search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "USA presidential election"

    • 2001 தாக்குதல் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • டிரம்ப் 2024 என எழுதப்பட்ட தொப்பியை அணிந்ததால் அனைவரும் ஆச்சர்யம்.

    2001-ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இரட்டை கோபுரத்துடன், பென்டகன் உள்ளிட்ட இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் 9/11 தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஷாங்க்ஸ்வில்லி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பின் டிரம்ப் 24 என எழுதப்பட்ட தொப்பியை அணிந்திருந்தார்.

    2001 சம்பவத்தின்போது தீயணைப்பு வீரர்களின் பங்கை குறிப்பிட்டு பேசினார். அவர்கள் துரிதமாக செயல்பட்டு ஏராளமானவர்களின் உயிர்களை காப்பாற்றியதை நினைவு கூர்ந்தார். மற்றவர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக ஏராளமான வீரர்கள் தங்களுடைய உயிர்களை தியாகம் செய்தனர். இந்த சம்பவத்தின்போது அனைத்து தரப்பில் இருந்தும் அரசியல் வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக நாட்டு மக்கள் நின்றனர். அதேபோல் தற்போதுதம் நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

    அரசியல் கலத்தில் டொனால்டு டிரம்ப்-ஐ கடுமையாக விமர்சித்து வரும் ஜோ படைன், அவரது தொப்பியை அணிந்திருந்தது அங்கிருந்தவர்கள் புருவங்களை உயர்த்த செய்தது.

    இது தொடர்பாக டொனால்டு டிரம்பிற்கு பிரசாரம் மேற்கொண்ட ஜோ பைடனுக்கு நன்றி என டிரம்ப் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக ஒளிபரப்பாளர் பியர்ஸ் மோர்கன், "ஜோ பைடன் வெறும் டொனால் டிரம்ப் தொப்பியை வைத்தது வெறும் ஜோக் அல்ல. அவர் உண்மையிலேயே செய்தார்" எனத் தெரிவித்துள்ளார்.

    டொனால்டு டிரம்பியன் வார் ரூம் (War Room) ஆதரவுக்கு நன்றி ஜோ எனப் பதிவிட்டுள்ளது.

    டொனால்டு டிரம்பிற்கு எதிரான நேரடி விவாதத்தின்போது ஜோ பைடன் திணறினார். இதனால் அவர் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகி கமலா ஹாரிஸை பரிந்துரைத்தார். தற்போது கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் டிரம்பை எதிரித்து போட்டியிடுகிறார். இந்திய நேரப்படி நேற்று காலை நடைபெற்ற விவாதத்தில் டொனால்டு டிரம்ப்- கமலா ஹாரிஸ் கலந்து கொண்டனர். இதில் கமலா ஹாரிஸ்க்கு அதிக ஆதரவு கிடைத்தது.

    • விவாதத்தில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக பலர் கருத்து தெரிவித்தனர்.
    • டிரம்ப் பெரும்பாலும் உண்மைகளில் இருந்து விலகிச் சென்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

    நேற்று இருவரும் பங்கேற்ற நேரடி விவாத நிகழ்ச்சி பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியாவில் நடந்தது. இதை ஏ.பி.சி ஊடகம் நடத்தியது.

    இதில் பொருளாதாரம், குடியேற்றம், ரஷியா-உக்ரைன் போர், இஸ்ரேல்-காசா போர், நிர்வாகம், கருக்கலைப்பு உள்ளிட்ட பல்வேறு விவாகரங்கள் குறித்து காரசாரமாக விவாதித்தனர்.

    சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் சிரித்த முகத்துடனும், டிரம்ப் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமலும் இருந்தனர். விவாதத்தில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக பலர் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நேரடி விவாதத்தில் வெற்றியாளர் யார் என்று அமெரிக்க ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தின. இதில் டிரம்பை கமலா ஹாரிஸ் பின்னுக்கு தள்ளினார்.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிசுக்கு 63 சதவீத பேர் ஆதரவு தெரிவித்தனர். டிரம்புக்கு 37 சதவீத பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல் மற்ற ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளிலும் கமலா ஹாரிசே முன்னிலையில் உள்ளார்.

    சி.என்.என் ஊடகம் கூறும்போது, "டொனால்ட் டிரம்பை விட துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டார் என்பதை அமெரிக்க வாக்காளர்கள் பரவலாக ஒப்புக்கொள்கிறார்கள்" என்று தெரிவித்தது.

    வாஷிங்டன் போஸ்ட் கூறும்போது, "டிரம்புக்கு எதிராக கமலா ஹாரிஸ் கூர்மையான கருத்துகளை முன்வைத்தார். டிரம்ப் பெரும்பாலும் உண்மைகளில் இருந்து விலகிச் சென்றார்" என்றது.

    நியூயார்க் டைம்ஸ் கூறும்போது, "கமலா ஹாரிஸ் தெளிவான செய்தியை வழங்கினார். அதே நேரத்தில் டிரம்ப் கோபமாகவும் தற்காப்புடனும் தோன்றினார்" என்று தெரிவித்தது.

    எம்.எஸ்.என்.பி.சி ஊடகம் கூறும்போது, "கமலா ஹாரிஸ் விவாதம் முழுவதும் நிதானமாகவும், தகுதியுடனும் இருந்தார். டிரம்ப் விரக்தியடைந்து காணப்பட்டது தெளிவாக தெரிந்தது" என்று தெரிவித்தது.

    இதன்மூலம் விவாத நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.

    • கமலா ஹாரிஸ் மார்க்சிஸ்ட்- டொனால்டு டிரம்ப்.
    • டொனால்டு டிரம்ப் சர்வாதிகாரிகளின் தீவிர நண்பர்- கமலா ஹாரிஸ்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் களம் இறங்குகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

    இருவரும் இன்று தனியார் தொலைக்காட்சி நடத்திய நேரடி விவாதத்தில் கலந்து கொண்டனர். இருவரும் பொருளாதாரம், கருக்கலைப்பு, குடியேற்றம் ஆகியவற்றை பற்றி பரஸ்பர விமர்சனத்தில் ஈடுபட்டனர்.

    அதன்பின் இஸ்ரேல்- ஹமாஸ், உக்ரைன்- ரஷியா போர் குறித்தும் தங்களது பார்வையை முன்வைத்தனர். தனிப்பட்ட முறையிலும் விமர்சனங்களை முன்வைக்க தவறவில்லை.

    கமலா ஹாரிஸை மார்க்சிஸ்ட் என டொனால்டு டிரம்ப் விமர்சித்தார். அதேவேளையில் உலக நாடுகள் டொனால்டு டிரம்பை பார்த்து சிரிக்கின்றனர். டிரம்ப் அவமானம் என உலகத் தலைவர்கள் சொல்வதாக கமலா ஹாரிஸ் விமர்சித்தார். மேலும், சர்வாதிகாரிகளின் தீவிர நண்பர் என குற்றம்சாட்டினார்.

    இந்த விவாதம் முடிவடைந்த நிலையில், "இதுவரை நான் கலந்து கொண்டதில், கமலா ஹாரிஸ்க்கு எதிரான விவாதம்தான் என்னுடைய விவாதங்களில் சிறந்த விவாதம் என்று நினைக்கிறேன்" என சமூக வலைத்தளத்தில் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    முதல் விவாதத்தில் ஜோ பைடன் டொனால்டு டிரம்பிற்கு எதிராக திணறினார். இதனால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என டொனால்டு டிரம்ப் நினைத்தார். ஆனால் ஜனநாயக கட்சி ஜோ பைடனுக்கு பதலாக கமலா ஹாரிஸை களம் இறக்கியது. அதன்பின் தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என கருத்து கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.

    • நமது பொருளாதாரத்தை கமலா ஹாரிஸ் சீர்குலைத்து விட்டார்.
    • கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நின்றுவிடும்- டிரம்ப்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் முதன்முறையாக பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றனர். விவாதத்தின்போது இருவரும் தனது கருத்துகளை தெரிவித்தனர்.

    கமலா ஹாரிஸ் "நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தலைவர் தேவைப்படுகிறது. மக்களின் பிரச்சனைகள், கனவுகள் பற்றி டிரம்ப் பேசவேமாட்டார். அரசியலமைப்பின் மீது டிரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை என அவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். டிரம்பே ஒரு குற்றவாளிதான். அவர் குற்றவாளிகளை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனால் அவர் மீது வழக்குகளில் இருந்து தப்பித்து விடுவார்.

    அமெரிக்காவின் சட்டத்தின் மீது டிரம்ப்-க்கு நம்பிக்கை இல்லை. இவர் மீண்டும் அதிபரானால் நாடு தாங்காது என்று இவருடன் பணியாற்றிய அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். ப்ராஜெக்ட் 2025 என்ற ஆபத்தான திட்டத்தை டிரம்ப் வைத்துள்ளார். அனைவரையும் ஒன்றிணைக்கும் அதிபரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றார்.

    டொனால்டு டிரம்ப் "கொரோனா தொற்றை மிக சிறப்பாக கையாண்டோம். அமெரிக்காவிற்கான மிக சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கினேன். என்னுடைய ஆட்சியில் பண வீக்கம் மிக குறைவாக இருந்தது. சீன பொருட்கள் மீது அதிக வரி சுமத்தி வருவாய் ஈட்டினோம். பைடன் ஆட்சியில் பணவீக்கத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. நான் ஆட்சிக்கு வந்தால் வரியை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்" என்றார்.

    மேலும் "கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட். அவரிடம் எந்த திட்டமும் இல்லை. நமது பொருளாதாரத்தை கமலா சீர்குலைத்து விட்டார். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். முக்கிய விஷயங்களில் ஜனநாயக கட்சி இரட்டை நிலைப்பாடு எடுத்தது. வங்கி கடன் ரத்து என கூறி பைடன் ஏமாற்றினார். எனது பிரசாரக் கூட்டங்களில் இருந்து யாரும் வெளியேறுவது இல்லை. அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்.

    நான் வித்தியாசமான ஆள். சரியாக பணி புரியாதவர்களை நான் பணி நீக்கம் செய்தேன். வெளியே சென்று அவர்கள் என்னைப் பற்றி தவறாக பேசுகின்றனர். வரலாற்றில் யாருக்கும் இல்லாத ஆதரவு எனக்கு உள்ளது. எனக்கும் ப்ராஜெக்ட் 2025-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனை நான் படித்தது கூட இல்லை. படிக்கவும் மாட்டேன். நான் திறந்த புத்தகம். வரிகளைக் குறைப்பேன். கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நின்றுவிடும். எங்கள் கட்சி பேரணியில் பங்கேற்றவர்கள் சுடப்பட்டார்கள்" என்றார்.

    • உலக தலைவர்கள் டொனால்டு டிரம்பை பார்த்து சிரிக்கிறார்கள்- ஹாரிஸ்
    • இஸ்ரேலை கமலா ஹாரிஸ் வெறுக்கிறார். அதேபோல் அந்த பிராந்தியத்தில் உள்ள அரபு மக்களையும் வெறுக்கிறார்- டிரம்ப்

    அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பாளர்களான டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகியோர் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான காசா போர் குறித்து பேசும்போது டொனால்டு டிரம்ப் "நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் இந்த நிலையை எட்டிருக்காது. கமலா ஹாரிஸ் இஸ்ரேலை வெறுக்கிறார். அவர் அதிபராக பதவியேற்றால் 2 ஆண்டுகளில் இஸ்ரேல் அழிந்துவிடும். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இங்கு வந்த போது கூட கமலா அவரை சந்திக்கவில்லை." என்றார்.

    அதற்கு கமலா ஹாரிஸ் "டிரம்ப் சொல்வது உண்மையல்லை. இஸ்ரேலுக்கு தனது ஆதரவு" என வலியுறுத்தினார்.

    மேலும் கமலா ஹாரிஸ் "அமெரிக்காவின் துணை அதிபராக நான் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளேன். உலக தலைவர்கள் டொனால்டு டிரம்பை பார்த்து சிரிக்கிறார்கள். நீங்கள் அவமானம் என அவர்கள் சொல்கிறார்கள்" என நேரடி தாக்குதலை முன்வைத்தார்.

    டொனால்டு டிரம்ப் ஜோ பைடனின் நிர்வாகத் தோல்வியை தொடர்ந்து முன்வைத்து கமலா ஹாரிஸை தாக்குதல் நடத்த தொடங்கினார். இதற்கு "நீங்கள் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிடவில்லை" என கமலா ஹாரிஸ் பதில் அளித்தார்.

    உக்ரைன்- ரஷியா போர் குறித்து டொனால்டு டிரம்ப் கூறுகையில் "ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை நன்றாகத் தெரியும். அவர்களுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. எனவே நான் பிரச்சனையை தீர்த்து வைப்பேன். போர் தொடங்கிய 3 நாட்களுக்கு பிறகு ஜோ பைடன் அரசு சமாதானத்துக்கு அழைப்பு விடுத்தது. நம் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான அதிபர். கமலா ஹாரிஸ்தான் மோசமான துணை அதிபர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையை ஜோ பைடனைவிட வேகமாக வெளியேற்றி இருப்போம். இதனால் பல அமெரிக்கர்கள் நம்மை விட்டுச் சென்றிருக்கமாட்டார்கள். கமலா ஹாரிஸ் எந்த நாட்டின் பாரம்பரியத்தைச் சேர்ந்த வராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை" என்றார்.

    அதற்கு கமலா ஹாரிஸ் "இவர் எப்போதுமே நிறைய பொய்கள் சொல்வார். உலகில் சர்வாதிகாரிகளை போற்றுகிறவர். ரஷிய அதிபர் புதினை ஆதரிப்பவர். அதேபோல் வடகொரியா அதிபர் கிம் ஜாங்குடன் காதல் கடிதங்களை பரிமாறிக்கொள்வதும் நம் அனைவருக்குமே தெரியும்.

    டிரம்ப் தான் அதிபரானால் ரஷ்யா- உக்ரைன் போர் 24 மணி நேரத்தில் முடிந்துவிடும் என்று கூறுகிறார். டிரம்ப் அதிபராக இருந்தால், தற்போது புதின் உக்ரைன் தலைநகர் கீவிலேயே குடியேறி இருப்பார். டிரம்ப் இன்னும் பதவியில் இருந்திருந்தால், புதின் போலந்தில் தொடங்கி ஐரோப்பா முழுவத்தையும் தாக்க திட்டம் தீட்டி இருப்பார். புதினிடம் டிரம்ப் அடிபணிந்து விடுவார். உங்களை மதிய உணவிற்கு உண்ணும் ஒரு சர்வாதிகாரி என்று அறியப்பட்டவருடன் நட்பாக நீங்கள் நினைக்கிறீர்கள்.

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் ஜோபைடனின் முடிவை நான் ஏற்றுக் கொண்டேன். தலிபான் என்ற பயங்கரவாத அமைப்போடு டிரம்ப் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க மக்களைப் பிளவுபடுத்துவதற்கு தனது தொழில் வாழ்க்கையில் தொடர்ந்து முயற்சித்த ஒருவர். அதிபராக இருக்க விரும்பும் ஒருவர் நம்மிடம் இருப்பது ஒரு சோகம் என்று நான் நினைக்கிறேன். நாம் அனைவரையும் ஒன்றிணைத்து கொண்டு வரும் அதிபரையே மக்கள் விரும்புகிறார்கள்" என பதிலடி கொடுத்தார். 

    • டிரம்ப் ஆட்சி கால தவறுகளை சரி செய்யவே 4 ஆண்டுகள் தேவைப்பட்டது.
    • சீனாவின் ஆயுத பலத்தை பெருக்க டொனால்டு டிரம்ப் உதவியுள்ளார்- கமலா ஹாரிஸ்.

    அமெரிக்காவின் பிலடெல்பியாவில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேரடி விவாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது இருவருக்கும் இடையில் பொருளாதாரம், கருக்கலைப்பு மற்றும் குடியேற்றம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.

    பொருளாதாரம் குறித்த கேள்விக்கு கமலா ஹாரிஸ் "டிரம்ப் ஆட்சி கால தவறுகளை சரி செய்யவே 4 ஆண்டுகள் தேவைப்பட்டது. அமெரிக்காவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரை உயர்த்துவதே குறிக்கோளாக கொண்டுள்ளோம். நான் நடுத்தர வர்க்கத்தில் இருந்து வந்துள்ளதால் உழைப்பவர்களை உயர்த்துவதற்காக முயற்சிப்பேன். அதுவே எனது லட்சியம்.

    டிரம்ப் ஆட்சி காலத்தில் சுகாதாரம், பொருளாதாரம் இரண்டும் மோசமாக இருந்தது. டிரம்பின் தவறான கொள்கைகளால் சீனா ராணுவம் பலமடைந்துள்ளது. சீனாவின் ஆயுத பலத்தை பெருக்க டொனால்டு டிரம்ப் உதவியுள்ளார். டிரம்ப் சீனாவிற்கு அமெரிக்காவை விற்றுவிட்டார்.

    அத்துடன் டொனால்டு டிரம்ப் கோடீஸ்வரர்களுக்கு, மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்குவார். ஜோ பைடன் ஆட்சியை கைப்பற்றியபோது, டிரம்ப் பொருளாதாரத்தை விட்டுவிட்டுச் சென்றார். பொருளாதாரம் குறித்து அவருக்கு எந்த திட்டமும் இல்லை" என்றார்.

    பின்னர் குடியேற்றம் குறித்து டொனால்டு டிரம்ப் டார்கெட் செய்தார். அதற்கு கமலா ஹாரிஸ் "நீங்கள் ஏராளமான பொய்கள் மற்றும் குறைகள் போன்ற பழைய கதையை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்" எனப் பதில் அளித்தார்.

    மேலும், "டொனால்டு டிரம்ப் மிகவும் மோசமான வேலைவாய்ப்பின்மையை விட்டுச் சென்றார். நூற்றாண்டின் மோசமான பொது சுகாதாரத்தை விட்டுச் சென்றார். சிவில் போருக்குப்பின் நமது ஜனநாயகத்தில் மோசமான தாக்குதலை விட்டுச் சென்றார். டொனால்டு டிரம்பின் குழபத்தை நாங்கள் சுத்தம் செய்தோம்" என்றார்.

    ஒரு கட்டத்தில் டொனால் டிரம்ப் தனிப்பட்ட முறையில் கமலா ஹாரிஸை தாக்கி பேசினார். "கமலா ஹாரிஸ் மார்க்சிஸ்ட். அவரது தந்தை மார்க்சிஸ்ட்" என்றார். அதற்கு கமலா ஹாரிஸ் தலையை அசைத்து சிரித்துக் கொண்டிருந்தார்.

    "கொரோனா தொற்றின்போது சிறந்த வகையில் பணியாற்ற போதுமான கடன் கிடைக்கவில்லை. கொரோனா தொற்றின்போது மிகச் சிறந்த வகையில் பணியாற்றினோம்" என்றார்.

    கருக்கலைப்பு தொடர்பான விவாதத்தின்போது கமலா ஹாரிஸ் "டொனால்டு டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்பு தடையை அமல்படுத்துவார்" என்றார். உடனே டிரம்ப் "கமலா ஹாரிஸ் பொய் சொல்கிறார்" என்றார்.

    நாடு தழுவிய கருக்கலைப்பு தடைக்கு வாக்கெடுப்பு நடத்துவீர்களா? என்ற கேள்விக்கு, அத்தகைய சட்டத்தை பாராளுமன்றம நிறைவேற்றாது என்றார்.

    குடியேற்றம் தொடர்பான விவாதத்தின்போது கமலா ஹாரிஸ் "இந்த விவகாரம் தொடர்பாக டொனால்டு டிரம்ப் அதிகமாக பேசிக் கொண்டிருப்பார். டொனால்டு டிரம்ப் பேரணிக்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். ஏனென்றால். இந்த பேரணியில் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக விசயங்கள் இருக்கும். "Hannibal Lecter" போன்ற கற்பனை கதாபாத்திரம் பற்றி டொனால்டு டிரம்ப் பேசத் தொடங்கினால், மக்கள் அவரது பேரணியில் இருந்து வெளியேற தொடங்கிவிடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு சலிப்பு தட்டிவிடும்" என்றார்.

    அதற்கு டொனால்டு டிரம்ப் "கமலா ஹாரிஸ் பேரணிக்கு யாரும் வரமாட்டார்கள். மேலும் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்திய Haitian immigrants ஒகியோவில் நாய்களை சாப்பிட்டது குறித்து பேசத் தொடங்கினார்.

    • மத்திய அரசாங்கத்தின் 75 சதவீத ஊழியர்களை நீக்கி விடுவேன் என்றார் விவேக்
    • கடும் சட்டதிட்டங்களை பணியாளர்களுக்கு வகுப்பவர் என்கின்றனர் முன்னாள் ஊழியர்கள்

    2024 தேர்தலுக்காக குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிட முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்தாலும் அவர் மீது பல கிரிமினல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் பதவியில் அமர்வது சிக்கலாக இருக்கும் என தெரிகிறது. அக்கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 38-வயதான விவேக் ராமசாமி எனும் இளம் தொழிலதிபர் முன்னிலை வகிக்கிறார். தனது அதிரடி கருத்துக்களுக்காகவும், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் செயல்படுத்த போவதாக கூறும் சில துணிச்சலான திட்டங்களுக்காகவும் அவர் மிகவும் பாராட்டப்படுகிறார்.

    தான் அதிபரானால் மத்திய அரசாங்கத்தின் பணியாளர்களை 75 சதவீதத்திற்கும் மேலாக குறைக்க போவதாகவும் தற்போது முக்கிய துறைகளாக கருதப்படும் பல துறைகளை கலைத்து விட போவதாகவும் விவேக் தெரிவித்தார். பல துறைகளிலும் சுமார் 21 லட்சம் (2.25 மில்லியன்) பணியாளர்கள் உள்ள அமெரிக்க மத்திய அரசாங்கத்தில், விவேக் ராமசாமி 16 லட்சம் பேர்களை (1.6 மில்லியன்) நீக்கி விட்டு அதன் மூலம் மிக பெரும் தொகை செலவாவதை தவிர்க்க போவதாக அறிவித்தார்.

    இந்நிலையில், விவேக் நடத்தி வரும் ரொய்வன்ட் சயின்ஸ் மற்றும் ஸ்ட்ரைவ் அசட் மேனெஜ்மென்ட் ஆகிய நிறுவனங்களில் பணி புரிந்த சில முன்னாள் ஊழியர்களில் 7 பேர் அவரது மனநிலை குறித்து கருத்து தெரிவித்தனர். அவர்கள் அனைவரும், விவேக் "ஆதிக்க மனோபாவம்" உடையவர் என குறிப்பிட்டுள்ளனர்.

    தனக்கு பணி செய்வதற்காகவே ஊழியர்கள் உள்ளதாக அவர் நினைப்பவர் என்றும், கடுமையான சட்டதிட்டங்களை வகுப்பவர் என்றும், அறையின் வெப்பத்தை மிகவும் குளிரான நிலையிலேயே வைப்பவர் என்றும், பயணத்தின் போது ஒரு விமானம் ரத்தானால் மற்றொன்றில் உடனடியாக பயணிக்கும் வகையில் இன்னொரு விமானத்திற்கான ஏற்பாட்டை முன்னரே செய்து கொள்பவரகவும், முன்னாள் ராணுவ ரேஞ்சர் ஒருவரை தன்னுடனேயே மெய்காப்பாளராக வைத்து கொண்டவராகவும் விமர்சிக்கின்றனர்.

    மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்டவராக சித்தரிக்கபட்டாலும், விவேக் தற்போது தீவிர பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

    ×