search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamizhaga Vetri kazhagam"

    • அரசியலில் வெற்றியின்றி காணாமல் போனவர்களும் உண்டு.
    • பெரியாரை தவிர்த்து அரசியல் செய்வது எளிய காரியமில்லை.

    தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையை பிரிக்கவே முடியாது. திரைப் பிரபலங்களாக இருந்து அரசியலில் சாதித்தவர்கள் தமிழகத்தில் அதிகம். இதே போன்று பிரபலங்களாக இருந்தும், அரசியலில் வெற்றியின்றி காணாமல் போனவர்களும் உண்டு.

    திரைத்துறை சார்பு மட்டுமின்றி தமிழக அரசியலில் இன்றும் பெருமளவு வாக்கு வங்கி பெரியார் மற்றும் திராவிட சித்தாந்தங்களின் அடிப்படையில் தான் சுழல்கிறது. திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் பெரியார் மண் என்று அழைக்கப்படும் தமிழ் நாட்டில்- திராவிடம், பெரியார், சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை தவிர்த்து அரசியல் செய்வது எளிய காரியமில்லை.


     

    பெரியார் வழி வந்த தமிழக அரசியல் தலைவர்களான அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் திராவிட சித்தாந்தம் பேசியே தமிழக அரசியலில் சாதித்தனர். தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சியாக உள்ள அதிமுக-வும் திராவிடம் மற்றும் சமத்துவ கொள்கைகளை பேசியே மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளது.

    இடையில் திரைத்துறையில் இருந்து அரசியலில் களமிறங்கிய நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவரும் கூட தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்ததோடு, திராவிட கொள்கைகளை ஒட்டியே தனது அரசியல் பயணம் மேற்கொண்டார். உணர்ச்சிகர பேச்சு, வெளிப்படைத் தன்மை காரணமாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்த விஜயகாந்த் தமிழ்நாடு சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகவும் உயர்ந்து வெற்றி பெற்றார்.


     

    அந்த வரிசையில், தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக உள்ள விஜய்- தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ளார். இதுவரை கட்சி பெயர், கொடி மற்றும் அறிமுக பாடலை மட்டும் வெளியிட்டுள்ள விஜய், தனது கட்சியின் கொள்கை பற்றி இதுவரை பேசவில்லை. தமிழக அரசியலில் புதுவரவு கட்சியான "தமிழக வெற்றிக் கழகம்" 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறது.

    அரசியல் கட்சி தொடர்பான முதல் அறிவிப்பில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சமத்துவ கொள்கைப்பற்று கொண்டிருப்போம் என்று உரக்க தெரிவித்தார் விஜய். அதன்பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அறிக்கைகள் அனைத்திலும் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது அக்கட்சியின் வாசகமாக இடம்பெற்று வருகிறது.

    விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழக கட்சியின் ஒவ்வொரு நகர்வுகளையும் உற்று நோக்கும் போது, அவர் திராவிட வழியில் பயணம் செய்வதாகவே தெரிகிறது. இதனை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி பொது நிகழ்வுகளுக்கு கூறும் வாழ்த்து செய்திகளும் அப்பட்டமாக எடுத்துக் காட்டியுள்ளன. மேலும், மாணவர்களிடையே பேசிய விஜய் அவர்களிடம், அம்பேத்கர், பெரியார் பற்றி படிக்க வலியுறுத்தி இருந்தார்.


     

    இந்த வரிசையில், பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளில் அவரது நினைவிடம் அமைந்துள்ள பெரியார் திடலுக்கு நேரில் சென்ற பெரியார் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக பொது இடத்தில் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தி இருக்கிறார்.

    அரசியல் தலைவராக முதல்முறை பொது நிகழ்வை தந்தை பெரியார் பிறந்த நாளில் அவரது நினைவிடத்தில் விஜய் நடத்தி இருப்பது தமிழக அரசியலில் பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளது. இதுவரை விஜய் மேற்கொண்டு வரும் அரசியல் நகர்வுகள் சமத்துவம், சமூக நீதி ஆகிய கருத்துக்களை சார்ந்தே இருந்து வந்துள்ளது.

    தமிழக அரசியலில் திராவிடம், சமூகநீதி, சமத்துவம் தவிர்த்து பிரதான கட்சியாக வளர்ச்சி பெற முடியாது என்பதில் விஜய் கவனமுடன் செயல்பட்டு வருவதையே இவை உணர்த்துகின்றன. அரசியலில் தனது சீனியர்கள் பயணத்த பாதை, தமிழக அரசியல் வரலாறு ஆகியவற்றை கூர்ந்து கவனிக்கும் நபராக விஜய்யின் அரசியலை பார்க்க முடிகிறது.


     

    தமிழகத்தில் திராவிடம், கடவுள் மறுப்பு, சமூகநீதி கருத்துக்களை பேசி வரும் ஆளும் கட்சியான திமுக, பெயரளவில் திராவிட, சமூகநீதி கருத்துக்களை வலியுறுத்தும் அதிமுக, தமிழ் தேசம் பேசும் நாம் தமிழர் என அரசியல் கட்சிகளின் பயணத்தை நாம் வரையறுக்கலாம். 

    இந்த நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, திராவிடம், சமூகநீதி ஆகியவற்றை வலியுறுத்துமா? ஆன்மிக அரசியல் குறித்து விஜய் என்ன நிலைப்பாடு கொண்டுள்ளார்? தமிழக அரசியலில் அவர் முன்னெடுக்கப் போகும் பாதை எதை சார்ந்து இருக்கும்? என அரசியல் விமர்சகர்கள், தலைவர்கள், பொது மக்கள் மற்றும் அவரது ரசிகர் பட்டாளம் என ஒட்டுமொத்த தமிழகத்தின் கேள்விகளுக்கு விஜயின் முதல் அரசியல் மாநாட்டில் பதில் கிடைக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்..!

    • தவெக சார்பில் செஞ்சி ராமச்சரந்திரனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல்.
    • செஞ்சி ராமசந்திரனின் 50 ஆண்டு அரசியல் அனுபவத்தை பயன்படுத்த விஜய் முடிவு.

    தவெகவில் திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், அதிமுகளின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனை விஜய் கட்சியின் அவைத் தலைவராக நியமனம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தவெக சார்பில் செஞ்சி ராமச்சரந்திரனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், செஞ்சி ராமச்சந்திரன் தவெகவில் இணையும் பட்சத்தில், கட்சியின் அவைத் தலைவர் பதவி கொடுக்க விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    செஞ்சி ராமசந்திரனின் 50 ஆண்டு அரசியல் அனுபவத்தை பயன்படுத்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதிமுகவில் செஞ்சி ராமசந்திரனுக்கு முக்கியத்துவம் இல்லாததை பயன்படுத்தி பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும், தவெகவின் மாநாட்டில் விஜய் முன்னிலையில் செஞ்சிராமசந்திரன் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • நடிகர் விஜய் விருவதற்கு தனி வழி ஏற்படுத்தி அதற்கு பேரிகார்டு அமைக்க வேண்டும்.
    • குடிநீர், உணவு பொருட்கள் அனைத்தும் அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற காவல் துறை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மாநாடு நடைபெறும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட மாநாடு சம்பந்தப்பட்ட இடங்களின் வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது.

    இதுகுறித்து காவல்துறை மேலும் கூறியதாவது:-

    மாநாடு 2 மணிக்கு தொடங்கினால், 1.30 மணிக்குள் தொண்டர்கள் பந்தலுக்குள் வந்துவிட வேண்டும். 2 மணிக்கு மேல் மாநாட்டில் பங்கேற்க தொண்பர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    மாநாட்டிற்கு ஒவ்வொரு பகுதியில் இருந்தும் எத்தனை பேர் வர உள்ளனர்? எந்த பிரதிநிதி தலைமையில் வருவார்கள் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

    குடிநீர், உணவு பொருட்கள் அனைத்தும் அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.

    த.வெ.க நிர்வாகிகள் அளித்த கணக்குப்படி, வாகனங்களில் 20 ஆயிரம் பேர் மட்டுமே வர முடியும். ஆனால், 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று சொல்லி உள்ளீர்கள். மீதி வருபவர்களின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

    கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அமர நெரிசல் இல்லாமல் தனியாக இடம் ஒதுக்க வேண்டும்.

    நடிகர் விஜய் விருவதற்கு தனி வழி ஏற்படுத்தி அதற்கு பேரிகார்டு அமைக்க வேண்டும்.

    மாநாடு நடத்தப்படும் இடம் அருகில் உள்ள கிணறுகள் மூடப்பட வேண்டும்.

    மின் ஒயர்கள் செல்லும் வழியில் நாற்காலிகள் போடாமல் தவிர்ப்பது நல்லது.

    மாநாடு மேடையின் அளவு என்ன ? எத்தனை பேர் மேடையில் அமரப் போகிறார்கள் என்ற விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    மாநாடு நடக்கும் பகுதியில் பட்டாசு வெடித்தல் வாண வேடிக்கை உள்ளிட்டவை தவிர்க்கப்பட வேண்டும்.

    விஐபி பாஸ் வழங்கப்படும் விவரங்கள் முன்கூட்டியே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

    மாநாடு முழுவதும், பார்க்கிங் உள்பட அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.

    போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் மாநாடு நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

    • விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.
    • விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கி தமிழ்நாட்டு அரசியலில் புதிய புயலாக வந்துள்ளார்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நடிகர் விஜய்யின் குறிக்கோளாக உள்ளது.

    சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். அதோடு கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தமிழகம் முழுவதும் பூத் வாரியாக விரைவுப்படுத்த அறிவுறுத்தி உள்ளார். ஒரு கோடி முதல் 1.50 கோடி உறுப்பினர்களை முதல் கட்டமாக சேர்க்க அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.

    இதன் காரணமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியின் தொடக்கத்தை எழுச்சி ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமான முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.

    திருச்சி, சேலம், மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை உள்பட பல இடங்களில் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். திருச்சியில் நடத்துவதற்கு முடிவு செய்த நிலையில் அங்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 23-ந்தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். மாநாடு நடத்துவதற்கு சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மாநாட்டுக்காக பிரமாண்ட மேடை, உணவுக்கூடம், ஆம்புலன்ஸ் வசதி, கழிப்பிடம், குடிநீர் வசதிகள், 40 ஏக்கரில் ஒரு வாகன நிறுத்தமும் 27 ஏக்கரில் இன்னொரு வாகன நிறுத்தமும் என 2 வாகன நிறுத்தம் உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் மாநாட்டுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கிறது.

    மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வசதி கேட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 28-ந்தேதி தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்தார்.

    இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாநாட்டுக்கான அனுமதி போலீசாரால் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.

    போலீஸ் அதிகாரிகளின் கடிதம் விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் மூலமாக புஸ்சி ஆனந்திடம் வழங்கப்பட்டது. மாநாட்டு பந்தலின் நீளம், அகலம், பங்கேற்போரின் எண்ணிக்கை, மேடையில் அமர்பவர்கள் யார் யார்? முக்கிய பிரமுகர்கள் வரும் நேரம், வழி, அவர்கள் வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு செய்யப்பட்ட வசதிகள் என்னென்ன? எந்தெந்த பகுதியில் வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    எத்தனை வாகனங்கள் நிறுத்தலாம்? குடிநீர் வசதி, உணவுக்கூடம், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, அவசர ஆம்புலன்ஸ் வசதிகள், நிலத்தின் உரிமையாளரிடம் பெறப்பட்ட அனுமதி கடித விபரம், மாநாட்டு இருக்கைகள் வசதி என்பது உள்பட 21 கேள்விகளை போலீசார் கேட்டு இருந்தனர்.

    இந்த 21 கேள்விகளுக்கும் 5 நாட்களுக்குள் நடிகர் விஜய் கட்சி தரப்பில் பதில் தர வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

    போலீசாரின் 21 கேள்விகள் குறித்து நடிகர் விஜய் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். விக்கிரவாண்டி அருகே மாநாடு நடத்துவதில் ஏதேனும் சட்ட சிக்கல் உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசாரின் 21 கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    மாநாடு முன்னேற்பாடுகள் தொடர்பான போலீசாரின் 21 கேள்விகளுக்கு பதில் அளித்து விளக்க கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்த கடிதத்தில் விக்கிரவாண்டி அருகே உள்ள இட வசதி பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், மாநாடு நடக்கும் இடத்தில் மேடை அரங்கு எத்தனை சதுர அடி நீளம் அகலத்தில் அமைகிறது என்ற விவரம் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேடை அமைக்கப்படும் பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் வந்து செல்லும் வசதிகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தவிர தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் தொண்டர்களுக்கு எந்தெந்த இடங்களில் எப்படி உணவு வழங்கப்படும் என்பதும் கூறப்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு தொகுதி தொண்டர்கள் வரும் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் நிறுத்துவதற்கும், புறப்பட்டு செல்வதற்கும் உள்ள ஏற்பாடுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

    மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1 லட்சம் பேர் வருவார்கள் என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்று போலீஸ் தரப்பில் கேட்கப்பட்ட 21 கேள்விகளுக்கும் விஜய் விளக்கமான பதில்களை அளித்துள்ளார்.

    இந்த பதில்கள் அடங்கிய கடிதத்துடன் இன்று (வெள்ளிக்கிழமை) கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் சென்னையில் இருந்து விழுப்புரம் புறப்பட்டு சென்றார். இன்று மாலை அவர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து 21 விளக்கங்கள் அடங்கிய பதில் கடிதத்தை கொடுத்தார்.

    விஜய் தரப்பில் அளிக்கப்பட்ட கடிதத்தை பெற்றுக்கொண்ட போலீசார் ஆவன செய்வதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் விக்கிரவாண்டி அருகே மாநாடு நடக்கும் இடத்துக்கு மீண்டும் சென்று ஆய்வு செய்வார்கள் என்று தெரிகிறது.

    அதன் பிறகு முறைப்படி விஜய் மாநாட்டுக்கு அனுமதி வழங்கி அதிகாரப்பூர்வ கடிதம் போலீஸ் தரப்பில் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மாநாட்டுக்கான அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக விஜய் கட்சி நிர்வாகிகள் ஆர்வமுடனும், உற்சாகத்துட னும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    • தமிழக வெற்றி கழக (த.வெ.க) கட்சிக் கொடியின் அறிமுக விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
    • மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், பொதுமக்களுக்கு வேட்டி, சேலை அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

    தமிழக வெற்றி கழக கட்சி தலைவர் நடிகர் விஜய் கட்சிக் கொடியை கடந்த மாதம் அறிமுகம் செய்தார்.

    இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அம்பத்தூரில் ஆயிரம் பேருக்கு கட்சிக் கொடி, சிக்கன் பிரியாணி வழங்கி நல திட்டங்களோடு கொண்டாடிய விஜய் ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்தனர். 

    அம்பத்தூரில் தமிழக வெற்றி கழக (த.வெ.க) கட்சிக் கொடியின் அறிமுக விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

    த.வெ.க கட்சியின் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 1000 பேருக்கு சிவப்பு மஞ்சள் நிறத்தில் யானை உருவத்துடன் கூடிய த.வெ.க கட்சி கொடியை வழங்கினர்.

    முன்னதாக விழாவில் கலந்து கொண்ட கூலித் தொழிலாளிகளுக்கு கட்சி கொடியை வழங்கி மகிழ்ச்சி அடைந்த அவர்கள் பின்னர் பெண்கள், இளைஞர் என அனைவருக்கும் கட்சிக் கொடியை கொடுத்தனர். 

    இதனைத் தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், பொதுமக்களுக்கு வேட்டி, சேலை அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கியதோடு சுமார் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கினர்.

    • கோட் திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • கோட் திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனை நேற்று ஆன்லைனில் தொடங்கியது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    படத்தின் 3 பாடல்கள் இதற்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் 4-வது பாடல் வெளியாகியுள்ளது.

    திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு ஓன்றை விடுத்துள்ளது.

    விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் கோட் திரைப்பட டிக்கெட்டை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை உத்தரவிட்டுள்ளது.

    கோட் திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனை நேற்று ஆன்லைனில் தொடங்கிய நிலையில் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய்யின் அரசியல் வருகை குறித்து கனிமொழி கருத்து தெரிவித்தார்.
    • நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கனிமொழியிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்டது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். திரைத்துறை தாண்டி, அரசியலில் களம் காண முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் விஜய் வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் பெயரில் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் விஜய், தனது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார்.

    மேலும், விரைவில் கட்சி கொடி அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கு இடத்தை இறுதி செய்யும் பணிகளில் நிறைய இடையூறுகள் ஏற்படுவதாகவும் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகின்றன.

    இந்த நிலையில், விஜய்யின் அரசியல் வருகை பற்றி திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட தனியார் நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து எம்பி கனிமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த எம்பி கனிமொழி, "விஜய் குடும்பத்துடன் அவரது சிறுவயது முதலே எனக்கு பழக்கம் இருக்கிறது. இந்த இடத்திற்கு, எல்லாரும் கொண்டாடும் நட்சத்திரமாக வருவதற்கு- அதற்கான உழைப்பு, அதற்கான பாதை எல்லாமே அவருக்கு புரிந்ததால் தான் அதை செய்ய முடிந்தது. அதே தெளிவோடு, அதே உழைப்போடு அவர் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • தவெக நிர்வாகிகள் அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

    தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று (ஜூலை 18) தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்திற்கு தவெக நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • அரசியலில் முதன் முதலாக கல்வி விவகாரம் குறித்து விஜய் கருத்து தெரிவித்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.
    • நீட் குறித்து விஜய் கருத்தை வரவேற்கிறோம்.

    சென்னை:

    நீட் தேர்வு முறைகேடால் நீட் மீது உள்ள நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் போய் விட்டது. நாடு முழுக்க நீட் தேர்வே தேவையில்லை என்பதுதான் அந்த செய்திகள் மூலம் நான் புரிந்து கொண்ட விஷயங்கள்.

    நீட் விலக்குதான் இதற்கு உடனடி தீர்வு. நீட் ரத்து கோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்திருக்கிற தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சீக்கிரமாகவே இதை தீர்க்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறினார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மேலும், அரசியலில் முதன் முதலாக கல்வி விவகாரம் குறித்து விஜய் கருத்து தெரிவித்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.

    இந்நிலையில் நீட் தமிழகத்திற்கு தேவை இல்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. விஜயின் கருத்தை வரவேற்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    • நீட் தேர்வுக்கு எதிராக ஆளும் கட்சி தீவிரமாக இருக்கிறோம்.
    • விஜய் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.

    சென்னை: 

    நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை விஜய் ஆதரித்து பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மேலும், அரசியலில் முதன் முதலாக கல்வி விவகாரம் குறித்து விஜய் கருத்து தெரிவித்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.

    இதனிடையே திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நீட் தேர்வுக்கு எதிராக ஆளும் கட்சி தீவிரமாக இருக்கிறோம்.

    நீட் தேர்வு மட்டுமல்லாது கல்வியையும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று விஜய் வலியுறுத்தி இருக்கிறாரே என்று கேட்டதற்கு...

    வரவேற்கத்தக்கது. கொஞ்ச கொஞ்சமாக he is on the line என்று கூறினார்.

    • உங்களை ஒரு நல்ல மனிதராகவும் நல்ல தலைவராகவும் உணர்கிறேன்
    • உங்களை காண முடியவில்லை என்றாலும் உங்கள் அறிவுரைகளை உள்வாங்கி மகிழும் மாணவி நான்.

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் புதுச்சேரியை சேர்ந்த பார்வையற்ற மாணவி சண்முகப்பிரியா பேசியதாவது:-

    விஜய் அண்ணா, உங்கள் குரலைக் கேட்க வந்திருக்கிறேன். உங்களை ஒரு நல்ல மனிதராகவும் நல்ல தலைவராகவும் உணர்கிறேன் அண்ணா. இங்கு மதிப்பெண் பெற்று சாதனை படைத்ததை விட எங்களையும் எங்கள் பெற்றோரையும் அழைத்து மகிழ்வித்துள்ளீர்கள்.

    தமிழகத்தின் தளபதியே கல்விக்கு கண் கொடுக்கும் நிகழ்கால கர்மவீரரே உங்களை காண முடியவில்லை என்றாலும் உங்கள் அறிவுரைகளை உள்வாங்கி மகிழும் மாணவி நான். உங்கள் பணி மேலும் தொடர என்னுடைய வாழ்த்துகள். இங்கு பேச வாய்ப்பளித்த தளபதி விஜய் அண்ணாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாணவி சண்முகப்பிரியா பேசி முடிக்கும் வரை விஜய் அவருக்கு மைக்கை பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநில கல்வித்திட்டத்தில் படித்தவர்களுக்கு தேசிய கல்வித்திட்டத்தில் தேர்வு வைத்தால் எப்படி?
    • நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் நீட் தேர்வு குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

    * நீட் தேர்வு மாநில சுயாட்சிக்கு எதிரானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    * மாநில கல்வித்திட்டத்தில் படித்தவர்களுக்கு தேசிய கல்வித்திட்டத்தில் தேர்வு வைத்தால் எப்படி?

    * நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.

    * மாநில மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை கூடாது.

    * கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு வந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

    விஜய் தனது உரையின்போது மத்திய அரசை திமுக பாணியில் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    NEET நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

    ×