என் மலர்
நீங்கள் தேடியது "bribery"
- குடும்ப பிரச்சினையில் கைது நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக வாங்கியபோது சிக்கினார்
- பல்வேறு ஆவணங் களை பறிமுதல் செய்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த மங்களம் கீழ்பா லானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல், ஓவியர். அவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிவேலுக்கும், அவரது மனைவி பரிமளாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இது தொடர்பாக, கடந்த 9-ந் தேதி திருவண்ணாமலை மகளிர் போலீ சில் பரிமளா புகார் அளித்தார். புகாரில் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக வெற்றிவேலை விசாரணைக்கு அழைத்த மகளிர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி, கைது நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
மேலும் பணத்துடன் வருமாறு அவகாசம் அளித்து அனுப்பினர் கணவன் மனைவி பிரச்சினைக்கு தீர்வு காணாமல் கைது செய்வேன் என மிரட்டி லஞ்சம் கேட்ட தால் அதிர்ச்சியடைந்த வெற்றிவேல், இதுதொடர் பாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின் உண்மைத் தன்மையை உறுதி செய்ததால், சம்பந்தப்பட்ட பெண் எஸ் ஐயை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.
அதன் படி, விஜிலன்ஸ் போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பரமேஸ்வ ரியிடம் வெற்றி வேல் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த விஜிலென்ஸ் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையி லான குழுவினர் பரமேஸ்வரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.
மேலும், இது தொடர்பாக பல்வேறு ஆவணங் களை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாஜிஸ் திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரியை சிறையில் அடைத்தனர். இந்த சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விருதுநகர் மாவட்டத்தில் மின் இணைப்பு பெற லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்தது.
- இணைய தளம் மூலமாக பணம் செலுத்தி மின் இணைப்பு பெறலாம் என அறிவித்தது.
விருதுநகர்
தமிழகத்தில் புதிதாக வீடு மற்றும் வணிக வளாகம் கட்டுவோர் மின் இணைப்பு பெற லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்தது. இதனை தவிர்க்க மின் இணைப்பு களை பெறவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி புதிதாக மின் இணைப்பு பெற விரும்பு வோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து இணைய தளம் மூலமாக பணம் செலுத்தி மின் இணைப்பு பெறலாம் என அறிவித்தது. இந்த நடவடிக்கை காரணமாக ெபருமளவு முறைகேடுகள் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக மின் இணைப்பு பெறுவோர் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
அரசு அறிவித்தப்படி ஆன்லைன் மூலம் மின் இணைப்பு பெற விண்ணப்பம் செய்தாலும் இடைத்தரகர்கள் மற்றும் சிலர் மூலம் குறிப்பிட்ட பணம் செலுத்தினால் மட்டுமே உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படுவ தாகவும், இல்லை என்றால் பல்வேறு குறைகளை கூறி காலம் தாழ்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பாதிக்கப் பட்ட ஒருவர் கூறுகையில், வீட்டு மின் இணை ப்புக்காக ஆன்லைன் மூலம் விண்ணப் பித்தேன்.
ஆனால் தற்போது வரை மின் இணைப்பு கொடுக்கவில்லை. அரசு நிர்ண யித்த கட்டணத்தை விட இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்தால் மின் இணைப்பு உடனடியாக தரப்படும் என கூறுகிறார் கள் என வேதனையுடன் தெரிவித்தார்.
- தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
- நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காலையிலிருந்து கோரிக்கை மனு அளிக்க நேரில் வந்தனர்.
இந்நிலையில் முதியவர் ஒருவர் மனுக்களை தலையில் கட்டி வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அப்போது அந்த முதியவர் நெற்றியில் பட்டை நாமம் போட்டு கொண்டு வந்தார். அவரது தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
இவர் திட்டக்குடி வட்டம் வடகிராம பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி ஆவார். அவர் கூறும்போது, எனது நிலத்திற்கு பட்டா மாற்ற செய்வதற்காக உரிய மனு அளித்தேன். இதற்கான உத்தரவு நகல் வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர் ஒருவர் இந்த நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
வருவாய் துறையினரும் இதற்கு ஆதரவு அளித்து வருவதோடு அரசு புறம்போக்கு இடங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 33 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.
33 முறை மனு அளித்த அனைத்து கோரிக்கை மனுவையும் மூட்டையாக தலையில் வைத்து கொண்டு வந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
- டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வேகம் எடுக்கும் முன்பு ஆண்டுதோறும் 250 வழக்குகள் வரை பதிவாகி வந்துள்ளது.
- லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவதில்லை.
சென்னை:
லஞ்சம் வாங்குவதும் குற்றம், லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்கிற வாசகங்களை அரசு அலுவலகங்களில் அதிகம் பார்த்திருப்போம்.
கொட்டை எழுத்துக்களில் பெரிதாக பொறிக்கப்பட்டிருக்கும் இந்த லஞ்சத்துக்கு எதிரான வார்த்தைகளை யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.
தங்களது வேலை முடிந்தால் போதும் என நினைத்து லஞ்சம் கொடுப்பதற்கு தயங்காத பொது மக்கள்....
கடமையைச் செய்வதற்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் என அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலை விரித்தாடுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீபகாலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்திருப்பதால் அதன் மூலமாகவே லஞ்ச பணமும் கைமாறி விடுகிறது.
அரசு அலுவலகத்தில் வைத்தோ அல்லது வெளி இடங்களில் வைத்தோ லஞ்சம் வாங்கினால் ஆபத்து என நினைத்து ஆன்லைன் மூலமாக பணத்தை அனுப்பி விடுங்கள். நான் வேலையை முடித்து தருகிறேன் என் வாக்குறுதி அளிக்கும் அரசு அலுவலர்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமே லஞ்ச பணத்தை பெறுவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இதனால் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவதில்லை. இது லஞ்ச வழக்குகளை கையாளுவதில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பெரிய சவாலாகவே மாறியிருக்கிறது.
இதன் காரணமாக லஞ்ச வழக்குகளும் குறைவாகவே பதிவாகியுள்ளன. சென்னையை பொறுத்தவரை இந்த ஆண்டில் மே மாதம் வரையில் மொத்தம் 11 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பல்லாவரத்தில் மட்டும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டில் லஞ்ச புகார்கள் தொடர்பாக 74 வழக்குகள் பதிவாகி உள்ளன. சென்னையில் 2020-ல் 67 வழக்குகளும், 2021-ம் ஆண்டு 44 வழக்குகளும், 2022-ல் 39 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வேகம் எடுக்கும் முன்பு ஆண்டுதோறும் 250 வழக்குகள் வரை பதிவாகி வந்துள்ளது. இதில் சுமார் 120 வழக்குகள் வரையில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட வழக்குகள் ஆகும்.
இந்த ஆண்டு இதுவரையில் தேனி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் எந்த லஞ்ச வழக்குகளும் பதிவாகவில்லை. அதே நேரத்தில் வடக்கு மண்டலத்துக்குட் பட்ட கடலூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடலூரில் அதிகபட்சமாக 8 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதே போல மத்திய மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளிலும் குறைந்த அளவிலான வழக்குகளே பதிவாகி உள்ளன.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, லஞ்சம் கொடுப்பதற்கு விருப்பம் இல்லாத ஒருவர் புகார் அளிக்கும் பட்சத்தில், லஞ்சம் கேட்கும் நபரிடம் அவரை பேச சொல்லி அது தொடர்பான ஆடியோவை பதிவு செய்து வைத்துக் கொள்ள முதலில் அறிவுறுத்துவோம். பின்னர் லஞ்சமாக கொடுக்கும் பணத்தில் ரசாயன பவுடரை தடவி கொடுத்து அந்த பணத்தையே லஞ்சம் கேட்கும் நபரிடம் கொடுக்கச் சொல்லி கையும் களவுமாக பிடித்து கைது செய்வோம்.
இந்த முறையில் லஞ்சம் வாங்கும் நபருக்கு தண்டனை வாங்கி கொடுப்பது எளிதாக இருக்கும்.
தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமாகவும் லஞ்சம் வாங்கும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களின் பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
- ரூ.12 லட்சம் லஞ்சம் கொடுத்தால் உங்களை விட்டு விடுகிறேன் என இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
- போலீஸ் அதிகாரிகள் சொர்ணலதாவிடம் விசாரணை நடத்தினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் சொர்ணலதா.
அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கடற்படை ஊழியர்கள் 2 பேர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சூரி பாபு என்பவரை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் ரூ.1 கோடி 2000 ரூபாய் நோட்டுகளை தருவதாகவும் ஒரே நேரத்தில் ரூ.10 லட்சம் கூடுதலாக கிடைக்கும் என தெரிவித்தனர்.
இதையடுத்து சூரிபாபு நேற்று முன்தினம் இரவு ரூ.90 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு சிம்ம தாரா என்.ஆர்.ஐ ஆஸ்பத்திரி அருகே வந்தார்.
சிறிது நேரத்தில் ஓய்வுபெற்ற கடற்படை ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
சிறிது நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணலதா தன்னுடைய வாகனத்தில் ஆஸ்பத்திரி அருகே வந்தார்.
போலீஸ்காரர் ஹேம சுந்தர், ஊர்க்காவல் படையை சேர்ந்த ஸ்ரீனு மற்றும் ஹோங்கா ஆகியோர் உடன் வந்தனர்.
பணத்துடன் சூரி பாபு உள்ளிட்ட 3 பேரை மடக்கி பிடித்தனர். ரூ.12 லட்சம் லஞ்சம் கொடுத்தால் உங்களை விட்டு விடுகிறேன் என இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
இதையடுத்து சூரி பாபு இன்ஸ்பெக்டர் சொர்ண லதாவிடம் ரூ.12 லட்சத்தை கொடுத்தார்.
பின்னர் வீட்டிற்கு வந்த சூரி பாபு இன்ஸ்பெக்டர் சொர்ணலதா ரூ.12 லட்சம் பணம் வாங்கியது குறித்து டி.எஸ்.பி. வித்யாசாகரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சொர்ணலதாவிடம் விசாரணை நடத்தினர். இதில் ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.
போலீசார் வழக்கு பதிவு செய்து சொர்ணலதா, போலீஸ்காரர் ஹேம சுந்தர், ஊர்க்காவல் படையை சேர்ந்த ஸ்ரீனு, ஹோங்கா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தாங்கள் சொல்லும் வேலையை முடித்து கொடுப்பதாக தெரிவித்தார்.
- தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் பில்காரியில் உள்ள வருவாய்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர் பத்வாரி கஜேந்திர சிங். இவரை சந்தன்சிங் என்பவர் நில பிரச்சினை காரணமாக அணுகினார். அவரிடம் பத்வாரி கஜேந்திர சிங் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தாங்கள் சொல்லும் வேலையை முடித்து கொடுப்பதாக தெரிவித்தார், ஆனால் லஞ்சம் கொடுக்க சந்தன்சிங் விரும்பவில்லை.
இது தொடர்பாக அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அவரை கையும் , களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.
சம்பவத்தன்று வருவாய் துறை அலுவலகத்துக்கு சென்ற சந்தன்சிங், பத்வாரி கஜேந்திர சிங்கிடம் ரூ. 4.500 லஞ்சம் கொடுப்பது போல கொடுத்தார், அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். போலீசாரை பார்த்ததும் பத்வாரி கஜேந்திர சிங் அதிர்ச்சி அடைந்தார். எங்கே தான் ஆதாரத்துடன் சிக்கி கொள்வோமோ என பயந்த அவர் லஞ்சம் வாங்கிய பணத்தை வாயில் போட்டு மென்று விழுங்கினார்
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை ஒரு தட்டில் வாந்தி எடுக்க வைத்தனர். அதில் அவர் விழுங்கிய பணம் கூழாகி வெளியில் வந்தது. பின்னர் அவரை போலீசார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர் அவரை பரிசோதித்த டாக்டர்கள் தற்போது நன்றாக உள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- சுஷில் லஞ்ச பணத்தை வாங்கும் போது மேயர் முனேஷ் குர்ஜார் வீட்டில்தான் இருந்தார்.
- உதவியாளர் நாராயண் சிங் வீட்டில் இருந்து ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மேயராக இருப்பவர் முனேஷ் குர்ஜார். இவரது கணவர் சுஹில்.
பெண் மேயரின் கணவர் சுஷில் குர்ஜார் நிலம் குத்தகை வழங்கியதற்கு ஈடாக ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கி உள்ளார். அவர் வீட்டில் லஞ்சப் பணத்தை வாங்கும் போது ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
சுஷில் லஞ்ச பணத்தை வாங்கும் போது மேயர் முனேஷ் குர்ஜார் வீட்டில்தான் இருந்தார்.
லஞ்ச ஒழிப்பு துறையினர் வீட்டில் சோதனை நடத்தி ரூ.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சுஷில் குர்ஜாருடன் அவரது உதவியாளர்கள் நாராயண் சிங், அனில் துபே ஆகியோரும் பிடிபட்டனர்.
சுஷில் தனது உதவியாளர்கள் மூலம் நிலம் குத்தகைக்கு விண்ணப்பித்த நபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் செய்தார். அவர்கள் பொறி வைத்து சுஷிலை பிடித்தனர்.
அவரது உதவியாளர் நாராயண் சிங் வீட்டில் இருந்து ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்சம் வாங்கிய போது மேயர் முனேஷ் குர்ஜார் இருந்தார். அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கருதியும், வழக்கு விசாரணையில் தலையிடக் கூடும் என்பதாலும் அவரை மேயர் பதவியில் இருந்து மாநில காங்கிரஸ் அரசு அதிரடியாக நீக்கி உத்தர விட்டது. இரவோடு இரவாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவர் கவுன்சிலர் பதவியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
- ஒரு நகைக்கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
- இன்ஸ்பெக்டர் கருணாகரன் நேற்று ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் வெள்ளப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சயனைடு கலந்த மதுபானம் குடித்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த சம்பவம் குறித்து
தஞ்சாவூர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி வந்த கருணாகரன் என்பவர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களிடம் கருணாகரன் விசாரணை நடத்தினார்.
அப்போது தஞ்சாவூரை சேர்ந்த ஒரு நகைக்கடைக்காரரிடம் ரூ.50,000 லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் விசாரணை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் நேற்று ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் தற்போது கிழக்கு போலீஸ் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டராக மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா கூடுதலாக கவனித்து வருகிறார்.
கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கருணாகரன் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நிலப்பத்திரம் காணவில்லை என்று சான்றிதழ் தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேச்சேரி அரங்கனூர் பகு தியை சேர்ந்தவர் பிரபு. இவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் அரங்கனூரில் உள்ளது.
இந்த நிலப் பத்திரங்களை வங்கியில் வைத்து கடன் வாங்க முடிவு செய்தார். இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மேச்சேரியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பத்திரங்களை நகல் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினார். அப்போது அவர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்குள்ள கடையில் பூ மாலை வாங்கிக் கொண்டு தனது மோட்டார் சைக்கிள் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்தார். அப்போது நிலப்பத்திரங்கள் வைத்திருந்த பையை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு இது பற்றி மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இப்புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் சண்முகம் நிலப்பத்திரம் காணவில்லை என்று சான்றிதழ் தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரபு இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தனது நிலப்பத்திரம் காணவில்லை என்று மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகத்திடம் புகார் கொடுத்தேன். ஆனால் ஒரு ஆண்டாக பத்திரம் காணவில்லை என்பதற்கு சான்றிதழ் தராமல் பல்வேறு காரணங்களை தெரிவித்து இழுத்தடித்து வந்தார். நீதிமன்ற உத்தரவு வாங்கி வரவேண்டும் என தெரிவித்தார். நானும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வாங்கி வந்து கொடுத்தேன். ஆனாலும் காணாமல் போன பத்திரம் தொடர்பாக சான்றிதழ் வழங்க வேண்டுமானால் ரூ.25 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என தெரிவித்தார். இதற்கு உடந்தையாக இன்ஸ்பெக்டரின் டிரைவர் போலீஸ்காரர் மனோஜ் விஜயன் இருந்தார். அவரும் பணம் கேட்டு வந்தார். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீஸ்காரர் மனோஜ் விஜயன் ஆகியோர் காணாமல் போன பத்திரத்திற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டது தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகம், டிரைவர் மனோஜ் விஜயன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகநாதன் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.
- மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை கைது செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்.
இவரது மனைவி தீபா (43). இவர் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (45) என்பவர் பட்டாவில் உள்ள பூர்வீக சொத்தில் இருந்து பெயர் நீக்கம் செய்ய ஊராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தீபா, பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகநாதன் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.
இதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெகநாதனிடம் கொடுத்து அதனை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர்.
அதன்படி நேற்று மதியம் ஜெகநாதன் கொந்தளம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார். அங்கிருந்த தீபாவிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். அதை வாங்கிய தீபா தனது மொபட்டிற்குள் பணத்தை வைத்துவிட்டு வந்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை கைது செய்தனர்.
தொடர்ந்து தீபா மொபட்டில் வைத்திருந்த பணத்தை கைப்பற்றியதுடன் மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரை நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து தீபாவை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நாமக்கல் லஞ்ச ஒப்பு துறை போலீசார் தீபாவின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி விசாரணை நடத்துகின்றனர்.
- போதை பொருள் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பவிட்டதாக புகார் எழுந்தது.
- கலால் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியது உறுதியானது.
திருவனந்தபுரம்:
கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு போதை பொருட்களை சிலர் கடத்தி வந்தனர். அவர்களை வயநாடு முத்தங்கா சோதனை சாவடியில் பணியில் இருந்த கலால் ஊழியர்கள் பிரபாகரன், அஜிஸ், பாலகிருஷ்ணன், சுதீஷ் ஆகியோர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கொண்டு போதை பொருள் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பவிட்டதாக புகார் எழுந்தது.
அதன்பேரில் கலால் துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரி விசாரணை நடத்தினார். அதில், கலால் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் சஸ்பெண்டு செய்து கலால் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
- உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
- கிருஷ்ணகுமார் அது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
சென்னை:
அடையாறை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் புதிதாக கட்டியுள்ள வீட்டுக்கு மின் இணைப்பை பெறுவதற்காக பெசன்ட் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனை கொடுக்க விரும்பாத கிருஷ்ணகுமார் அது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் கொடுத்த ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டை கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர்.