search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boomadevi Temple"

    • பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் அய்யப்பன் கூட்டு கன்னி பூஜை நடைபெற்றது.
    • பூஜையில் பூமாதேவி, பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் அய்யப்பன் கூட்டு கன்னி பூஜை, மண்டலபூஜை விழா நடைபெற்றது.

    அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி யெழுச்சி பூஜை நடை பெற்றது. 7 மணிக்கு அம்பாள் பூமாதேவி குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், சந்தனம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்பாள் ஆலய வளாகத்தில் அய்யப்ப பக்தர்கள் கூட்டு கன்னி பூஜை, மன்டலபூஜை, பஜனைகள் பாடி அய்யப்பனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிர மணியன் குருசாமி, சுப்பாராஜ் பூஜைகளை செய்தார்கள். இதில் சாமிகள் ஆறுமுகம், சக்தி, மாரியப்பன், மகாராஜா, ஜெயராம், பாக்கியராஜ், மகேந்திரன், மாரிஸ் வரன், கதிர்காம சுப்பிரமணியன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து மாரித்தாய், செல்வராணி ஜோதிலட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் மற்றும் ஆறுமுகம், சக்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    • பூமாதேவி ஆலயத்தில் ஐப்பசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அன்னதான பூஜை நடை பெற்றது.
    • அம்மனுக்கு 21 வகையான பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகர் அம்மா பூமாதேவி ஆலயத்தில் ஐப்பசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அன்னதான பூஜை நடை பெற்றது.

    இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் திருப்பள்ளியெழுச்சி, காலை 8 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள், மாபொடி, திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணி அளவில் (உம்மான்) அன்னதான பூஜையும், சிறப்பு அலங்கார சோடனை தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை லட்சுமண சுவாமி தலைமையில் ஆறுமுகம், ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தனர். பூஜையில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், மாரிஸ் வரன், திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, பழனியம்மாள், பூமாலட்சுமி, லட்சுமி, மாரித்தாய், மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து ெகாண்டனர்.

    ×