என் மலர்
நீங்கள் தேடியது "ATM"
- ஷெனாய்நகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மைய பதிவேட்டில் கையெழுத்திட சென்றார்.
- தமிழ்மணியின் நேர்மையான செயலை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.
சென்னை:
சென்னை அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் தமிழ்மணி. நேற்று இரவு இவர் ரோந்து பணியில் ஈடுபட்டார். ஷெனாய்நகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மைய பதிவேட்டில் கையெழுத்திட சென்றார்.
அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் மேல் ரூ.25 ஆயிரம் பணம் இருந்ததை பார்த்தார். யாரோ பணத்தை ஏ.டி.எம். ல் எடுத்துவிட்டு அதனை அதன் மேலே வைத்து சென்றுள்ளார். கேட்பாரற்று அந்த பணம் அங்கு இருந்துள்ளது.
அதனை போலீஸ்காரர் தமிழ்மணி எடுத்து மனித நேயத்துடன் அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். தமிழ்மணியின் நேர்மையான செயலை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.
ஏ.டி.எம். மையத்தில் கிடந்த பணம் யாருடையது, யார் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது என்பது பற்றி போலீசார் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினர்.
- கொள்ளை சம்பவம் முழுக்க சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது.
- ஏ.டி.எம். இயந்திரத்தில் கயிறு கொண்டு கட்டி இழுக்க முயற்சித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் நடைபெற்ற ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது. ஹாலிவுட் திரைப்பட சீரிஸ் fast and furious-இல் வரும் காட்சியை போன்று, ஏ.டி.எம். இயந்திரத்தில் கயிறு கட்டி, அதனை கார் கொண்டு இழுத்துச் செல்ல முகமூடி அணிந்த கும்பல் முயற்சித்து இருக்கிறது.
இந்த கொள்ளை சம்பவம் முழுக்க முழுக்க அங்கு வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோவை வைத்துக் கொண்டு போலீசார் கயவர்களை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் செப்டம்பர் 6-ம் தேதி அகிகாலை 3.00 மணி அளவில் நடைபெற்றது.
அப்போது முகமூடி அணிந்த நிலையில், இருவர் ஏ.டி.எம். மையத்தை அடைந்தனர். வழக்கமாக ஏ.டி.எம். இயந்திரத்தை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், இவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தில் கயிறு கொண்டு கட்டி இழுக்க முயற்சித்தனர். இவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த பாதுகாப்பு உபகரணங்கள் காவல் துறைக்கு எச்சரிக்கை விடுக்க, காவலர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்தனர். எனினும், காவலர்கள் வருவதற்குள் கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
- பணம் எடுக்க முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு
- வங்கி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலிறுத்தல்
சூலூர்,
சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் ஏடிஎம் மையங்கள் அதிகளவில் உள்ளன. அவை கடந்த சில நாட்களாக சர்வர் கோளாறு காரணமாக செயலிழந்து காணப்படுகிறது.
இதனால் வாடிக்கை யாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாமல் பெறும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும் அங்கு உள்ள பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் பணம் இல்லை, செயலிழந்து நிலை யில் உள்ளது
ஒருசில பகுதிகளில் ஏ.டி.எம். தற்காலிகமாக மூடப்பட்டு இருப்பதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. சிலஇடங்களில் ஏ.டி.எம் மையங்கள் மூடப்பட்டு உள்ளது. தற்போது பெரும்பாலான தொழிற்சாலைகள் ஊழிய ருக்கான சம்பளத்தை வங்கி கணக்கு வழியாகவே கையாள்கிறது.
மேலும் வங்கிகள் வாடிக்கையாளருக்கான சேவையை அளிக்க தவறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் தீபாவளி செலவுக்கு பணம் எடுக்க முடியாமல் தொழிலாளர்களும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே வங்கி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு ஏ.டி.எம். மையம் தொடர்ந்து தடையின்றி செயல்பட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து அங்கிருந்து எடுத்து சென்றனர்.
- ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ. 30 லட்சம் ரொக்கம் இருந்தது.
உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ளது காகரோல் என்ற நகரம். இங்கு செயல்பட்டு வந்த பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று அதிகாலை 3 மணியளவில் வந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர்.
"ஆக்ரா மாவட்டத்தின் காகரோல் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் அருகிலேயே இந்த ஏ.டி.எம். மையம் வைக்கப்பட்டு இருந்தது. அதிகாலை 2.30 முதல் 3.00 மணிக்குள் நான்கில் இருந்து ஐந்து பேர் அடங்கிய குழு வேனில் சம்பவ இடத்திற்கு வந்தது. அந்த குழு ஏ.டி.எம். இயந்திரத்தை வேறோடு பெயர்த்தெடுத்து சென்றது."

"இது தொடர்பாக வங்கி மேலாளருடன் நடத்திய விசாரணையில் பெயர்த்தெடுத்து செல்லப்பட்ட ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ. 30 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. ஏ.டி.எம். இயந்திரத்தை எடுத்து சென்ற கும்பலை பிடிக்க ஆக்ரா காவல் துறையின் சிறப்பு படை முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது," என ஆக்ரா காவல் துறை ஆணையர் பிரீத்திந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் காவல் துறை விசாரணையை துவங்கியுள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு திருடர்களை பிடிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
- ஏ.டி.எம். மையத்தில் தனியார் ஏஜென்சி மூலமாக பணம் நிரப்பப்படும்.
- பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து மஞ்சேஷ்வர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர்கோடு உப்பளம் பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் இந்த ஏ.டி.எம். மையத்தில் தனியார் ஏஜென்சி மூலமாக பணம் நிரப்பப்படும்.
அதன்படி நேற்று மதியம் 2 மணியளவில், அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக ஒரு வாகனம் வந்தது. அந்த வாகனத்தில் மொத்தம் ரூ.1 கோடி பணம் கொண்டு சென்றுள்ளனர். ஒரு மூட்டையில் தலா ரூ.50 லட்சம் வீதம் இரு மூட்டைகளில் ரூ.1 கோடி பணம் வைத்திருந்தனர்.
அதில் ரூ.20 லட்சம் பணத்தை ஏ.டி.எம்.-ல் நிரப்புவதற்காக ஒரு மூட்டையை மட்டும் தனியார் ஏஜென்சி ஊழியர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். வாகனத்தில் பின்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததால், வாகனத்தின் அருகில் யாரும் நிறுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர், பணம் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் பக்கவாட்டு பகுதி கண்ணாடியை உடைத்து, வாகனத்துக்குள் இருந்த பண மூட்டையை எடுத்து விட்டு தப்பியது. இதனை ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பிப் கொண்டிருந்த தனியார் ஏஜென்சி ஊழியர்கள் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை நிரப்பிவிட்டு திரும்பி வந்தபோது தான், வாகன கண்ணாடி உடைந்து கிடந்ததை பார்த்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், வாகனத்தை சோதனை செய்தபோது, ஒரு மூட்டையில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து மஞ்சேஷ்வர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
வாகனத்தில் லட்சக்கணக்கில் பணம் இருக்கும்போது, பாதுகாப்புக்கு ஊழியர்கள் நிற்காமல் சென்றிருப்பது ஏன் என்பது தெரியவில்லை. மேலும் வாகனத்தின் கண்ணாடியை கொள்ளையர்கள் உடைக்கும்போது சத்தம் யாருக்கும் கேட்காதது எப்படி? என்பதும் மர்மமாக உள்ளது.
இதனால் கொள்ளை நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்த வாகன டிரைவர், பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்ட தனியார் ஏஜென்சி ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வேன் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதில் இருந்த பணம் பாதுகாப்பாக மாற்று வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. பட்டப்பகலில் வாகன கண்ணாடியை தைரியமாக உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தில் ஒரு நபரோ அல்லது இரண்டு நபர்கள் மட்டுமே ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.
ஆகவே கொள்ளையர்களை கண்டுபிடிக்க சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்கின்றனர். ஆனால் சாலை பணி நடப்பதன் காரணமாக சம்பவ இடத்தில் இருக்கும் பல சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்படாமல் இருந்துள்ளது.
இதனால் கொள்ளையில் ஈடுபட்டவர்களை அடை யாளம் காணுவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க தனியார் ஏஜென்சி ஊழியர்களின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் காசர்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் இருந்து பணத்தை திருடி தனது மனைவிக்கு அனுப்பி விடுவது வழக்கம்.
- கடந்த சில நாட்களாக இவர் போடியில் தங்கி இருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள ஜக்கமநாயக்கன்பட்டி ராமநாதன் நகரை சேர்ந்தவர் தம்பிராஜ் (வயது46). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மீது பல்வேறு ஏ.டி.எம். திருட்டு வழக்குகள் உள்ளது.
ஏ.டி.எம். மையங்களில் நின்று கொண்டு அங்கு வரும் கிராமப்புற பெண்கள் மற்றும் மூதாட்டிகளிடம் பணம் எடுத்து தருவதாக அவர்களது கார்டை வாங்கி அந்த பணத்தை திருடிச் சென்றார். இவர் மீது தேனியில் 3 வழக்குகளும், திண்டுக்கல்லில் 3, ராஜபாளையத்தில் 2, வாலந்தூரில் 2, செக்காணூரணியில் 2, திருமங்கலத்தில் 3, சென்னையில் 1, ஆந்திராவில் 2, கேரளாவில் 1, கர்நாடகாவில் 4 வழக்குகள் உள்ளன. இவரை பல்வேறு போலீஸ் நிலையங்களில் போலீசார் தேடி வந்தனர்.
இவர் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் இருந்து பணத்தை திருடி தனது மனைவிக்கு அனுப்பி விடுவது வழக்கம்.
கடைசியாக அவர் கைவரிசை காட்டிய ஏ.டி.எம். மையத்தில் இருந்து அவரது புகைப்படத்தை கைப்பற்றி தேனி உள்பட பல்வேறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக இவர் போடியில் தங்கி இருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கோவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜ் தலைமையில் 3 பேர் கொண்ட தனிப்படை போலீசார் போடி வந்து தம்பிராஜை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
4 மாநிலங்களில் கைவரிசை காட்டிய பிரபல ஏ.டி.எம். கொள்ளையன் கைது செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
- ஏடிஎம் மையத்தில் முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் புகுந்தனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குடிபாலா வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அமைந்துள்ளது. இங்குள்ள ஏடிஎம் மையத்தில் நேற்று இரவு முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் புகுந்தனர்.
அவர்கள் வெல்டிங் எந்திரம் மூலம் ஏடிஎம் எந்திரத்தை உடைத்தனர். அதிலிருந்து ரூ.25 லட்சத்து 98,400 பணத்தை கும்பல் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலையில் ஏடிஎம் மையத்திற்கு சென்ற பொதுமக்கள் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் முகமூடி அணிந்த கும்பல் ஏடிஎம் உடைத்து பணத்தை அள்ளிய காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனையடுத்து சித்தூர் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சித்தூர் மாவட்ட எல்லையில் உள்ள வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழக எல்லையோரம் உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். காட்பாடி வழியாக கும்பல் தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வேலூர் மாவட்ட போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர், வேலூர் காட்பாடி மாநகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- கடந்த 5-ந் தேதி ஓசூர் ஆவலப்பள்ளி அட்கோவில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.
- டெல்லி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம் மையம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி முதல் இரவு வரை அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பண பரிவர்த்தணை நடைபெறாததால் சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலமாக உடைத்து அதில் இருந்த ரூ.14.50 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதே போல கடந்த 5-ந் தேதி ஓசூர் ஆவலப்பள்ளி அட்கோவில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. இது தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் பெல்லந்தூர் மற்றும் ஹாசன் மாவட்டங்களில் 2 ஏ.டி.எம். மையங்களில் எந்திரத்தை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 2 ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். எந்திரங்களை கொள்ளை கும்பல் உடைத்து ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த கொள்ளை நடந்த ஏ.டி.எம். எந்திரங்களில் பதிவான கைரேகைகளை வைத்து 3 மாநில போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. வட மாநிலத்தில் அரியானா, கர்நாடகத்தில் கல்புர்க்கி, மற்றும், டெல்லி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஓசூரில் ஏ.டி.எம். கொள்ளை நடந்த இடத்தினை, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. உமா நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓசூரில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக 40 போலீசார் கொண்ட, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் குற்றவாளிகள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை தொடர்பான முழு தகவல்களையும் மாவட்ட , எஸ்.பி.பத்திரிகையாளர்களுக்கு, நாளை(9-ம் தேதி) தெரிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெருமபாலானோரிடம் துப்பாக்கி இருப்பதால் தோட்டாக்கள் வாங்குவதில் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனராம்.
- துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து , தோட்டாக்களுக்கான உரிய பணத்தை செலுத்தி அவற்றை பெற்றுக்கொள்ளலாம்.
அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் வேகமெடுத்து வரும் நிலையில் அவ்வப்போது பொது இடங்களில் துப்பாக்கிச் சூட்டில் மக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் சட்டப்படி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததே இந்த அசம்பாவிதங்களுக்கு காரணம் என்று ஒரு சாரார் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் மற்றொரு சாரார் தங்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கி இன்றியமையாதது என்று கருதுகின்றனர். இந்த துப்பாக்கி விவாதம் அமெரிக்க அரசியலிலும் எதிரொலிக்காமலில்லை. இந்நிலையில் ஏற்பகுறைய அமேரிக்காவில் பெருமபாலானோரிடம் துப்பாக்கி இருப்பதால் தோட்டாக்கள் வாங்குவதில் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனராம்.

எனவே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதை போல துப்பாக்கிக் குண்டுகளை உடனுக்குடன் வெண்டிங் இயந்திரங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி மாளிகைக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து , தோட்டாக்களுக்கான உரிய பணத்தை செலுத்தி அவற்றை பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஏஐ தொழிநுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட இந்த இயந்திரத்தில் பாசில் ரெகக்னிஷன் மூலமும் வாடிக்கையாளர் தங்களின் அடையாளத்தை உறுதி செய்து பணம் செலுத்தி தோட்டாக்களை பெற்றுக்கொள்ளலாம்.


முதற்கட்டமாக டெக்சாஸ், அலபாமா மற்றும் ஒக்லாஹோமா ஆகிய மாகாணங்களில் உள்ள மளிகைக் கடைகளில் இந்த இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த வசதியை மேலும் பல்வேறு மாகாணங்களுக்கு விரிவு படுத்தவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- நாய்களுக்கான உணவை வினியோகிக்கும் எந்திரங்கள் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் பல இடங்களில் நிறுவப்பட்டு உள்ளது.
- விலங்கு நல ஆர்வலர் என்ஜின் கிர்கின், ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து 2014-ல் இஸ்தான்புல்லில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார்.
பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால், நாய்களுக்கான உணவு வழங்கும் எந்திரம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பணம் வழங்கும் ஏ.டி.எம். எந்திரங்கள் போல, பல்வேறு பொருட்களை வினியோகிக்கும் வென்டிங் மெஷின் எந்திரங்கள் வெளிநாடுகளில் பிரபலம். அதுபோல நாய்களுக்கான உணவை வினியோகிக்கும் எந்திரங்கள் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் பல இடங்களில் நிறுவப்பட்டு உள்ளது.

இந்த எந்திரங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களைப் போட்டால் மறுபுறம் நாய்களுக்கான உணவு சிறிதளவு மற்றும் தண்ணீர் வினியோகிக்கப்படும். இதன் மூலம் சுற்றுப்புறத்தில் உள்ள கழிவுகள் குறைவதுடன், பசியுடன் உள்ள தெருநாய்களும் பசியாறும்.
விலங்கு நல ஆர்வலர் என்ஜின் கிர்கின், ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து 2014-ல் இஸ்தான்புல்லில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வித்தியாசமான யோசனை பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவை மிகவும் கவர்ந்துள்ளது. அவர் இதுகுறித்த பதிவில், "மாற்றத்தை உருவாக்கும் இந்த திட்டத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புகிறேன்" என்று பதிவிட்டார். அவரது ஆதரவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து கருத்து பதிவிட்டு உள்ளனர்.
- இந்த டெக்னிக்கை பயன்படுத்தி மேலும் சில சிறுவர்கள் இந்த முறையில் திருடியுள்ளனர்.
- ஏ.டி.எம். இல் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் ATM இயந்திரத்தில் வித்தியாசமான முறையில் கொள்ளையடித்த சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்காமல் பிளாஸ்டிக் மற்றும் பெவிகால் பயன்படுத்தி கொள்ளையடித்த சம்பவம் காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுபம் என்ற சிறுவன் தனது காதலிக்கு செலவு செய்வதற்காக ஏ.டி.எம். இயந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் வெளியே வரும் இடத்தில் பிளாஸ்டிக் ஸ்ட்ரிப்களை பெவிகால் கொண்டு சுபமும் அவனது நண்பனும் ஒட்டியுள்ளனர்.
இதனால் ஏ.டி.எம். இல் பணம் வெளியே வராமல் இடையில் சிக்கி கொள்ளும். இதனால் வாடிக்கையாளர்கள் பணம் இல்லை என்று நினைத்து வெளியே சென்று விடுகின்றனர். பின்னர் உள்ளே வரும் சிறுவர்கள் பிளாஸ்டிக் ஸ்ட்ரிப்பை வெளியே எடுத்து ஏ.டி.எம். இல் சிக்கி கொண்ட பணத்தை வெளியே எடுக்கின்றனர்.
இந்த சிறுவர்களின் டெக்னிக்கை பயன்படுத்தி மேலும் சில சிறுவர்கள் இந்த முறையில் திருடியுள்ளனர்.
தொடர்ந்து வங்கிக்கணக்கில் இருந்து தங்களது பணம் திருடப்படுவதை அடுத்த வாடிக்கையாளர்கள் வங்கிகளில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது ஏ.டி.எம். இல் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சிறுவர்கள் ஏ.டி.எம். இல் திருடுவது பதிவாகியுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த திருட்டு வழக்கின் முக்கிய குற்றவாளியான சுபம் மற்றும் அவரது காதலியை போலீசார் தேடி வருகின்றனர்.
- போலீசாரின் சோதனையில் பிடிபட்ட கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம எனத் தகவல்.
- கேரளா ஏ.டி.ஏம். மையங்களில் இருந்து கொள்கை அடிக்கப்பட்ட பணமாக இருக்கலாம் என சந்தேகம்.
நாமக்கல் மாவட்டம் வெப்படையில் 4 பைக், ஒரு காரை இடித்துத்தள்ளிய கண்டெய்னர் லாரி அதிவேகமாக நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வெப்படை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குமாரபாளையம் மற்றும் வெப்படி காவல் நிலைய போலீசார் கண்டெய்னரை பின்தொரட்ந்தனர். சேலம் மாவட்டம் சன்னியாசிபட்டி அருகே கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்தனர்.
அப்போது லாரியின் முன்பக்கத்தில் இருந்து நான்கு வட இந்தியர்களை பொதுமக்கள் கீழே இழுத்து தர்ம அடி கொடுத்தனர். டிஎஸ்பி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் இருந்து அவர்களை மீட்டனர். 500-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கண்டெய்னர் லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கண்டெய்னரில் பணம் இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் கண்டெய்னருக்குள் துப்பாக்கியுடன் கொள்ளையர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனால் கண்டெய்னரை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த கண்டெய்னரை போலீசார் காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று அதிரடி மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் உள்ள மூன்று ஏ.டி.எம். மையங்களில் 65 லட்சம் ரூபாய் கொள்கை அடிக்கப்பட்டது. இந்த பணம் கண்டெய்னரில் இருக்குமா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது.