என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Visa-Free"
- இலவச விசா திட்டம் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
- வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு:
நமது அண்டை நாடான இலங்கை கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதில் இருந்து மீண்டு வர இலங்கை அரசு தீவிரமாக முயன்று வருகிறது.
அந்த வகையில் நாட்டின் பெருமளவு வருவாய் சுற்றுலாத்துறை மூலமே கிடைப்பதால் அதை வளப்படுத்த இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியா உள்பட 35 நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் அரசு அறிவித்துள்ளது.
சுற்றுலா அமைச்சகத்தின் ஆலோசகர் ஹரின் பெர்னாண்டோ இதுப்பற்றி கூறுகையில், "இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த இலவச விசா திட்டம் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்" என்றார்.
மேலும் அவர், "பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இலங்கைக்கு ஆண்டுதோறும் 50 லட்சம் சுற்றுலா பயணிகளின் இலக்கை அடைவதுமே இந்த முடிவின் நோக்கம்" எனவும் கூறினார்.
- இந்தியா, ரஷியா இடையே விசா இன்றி பயணம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
- இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலா உறவுகள் வலுப்படும் என்றார்.
புதுடெல்லி:
இந்தியா, ரஷியா இடையே விசா இல்லாமல் பயணம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தாண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுதொடர்பாக, ரஷிய மந்திரி நிகிதா கொன்ராட்யேவ் கூறுகையில், இந்தியா-ரஷியா இடையிலான பயணத்தை எளிதாக்க இரு நாடுகளிடையே விசா இல்லாமல் பயணம் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான ஒப்பந்தம் இந்தாண்டுக்குள் இறுதி செய்யப்படும். இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலா உறவுகள் வலுப்படும் என தெரிவித்தார்.
- இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என ஈரான் அறிவித்தது.
- விசா இல்லாமல் பயணிக்க 4 முக்கிய நிபந்தனைகளை ஈரான் அறிவித்துள்ளது.
டெஹ்ரான்:
உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இனிமேல் இந்தியர்கள் ஈரான் நாட்டிற்குச் செல்லும்போது விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு கடந்த 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆனாலும், விசா இல்லாமல் பயணிக்க 4 முக்கிய நிந்தனைகளை ஈரான் அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு:
சாதாரண பாஸ்போர்ட் உள்ளவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை மட்டும் விசா இன்றி ஈரானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அதிகபட்சமாக 15 நாட்கள் தங்கலாம். எக்காரணம் கொண்டும் இதை நீட்டிக்க முடியாது.
வான் எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும்.
சுற்றுலாவுக்காக ஈரான் வருவோருக்கு மட்டுமே இந்த விசா இன்றி பயணம் என்ற முறை பொருந்தும்.
அனுமதிக்கப்பட்ட நாட்களை விட அதிக காலம் தங்க விரும்பினால் அல்லது 6 மாத காலத்திற்குள் பல முறை வர விரும்பினால், அவர் ஈரானிடம் இருந்து உரிய விசா பெறவேண்டும்.
ஏற்கனவே மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்