search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stock Market"

    • தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 293.25 புள்ளிகள் சரிந்து 24,852 ஆகவும் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
    • அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.460.46 லட்சம் கோடியாக உள்ளது.

    சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்கு மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியுடன் முடிவடைந்துள்ளது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,017.23 புள்ளிகள் சரிந்து 81,183 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 293.25 புள்ளிகள் சரிந்து 24,852 ஆகவும் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

     இன்றைய சென்சக்ஸ் வீழ்ச்சியில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 5.31 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.  மேலும் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.460.46 லட்சம் கோடியாக உள்ளது.

    ஆட்டோ, பொதுத்துறை வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஊடகம், தகவல்தொடர்பு , ஐடி உள்ளிட்ட முக்கிய துறைகள் சரிவை சந்தித்தன. ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி , எஸ்பிஐ வங்கி, இன்ஃபோசிஸ் நிறுவனம் உள்ளிட்ட சென்செக்ஸ் குறியீட்டில் டாப் 30 இல் உள்ள நிறுவனங்கள் மொத்தமாக ஏற்பட்ட 1.24% சரிவில் [1,017.23 புள்ளிகளில்] 538 புள்ளிகளைக் கொண்டுள்ளன. 

    • நடப்பு ஆண்டின் ஏப்ரல் - ஜூன் மாத காலாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி [ஜிடிபி] வளர்ச்சி 6.7 சதவீதமாக உள்ளது
    • மொத்த ஜிடிபி வளர்ச்சி பின்னடைவைச் சந்திக்க முக்கியக் காரணமாகக் வேளாண்துறை வளர்ச்சி சரிந்ததே காரணமாக உள்ளது.

    நடப்பு ஆண்டின் ஏப்ரல் - ஜூன் மாத காலாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி [ஜிடிபி] வளர்ச்சி 6.7 சதவீதமாக உள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த 5 காலாண்டுகளில் மிகக்குறைவான ஜிடிபி வளர்ச்சியாகும். மேலும் கடந்த நிதியாண்டில் 8.2 ஆக இருந்த ஜிடிபி வளர்ச்சி தற்போதைய காலாண்டில் குறைந்துள்ளது.

    மொத்த ஜிடிபி வளர்ச்சி பின்னடைவைச் சந்திக்க முக்கியக் காரணமாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 3.7 சதவீதமாக இருந்த வேளாண் துறை வளர்ச்சி நடப்பு காலாண்டில் 2.0 சதவீதமாகக் குறைந்துள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது.

    ஆனால் உற்பத்தித் துறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் இடையேயான காலாண்டிலிருந்த 6.2 சதவீத வளர்ச்சி 0.8 சதவீதம் அதிகரித்து நடப்பு காலாண்டில் 7.0 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் நாட்டின் மொத்த ஜிடிபி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள இந்த சரிவால் வரும் திங்கள்கிழமை பங்குச்சந்தை சரிவை சந்திக்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

    • அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு இன்று 46.65 ரூபாய் குறைந்து 3,140.90 ரூபாயாக உள்ளது.
    • அதானி போர்ட் பங்கு இன்று 35.80 ரூபாய் குறைந்து 1,498 ரூபாயாக உள்ளது.

    அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர் என்று ஹிண்டர்பர்க் நேற்றுமுன்தினம் கூறியிருந்தது.

    இதனால் திங்கட்கிழமை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்கும். முதலீட்டார்கள் லட்சக்கணக்கான கோடிகளை இழக்கும் அபாயும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்பட்டது. வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 79,705.91 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்திருந்தது.

    இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 79,705.91 புள்ளிகளுடன் ஆரம்பானது. அப்போது சுமார் 400 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமானது. அதன்பின் மெல்லமெல்ல வர்த்தகம் உயர்வை கண்டது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 80,106.18 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இறுதியாக 3.30 மணிக்கு வர்த்தகம் சென்செக்ஸ் 79,648.92 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை நிறைவடைந்ததை வர்த்தகம் 56.99 சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து நிறைவடைந்தது.

    இந்திய பங்குச்சந்தை நிஃப்டி வெள்ளிக்கிழமை 24,367.50 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு 24,320.05 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆரம்பமானது. சுமார் 47 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் இன்று அதிகபட்சமாக 105 புள்ளிகள் அதிகரித்து 24,472.80 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இறுதியாக நிஃப்டி 24,347 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்ததை விட 20.50 சதவீதம் குறைவாகும்.

    அதானியின் டோட்டல் கியாஸ் லிமிடெட் பங்கு 3.95 சதவீதம் குறைந்த 835.50 ரூபாயாக இருந்தது. இன்று 34.35 ரூபாய் சரிவை சந்தித்துள்ளது.

    அதானி எனர்ஜி பங்கு 3.25 சதவீதம் குறைந்து 1067.90 ரூபாயாக உள்ளது. இன்று 35.90 ரூபாய் குறைந்துள்ளது. என்டிடிவி பங்கு 2.32 சதவீதம் குறைந்த 203.50 ரூபாயாக உள்ளது. 4.83 ரூபாய் குறைந்துள்ளது.

    அதானி பவர் பங்கு 1.24 சதவீதம் குறைந்த 687 ரூபாய் உடன் நிறைவடைந்தது. இன்று 8.40 ரூபாய் குறைந்துள்ளது.

    அதானி வில்மர் லிமிடெட் பங்கு 4.10 சதவீதம் குறைந்து 369.35 ரூபாயுடன் நிறைவடைந்தது. இன்று 15.80 ரூபாய் குறைந்துள்ளது.

    அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு இன்று 1.46 சதவீதம் குறைந்து 3,140.90 ரூபாய் உடன் உள்ளது. இன்று 46.65 ரூபாய் குறைந்துள்ளது.

    அதானி போர்ட் பங்கு இன்று 2.33 சதவீதம் குறைந்துள்ளது. 1,498 ரூபாயாக உள்ளது. இன்று 35.80 ரூபாய் குறைந்துள்ளது.

    • நிப்டி 78 புள்ளிகள் குறைந்து 24,288 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
    • அதானி என்டர்பிரைசஸ், அதானி, போர்ட்ஸ், அதானி பவர், அதானி என்ர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவை கண்டு வருகிறது.

    அதானி குழும முறைகேடுகளை வெளிப்படுத்திய ஹிண்டன்பர்க் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் அதானியின் வெளிநாட்டு நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பங்குகளை செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் வைத்திருப்பதனாலேயே முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியது.

    இந்த புதிய அறிக்கை இன்றைய பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தபடியே வாரத்தின் முதல் நாளான இன்றுபங்குச்சந்தை பெரும் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.

    மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 409 புள்ளிகள் சரிந்து 79,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 78 புள்ளிகள் குறைந்து 24,288 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இதன்படி அதானி என்டர்பிரைசஸ், அதானி, போர்ட்ஸ், அதானி பவர், அதானி என்ர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவை கண்டு வருகிறது.  

    • போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள் உடபட பல்வேறு தொழில்கள் முடங்கின
    • பங்குச் சந்தையில் மைரோசாப்ட் மற்றும் Crowdstrike பங்குகள் வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் (விண்டோஸ்) மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள், வங்கிகள், பங்கு சந்தைகள் உள்பட பல்வேறு முக்கிய அத்தியாவசிய சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    மைக்ரோ சாப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த 'கிரவுட் ஸ்டிரைக்' என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில் நேற்று நடந்த சென்சார் மென்பொருள் அப்டேட்டில் குளறுபடி ஏற்பட்டதால் மைக்ரோசாப்ட் சர்வர்கள் முடங்கின. இந்த சர்வர் முடக்கத்தால் உலகம் முழுவதும் கணினி மற்றும் மடி கணினிகளின் முகப்பு திரை நீல நிறமாக மாறி பல்வேறு சேவைகள் முடங்கியது.

    பாதிப்புகள் ஓரளவு சரிசெய்யப்பட்ட நிலையில்பங்குச் சந்தையில் மைரோசாப்ட் மற்றும் Crowdstrike பங்குகள் வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.மைக்ரோசாப்ட் பங்குகள் 0.74 சதவீதம் சரிந்துள்ள்ள நிலையில் Crowdstrike பங்குகள் 11.10 சதவீதம் வரையில்  சரிந்துள்ளன. இந்த பாதிப்புகளால் Crowdstrike நிறுவனம் 9 பில்லியன் டாலர்கள் [சுமார் ரூ.75,350 கோடி] சந்தை மூலதனத்தை இழந்துள்ளது.

    • நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இன்றைய இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது.
    • இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது.

    நேற்று [ஜூலை 2] மும்பை பங்குச் சந்தை குறியீட்டு [BSE] சென்செக்ஸ் 79,856 என்று சாதனையை எட்டிய பின்னர் 31 புள்ளிகள் குறைந்து 79,441 என்ற புள்ளிகணக்கில் முடிவடைந்தது. மேலும் நேற்றைய தினம் தேசிய பங்குச் சந்தை குறியீடு எண் [NSE] நிஃப்டி குறியீடு 24,124 என்ற புள்ளிகணக்கில் நிலைபெற்று முடிவடைந்தது.

    இந்நிலையில் நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 574 புள்ளிகள் அதிகரித்து 80,015 புள்ளிகணக்கிலும் நிஃப்டி 172 புள்ளிகள் அதிகரித்து 24,296 என்ற புள்ளிகணக்கிலும் தற்போது வர்த்தகமாகி வருகிறது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 80,000 புள்ளிகளைக் கடப்பது இதுவே முதல் முறை ஆகும்.

     

    HDFC வங்கியால் இந்த உயர்வு ஏற்பட்டு உள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் நெஸ்லே ஆகியவை அதிக லாபத்தைப் பெற்றுள்ளன.  

     

    • அனைத்து கருதுகணிப்புகளையும் பொய்யாக்கி இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்றது பாஜகவுக்கு பேரிடியாக அமைந்தது.
    • பங்குசந்தையில் முறைகேடு செய்யவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களிலும் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது.

    முன்னதாக தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெரும் எனவும் காங்கிரஸ் ஒற்றை இலக்கத்தில் தான் இடங்களைக் கைப்பற்றும் எனவும் கணித்திருந்தன. இந்த கருத்துக்கணிப்புகள் பாஜகவால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியிருந்தன.

    இதற்கிடையே ஜூன் 4 ஆம் தேதி அனைத்து கருதுகணிப்புகளையும் பொய்யாக்கி இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்றது பாஜகவுக்கு பேரிடியாக அமைந்தது. வட மாநிலங்களில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஆர்.ஜே.டி ஆகியவற்றின் தயவுடனேயே பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானதும் இந்திய பங்குச் சந்தையில் பங்குகளின் விலை அதிரடியாக உயர்ந்தது. பங்குசந்தையில் முறைகேடு செய்யவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் கருத்துக்கணிப்பை வெளியிட்ட பல்வேறு நிறுவனங்களில் முக்கியமானதாக விளங்கும் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மீதும் இந்த குற்றச்சாட்டு வலுவாக முன்வைக்கப்டுகிறது.

    எனவே செபி அமைப்பு மற்றும் பாராளுமன்ற குழு இணைந்து ஆக்சிஸ் மை இந்தியா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் வருங்காலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

     

     தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தற்போது பதிலளித்துள்ள ஆக்சிஸ் மை இந்தியா தலைவர் பிரதீப் குப்தா, அனைத்து வகையான விசாரணைக்கும் தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். பங்குச் சந்தைக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று முற்றிலுமாக மறுத்துள்ள அவர் வருங்காலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்பது குழந்தைத்தனமானது என்றும் விமர்சித்துள்ளார். இந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 361 முதல் 401 இடங்களைக் கைப்பற்றும் என ஆக்சிஸ் மை இந்தியா கணித்தது.  முன்னதாக பிரதீப் குப்தா தேர்தல் ரிசல்ட் நாளன்று பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறாததால் தொலைக்காட்சி விவாத மேடையில் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது.

    • 293 இடங்களில் வென்று பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது.
    • தேர்தல் கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குச் சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 293 இடங்களில் வென்று பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகள் 232 இடங்களில் வென்றுள்ளது.

    இந்நிலையில், இன்று டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர், பேசிய அவர், "தேர்தல் கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குச் சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது, இது கிரிமினல் குற்றமாகும்.

    தேர்தல்களின்போது முதன்முறையாக, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் பங்குச் சந்தைகள் குறித்து கருத்து தெரிவித்தனர்.

    பங்குச்சந்தை ஏற்றம் காணப் போகிறது என்று பிரதமர் பல முறை கூறினார்.

    ஜூன் 4ம் தேதி பங்குச்சந்தை உயரும், மக்கள் பங்குகளை வாங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

    ஊடகங்கள் போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றன, ஆனால் பாஜகவுக்கு 200-220 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என அவர்களுக்குத் தெரியும்.

    ஜூன் 3 அன்று பங்குச்சந்தை வரலாறு காணாத ஏற்றத்தைச் சந்தித்தது, ஆனால் அடுத்த நாளே நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது.

    தேர்தல் முடிவுகள் வெளியான அன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ₹38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பங்குச்சந்தையில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட தேர்தல் கருத்துக் கணிப்பில் முறைகேடு நடந்துள்ளது. மே 30, 31 தேதிகளில் பல ஆயிரம் கோடிக்கு பங்குகள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளது

    வரலாற்றில் இல்லாத அளவிற்கு பங்குச் சந்தையில் பாஜகவினரால் மிகப்பெரிய ஊழல் அரங்கேறியுள்ளது

    பங்குச் சந்தை முறைகேட்டால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பங்குச்சந்தையில் நடத்துள்ள முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்.

    விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும், இதனால் பயனடைந்தவர்கள் யார் என தெரிய வேண்டும்" என்று புள்ளி விவரங்களுடன் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    • பல லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்திருப்பதாக குற்றம்சாட்டு.
    • பல தலைவர்கள் பல லட்சங்களை சம்பாதித்திருப்பார்கள்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பா.ஜ.க. நேற்று ஒரு நாள் மட்டும் பங்குச்சந்தையில் பல லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர்கூறியதாவது:-

    எதற்காக நேற்றைய தினம் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் பங்குச்சந்தை ஏறியது, அதுமட்டுமில்லாமல் இன்று ஏன் 10 ஆயிரம் புள்ளிகள் பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது. என்ன காரணம்?

    வாக்கு எண்ணிக்கை ஒருநாள் விட்டு 1-ந்தேதி நடைபெற்றிருக்க வேண்டும். ஏன் 2-ந்தேதி பா.ஜ.க. வாக்கு எண்ணிக்கையை வைக்கவில்லை? ஏனென்றால் பா.ஜ.க. நேற்று ஒரு நாளில் மட்டும் பல லட்சம் கோடிகளை பங்குச்சந்தையில் சம்பாதித்துள்ளது.

    பங்குச்சந்தையில் லாங், ஷாட் என்று சொல்வார்கள் இதில் ஷாட்டில் சென்று அனைத்து முதலீடுகளை வாங்கிவிட்டனர். அதனை நேற்று மாலையே விற்றுவிட்டனர். இன்று மேலும் வாங்குவார்கள் இதில் பா.ஜ.க.வுக்கு இரட்டிப்பு லாபம் கிடைத்துள்ளது. இதில் பல தலைவர்கள் பல லட்சங்களை சம்பாதித்திருப்பார்கள் என்பது போகப்போக விசாரணையில் தெரியவரும்.

    இவ்வாறு செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார்.

    • தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
    • நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து 22633.12-ல் தடுமாறி வருகிறது.

    மக்களவைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய தேசிய ஜனநாயகக்கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

    இந்த நிலையில் முடிவுகள் குறித்து நிலையான யூகத்திற்கு வர முடியாததால் தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

    இறக்கத்துடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை சென்செக்சில் 2303.45 புள்ளிகளை இழந்து 74275.46 இறக்கத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து 22633.12-ல் தடுமாறி வருகிறது.

    மேலும் இன்றைய பங்குச்சந்தை முடிவில் 3000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
    • வரும் 22-ம் தேதியன்று பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22-ம் தேதியன்று மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவித்தது.

    இதற்கிடையே, 22-ம் தேதியன்று பங்குச்சந்தைகள் அனைத்தும் காலை 9 மணிக்கு பதிலாக மதியம் 2.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 5 மணிவரை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், வரும் திங்கட்கிழமை அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதால் இன்று பங்குச்சந்தைகள் காலை 9.15 மணி முதல் 3.30 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலுவையில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளின் தீர்வும் வரும் 22-ம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பங்குச் சந்தை பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    தாயில்பட்டி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் ஜேசீஸ் விங் சார்பில் பங்குச் சந்தை பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல் லூரி முதல்வர் முனை–வர் பெ.கி.பாலமுருகன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

    கல்லூரி இளங்கலை வணிகவியல் துறை தலைவர் முனைவர் மீ.குருசாமி வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசுகை–யில், மாணவர்களுக்கு சேமிப்பு பற்றிய நன்மைகளையும், அதனால் அடையும் எதிர்கால பலன்கள் குறித் தும் விரிவாக எடுத்துரைத் தார்.

    இதில் சிவகாசி பட்டயக் கணக்காளரும், ஜே.சி.ஐ. செயலாளருமான ஜே.சி.அருள்மொழி வர்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், பங்குச்சந்தை முதலீடு, பங்குச்சந்தை பரிவர்த்தனைகள், இந்திய பங்குச் சந்தை–யின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். ேமலும் மாணவர்களின் பங்குச் சந்தை பரிவர்த்தனைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமும், உரிய பதிலும் அளித்தார்.

    முன்னதாக ஜே.சி.சி.கிரிதரன் வரவேற்றார். நிகழ்ச்சி நிறைவில் கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் ஒருங்கிணைப்பாளரும், வணிகவியல் துறை பேராசிரியருமான முனை–வர் அ.பாபு பிராங்கிளின் நன்றி கூறி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்தி–ருந்தார். இதில் 240 வணிகவி–யல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    ×