search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcoholism"

    • வீரன் மற்றும் அண்ணாமலை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
    • படுகாயமடைந்த வீரன்,அண்ணாமலையை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    கடலூர் 

    வடலூர் வள்ளலார் நகர் சித்தர் தெருவை சேர்ந்தவர் ராஜவன்னியன் என்பவரின் மகன் வீரன் மற்றும் தம்பி அண்ணாமலை. இவர்கள் இருவரும் வடலூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 24-ம் தேதி மாலையில் வீரனும் தம்பி அண்ணாமலையும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்கு செல்லும் வழியில் இளைஞர்கள் மது போதையில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த வீரன் மற்றும் அண்ணாமலை வழியில் செல்கின்ற பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் ஏன் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு இளைஞர்கள் நாங்கள் இப்படி தான் செய்வோம் எனவும் உன் வேலையை பார்த்துக் கொண்டு போ என்று கூறி வீரன் மற்றும் அண்ணாமலையிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் இருவருக்கும் கொலை மிரட்டல் செய்துள்ளனர்.

    இந்நிலையில் போதையில் இருந்த இளைஞர்கள் திடீரென்று எதிர்பாராத விதமாக அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பினால் இருவரையும் தாக்கினர். இதில் வீரன் மற்றும் தம்பி அண்ணாமலை இருவருக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த வீரன்,அண்ணா மலையை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து வீரன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி எஸ்ஐ சங்கர் தலைமையிலான போலீசார் இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வடலூர் புதுநகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் கோபிநாத் என்கிற விக்னேஷ் (வயது 19) கோட்டக்கரை மாருதி நகரைச் சார்ந்த ரகோத்தமன் மகன் சஞ்சய் (19) அன்னை சத்யா வீதியை சேர்ந்த முருகன் மகன் பிரவீன் குமார் (18) ஆகிய 3 இளைஞர்களையும் கைது செய்து கடலூர் சிறையிலும் மேலும் 17 வயது சிறுவர்கள் 3 பேரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இளைஞர்கள் போதையில் தகராறில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • ரவிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
    • சிகிச்சை பலனின்றி நேற்று ரவி உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் திருமலை (32). திருமணம் ஆகவில்லை. இவரது அண்ணன் ரவி (40). இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    திருமலை, ரவி ஆகியோரின் பெற்றோர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். எனவே, திருமலை, தனது அண்ணன் ரவியின் வீட்டிலேயே வசித்து வந்தார்.

    ரவிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அன்று இரவு மல்லிகை பூவிற்கு அடிக்கும் மருந்தை (விஷம்) குடித்து ரவி வாந்தி எடுத்துள்ளார். மனைவி சத்யா விசாரித்தபோது அவர் எதுவும் கூறவில்லையாம். இதையடுத்து மறுநாள் ரவியின் உடல் நிலை மோசமடையவே உடனடியாக அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    பின்னர் உயர்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ரவி உயிரிழந்தார்.

    இதுகுறித்து, ரவியின் தம்பி திருமலை அளித்த புகாரின் பேரில் பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே குடிகார கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
    • வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே கொண்ட சமுத்திரம் பகுதியைசேர்ந்தவர் சண்முகம்.அவரது மனைவி அம்சவல்லி (வயது 28) இவர்களுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சண்முகத்திற்கு குடி ப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்படும். இதனால் மன உளைச்சலில் இருந்த அம்சவல்லி நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயம் அரளி விதையை அரைத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டுவிழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்து வமனையில் சிகி ச்சைக்காக சேர்த்தனர். அங்கு அம்சவல்லியை பரிசோதனை செய்த டாக்ட ர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுஅம்சவல்லி உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து அம்சவல்லி தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • முத்துமாரி தீவிர சிகிச்சை பலன் காரணமாக உயிர் பிழைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்தவர் ஈரக்கஞ்சையன், கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (வயது 30) இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக கணவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வீட்டுக்கு வந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது‌. மது பழக்கத்தை நிறுத்துமாறு முத்துமாரி பலமுறை கணவரிடம் கூறினார். ஆனால் அவர் கேட்கவில்லை.

    2 மாதத்துக்கு முன்பு இந்தப் பிரச்சினையில் கணவரை மிரட்டுவதற்காக முத்துமாரி பிளீச்சிங் பவுடரை கலந்து குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முத்துமாரி தீவிர சிகிச்சை பலன் காரண மாக உயிர் பிழைத்தார்.

    இந்த நிலையில் மனைவி தற்கொலைக்கு முயன்றும் ஈரக்கஞ்சையன் அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மது குடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 9-ந் தேதி கணவன்- மனைவி இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த தின்னரை எடுத்து முத்துமாரி தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரி சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துமாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே உள்ள ஆத்திக்குளம் காலனி தெருவைச் சேர்ந்தவர் ராஜமுருகன் (38). இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த ராஜமுருகன் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×