search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A terrible fire"

    • ரூ.15 லட்சம் மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து நாசம்
    • ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை ராமநாதபுரம், 80 அடி ரோட்டில் முருகன் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் செய்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதியம் வரை கடை திறந்திருந்தது. அதன்பிறகு கடையை மூடி விட்டு முருகன் தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

    மாலை 6 மணியளவில் ஜவுளிக்கடையில் இருந்து கரும்புகை வெளியேறி யுள்ளது. இதனை ஜவுளிக்கடைக்கு மேல் உள்ள கட்டிடத்தில் கடை நடத்தி வரும் இருகூரை சேர்ந்த நவீன் (24) என்பவர் பார்த்தார்.உடனே அவர் ஜவுளி க்கடை உரிமையாளரான முருகனுக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

    இதைக்கேட்டதும் அதிர்ச்சியான அவர், வீட்டில் இருந்து புறப்பட்டு, தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு புறப்பட்டு வந்தார். பின்னர் கடையை திறந்தபோது, கடைக்குள் தீ பற்றி கடை முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. கடையில் இருந்த துணிகள் அனைத்தும் தீயில் கருகி விட்டன.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் 2 வாகனங்களில், விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து நாசம் ஆகின.

    தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து விசாரணை மேற்கொண்ட னர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எப்படி நிகழ்ந்தது. தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரபாகர் (வயது 40). இவர் ஓலப்பாளையம் பகுதியில் நார்மில் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.
    • தேங்காய் நார் தொழிற்சாலையில் நேற்று மதியம் சுமார் 12 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பெரிய கரசப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 40). இவர் ஓலப்பாளையம் பகுதியில் நார்மில் தொழி ற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நார்மில் தொழிற்சா லையில் தேங்காய் மட்டை களில் இருந்து தனியாக தேங்காய் நார் பிரித்து எடுக்கப்பட்டு அதில் இருந்து எடுக்கப்படும் தேங்காய் நாரை கட்டிகளாக தயார் செய்தும், தேங்காய் நாரை தூளாக அரைத்தும் தனித்தனியாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த தேங்காய் நார் தொழிற்சாலையில் நேற்று மதியம் சுமார் 12 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பி த்தது.

    இதனை பார்த்த அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தேங்காய் நாரில் பிடித்த எரியும் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடிய வில்லை.

    இது குறித்து உடனடியாக நாமக்கல்லில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தேங்காய் நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இருப்பினும் தேங்காய் நார் மஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்த 30- க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள், கன்வேயர் பெல்ட்டுகள், தேங்காய் நாரை பில்டர் செய்யும் சல்லடைகள், மட்டை போடும் கூண்டுகள், தேங்காய் நார்கள் உட்பட அனைத்தும் எரிந்து நாசமானது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.80 லட்சம் வரை இருக்கலாம் என தேங்காய் நார் தொழிற்சாலையின் உரிமையாளர் பிரபாகர் தெரிவித்தார்.

    ×