என் மலர்
நீங்கள் தேடியது "Allocation of funds"
- அணைக்கட்டு ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நேற்று நடந்தது.
மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு, ஒன்றியக் குழு துணை தலைவர் சித்ரா முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் 15-வது நிதிக்குழுவில் இருந்தும், பொது நிதியிலிருந்தும் தலா ஒரு கவுன்சிலருக்கு ரூ. 8.40 லட்சம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வ தற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு ஒன்றிய கவுன்சிலர்கள் முன் அறிவித்தார்.
அதன்படி 26 கவுன்சிலர்களுக்கு மொத்தம் ரூ.2 கோடியே 18 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
15-வது நிதி குழுவில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.3.40 லட்சத்தை ஒன்றிய கவுன்சி லர்கள் ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளின் கழிப்பறை, சத்துணவு மையம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
- தரை மட்ட குடிநீர் தொட்டி அமைத்து அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும்.
- நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் செய்து பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் துரிதமாக மேற்கொள்ள முடியும்.
பல்லடம்:
பல்லடம் நகராட்சி சாதாரணக் கூட்டம் தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமையில் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார்.இதில் துணைத்தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள்,உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:-
ராஜசேகரன்(திமுக): தமிழக மக்களின் விரும்பத்தின் பேரில் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சரவையில் இடம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஈஸ்வரமூர்த்தி (காங்கிரஸ்): தமிழக அரசிடம் இருந்து அதிக நிதி ஒதுக்கீடு பெற்று மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பல்லடம் நகராட்சியை முதன்மை நகராட்சியாக மாற்ற வேண்டும்.
கனகுமணி துரைக்கண்ணன்(அதிமுக): ராயர்பாளையம் மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் சரிவர ஏறுவதில்லை. அதனால் அப்பகுதியில் தரை மட்ட குடிநீர் தொட்டி அமைத்து அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும். அது வரை அண்ணா நகர், பனப்பாளையம் குடிநீர் மேல்நிலை தொட்டியில் இருந்து தண்ணீர் பெற்று ராயர்பாளையம் பகுதி மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும். ராயர்பாளையம்,பனப்பாளையம் பகுதியில் உள்ள மினி உயர்மின் கோபுர விளக்குகள் எரிவதில்லை.
ருக்மணி சேகர் ( திமுக):- தீர்மான பொருள் 2ல் நகராட்சி வார்டு எண் 16 பனப்பாளையம் பகுதி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், அது 8-வது வார்டு பகுதியில் உள்ளது. எந்தப் பகுதி, எந்த வார்டில் உள்ளது என்பது கூட நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியாதா, பனப்பாளையம் பகுதிகளில், தெரு விளக்குகள் எரிவதில்லை, குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது.
சசிரேகா(பா.ஜ.க): நகராட்சி சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் பிச்சை எடுத்து செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என்பதை உணர்த்தவே மண் சட்டி எடுத்து வந்து இருப்பதாக கூறினார். அதற்கு திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ.க. ஆட்சியின் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் நாடு முழுவதும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று உரக்க சத்தமிட்டனர்.
பாலகிருஷ்ணன்(திமுக): வரி இனங்கள் நிலுவை வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு தினந்தோறும் சென்று வரி பணத்தை வரி வசூல் மையத்தில் செலுத்த பணியாளர்கள் சொல்லி வருவதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மென்மையான முறையில் கால அவகாசம் அளித்து வரி வசூல் செய்ய வேண்டும். இலக்கை எட்ட வரி வசூல் செய்யக் கூடாது.
விநாயகம்(ஆணையாளர்): நகராட்சி பகுதியில் 62 சதம் சொத்து வரியும் மொத்தமாக 56 சதம் அனைத்து வரி இனங்களும் நிலுவையில் உள்ளது. அதனால் தான் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் செய்து பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் துரிதமாக மேற்கொள்ள முடியும்.
இந்த கூட்டத்தில், பல்லடம் நகராட்சி பகுதியில் உள்ள சொத்துக்களை கிரையம், செட்டில்மெண்ட் மற்றும் இதர ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு மேற்கொள்ளும் போது சொத்து விபரத்தில் அதன் சொத்து வரி விதிப்பு எண்,குடிநீர் கட்டண இணைப்பு எண் மற்றும் காலியிட வரி விதிப்பு எண் ஆகியவற்றை குறிப்பிட்டும் நடப்பு தேதி முடிய சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத் தொகைகளை செலுத்தியுள்ளதை உறுதி செய்தும் அதற்கான ரசீது நகலுடன் பத்திர பதிவு மேற்கொள்ள பல்லடம் சார்பதிவாளரை கேட்டுக்கொள்ளுதல் உள்ளிட்ட 81 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- கொட்டாம்பட்டியில் புதிய பஸ் நிலையம் கட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இந்த தகவலை வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மேலூர்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி மந்தை தெற்கு தெருவில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கொட்டாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.என்.எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கொட்டாம்பட்டி கூட்டுறவு சங்க பதிவாளர் பரமசிவம் வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் மதுரை மண்டல இணை பதிவாளர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதில் வெங்கடேசன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பகுதி நேர ரேசன் கடையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இதை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.1000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, முழுகரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், கொட்டாம் பட்டி பகுதி வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்தி வருகிறேன். இங்கு புதிய பஸ் நிலையம் அமைக்க முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அதன்படி புதிய பஸ் நிலையத்திற்கு ரூ.5 கோடி அரசு ஒதுக்கி உள்ளது என்றார்.
மேலும் கொட்டாம்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமை எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் 2400 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க மாவட்ட துணை பதிவாளர் ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலு வலர் முருகேஸ்வரி, மேலூர் மேலாண்மை இயக்குனர் பாரதிதாசன், கொட்டாம்பட்டி கூட்டு றவு சங்கத் தலைவர் வெங்கடாசலம், மேலூர் வட்ட வழங்க அலுவலர் அரவிந்தன், தும்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவ லர் அன்பரசன், கொட்டாம்பட்டி ஊராட்சி செயலர் சிவராமகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வடக்கு வீதியில் எரிவாயு தகன மேடை அமைத்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்–பட்டுள்ளது.
- பணியை தி.மு.க துணை செயலாளர் துரைமுருகன், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பாபநாசம்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, தமிழக நகர் புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் வடக்கு வீதியில் எரிவாயு தகன மேடை அமைத்திட ரூ.1 கோடியே 42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்–பட்டுள்ளது.
வடக்கு வீதியில் நடைபெற்று வரும் எரிவாயு தகன மேடை கட்டமைப்பு பணிகளை தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க துணை செயலாளர் துரைமுருகன், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன் ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது மாவட்ட பிரதிநி அறிவழகன், பேரூர் துணை செயலாளர் உதயகுமார், பேரூர் பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய பிரதிநி பாஸ்கர், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மைக்கேல் ராஜ், ம.தி.மு.க. பேரூர் செயலாளர் சம்பந்தம், முன்னாள் கவுன்சிலர் விஜி, ஆகியோர் உடன் இருந்தனர்.
- செல்வநாயகபுரத்தில் குடிநீர் கிணறு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- முதுகுளத்தூர் யூனியன் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் யூனியன் கவுன்சில் கூட்டம் சேர்மன் சண்முகப்பிரியா ராஜேஸ் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கண்ணகி முன்னிலை வகித்தார். ஆணையாளர் ஜானகி வரவேற்றார். கவுன்சிலர் முருகன் (அ.ம.மு.க.) செல்வநாயகபுரம் கிராமத்திற்கு குடிநீர் கிணறு அமைக்க நிதி வழங்கிய யூனியன் தலைவருக்கு நன்றி தெரிவித்தார். கலைசெல்வி ராஜசேகர் (வெங்கலக்குறிச்சி) வெண்ணீர்வாய்க்கால் பள்ளி சாலையை பேவர் பிளாக் சாலையாக அமைக்க கோரிக்கை விடுத்தார். மேலும் விளங்குளத்தூர் உயர்நிலைப்பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்கவும் கோரிக்கை விடுத்தார்.
- ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறுகுறு விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களிடம் இருக்கின்ற இயற்கை வளங் களை மேம்படுத்தி உரிய முறையில் வளங்களை பயன்படுத்திடவும், பயிர் சாகுபடி முறையில் அதிக பட்ச உற்பத்திக்கான நுட்பங் களை பயன்படுத்தவும், பண்ணைக்கழிவுகளை உற்பத்தி நோக்கங்களுக்காக மறுசுழற்சி செய்திடவும், காலநிலை மற்றும் சமூக பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு பால், கோழி, தேனீ வளர்ப்பு போன்ற கலவையான செயல்பாடுகள் மூலமாக ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் கிடைக்க வழி செய்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மானாவாரி பகுதி வளர்ச்சிக்கான துணை இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்பு 300 எக்டர், நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தபடவுள்ளது. இத்திட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் அனைத்து வட்டாரங்களிலும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பயனாளியாக இணைக்கப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவ சாயிகள் குறைந்தது ஒரு எக்டர் நில உரிமை உடைய வராக இருக்க வேண்டும்.
மேலும் தனது சொந்த செலவில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் வேளாண்மை இனங்களான பயிர் செயல் விளக்கத்திடல், மண் புழு உரத்தொட்டி மற்றும் கால் நடை இனங்களான ஒரு கறவை மாடு அல்லது 10 ஆடுகள் மற்றும் தோட்டக் கலை இனங்களான பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு பெட்டி போன்ற வற்றை திட்ட வழிகாட்டு தலின்படி அமைக்க வேண் டும். இவ்வாறு ரூ.60 ஆயிரம் மதிப்பிதல் ஒருங்கிணைந்த பண்ணையத்தினை உருவாக்கிய விவசாயிக்கு பினனேற்பு மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். எனவே அனைத்து வட்டார விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்கு நர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
மேலும் இத்திட்டத்தில் தமிழக அரசின் சிறப்பினமாக இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும்
சிறுகுறு சான்று வைத்துள்ள ஆதிதிராவிட மற்றும் விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் சிறப்பு மானியம் எக்டருக்கு ரூ.12 ஆயிரத்து டன் சேர்த்து மொத்தம் எக்டருக்கு ரூ.42 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறுகுறு விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ. 2 கோடியே 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
- பணிகளை தரமாக மேற்கொள்வதோடு விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
ராணிப்பேட்டை:
வாலாஜாவில் நகராட்சி சார்பில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பஸ் நிலையம் மற்றும் அங்குள்ள கடைகளை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரூ. 2 கோடியே 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பஸ் நிலையத்தில் பழைய கட்டிடங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பணிகளை தரமாக மேற்கொள்வதோடு விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது வாலாஜா நகரசபை தலைவர் ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், நகர தி.மு.க செயலாளர் தில்லை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாரசந்தை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா சிலை அருகே இயங்கி வருகிறது.
- இங்குள்ள கல்மேடைகளில் கடையை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாரசந்தை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா சிலை அருகே இயங்கி வருகிறது. தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சந்தையில் மளிகை பொருட்கள், காய்கறி, ஆடு, கோழி ஆகியவற்றி வாங்கியும் விற்றும் வருகின்றனர். இங்குள்ள கல்மேடைகளில் கடையை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மேற்கூறையுடன் கூடிய 156 கடைகள், வணிகப் பயன்பாட்டிற்கான கான்கிரீட் தளங்களைக் கொண்ட 14 கடைகள், சைக்கிள் ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட், நவீன கழிப்பிட வளாகங்கள், 4 புறமும் சுற்றுச்சுவருடன் கூடிய 12,350 சதுர அடி பரப்பளவில் வார சந்தை புனரமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.2 கோடியே 78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நேற்று நகராட்சி கூட்ட அரங்கில் நகரமன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட நகர மன்ற துணைத் தலைவர் தனம், நகராட்சி பொறியாளர் பிரேமாஇ நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சந்தை வளாகத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட புளிய மரங்களை அகற்றாமல் பணியை தொடங்குவது என்றும், மழைநீர், கழிவு நீர் தேங்காமல் பாதுகாக்கவும், வணிக நிறுவன பயன்பாட்டிற்கு கூடுதலான கடைகளை கட்டுவது குறித்தும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
- பொது நிதி ஒதுக்கீடு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
- அ.தி.மு.க. ஆட்சியில் இதுபோன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா? என பதில் கேள்வி எழுப்பினார்.
மதுரை
மதுரை மாநகராட்சி கூட்டரங்கில் மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் சோலை ராஜா பேசுகையில் பேசுகை யில், முல்லை பெரியார் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து விளக்க வேண்டும், பொது நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
உடனே மேயர் அ.தி.மு.க. ஆட்சியில் இதுபோன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா? என பதில் கேள்வி எழுப்பினார். இரு தரப்பிலும் கட்சியினர் கூச்சல் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியை சார்ந்த குறைகளை தெரிவித்தனர்.
அப்போது 26- வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சொக்காயி பேசுகையில், கவுன்சிலர்களுக்கு சம் பளத்தை உயர்த்தி அறிவித்த முதல்-அமைச்சரை பாராட்டி கல்வெட்டு வைக்க வேண்டும் என்றும், எனது வாக்குக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கூறினார். உடனே மேயர் இது ஜக்கம்மா வாக்கு என பதிலளித்தார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
- ரெயில் பயணிகள் வசதி குழு பரிந்துரைத்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பிரசார அணி தலைவர் காமாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் ரெயில் நிலையத்தை கடந்த மார்ச் மாதம் ரவிச் சந்திரன் தலைமையிலான பிற மாநில உறுப்பினர்கள் அடங்கிய ரெயில் பயணிகள் வசதிக்குழு ஆய்வு செய்தது. அப்போது நாங்கள் கொடுத்த கோரிக்கைகளின் படி ரெயில் நிலைய கிழக்கு பகுதியில் நுழைவுவாயில், அனைத்து நடைமேடைகளும் மேம்படுத்துதல், நகரும் படி வசதி, குடிநீர் வசதி, நவீன தங்கும் அறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய் வதற்கு ரெயில் பயணிகள் வசதிகள் குழு பரிந்துரைத்ததின்பேரில் தற்போது அதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இதில் முதல் கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.7 கோடியே 73 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பிரத மர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார். இப்பணிகள் வருகிற மார்ச் மாதம் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து பணிகளை மேற்கொண்டு விருதுநகர் ரெயில் நிலையம் உலக தரத்தில் மேம்படும் என்பது உறுதி. இதற்காக பிரதமர் மோடி, நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு விருதுநகர் மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மதுரையில் இருந்து அருப் புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான அகல ரெயில் பாதை திட்ட பணியை கைவிடக்கூடாது. திட்ட பணியை விரைந்து முடித்து தென் மாவட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் உதவ வேண்டும் என மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாநில நிர்வாகிகள் மூலம் மத்திய அரசிடம் வலியு றுத்துவோம். உறுதியாக திட்டம் கைவிடும் வாய்ப்பு ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பிரசார அணி தலைவர் காமாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.
- ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 6 கட்டிடங்கள் முடியும் நிலையில் உள்ளன.
- 39 கட்டிடத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கு கின்றன. சில மற்றும் வாடகை கட்டத்தில் இயங்குகின்றன. சில கட்டிடங்கள் கட்டி பல ஆண்டுகள் ஆவதால் பழுதாகி உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, 6 கட்டிடங்கள் முடியும் நிலையில் உள்ளன.
39 கட்டிடத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும். இவை 15-ம் நிதி கமிஷன் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படுகின்றன. கடம்பூரில் 2 குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்க உள்ளது. ஓசூரில் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மலைப்பகுதியில் சேசன் நகர், தாளவாடியில் துணை சுகாதார நிலையம் குடியிருப்புடன் அமைய உள்ளது.
இப்பணிகள் நிறை வடையும்போது மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப துணை சுகாதார நிலையங்களும் சொந்த கட்டிடத்தில் செயல்படும் என ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மீனவர்கள் நலனை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
- ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
சீர்காழி:
சீர்காழி அருகே பூம்புகார் மீன்பிடி துறைமுக வளாகத்தில் மீனவர்களின் குறைகள் கேட்டறியும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமை வகித்தார்.
மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம்,மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பேசுகையில், இந்திய கடலோர பாதுகாப்பின் கவசமாக மீனவர்கள் திகழ்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
எனவே மீனவர்களை கடலோர காவல் தெய்வங்கள் என்று அழைக்கலாம் பிரதமர் நரேந்திர மோடி மீனவர்கள் நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மீனவர்களுக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்திய பெருமை அவரையே சேரும்.
பிரதமரின் திட்டத்தால் கடைகோடியில் வசிக்கும் மீனவர்களும் பயனடைகிறார்கள் என்ற செய்தி மிகவும் வரவேற்கத்தக்கது என்றார்.
மத்திய தகவல் ஒளிபரப்பு இணை அமைச்சர் எல் .முருகன் பேசும் போது மீனவர் நலன் சார்ந்த குழுக்களில் மீனவர் பிரதிநிதி இடம்பெற வேண்டுமென பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
2014 - க்கு பிறகு மீனவர்களு க்காக ரூ 38.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
நமது நாடு இறால் ஏற்றுமதியிலும் முதலிடம் வகிக்கிறது கடல் சார்ந்த பொருட்கள் என்று பதில் நான்காம் இடத்தில் உள்ளோம் விரைவில் முதல் இடத்தை பிடிப்போம் என்றார்.
நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் பூம்புகார் சங்கர், பாஜக வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய தலைவர் முருகன் குறித்த பலர் கலந்து கொண்டனர். முடிவில் சந்திரபாபு நன்றி கூறினார்.
தொடர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி பூம்புகார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் நிஷாந்த் முன்னிலையில் நிதி உதவி க்கான காசோலைகள் மத்திய அமைச்சர்கள் வழங்கினர்.