search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wikipedia"

    • உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எவ்வகையிலும் வெளிப்படுத்த கூடாது.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அம்மாநிலத்தில் மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    செப்டம்பர் 10 ஆம் தேதி மாலைக்குள் மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெயர் மற்றும் புகைப்படத்தை விக்கிபீடியா இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எவ்வகையிலும் வெளிப்படுத்த கூடாது இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக, சமூக வலைத்தளங்களில் பரவிய பெண் மருத்துவரின் பெயர், புகைப்படம் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய அரசின் பரப்புரை கருவியாக ANI செயல்பட்டு வருகிறது.
    • விக்கிப்பீடியா இணையதளம் ரூ.2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் என்று ANI செய்தி நிறுவனம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.

    விக்கிப்பீடியா இணையதளத்தின் மீது ANI செய்தி நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

    விக்கிப்பீடியா இணையதளத்தில் "மத்திய அரசின் பரப்புரை கருவியாக ANI செயல்பட்டு வருவதாகவும், போலிச் செய்திகள் மற்றும் திரிக்கப்பட்ட செய்திகளை நாடு முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு ANI வழங்குவதாகவும் விமர்சனங்கள் உள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ANI வழக்கு தொடுத்துள்ளது.

    விக்கிப்பீடியா இணையதளம் ரூ.2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் என்று ANI செய்தி நிறுவனம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா, விக்கிப்பீடியாவிற்கு தனது கருத்தை சொல்வதற்கு உரிமை உள்ளது. ஆனால் அது உண்மையா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இந்த மனு தொடர்பாக பதிலளிக்க விக்கிப்பீடியா இணையதளத்துக்கு நோட்டிஸ் அனுப்பிய நீதிபதி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார்.

    • சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில் பல இடங்களில் காலிஸ்தான் என்ற வார்த்தை இடம் பெற்று இருந்தது.
    • எனினும் 15 நிமிட இடைவெளியில் இந்த பதிவுகள் பின்னர் மாற்றி சரிசெய்யப்பட்டன.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை 20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. ஆட்டத்தின் பரபரப்பான கட்டத்தில் 18-வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். அப்போது, தான் ஆசிப் அலி களமிறங்கி இருந்தார். அவர் ரன் எதுவும் எடுக்காத நிலையில் (0 ரன்) இருந்தார். அப்போது, ரவி பிஷ்னோய் வீசிய 17.3 ஓவரில் ஆசிப் அலி பந்தை வேகமாக அடிக்க முற்பட்டார். அப்போது, பேட்டில் சரியாக படாததால் பந்து கீப்பருக்கு பின்னே கேட்ச் வாய்ப்பாக மாறியது.

    அங்கு நின்று கொண்டிருந்த அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடிக்க முற்பட்டார். ஆனால், மிகவும் சுலபமான அந்த கேட்சை அர்ஷ்தீப் தவறவிட்டார். அந்த கேட்ச் தவற விடப்பட்டது இந்தியா தோல்வியடைய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் முக்கிய போட்டியில் இந்தியா தோல்வியடைய காரணம் என தெரிவித்து சமூக ஊடகத்தில் சிலர் கடுமையாக அவரை தாக்கும் வகையில் விமர்சித்து வருகின்றனர்.

    இந்த சூழலில், சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில் இந்தியா என்ற வார்த்தையை நீக்கி விட்டு காலிஸ்தான் என்ற வார்த்தையை பதிவு செய்யப்படாத பயன்பாட்டாளர் ஒருவர் இணைத்து உள்ளார். இது சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில் பல இடங்களில் இடம் பெற்று இருந்தது. எனினும் 15 நிமிட இடைவெளியில் இந்த பதிவுகள் பின்னர் மாற்றி சரிசெய்யப்பட்டன.

    இதனை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில் அவரை பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்தி தகவல் வெளியிட்டு போலியான செய்தியை எப்படி பகிர முடிந்தது என்பதற்கு பதிலளிக்கும்படி விக்கிப்பீடியா அதிகாரிகளுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் இன்று சம்மன் அனுப்பி உள்ளது.

    இந்த தவறான தகவலானது சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்த கூடும். சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கேட்டிற்கான சூழ்நிலைக்கும் வழிவகுப்பதுடன் சிங்கின் குடும்பத்தினர் மீதும் பாதிப்பு ஏற்பட கூடும் என மத்திய அரசு நம்புகிறது என்று ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் அர்ஷ்தீப் சிங்க்கிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

    ×