை செய்யலாம்.
      • ஐப்பசியில் அன்னத்தினால் சிவபூஜை செய்திட நன்மை பெருகும்

      சித்திரை - பலாசம்,

      வைகாசி- புன்னை,

      ஆனி- வெள்ளெருக்கு,

      ஆடி- அரளி,

      ஆவணி- செண்பகம்,

      புரட்டாசி- கொன்றை,

      ஐப்பசி- தும்பை,

      கார்த்திகை- கத்திரி,

      மார்கழி-பட்டி,

      தை-தாமரை,

      மாசி-நீலோத்பலம்,

      பங்குனி- மல்லிகை.

      மாதப் பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்பவன் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடைவான்.

      சித்திரை-மரிக்கொழுந்து, வைகாசி- சந்தனம், ஆனி-முக்கனிகள், ஆடி-பால், ஆவணி- நாட்டுச் சர்க்கரை, புரட்டாசி- அப்பம், ஐப்பசி- அன்னம், கார்த்திகை-தீபவரிசை, மார்கழி- நெய், தை- கருப்பஞ்சாறு, மாசி- நெய்யில் நனைத்த கம்பளம், பங்குனி-கெட்டித் தயிர்.

      • வருடத்தில் ஒருநாள் மட்டும் சிவராத்திரி என்று நினைக்கக்கூடாது. அனைத்தும் சிவமயமே!
      • “நவராத்திரி பூஜை எல்லாம் சிவராத்திரி பூஜையே” என்கின்றார்கள் சித்தர்கள்.

      அழகில் சிறந்த சுகன்யா என்பவள், தன்னைவிட மிக அதிக வயதான ஸ்யவன மகரிஷியைத் திருமணம் செய்து கொண்டாள்.

      அவள் திருமணம் செய்து கொண்டதும் தன் கணவனை, நாம் இருவரும் வாழ்வதோடு மட்டுமல்லாமல் இவ்வுலகமும் வாழ வழி ஒன்று சொல்ல வேண்டும் என்றாள்.

      உடனே ஸ்யவன மகரிஷி "அம்மா, அதற்கு வழி நவராத்திரி பூஜை ஒன்று தான்" என்றார். அவர் மேலும் கூறியதாவது:

      "நவராத்திரி பூஜை பெண்களுக்கு மட்டுமே உரித்தானது.

      ஆண்களுக்கு அதில் எந்தவிதமான பங்கும் கிடையாது" என்று நினைப்பது தவறு.

      ஏனென்றால், "நவராத்திரி பூஜை எல்லாம் சிவராத்திரி பூஜையே" என்கின்றார்கள் சித்தர்கள்.

      கோணக்காதர், கரபாத்திரர். சித்தர் சுடர், ஜடாமினி கோரக்கர், கொல்லிமலை முருகன், தான்பிஸண்டர்,

      கொங்கண சித்தர், கள்ளிப்பால் சித்தர், பாம்பாட்டி சித்தர் அனைவருமே

      "நவாராத்திரியானது சிவ பூஜை செய்வதற்கே!" என்கின்றனர்.

      ஆகவே, நவராத்திரி எல்லாமே சிவராத்திரி தான்.

      நவராத்திரியில் வரும் அனைத்துப் பகல்களும், இரவுகளும் சிவனையே சாரும்.

      வருடத்தில் ஒருநாள் மட்டும் சிவராத்திரி என்று நினைக்கக்கூடாது. அனைத்தும் சிவமயமே!

      அனைத்தும் சிவனின் இரவுகளே!

      அனைத்து துர்க்கைகளும் பகலில் ஈசனை வணங்குகின்றனர்.

      பகலில் ஈசனை வணங்கியதால் கிட்டும் பலனைத்தான் இரவில் தம்மை வணங்கும் பக்தர்களுக்கு அம்பிகைகளின் அம்சங்கள் அளிக்கின்றனர்.

      எனரே தான், "ஈசனை வணங்குதல் மிக முக்கியம்" என்று பெரியவர்கள் சொல்லி வைத்தனர்.

      பகலில் நாம் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து, சிவ பூஜை செய்தால் தான், இரவில் துர்க்கை தரும் பலனைப் பெற முடியும்.

      இவ்வாறு ஸ்யவந மகரிஷியானவர் சுகன்யா தேவிக்கு நவராத்திரி பூஜைகளின் சிறப்பையும்,

      அவற்றை முறையாகக் கொண்டாடுகின்ற விதத்தையும் எடுத்துரைத்தார்.

      சுகன்யா தேவியும் தன் கணவர் அருளியபடியே நவராத்திரி பூஜைகளைக் கடைப்பிடித்து, நல்ல நிலையை அடைந்தாள்.

      ×