search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirukkazhukundram"

    • சித்திரையில் பெருவிழா நடைபெறுகின்றது. கொடியேற்றம், யாகசாலை முதலியன மலைமீது நிகழும்.
    • திருவிழாக்கள், அனைத்தும் தாழக்கோவிலில்தான்.

    சிவலிங்கத் திருமேனி (பக்தவத்சலேசுவரர்.) சதுரபீட ஆவுடையாரில் அமைந்துள்ள அழகான மூர்த்தம்.

    கருவறை 'கஜப்பிரஷ்ட' அமைப்புடையது.

    கோஷ்டமூர்த்தங்களாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை, ஆகியோர் உளர்.

    சண்டேஸ்வரர் உள்ளார். மறுபக்கத்தில் தீர்த்தக் கிணறு உள்ளது.

    நித்திய வழிபாடுகள் செம்மையாக நடைபெறுகின்றன.

    சித்திரையில் பெருவிழா நடைபெறுகின்றது. கொடியேற்றம், யாகசாலை முதலியன மலைமீது நிகழும்.

    திருவிழாக்கள், அனைத்தும் தாழக்கோவிலில்தான்.

    சித்திரைப் பெருவிழாவில், மூன்றாம் நாள் உற்சவத்தில் காலையிலும், பத்தாம் நாள் விழாவில் இரவிலும், சுவாமி அதிகாரநந்தியிலம், பஞ்சமூர்த்திகளுடன் முறையே எழுந்தருளி மலைவலம் வருவதும் வழக்கம்.

    அடிவாரத்தில் மாமல்லபுரம் போகும் பாதையில் நால்வர்கோவில் உள்ளது.

    இப்பகுதி 'நால்வர் கோவில்பேட்டை' என்று வழங்குகிறது.

    கல்வெட்டில் இத்தலம் 'உலகளந்த சோழபுரம்' என்று குறிப்பிடப்படுகிறது.

    தொண்டை நாட்டுக்குரிய 24 கோட்டங்களுள் இது களத்தூர்க் கோட்டத்தைச் சார்ந்தது.

    7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர். சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

    சென்னையிலிருந்து 67 கி.மீ தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோவில் 1400 ஆண்டுகள் பழமையானது.

    இங்கு காணப்படும் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    அதுமட்டுமல்லாமல் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளன.

    • அம்பாளுக்கு எதிரில் ‘பிரத்யட்ச வேதகீரீஸ்வரர்’ சந்நிதி உள்ளது.
    • அடுத்துள்ள நடராச சபையில் உள்ள மூர்த்தி சிறியதாயினும் அழகாகவுள்ளது.

    அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது.

    ஆண்டில் (1) ஆடிப்புரம் (2) பங்குனி உத்திரம் (3) நவராத்திரியில் வரும் நவமி ஆகிய மூன்று நாள்களில் மட்டுமே இங்கு அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்பெறுகின்றது.

    நாடொறும் பாத பூஜை மட்டுமே நடைபெறுகின்றது.

    அம்பாளின் கருவறையை வலம் வரும்போது அபிராமி அந்தாதிப் பாடல்களை சலவைக் கற்களில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளதைப் பாராயணம் செய்தவாறே வலம் வரலாம்.

    அம்பாளுக்கு எதிரில் 'பிரத்யட்ச வேதகீரீஸ்வரர்' சந்நிதி உள்ளது.

    அடுத்துள்ள நடராச சபையில் உள்ள மூர்த்தி சிறியதாயினும் அழகாகவுள்ளது.

    வலமாக வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு நின்ற வலப்பால் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது, துவார பாலகர்களை வணங்கி உட்சென்றால், உள்சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும் அதையடுத்து விநாயகர், சுந்தரர் முதலாகவுடைய அறுபத்துமூவர் மூலத்திருமேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து அறுபத்துமூவரின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன.

    பைரவர் வாகனமின்றி உள்ளார்.

    • இதன் கலையழகு கண்டுணரத்தக்கது. நான்கு கால் மண்டபம்.
    • ஒருபுறம் துவார விநாயகர், மறுபுறம் சுப்பிரமணியர்.

    வடக்கு வாயிலை அடுத்து வரும்போது 'நந்தி தீர்த்தம்' உள்ளது.

    கரையில் நந்தி உள்ளது. வலமாக வரும்போது அலுவலக மண்டபக் கற்சுவரில்,

    (நமக்கு இடப்பால்) அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது.

    இதன் கலையழகு கண்டுணரத்தக்கது. நான்கு கால் மண்டபம்.

    ஒருபுறம் துவார விநாயகர், மறுபுறம் சுப்பிரமணியர்.

    இருவரையும் வணங்கி, ஐந்து நிலைகளையுடைய உள் கோபுரத்துள் நுழைகிறோம்.

    இக்கோபுரம் வண்ணக்கோபுரமாகச் சிற்பங்களுடன் காட்சி தருகிறது.

    நுழையும்போது, வாயிலில் இடப்பால் 'அநுக்கிரக நந்திகேஸ்வரர்' தேவியுடன் காட்சி தருகின்றார்.

    உள் நுழைந்து வலமாகப் பிராகாரத்தில் வரும்போது, சோமாஸ்கந்தர் சந்நிதி மிக அழகாகவுள்ளது.

    இப்பிராகாரத்தில், ஆத்மநாதர் சந்நிதி (பீடம் மட்டுமே கொண்டது), இதன் எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம் பரநாதர், தலவிநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர் முதலிய சந்நிதிகள் தனிக் தனிக் கோவில்களாக அமைந்துள்ளன.

    ஆறுமுகப்பெருமான் சந்நிதி அழகாகவுள்ளது. கந்தர் அநுபூதிப் பாடல்கள் சலவைக் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் அழகான முன் மண்டபத்துடன் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது.

    உள்ளே வலம் வரலாம். நின்ற திருக்கோலம்.

    • உச்சியில் நவ கலசங்கள். கோபுரத்தில் சிற்பங்களில்லை. விநாயகரும் சுப்பிரமணியரும் இருபுறமும் உள்ளனர்.
    • கருங்கல்லில் அமைந்துள்ள துவாரபாலகர்கள் உருவங்கள் அழகுடையவை.

    சங்கு தீர்த்தம் பெரிய குளம்.

    நீராழி மண்டபமும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன.

    இக்குளத்திற்குச் சற்றுத் தொலைவில் 'ருத்ரகோடி' என்னும் பெயர் பெற்ற வைப்புத் தலம் உள்ளது.

    குளக்கரையிலிருந்து பார்த்தாலே இக்கோவில் விமானம் தெரிகின்றது.

    மிகப்பழமையானது. இங்குள்ள இறைவன்-ருத்ரகோடீஸ்வரர், இறைவி-அபிராமசுந்தரி,

    இவ்விடத்தைத் தற்போது மக்கள் 'ருத்ராங்கோவில்' என்றழைக்கின்றனர்.

    தாழக்கோவில் கிழக்குக் கோபுரம் ஏழு நிலைகளையுடையது.

    உச்சியில் நவ கலசங்கள். கோபுரத்தில் சிற்பங்களில்லை. விநாயகரும் சுப்பிரமணியரும் இருபுறமும் உள்ளனர்.

    கருங்கல்லில் அமைந்துள்ள துவாரபாலகர்கள் உருவங்கள் அழகுடையவை.

    கிழக்குக் கோபுர வாயில் வழியே உட்புகுவோம். வலப்பால் மண்டபத்தில் அலுவலகம் உள்ளது.

    இடப்பால் பதினாறுகால் மண்டபம் உள்ளது.

    இம்மண்டபத்தின் பக்கமாகத் திரும்பி வெளிப் பிராகாரத்தை வலம் வரும் போது, விநாயகர் சந்நிதி, ஆமை மண்டபம் முதலியன உள்ளன.

    இம்மண்டபத் தூண்கள் கலையழகு மிக்கவை.

    • கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டவை. இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம்.
    • கோவிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இறைவன் - பக்தவத்சலேஸ்வரர்.

    இறைவி - திரிபுரசுந்தரி.

    தலமரம் - வாழை.

    தீர்த்தம் - சங்கு தீர்த்தம்.

    மிகப் பழமையான கோவில். நாற்புறமும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன.

    கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டவை. இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம்.

    கோவிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சந்நிதிக்கு நேர் எதிரில் வீதியின் கோடியில் மிக்க புகழுடைய 'சங்கு தீர்த்தம்' உள்ளது.

    பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது.

    இதிற்கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க, இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அதுமுதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    • வேதகிரியை வலம் வந்த பிறகு தான் யோசிக்க வேண்டும் எனக்கூற அங்குள்ள யாவரும் ஆம்! அப்படியே செய்வது தான் நலம் என்றார்கள்.
    • நின் அன்புக்கு வேண்டி உம்மிடம் பரமேஸ்வரியே குழந்தையாக வளர்ந்து வந்தாள்.

    பின்னர் அன்னதானம், சொர்னதானம் முதலிய 32 தானங்களும் அவரவர் விரும்பியபடி வேண்டும் அளவிற்கு கொடுத்து நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்த்து வந்தார்கள்.

    அப்படி வளர்ந்த தங்களுடன் உள்ள முதியோர் பந்துக்கள் சேர்ந்து நல்ல தினத்தில் திருமணம் முடிக்க ஆலோசனை செய்து கொண்டிருக்கும் சமயம் தேவியாருக்கு பூர்வக்கியானம் வந்து தந்தையாரை நோக்கி அப்பா!

    வேதகிரியை வலம் வந்த பிறகு தான் யோசிக்க வேண்டும் எனக்கூற அங்குள்ள யாவரும் ஆம்! அப்படியே செய்வது தான் நலம் என்றார்கள்.

    உடனே வணிகர்கோன் "திருமலை சொக்கமாள் "என்னும் திருத்தேவியை அழைத்துக்கொண்டு "திருக்கழுகுன்றம்" என்னும் திவ்ய ஷேத்திரம் அடைந்து திவ்ய தீர்த்தமாகிய சங்குத்தீர்த்ததில் நீராடி வேதமலையை வலம் வரும் போது தந்தையார் முன்னும் அம்மையார் பின்னுமாகிய மலைக்கு வடக்கு திசையில் செல்லும் போது ஒருபாறை மீது வேதகிரி பெருமான் அமர்ந்து இருப்பது அம்மையாருக்கு மட்டும் தோன்ற அம்மையார் அடையும் இடம் வந்ததை உனர்ந்து பெருமானிடம் நெருங்கி பூமியைக் கிளறி நிற்க வேதகிரிபெருமான் தேவியை அழைத்துக் கொண்டு மலைமீது ஒரு சார்பில் தங்கவும்; முன்னே சென்ற செட்டியார் திரும்பி பார்த்து குழந்தையைக் கானாது திகைத்து மயங்கி முன்னும் பின்னுமாக ஓடி ஒடி தேடியும் கானமையால் ஓவெனக்! கதறிய வண்ணமாக "திருமலைச் சொக்கம்மாள்" என்று பலமுறை கூவியழைக்க மலை மீது ஏன்! ஏன்! என்னும் குரல் கேட்க திசையறிந்து மலை மீதேறிப் பார்க்க சுவாமி முன்னும் அம்மையார் பின்னுமாக நிற்பதறிந்து ஓ வெனக் கதறிய வண்னம் மெய் சோர்ந்து அடியற்ற மரம் போல சுவாமி திருபாதத்தில் விழுந்து கதற பெருமான் ஏ அன்ப வருந்த வேண்டாம்.

    நின் அன்புக்கு வேண்டி உம்மிடம் பரமேஸ்வரியே குழந்தையாக வளர்ந்து வந்தாள். இனி உம்முடன் வர மாட்டாள். வேண்டிய வரம் கேள் தருவோம் என திருவாய் மலர்ந்தார்.

    • சுவாமியோ! அப்படியே ஆகுக என்று திருவாய் மலர்ந்தார்.
    • பிறகு மேல் சன்னிதானத்திற்கு வருக என்று கூறினார்.

    செட்டியார், சுவாமி தங்களை அடைந்ததும் அகில உலக தேவியே மகளாகப் பெற்றும நான் அடைந்ததை காட்டிலும் வேறு பேறு எனக்கு என்ன வேண்டும்.

    ஆயினும் இவ்விடத்திலேயே உம்மை வந்தடைந்து தரிசனம் செய்யும் அன்பர்கட்கு "புத்திரப்பேறு, மாங்கல்யப்பேறு, செல்வப்பேறு, பினிநீக்கம் "என்று அவரவர் கோரியபடி வரத்தையும் அளித்தருள வேண்டுமென பிரார்த்தித்தார்.

    சுவாமியோ! அப்படியே ஆகுக என்று திருவாய் மலர்ந்தார்.

    பிறகு மேல் சன்னிதானத்திற்கு வருக என்று கூறினார்.

    அக்கட்டளையை ஏற்று வேதமலை உச்சியில் சென்று பார்க்க,அங்கும் அம்மையாரோடு காட்சி அளிக்க கண்ட தனக்கோட்டி செட்டியார் பேரானந்தம் கொண்டவராய் சுவாமி அப்பனே! வேதகிரி பெருமானே! அம்மயாரை விட்டு நீங்காச் செல்வம் வேண்டும் என பிரார்த்திக்க, பெருமான் அம்மையார் சன்னிதானத்திலேயே இருக்க மோட்சமளித்தார்.

    வணிகர்கோன் விதேக முக்தி அடைந்தார். அவ்வம்மையாரை வளர்த்த தாயகிய மங்கையர்கரசியாருக்கும் பெருமான் சாயுச்சிய பதவியளித்தார்.

    அந்த நாள் முதல் ஈசன் வேதகிரி பெருமான் கொடுத்த வரத்தின் வாக்குப்படி வேதமலையின் மேல் வடக்கு திசையில் அம்மையாரால் ஏற்பட்ட வரமாதலால் அம்மையார் பேரே விளங்க "திருமலை சொக்கம்மன்"ஆலயம் என்றாக்கி இருவரும் அங்கெழுந்தருளியிருந்து மெய்யன்போடு தம்மை வந்து அடைந்த அன்பர்களுக்கு "புத்திரப்பேறு, மாங்கல்யப்பேறு, செல்வப்பேறு, பினிநீக்கம் போன்ற பேறுகள் கொடுக்கப்பெற்றவர்கள் தாமடைந்த வரத்தை முன்னிட்டு தொட்டில் பிள்ளை, மாலை சாத்துதல், அபிஷேக அலங்கார அர்ச்சனை செய்கின்றனர்.

    பெருமான் தேவியரை ஏற்றுக்கொண்ட சுப தினமான பங்குனி உத்திர சுபவேளையில் வருஷம் பிரதி வருஷம் சுவாமி, அம்மனுக்கு மஹா அபிஷேக திருக்கல்யான மஹோத்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

    • அதன் பின் பல தான தருமங்களை செய்து திருவிழாக்களை கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • பின்னர் அக்குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று யோசிக்கும் நேரத்தில் “சொக்கம்மாள்” என அசரீயாய் ஒலித்தது.

    மங்கயற்கரசி என்னும் திருநாமம் கொண்ட கற்புக்கரசியை பத்தினியாக உடைய தனக்கோட்டி செட்டியார் எனும் வணிகர் கோமான் அநேக தான தருமங்களைச் செய்தும் ஸ்தல தீர்த்த யாத்திரைகளை செய்தும் புத்திரபேரு இல்லாத குறையால் தானும் தன் பத்தினியாரும் மனக்கவலை அடைந்து வருந்தியிருந்தனர்.

    வேதகிரி பெருமான் சிவனடியார் திருவுருவம் கொண்டு தமது இல்லம் வரக்கண்ட வணிகர் தன் பத்தினியோடு எதிர் கொண்டு அவரை அழைத்து வந்து தக்க ஆசனமளித்து அமர செய்தார்.

    வேதகிரி இங்கெழுந்தருளியது பல ஜென்மங்களில் செய்த தவ பயனே ஆகுமென்று வணங்கி சுவாமிகள் திருவடி கமலங்களுக்கு சுகந்த நீராட்டி கலவைச் சாந்திட்டு நறு மலர்களால் அர்ச்சித்து சுவாமி இக்குடிசையில் திருவமுது செய்து அடியேன் எங்கள் குறை தவிர்த்து ஆட்கொள்ள வேண்டுமெனப் பிரார்த்தித்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து வேண்டி நிற்க, பெருமான் மனம் இறங்கி நீவீர் மேற்கே அடுத்துள்ள வேதகிரியை ஒரு மண்டலம் விதிப்படி பிரதஷனம் செய்து வர புத்திர பேரு உண்டாகுமென திருவாய் மலர்ந்து மறைந்தார்.

    அவ்வண்ணமே வேதகிரியை இருவரும் வேத விதிப்படி ஒரு மண்டலம் பிரதஷனம் செய்து முடிவில் வேதகிரி பெருமானுக்கும், திருபுரசுந்தரியம்மைக்கும் விசேஷ அபிஷேக அலங்காரம் செய்து வைத்து அடியார்கட்கு அமுதூட்டி தமது இல்லம் சேர்ந்து துயில் எழுந்து பரமேஸ்வரியே குழந்தை உருவாய் தம் பக்கத்தில் இருக்கக் கண்டு கறையில்லா ஆனந்தம் பொங்கி இரு கரங்களில் ஏந்தி உச்சி மோந்து மார்புற தழுவுங்காலை ஆனந்தம் பொங்க இரு தனங்களிலும் பால் சுரக்க அம்மைக்கு பால் குடுத்தனர்.

    அதன் பின் பல தான தருமங்களை செய்து திருவிழாக்களை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    பின்னர் அக்குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று யோசிக்கும் நேரத்தில் "சொக்கம்மாள்" என அசரீயாய் ஒலித்தது.

    அப்பெயரை கேட்ட அனைவரும் பரமானந்தம் கொண்டனர்.

    திருமலையை வலம் வந்த காரணத்தினால் வந்த செல்வமாதலால் "திருமலைச் சொக்கம்மாள்" என்னும் திருநாமம் சூட்டி மூன்று முறை அழைத்தனர்.

    • தருமமோ என்றால் ஒன்று செய்தாலும் அது கோடியாய் பெருகும்.
    • அந்த காரணத்தினால் இது ‘தரும கோடித்தலம்’ என்று பெயர் பெற்றது.

    தேவர்களும், முனிவர்களும் தங்கள் தங்கள் குறைகளை இத்தலத்தில் தவம் இருந்து போக்கி கொண்டார்கள்.

    இத்தன்மையுள்ள வேதகிரியைச் சூழ்ந்துள்ள ஏழரைக்காத எல்லையிலும் செய்கின்ற பந்தமாகியபாதகங்கள் செய்தது எவ்வளவோ அவ்வளவில் பொருந்தும்.

    தருமமோ என்றால் ஒன்று செய்தாலும் அது கோடியாய் பெருகும்.

    அந்த காரணத்தினால் இது 'தரும கோடித்தலம்' என்று பெயர் பெற்றது.

    கங்காநதி நீங்காத சடை முடியையுடைய பரமசிவம் வீற்றிருந்து அருளும் காரணத்தால் 'சிவபுரம்' என்று சொல்லப்படுகிறது.

    ஒரு தடவை சொன்னா 100 கோடி தடவை சொன்ன மாதிரி!

    சிவபெருமான் திருவாலங்காட்டில் காளியினுடைய வாதாட்டத்தினைக் கெடுத்து, ஊர்த்துவ தாண்டவம் செய்து இந்த வேதகிரியில் வந்து இளைப்பாறினார்.

    உருத்திர கோடி என்று மகிழ்ச்சியுடன் ஒருதரம் சொன்னால் அது நூறு கோடி முறை ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியதற்கு ஒப்பாகும்.

    • வடக்குத்திக்கில் வசிட்ட தீர்த்தம் என்று ஒன்றிருக்கிறது.
    • தென்மேற்குத்திக்கில் மெய்ஞானம், அகத்தியம், மார்க்கண்டம், கோசிகம் என நான்கு தீர்ததங்கள் உள்ளன.

    திருக்கழுக்குன்றம் தலத்தில் மொத்தம் 12 தீர்த்தங்கள் உள்ளன.

    நகரின் கிழக்குத்திசையில் ஏழு தீர்த்தங்கள் இருக்கின்றன. தென்கிழக்கில் சம்பு தீர்த்தம், உருத்திர தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் இருக்கின்றன.

    வடக்குத்திக்கில் வசிட்ட தீர்த்தம் என்று ஒன்றிருக்கிறது.

    தென்மேற்குத்திக்கில் மெய்ஞானம், அகத்தியம், மார்க்கண்டம், கோசிகம் என நான்கு தீர்ததங்கள் உள்ளன.

    மேற்குத்திக்கில் நந்தி, வருணன் என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.

    வடமேற்கில் அகலிகை என்றொரு தீர்த்தம் உண்டு.

    இந்த மலையின் உச்சியில் நாங்களிருவரும் கண்டதாகிய சம்பாதித் தீர்த்தம் என்று எங்கள் பெயரால் ஒன்றிருக்கிறது.

    மன்னனே! இத்தீர்த்தங்களைப் பார்த்தாலும் அள்ளித் தெளித்துக் கொண்டாலும் கணப்பொழுது மூழ்கினாலும் அங்கே போய் கால்சறுக்கி விழுந்தாலும் பரந்த அத்தீர்த்தத்தில் ஒரு துளி தெளித்தாலும் அதில் பறந்து வருகின்ற காற்று மேலே பட்டாலும் பாதகங்கள் எல்லாம் நீங்கிப்போகும்.

    தேவர்கள் தொழத்தக்க இந்த தீர்த்தங்கள் தோறும் நீர் மோண்டு கொண்டு ஒரு அடி எடுத்து வைத்துச்செல்லுதல் ஒரு அசுவமேக யாகத்தை செய்ததாகும். விரதம் அனுஷ்ட்டிப்பவர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கி அனுஷ்ட்டித்தால் ஆனந்தமாகப் பலன் அளிக்கும்.

    • இந்த தீர்த்தத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு பிறக்கின்றது. சங்கு பிறக்கும் காலத்தில் இதில் நீராடுதல் மிகவும் விசேடம்.
    • இத்தீர்த்தத்தில் ஒரு மண்டலம் (40 நாட்கள்) நீராடி மலையை வலம் வந்தால் எல்லாவிதமான பிணிகளும் நீங்கும்.

    திருச்சந்நிதிக்கு எதிரே சிறிது தூரத்தில் சங்கு தீர்த்தம் என்னும் குளம் உள்ளது. இது பெரியகுளம்.

    இந்த தீர்த்தத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு பிறக்கின்றது.

    சங்கு பிறக்கும் காலத்தில் இதில் நீராடுதல் மிகவும் விசேடம்.

    இத்தீர்த்தத்தில் ஒரு மண்டலம் (40 நாட்கள்) நீராடி மலையை வலம் வந்தால் எல்லாவிதமான பிணிகளும் நீங்கும்.

    ஆனால் பாதுகாப்பு கருதி தற்போது யாரையும் நீராட குளத்துக்குள் அதிகாரிகள் அனுமதிப்பதில்லை.

    இறையருள் மணக்கும் திருமுறைகளுள் இத்தலத்தை போற்றி திருஞானசம்பந்தர் ஒரு திருப்பதிகமும்,

    திருநாவுக்கரசர் ஒரு திருப்பதிகமும் சுந்தரர் ஒரு திருப்பதிகமும், சுந்தரர் ஒரு திருப்பதிகமும், மாணிக்கவாசகர் திருக்கழுக்குன்றப் பதிகமும் அருளிச் செய்துள்ளனர்.

    • அழகான முன் மண்டபத்துடன் உள்ள அம்பாள் சந்நிதியும் இப்பிராகாரத்தில் அமைந்துள்ளது.
    • உள்ளே கருவறையில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அம்மன் திரிபுரசுந்தரி அருட்காட்சி தருகிறாள்.

    அழகான முன் மண்டபத்துடன் உள்ள அம்பாள் சந்நிதியும் இப்பிராகாரத்தில் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி சுற்றி வலம்வர வசதி உள்ளது.

    உள்ளே கருவறையில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அம்மன் திரிபுரசுந்தரி அருட்காட்சி தருகிறாள்.

    அம்பிகைக்கு தினமும் பாதத்தில் தான் அபிஷேகம் நடைபெறுகிறது.

    ஓராண்டில் மூன்று நாட்கள் மட்டுமே (ஆடிப்பூரம் 11ம் நாள், நவராத்திரி 9ம் நாள், பங்குனி உத்திரம் இரவு) திருவுருவம் முழுவதும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    அம்பாளுக்கு எதிரில் பிரத்யட்ச வேதகிரீஸ்வரர் சந்நிதி உள்ளது. அதையடுத்து நடராச சபை உள்ளது.

    பிராகாரம் வலம் வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு நின்று வலதுபுறம் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது, துவார பாலகர்களை வணங்கி உள்ளே சென்று, உள்சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும், அதையடுத்து விநாயகர், 63 மூவர் மூலத்திருமேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து 63 நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன.

    பைரவர் வாகனமின்றி உள்ளார். மூலவர் சதுரபீட ஆவுடையாரில் பக்தவத்சலேஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி எழுந்தரிளியுள்ளார்.

    கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் உள்ளார்.

    உட்பிராகாரத்திலுள்ள சுமார் 7 அடி உயரமுள்ள அகோரவீரபத்திரர் திருவுருவம் பார்த்து மகிழ வேண்டியதாகும்.

    ×