search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blue Fever"

    • திடீரென எடை அதி கரிப்பது, பெருத்த வயிறு இருப்பது.
    • தொடர்ந்து சோர்வாக இருப்பது, பலவீனமாக இருப்பது.

    இப்போது எங்கும் பரவி வரும் பாதிப்பு சுவாசக் குழாய் தொற்று. 'ப்ளூ' பாதிப்பு போன்றவைதான். பாதிப்பு அடைந்தவர்கள் அருகில் நீங்கள் இருந்தால் போதும். தும்மல், சளி, ஜூரம் என உங்களுக்கும் வந்து விடும்.

    சிலருக்கு எளிதில் சரி ஆகி விடும். சிலரை மருத்துவமனையில் படுக்க வைத்து விடும்.


    ப்ளூ பாதிப்பிற்கு உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் மருந்து, நிறைய திரவ உணவு, நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டால் நல்ல பலனை அடையலாம்.

    * ஜுரம் * உடல் சில்லிப்பு * மூக்கில் நீர் வடிதல் * மூக்கடைப்பு * அதிக சோர்வு * மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். பின் தலைவலி, தொண்டை பாதிப்பு, வறட்டு இருமல் இருக்கும்.

    * கண் சிவந்து நீர் வடிதலும் இருக்கலாம். சாதாரண ஜலதோஷத் திற்கும் ப்ளூ பாதிப்பிற்கும் சிறிய வித்தி யாசம் இருக்கும்.

    * ப்ளூ ஜுரம் 3 அல்லது 4 நாட்கள் வரை கூட நீடிக்கும்.

    * ப்ளூ பாதிப்பில் உடல் வலி மிகக் கடுமையாக இருக்கும்.

    * உடல் சில்லிப்பு, குளிர் போன்றவை ப்ளூ ஜுரத்தில் அதிகமாக இருக்கும்.

    * தும்மல் ஜலதோஷத்தில் அதிகமாக இருக்கும்.

    * இருமல், நெஞ்சில் அசவுகரியம் போன்றவை ப்ளூ பாதிப்பில் அதிகமாக இருக்கும்.

    * தலைவலி ப்ளூ பாதிப்பில் 'மண்டையில் இடி' என்பது போல் இருக்கும்.

    * ப்ளூ பாதிப்பில் பாதிப்படைந்தது வெளியில் தெரிவதற்கு முன்பாகவே உங்களை சுற்றி உள்ளவர்கள் பாதிப்பு அடைகின்றனர்.

    * திடீரென உடலில் அதிக அசதி ஏற்படும்.

    * மூன்றாவது நாள் மேற்கூறிய பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும்.

    * பசி இல்லாத உணர்வு இருக்கும்.

    * பாதிப்பின் போது அதிக ஓய்வு எடுப்பது அவசியம்.


    * அதிக திரவ உணவு, தண்ணீர், கிரீன் டீ, கஞ்சி, சூப், எலோக்ட்ர லைட்ஸ், வெது வெதுப பான நீர் இவற்றினை குடிக்கலாம்.

    * சோடா, ஜூஸ், காபி இவற்றினை தவிர்த்து விட வேண்டும்.

    * உடலுக்கு வெது வெதுப்பான ஒத்தடம் கொடுக்கலாம்.

    * தனித்து இருப்பது நல்லது.

    * மருத்துவர் ஆலோ சனையின் பெயரில் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    * 5 அல்லது 7 நாட்கள் வரை இந்த பாதிப்பு இருக்கலாம்.

    * ஐந்து வயதுக்கு கீழ் இருப்பவர்களும், 65 வயதிற்கு மேல் இருப்பவர்களும் கூடுதல் கவனம் பெற வேண்டும்.

    * நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதில் தாக்கும்.

    * கர்ப்ப காலத்தில் பாதுகாப்பு அவசியம்.

    * சர்க்கரை நோய் * ஆஸ்துமா * இருதய நோய் * கல்லீரல் பாதிப்பு * சிறுநீரக பாதிப்பு உடையவர்கள் பாதிப்பினை அதிகம் அடைவர்.

    இந்த நோய்களின் உறவுக்காரர்கள் போல் * நிமோனியா, * சைனஸ் * காது கிருமி பாதிப்பு

    * நுரையீரல் பாதிப்பு * இருதய வீக்கம் * உறுப்புகள் பாதிப்பு என எழுத தவிர்க்கும் சில அச்சுறுத்தும் பாதிப்புகளும் ஏற்படலாம்.

    * மூச்சு விடுவதில் சிரமம் * வயிறு, நெஞ்சில் ஒரு அழுத்தம் * மயக்கம் *சிறுநீர் வெளி செல்லுதல் குறைவு * வாந்தி இருந்தாலோ, ஜூரம் திரும்ப வருவது போன்ற சில புதிய அறிகுறிகள் இருந்தாலோ தாமதமின்றி மருத்துவர் ஆலோசனை பெறுவதே அவசியம்.

    * ப்ளூ தவிர்ப்பு ஊசியினை யும் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவர் ஆலோசனையோடு எடுத்துக் கொள்வது நல்லது.

    மனித மூளைக்கும், உட லுக்கும், மனதிற்கும் பொழுது போக்குகள் அவசியம் என்று நினைக்கின்றோம். மருத்துவர்களும் அறிவுறுத்து கின்றனர். பொதுவாக பொழுது போக்கு என்பது வயதிற்கேற்ப மாறுபடும்.

    * விளையாட்டு

    * புகைப்படம் எடுத்தல்

    * புத்தகம் படித்தல் என பல பிரிவுகளில் இருக்கும். சமுதாயத்தோடு இணைந்த சில பொழுது போக்குகள் உள்ளன.

    * கூட்டு விளையாட்டு

    * கூட்டு நடனம்

    * கூட்டு உடற்பயிற்சி போன்றவை இதனுள் அடங்கும். ஆனால் உங்களுக்குத் தெரியுமா?

    * அன்றாடம் சமைக்கும் அம்மாவிற்கு அது பெரிய வேலை, சுமை. ஆனால் அவ்வப்போதாவது வீட்டில் உள்ள வர்கள் சமைத்தால் அது பொழுதுபோக்கு.

    * கிராம பகுதிகளில் இருப்பவர்கள் பறவைகளை பார்ப்பது, அதன் சத்தத்தினை ரசிப்பது பொழுதுபோக்கு.

    * இரவில் சிறிது நேரம் நட்சத்திரங்களை பார்த்து ரசிக்கலாம்.

    * சைக்கிளில் வெளியில் செல்லலாம்.

    * புது மொழி கற்கலாம்

    * தனி மனித உரிமை போன்ற சட்டங்களைப் படிக்கலாம்.

    * மீன் நீந்துவதனை பார்க்கும் போது மனம் அமைதிப்படும் என்பர்.


    கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் கொழுப்பு அறிகுறிகள்

    * திடீரென எடை அதி கரிப்பது, பெருத்த வயிறு இருப்பது.

    * தொடர்ந்து சோர்வாக இருப்பது, பலவீன மாக இருப்பது

    * வயிற்று வலி குறிப்பாக வலது பக்க விலாவின் கீழ் இருப்பது

    * அடர் நிறம் கொண்ட சிறுநீர், வெளிர் நிற கழிவு வெளியேற்றம்

    * அதிக சர்க்கரை அளவு (ரத்தத்தில்)

    * ரத்த பரிசோதனையில் அதிக கொழுப்பு

    * சிறிய அடிபட்டால் கூட கருத்து விடுதல்

    * கண்களில் மஞ்சள்

    இவையெல்லாம் கல்லீரல் பிரச்சினையின் அறிகுறிகள் என்று அறிவோம்.


    * நவீன உலகில் அதிகம் நம்மை அறியாமல் மூழ்கினால் நமது உணவுப் பழக்கத்தில் ஆரோக்கியம் இன்மை ஏற்படும்.

    * நினைத்த நேரத்தில் கண்ட உணவு உண்பதை நீங்கள் நாகரீக வாழ்க்கை என்ற பெயரில் நோய்களுக்குள் சிக்கிக் கொண்டீர்கள் என்று கொள்ளலாம்.

    * எதற்கெடுத்தா லும் யாரையும் கேட்காமல் மருந்து களை தன் மனம் போனபடி எடுத்துக் கொள்வது நாகரீகமாகாது.

    * நான் சற்று கடை தெரு சுற்றி வந்தால் மனம் மகிழ்ச்சி அடையும் என்று நினைப்பது நாகரீகமா?

    * அதிக நேரம் டி.வி., போன் இவற்றில் மூழ்குபவர்கள். இவர்கள் நவீனம் என்ற பெயரில் உடல் நோய், மன நோய் இவற்றில் பாதிப்பினை பெறு கின்றார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    இதிலிருந்து ஒவ்வொருவரும் உறுதி எடுத்து வெளிவருவது மிக அவசியம்.

    வெறும் மருந்து, மாத்திரை என்றில்லாமல் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, தியானம் போன்ற பழக்கங்கள் முக்கியம். இந்த பழக்கங்கள் இல்லாமல் உடல் நலத்தினை பேணுவது கடினமே.

    • சுய பாதுகாப்பு, தற்பாதுகாப்பு அவசியம்
    • சுகாதார குழுவினர் அறிவுரை

    வேலூர்:

    வேலூரில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் இதுவரை இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பதிவாகவில்லை.

    வேலூர் மாநகர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 197 பேருக்கும், பிப்ரவரி மாதம் 142 பேருக்கும், மார்ச் மாதம் தற்போது வரை 17 பேருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

    நேற்று மட்டும் மாவட்டம் முழுவதும் 32 பேருக்கு காய்ச்சல் பதிவாகியுள்ளது. இதில் 10 பேர் மட்டுமே வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்ற 22 பேரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

    மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட 4 மருத்துவமனைகள், 46 ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருந்து மாத்திரைகள், படுக்கை வசதிகள் போதுமானதாக உள்ளது.

    காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுவோருக்கு இன்புளூயன்சா உள்ளதா என தொடர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். நேற்று மட்டும் மாநகர பகுதிகளில் 81 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளோம்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வசிப்பிடத்தில் தூய்மை பணி, கண்காணிப்பு செய்து சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சலால் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோரின் விவரங்களை தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு வழங்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

    காய்ச்சல் இருந்தால் மக்களே தானாக மருந்து மாத்திரைகளை எடுக்காமல் மருத்துவரை அனுக வேண்டும்.

    சளி, தொண்டை வலி, மூக்கில் நீர் வழிதல், உடல் வலி உள்ளிட்டவை இன்புளூயன்சாவுக்கான அறிகுறியாக பார்க்கப்பட்டாலும், இவை சாதாரண காய்ச்சலுக்கும் பொருந்தும் என்பதால் பரிசோதனை மூலமே தெரியவரும். கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சூடான தண்ணீரை குடித்தல், சூடான உணவை உண்ணுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தால் போன்றவை மூலம் காய்ச்சல் பரவலை தடுக்க முடிக்க முடியும். சுய பாதுகாப்பு, தற்பாதுகாப்பு என்பது அவசியம்.

    குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் பயப்பட வேண்டாம் அவை சாதாரண காய்ச்சலாக இருக்கலாம் அதிகமாக காய்ச்சல் இருக்கும் சமயத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். என்று சுகாதார குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • காய்ச்சல் முகாம்களில் 6,860 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1,798 பேருக்கு இன்புளு வென்சா எனப்படும் ‘ப்ளூ’ தொற்று நோய்க்கான அறிகுறிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
    • பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 25 சதவீதத்துக்கும் மேலானவர்கள் ‘ப்ளூ’ காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை புள்ளி விவரங்கள் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றன.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் 'ப்ளூ' காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மாநிலத்தை பின்பற்றி தொடக்கப் பள்ளிகளுக்கு சிறிது காலம் விடுமுறை அளிக்குமாறு நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

    ஆனால், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரோ பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கத் தேவையில்லை என்றும், அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார்.

    இருப்பினும், கள நிலைமை வேறுவிதமாகத்தான் இருக்கிறது. 'ப்ளூ' காய்ச்சலைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலும் செப்டம்பர் மாதத்தில் இரு மடங்காக அதிகரித்து பொது மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்றும் தகவல்கள் வருகின்றன. அமைச்சர் அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது, யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று சொன்னாலும், அண்மைக்காலமாக காய்ச்சல் அறிகுறியோடு அரசு மருத்துவமனைகளை நாடும் பொதுமக்களின் எண்ணிக்கை, குறிப்பாக குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    காய்ச்சல் முகாம்களில் 6,860 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1,798 பேருக்கு இன்புளு வென்சா எனப்படும் 'ப்ளூ' தொற்று நோய்க்கான அறிகுறிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    அதாவது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 25 சதவீதத்துக்கும் மேலானவர்கள் 'ப்ளூ' காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை புள்ளி விவரங்கள் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றன.

    அகில இந்திய அளவிலும் சரி, தமிழ்நாட்டு அளவிலும் சரி கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 20-09-2022 அன்று 496 ஆக இருந்த தினசரி பாதிப்பு 21-09-2022 அன்று 509 ஆகவும், 22-09-2022 அன்று 522 ஆகவும், 23-09-2002 அன்று 529 ஆகவும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இது தவிர, 23-09-2022 அன்று இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

    எனவே, முதல்-அமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையிலும், ஆங்காங்கே பரவி வரும் டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வண்ணமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×