என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM"

    • ஏ.டி.எம்., சென்டரில் 500 ரூபாய் நோட்டுகளாக 10 ஆயிரம் ரூபாய் கிடந்துள்ளது.
    • விவசாயி வரதராஜனின் நேர்மையை பாராட்டிய போலீசார், பணம் யாருடையது என விசாரித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் நெருப்பெரிச்சல் அடுத்த வாவிபாளையத்தை சேர்ந்தவர் வரதராஜன்(வயது 43). விவசாயி. இவர் அங்குள்ள கனரா வங்கி ஏ.டி.எம் சென்டரில் பணம் எடுக்க சென்றுள்ளார். ஏ.டி.எம்., சென்டரில் 500 ரூபாய் நோட்டுகளாக 10 ஆயிரம் ரூபாய் கிடந்துள்ளது. அதனை எடுத்த அவர் திருமுருகன் பூண்டி போலீசில் ஒப்படைத்தார்.விவசாயி வரதராஜனின் நேர்மையை பாராட்டிய போலீசார், பணம் யாருடையது என விசாரித்து வருகின்றனர்.

    • முத்தீசுவரியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வரவே அவர் பதறி போய் வங்கியில் விசாரித்த போது பணம் எடுத்திருப்பது தெரியவந்ததது.
    • 40 வயது மதிக்கத்தக்க நபர் அடிக்கடி ஏ.டி.எம். மையங்களில் வந்து பணம் எடுத்து செல்வது தெரியவந்தது.

    திருமங்கலம்:

    திருமங்கலத்தை அடுத்துள்ள காண்டை கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி மனைவி முத்தீசுவரி(வயது 32). இவர் கடந்த அக்டோபர் 10-ந்தேதி திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம். பணம் எடுக்க சென்றார்.

    இவருக்கு பின்னால் நின்ற மர்மநபர் முத்தீசுவரியிடம் நைசாக பேசி தான் பணம் எடுத்து தருவதாக கூறி ஏ.டி.எம். கார்டை வாங்கி எந்திரத்தில் சொருகினார். பணம் வரவில்லை என்று கூறி தன்னிடம் இருந்த மற்றொரு கார்டை முத்தீசுவரிடம் கொடுத்து அனுப்பினார். பின்னர் அந்த மர்மநபர் முத்தீசுவரி கார்டை பயன்படுத்தி ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டார்.

    இதுகுறித்து முத்தீசுவரியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வரவே அவர் பதறி போய் வங்கியில் விசாரித்த போது பணம் எடுத்திருப்பது தெரியவந்ததது. இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    இதேபோன்று திருமங்கலத்தை சேர்ந்த செல்ல பாண்டி(52) என்பவரிடம் ரூ 35 ஆயிரம், கண்டுகுளத்தை சேர்ந்த சத்தியராஜ்(19) என்பவரிடம் ரூ.35 ஆயிரத்தை ஏ.டி.எம். கார்டுகள் மூலமாக மர்மநபர் எடுத்துள்ளார். இது குறித்தும் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் வங்கி ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் அடிக்கடி ஏ.டி.எம். மையங்களில் வந்து பணம் எடுத்து செல்வது தெரியவந்தது. விசாரணையில் அவர் மதுரை பெரியார் நிலையம் அருகே அறை எடுத்து தங்கி திருமங்கலம் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணத்தினை எடுக்கவரும் கிராமத்து மக்களிடம் பணம் எடுத்து தருவது போல் வேறு ஒரு கார்டை கொடுத்து பணத்தை நூதன முறையில் திருடுபவர் என்பது தெரியவந்தது.

    அவரை தனிப்படை போலீசார் நேற்று திருமங்கலம் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். அருகே பிடித்து டவுன்போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது அவர் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த பக்ரூதீன்(46) என்பதும், தென்மாவட்டங்களில் பல இடங்களில் ஏ.டி.எம். மையத்தில் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

    அவரிடம் இருந்து 63 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பக்ரூதினை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • ஏ.டி.எம். எந்திரம் பாதுகாப்பான முறையில் உள்ளதா? காவலாளிகள் பணியில் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
    • வங்கி ஏ.டி.எம்.மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தின் அண்டை மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து தொடர்ந்து 4 ஏ.டி.எம்.களில் மர்மநபர்கள் ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின் பெயரில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்களில் தடுப்புகள் வைத்து கண்காணித்தல், பஸ் நிலையங்களின் அருகே விடுதிகளில் சந்தேகத்திற்கிடமாக யாரேனும் தங்கி உள்ளனரா? என ரோந்து பணியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீவிர கண்காணிப்பு இந்த நிலையில் காஞ்சிபுரம் நகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வங்கி ஏ.டி.எம்.மையங்களில், பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மேற்பார்வையில், போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஏ.டி.எம்.மையங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்குகிறதா? ஏ.டி.எம். எந்திரம் பாதுகாப்பான முறையில் உள்ளதா? காவலாளிகள் பணியில் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும், அங்கு பணியில் உள்ள காவலாளிகளிடம் ஏ.டி.எம்.மையத்திற்கு பணம் எடுக்க வருபவர்களில் சந்தேகத்திற்கிடமாக யாராவது வந்தாலோ, அடிக்கடி ஒரே நபர் நோட்டம் விட்டபடி அப்பகுதியில் சுற்றித்திரிந்தாலோ உடனடியாக போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். இதேபோல் அந்தந்த போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஏ.டி.எம். மையத்துக்குள் வாலிபர் ஒருவர் நுழைந்தார்.
    • போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் தனியார் வங்கி கிளைக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் வாலிபர் ஒருவர் நுழைந்தார்.

    அவர் இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார் . இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புளியகுளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்தன்(வயது39) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • ஏ.டி.எம்மில் 4½ லட்சம் பணம் வைக்ப்பட்டிருந்ததாகவும் வாடிக்கையாளர்கள் எடுத்தது போக தற்போது ரூ.3½ லட்சம் இருப்பதாக தெரிவித்தார்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள வெள்ளக்குட்டை கிராமத்தில் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இங்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் கடப்பாரையால் ஏ.டி.எம். எந்திரத்தின் முன் பகுதியை உடைத்தனர். ஆனால் பணம் இருந்த பகுதியை அவர்களால் உடைக்கமுடியவில்லை. அப்போது அங்கு வந்த பொதுமக்கள் நடமாட்டத்தால் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    பொதுமக்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து ஆலங்காயம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து எடுத்து சென்றனர். இதனால் அருகே கடையில் உள்ள கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஏ.டி.எம். அதிகாரி ஒருவர் வந்து ஆய்வு செய்தார். அவர் ஏ.டி.எம்மில் 4½ லட்சம் பணம் வைக்ப்பட்டிருந்ததாகவும் வாடிக்கையாளர்கள் எடுத்தது போக தற்போது ரூ.3½ லட்சம் இருப்பதாக தெரிவித்தார்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் ரூ.3½ லட்சம் தப்பியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் 4 ஏ.டி.எம். மையங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளை போனது.

    இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ரூ.67 லட்சம் பணம் மீட்கப்படவில்லை. இந்த வழக்கில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட தனிப்படை போலீசாரும் களம் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா தடை சம்பந்தமாக நேற்று திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் விடிய விடிய போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    இதற்கிடையே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருக்கும் பகுதியை தெரிந்தவர்கள் மற்றும் எந்திரத்தை உடைப்பதில் கை தேர்ந்தவர்கள் தான் இதில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை.
    • ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான்.

    ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார்.

    பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, 'டைம் முடிந்து விட்டது' என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.

    பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை.

    கையில் இருந்த கொஞ்சம் சில்லறையை வைத்து, சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம் என நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார்.

    இருந்த காசுக்கு கிடைத்த சாக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத்தாலும், பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது.

    அப்போது, அவர் கண் முன்னால், பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. பணம் போட்டால் சாக்லேட் கிடைக்கும் இயந்திரம் போல், எந்த நேரத்திலும் பணத்தையும் எடுக்க ஒரு மெஷின் இருந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சிந்தனையில் உருவானது தான் ஏடிஎம் இயந்திரம்.

    இவர் உருவாக்கிய முதல் ஏடிஎம் இயந்திரம் 1969-ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. விரும்பிய நேரத்தில் பணத்தை எடுக்கவும் மிஷினா ? என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது.

    ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கமாக குறைத்தார்.

    இன்று ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான்.

    -தூத்துக்குடி போவஸ்

    • சிறிது நேரத்தில் மொய்தீனின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.89 ஆயிரத்து 865 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
    • டிப்-டாப் வாலிபர் பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணத்தை சுருட்டி இருப்பது தெரிந்தது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த குன்னமஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன்(58). பொன்னேரியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

    இவர் பொன்னேரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அருகில் நின்று கொண்டி ருந்த டிப்-டாப் வாலிபரிடம் தனது ஏ.டி.எம்.கார்டை கொடுத்து பணம் எடுத்து தரும்படி கூறினார்.

    அந்த வாலிபரும் உதவி செய்வதாக கூறி ஏ.டி.எம்.கார்டை வாங்கினார். மேலும் மொய்தீனிடம் ரகசிய எண்ணையும் கேட்டு தெரிந்து கொண்டார்.

    பின்னர் ஏ.டி.எம்.எந்திரத்தில் பணத்தை எடுக்க முயன்றபோது பணம் வரவில்லை என்று கூறி ஏ.டி.எம்.கார்டை மொய்தீனிடம் கொடுத்து விட்டு டிப்-டாப் வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார். மொய்தீனும் அந்த வாலிபர் கொடுத்த ஏ.டி.எம். கார்டுடன் வீட்டுக்கு வந்தார்.

    சிறிது நேரத்தில் மொய்தீனின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.89 ஆயிரத்து 865 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மொய்தீன் வங்கிக்கு சென்று விசாரித்த போதுதான் டிப்-டாப் வாலிபர் பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணத்தை சுருட்டி இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண் காணிப்பு காமிரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கீழக்கரை ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.
    • பொதுமக்கள் சேமிப்பு, நடப்பு கணக்குகள் வைத்துள்ளனர்.

    கீழக்கரை

    மக்கள் நல பாதுகாப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கீழக்கரையில் பல்வேறு வங்கி கிளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் சேமிப்பு, நடப்பு கணக்குகள் வைத்துள்ளனர்.பெரும்பாலான வங்கிகள் தானியங்கி பணம் எடுக்கும் ஏ.டி.எம்.எந்திரங்களை நிறுவியுள்ளது.

    தற்போது இஸ்லாமி யர்களின் ரமலான் மாதம் நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் ரமலான் தேவைக்காகவும், ஸதகா, ஜகாத் தேவைக்கா கவும் ஏழை மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் எடுப்பார்கள்.

    கீழக்கரையில் செயல் படும் பல்வேறு வங்கிகளின் தானியங்கி எந்திரங்களில் பணம் எடுக்க முடியவில்லை.குறிப்பாக தேசிய மயமாக் கப்பட்ட பல்வேறு ஏ.டி.எம்.எந்திரங்களில் பணம் இருப்பதில்லை. இதில் ஆறுதலான ஒரு தகவல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தானியங்கி பணம் எடுக்கும் எந்திரங்கள் முறையாக செயல்படுகிறது.

    ரமலானை கருத்தில் கொண்டு கீழக்கரையில் செயல்படும் வங்கிகளின் அதிகாரிகள் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை வைத்து முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை மாநகர பகுதியில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டது.
    • மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்க கமிஷனர் உத்தரவிட்டிருந்தார்.

    நெல்லை:

    நெல்லையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாநகர பகுதியில் 2 பேருக்கும், ராதாபுரம், அம்பை பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    இந்நிலையில் மாநகர பகுதியில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவின் பேரில் முடுக்கி விடப்பட்டது. இதையடுத்து மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமை யில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் கமிஷனர் தலைமையில் நடந்த கூட்டத்தின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிட்டிருந்தார்.

    அந்த வகையில் இன்று மாநகரப் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் கிருமிநாசினி அடிக்கப்பட்டது. மேலும் மாநகர பகுதியில் 4 மண்டலங்களிலும் உள்ள ஏ.டி.எம்.களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் பஸ் நிலையங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே மாநகர பகுதியில் சந்திப்பு சரணாலயத்தில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சந்திப்பு உதவி போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் தனிமையில் உள்ளார்.

    • வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
    • கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ஊசூர்-அணைக்கட்டு மெயின் ரோடு பஸ் நிறுத்தத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இன்று காலை ஊசூர் காலனியை சேர்ந்த கந்தசாமி (வயது 53) கூலி தொழிலாளி. என்பவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை சொருகி பணம் எடுக்க பலமுறை முயற்சி செய்து உள்ளார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி வீட்டிற்கு சென்று கோடாரியை எடுத்து வந்தார்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். ஏ.டி.எம். எந்திரம் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கப் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கந்தசாமியை தடுத்தனர்.

    இருப்பினும் ஆத்திரம் அடங்காத கந்தசாமி ஏ.டி.எம். எந்திரம் முழுவதையும் உடைத்தார். எந்திரம் முழுவதும் துண்டு, துண்டாக நொறுங்கியது.

    அங்கிருந்தவர்கள் கந்தசாமியை பிடித்து வைத்துக்கொண்டு இது குறித்து உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    உடைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எந்த பணமும் திருடு போகவில்லை ஏடிஎம் எந்திரத்தில் பணம் வராததால் கந்தசாமி ஏடிஎம் எந்திரத்தை உடைத்துள்ளார்.

    கந்தசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு உண்மை நிலவரம் தெரியவரும் என்றனர். 

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

    நேற்று நள்ளிரவு ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைத்து திருட முயன்றனர்.

    இன்று காலை ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்ற சிலர், எந்திரம் முன்பக்கம் உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    திருட வந்த மர்ம நபர்கள் ஏதோ ஒரு பொருளை வைத்து கேமராக்களை மறைத்துள்ளனர்.

    எந்திரத்தின் முன்பக்க பேனல் உடைத்த பிறகு, பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பணம் திருடு போகவில்லை.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • துரை நேரு வீதியில் உள்ள ஒரு வங்கியில் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக வந்தார்.
    • மொபைல் எண்ணிற்கு இருபதாயிரம் பணம் எடுத்ததற்காக குறுஞ்செய்தி வந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பெலாகுப்பம் பகுதியை சேர்ந்த துரை (வயது 70). இவர் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள ஒரு வங்கியில் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக வந்தார். அவருக்கு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கத் தெரியாததால் அருகே இருந்த டிப்டாப் நபர் ஒருவரை தனது ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுத்து தர தெரிவித்துள்ளார். இதன் பெயரில் அந்த மர்ம நபர் ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என கூறி உள்ளார். இந்த நிலையில் துரை அருகே இருக்கும் வேறு ஒரு வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றார். இந்த நிலையில் அவரது மொபைல் எண்ணிற்கு இருபதாயிரம் பணம் எடுத்ததற்காக குறுஞ்செய்தி வந்தது.

    அந்த செய்தியை அரசு வங்கியில் காண்பித்த போது அதில் 20 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து விட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். துரை வைத்திருந்த ஏ.டி.எம். வேறு வங்கி ஏ.டி.எம். என அதிகாரிகள் தெரிவித்தனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த துரை திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ×