என் மலர்
நீங்கள் தேடியது "candidates"
- ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு 9 ஆயிரத்து 990 பேர் எழுதுகின்றனர்.
- தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு விண்ணப்பதாரர்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-
ராமநாதபுரம் மாவட் டத்தில் 2022-ம் ஆண்டி ற்கான ஒருங்கிணைந்த 2-ம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் 3-ம் பாலினம்) சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு 10 தேர்வு மையங்களில் 9 ஆயிரத்து 990 (ஆண் மற்றும் பெண்) விண்ணப்பதாரர்களுக்கு நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு எழுதும் மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய அழைப்பு கடிதம் மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.
எழுத்து தேர்வில் கலந்து கொள்ள வரும் விண்ணப்ப தாரர்கள் காலை 8.30 மணி முதல் தங்களுக்குரிய தேர்வு மையத்தில் அனு மதிக்கப்படுவார்கள். 10 மணிக்கு எழுத்து தேர்வு தொடங்கும். எக்காரணத்தை கொண்டும் காலதாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப் படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள், தேர்வு மையத்திற்கு செல்போன், கால்குலேட்டர் மற்றும் பிற மின்னணு சாதன பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை. மேலும் தேவையற்ற பொருட்கள் தேர்வு மையத்திற்குள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அழைப்பு கடிதம், நீலம் அல்லது கருப்பு நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை பேனா மற்றும் அட்டை, ஒரு புகைப்படம், ஏதேனும் ஒரு அடையாள அட்டை ஆகியவை மட்டும் கொண்டு செல்ல அனு மதிக்கப்படும்.
தேர்வு மையங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும். தேர்வு மையங்களில் காப்பி அடிப்பது, ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுதல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றபடுவதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு விண்ணப்பதாரர்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+2
- தமிழகம் முழுவதும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை 2-ம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
- நெல்லை மாவட்ட காவல்துறை எழுத்து தேர்வு சிறப்பு மேற்பார்வை கண்காணிப்பு அதிகாரியான நெல்லை சரக டி.ஜ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை 2-ம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் ஆண் விண்ணப்பதாரர்கள் 11,521 பேர், பெண் விண்ணப்பதாரர்கள் 2,920 பேர், திருநங்கை ஒருவர் என மொத்தம் 14,442 பேர் விண்ணப்பித்திருந்தனர். மாநகர பகுதியில் 10 மையங்களிலும், மாவட்டத்தில் 6 மையங்களிலும் இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி 12.40 மணிக்கு முடிவடைந்தது.
இதனையொட்டி தேர்வர்கள் அனைவரும் 9.30 மணிக்கு தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக தேர்வர்கள் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
508 போலீசார் பாதுகாப்பு
மாநகர பகுதியில் பெரும்பாலான மையங்களில் தேர்வர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். ஒரு சில மையங்கள் முன்பு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது. நெல்லை மாவட்ட காவல்துறை எழுத்து தேர்வு சிறப்பு மேற்பார்வை கண்காணிப்பு அதிகாரியான நெல்லை சரக டி.ஜ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.
இதற்காக 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 8 உதவி மற்றும் துணை கண்காணிப்பாளர்கள், 17 இன்ஸ்பெக்டர், 82 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 508 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 9,388 ஆண்கள், 2249 பெண்கள் மற்றும் 4 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 11,641 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இதனையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒரு சிலருக்கு தேர்வுக்கூட சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் தெளிவாக இல்லாமல் இருந்தது.
இதையடுத்து அவர்கள் தங்களது வேறு புகைப்படத்தினை ஒட்டி அரசிதழ் பதிவு பெற்ற ஒரு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று சென்றனர். ஹால் டிக்கெட் கொண்டு வராதவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு தொடங்கிய பின்னர் வந்தவர்கள் யாரும் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சில இடங்களில் வாக்குவாதங்கள் ஏற்பட்டது. செல்போன், கால்குலேட்டர் மற்றும் ப்ளுடூத் போன்ற எலக்ட்ரானிக்கருவிகள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 10 மையங்களில் நடந்த இந்த தேர்வுக்கு 11, 818 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் ஒரு திருநங்கையும் அடங்குவார்.
மாவட்டம் முழுவதும் தேர்வையொட்டி மையங்களில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 25 இன்ஸ்பெக்டர்கள், 126 சப்-இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
- 30 நிமிடங்கள் ஆங்கில தேர்வும் ஆக மொத்தம் 1 மணிநேரம் தேர்வு நடைபெறும்.
- நேர்முக தேர்வு குறித்த விபரம் தேர்வர்களுக்கு மேற்கண்ட முறையிலேயே தெரிவிக்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கடந்த 30-ந் தேதி நடைபெறவிருந்த கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது அந்த தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை ) நடைபெற உள்ளது. தேர்வர்கள், எழுத்துத் தேர்விற்கான அனுமதி சீட்டினை விண்ணப்பப் பதிவின் போது பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு வரும் குறுந்தகவல் மூலமாகவோ அல்லது https://agaram.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவெண் மற்றும் கைபேசி எண்ணினை உள்ளீடு செய்வதன் மூலமாகவோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அனுமதி சீட்டில் உள்ள குறிப்புகளைத் தவறாமல் பின்பற்ற தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எழுத்துத்தேர்வு 30 மதிப்பெண்கள் கொண்டதாகும்.
30 நிமிடங்கள் தமிழ் தேர்வும், 30 நிமிடங்கள் ஆங்கிலத் தேர்வும் ஆக மொத்தம் 1 மணிநேரம் தேர்வு நடைபெறும். வாசித்தல் தேர்வானது நேர்முக தேர்வு நடைபெறும் நாளன்று நடைபெறும். வாசித்தல் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு குறித்த விபரம் தேர்வர்களுக்கு மேற்கண்ட முறையிலேயே தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேர்தல் விதிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் அறிவுரை வழங்கியுள்ளார்.
- கிரிமினல் வழக்குகளில் தொடர்பு உள்ள வர்கள் வாக்குச்சாவடி முகவர்களாக செல்ல அனுமதிக்க கூடாது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சி கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறி யிருப்பதாவது:
ஈரோடு இடைத்தேர்தலை யொட்டி நாளை (திங்க ட்கிழமை) வாக்குப் பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொது கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ, யாரும் ஒருங்கிணைக்கவோ? நடத்தவோ? அல்லது அவற்றில் பங்கேற்கவோ? கூடாது.
பொதுமக்களை ஈர்க்கும் வகையில், இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் வாயிலாக தேர்தல் சம்பந்தமான பரப்புரை செய்யக்கூடாது.
வாக்கு ப்பதிவு நாளன்று, வேட்பாளர் சொந்த பயன்பாட்டுக்காக ஒரு வாகனமும், தேர்தல் முகவரின் பயன்பா ட்டுக்காக ஒரு வாகனமும் மட்டுமே அனுமதிக்கப்படும்.
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவது, அழைத்து செல்வது போன்ற செயல்பாடுகளுக்காக வாடகை வாகனம் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தையும் கையாள வேட்பாளர்கள் அனுமதிக்க கூடாது.
2 நபர்களை மட்டும் கொண்ட வேட்பாளர்களின் அரசியல் கட்சிக ளின் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச்சாவடிகளில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்படலாம்.
தேவையில்லாத கூட்டத்தை கூட்டக்கூடாது. வாக்காளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க கூடாது.
வாக்குச்சாவடிக்கு வரும் முகவர்கள், அதே வாக்கு ச்சாவடியை சேர்ந்த வாக்கா ளர்களாக இருக்க வேண்டும். அவர்கள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
மேலும் கிரிமினல் வழக்குகளில் தொடர்பு உள்ள வர்கள் வாக்குச்சாவடி முகவர்களாக செல்ல அனுமதிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறி னார்.
- முதல்வர் பசவராஜ் பொம்மை தனது பாரம்பரிய தொகுதியான ஷிகான் தொகுதியில் களமிறங்குகிறார்.
- கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரை எதிர்த்து அமைச்சர் அசோகா போட்டியிடுகிறார்.
பெங்களூரு:
கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை தொடங்கிய நிலையில், ஆளும் பாஜகவின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்களில் பலருக்கு வாய்ப்பு கொடுக்காமல், புதுமுகங்களை களமிறக்குவதற்கு கட்சி தலைமை முடிவு செய்ததால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் பாஜக தேர்தல் குழு சந்தித்து வேட்பாளர்களை இறுதி செய்தது.
இந்நிலையில், பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் முதற்கட்டமாக 189 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 52 பேர் புதுமுகங்கள், 8 பேர் பெண்கள். பல எம்எல்ஏக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. 32 வேட்பாளர்கள் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 30 பேர் பட்டியல் சமூகத்தையும், 16 பேர் பழங்குடியினர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.
அமைச்சர் அசோகா தனது சொந்த தொகுதியான பத்மநாபநகர் மற்றும் கனகபுரா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
முதல்வர் பசவராஜ் பொம்மை தனது பாரம்பரிய தொகுதியான ஷிகான் தொகுதியில் களமிறங்குகிறார். கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, தந்தையின் பாரம்பரிய தொகுதியான சிகாரிபுரா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தனது பாரம்பரிய தொகுதியான சிக்மகளூர் தொகுதியிலும், மாநில அமைச்சர் சோமண்ணா, முன்னாள் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து வருணா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
கர்நாடக தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 13ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது.
- பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- தி.மு.க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட திட்டக்குழு தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ரவிகுமார், முஸ்தபா, ஜார்ஜ், ராமசாமி, ராஜேந்திரன், பாபு, விசாலாட்சி ஆகியோரும், ஏற்கனவே மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களாக உள்ள பொன்தோஸ், உமாராஜன், வனஜா, மீனா, சசிகலா, அனீபா ஆகியோர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றதை தொடர்ந்து மாவட்ட தி.மு.க. அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலய முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக்கிடம் வாழ்த்து பெற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான பொன்தோஸ், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத் துல்லா, தொரை, பில்லன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், இஸ்மாயில், மணிகண்டன், ஊட்டி நகர் மன்ற உறுப்பினர்கள் ரவி, ரீட்டாமேரி, ரமேஷ், ரகுபதி, விஷ்னு, கஜேந்திரன், நாகமணி, கீதா, மேரி பிளோ ரினா, பிரியா வினோதினி, திவ்யா, அனிதா லட்சுமி, பிளோரினா, மீனா, ஜாகீர்உசேன், மன்சூர், கோபி, சாந்தாசந்திரன், வசந்தி, சுசிலா, சித்ரா, பாக்கியவதி, சமீனா மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- கூட்டுறவு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 5578 விற்பனையாளர்கள் 925 கட்டுநர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- நேர்காணல் மாவட்ட வாரியாக உள்ள மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்கள் மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.
சேலம்:
கூட்டுறவு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 5578 விற்பனையாளர்கள் 925 கட்டுநர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப் பட்டு, அவர்களுக்கான நேர்காணல் மாவட்ட வாரி யாக உள்ள மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்கள் மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.
அதன்படி, சேலம் மாவட்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 236 விற்பனையாளர் பணியி டத்திற்கு 18000 பேரும், 40 கட்டுனர்கள் பணியிடத் துக்கு 3000 பேரும் விண்ணப்பித்தனர். தகுதி யான விண்ணப்பதாரர் களுக்கு விற்பனையாளர், கட்டுனர் பணி இடங்களுக் கான நேர்முகத் தேர்வு கடந்த டிசம்பரில் அழகா புரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் 236 விற்பனையாளர்கள் 40 கட்டுனர் பணிக்கு தேர்வா னவர்கள் பெயர் பட்டியல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலை யத்தின் மூலம் இணையத ளத்தில் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட் டுள்ளது. இதில் விண்ணப்ப எண், தேர்வர்கள் பெயர், பிறந்த தேதி இடம் பெற்றுள்ளது.
ரேஷன் கடை விற்பனை யாளர், கட்டுனர் பணி இடத்துக்கு தேர்வானவர் களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது.
- உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.
- வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர பல்வேறு யுக்திகளை பின்பற்றி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
ஆலேரு தொகுதியில் சந்திரசேகர ராவ் கட்சியின் வேட்பாளர் கங்கிடி சுனிதாவை ஆதரித்து அந்த கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அவர்கள் தெருவில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தொழிலாளி ஒருவர் வீட்டின் முன்பு குளித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் வாக்கு சேகரித்தவர்கள் அருகில் ஓடி சென்றனர். அவருக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டினர்.
பின்னர் உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.
இது தவிர புதுசு புதுசாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராகுல் காந்தி பிரசாரத்தின் போது விஜயபேரியில் சாலையோர ஓட்டல் ஒன்றில் மாஸ்டராக மாறி தோசை சுட்டார்.
ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சி தலைவர் ஒவைசி ஓட்டலில் தொண்டர்களுடன் அமர்ந்து இட்லி தோசை சாப்பிடுகிறார். மேலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.
தெலுங்கானா அமைச்சரும் பி.ஆர்.எஸ். வேட்பாளருமான அஜய்குமார் என்பவர் பிரசாரத்தின் போது சவரவ தொழிலாளியாக மாறிவிடுகிறார்.
அவர் கட்டிங் சேவிங் செய்து வாக்கு சேகரித்தார். அவரிடம் பலர் முடி வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
மகபூப் நகர் பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் ஸ்ரீநிவாஸ் கவுட் வயலில் இறங்கி விவசாயிகளுடன் வேலை செய்தார். அவர் வேர்கடலை பறித்து கொடுத்து உதவினார்.
வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.
- கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
- தொகுதிகளில் வேலைகளையும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பலமான கூட்டணியை அமைக்கும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் வகையில் கட்சிகள் சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
எனவே கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம். தொகுதி பங்கீடு பற்றியும் அப்போது பார்த்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
கூட்டணி அமைந்தாலும் சரி. அமையாவிட்டாலும் சரி தேர்தலை சந்திக்கும் வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
தொகுதி நிலவரம், செல்வாக்கு, தி.மு.க.வுடன் நேரடி போட்டி ஏற்பட்டா லும் வெற்றி பெறும் ஆற்றல் ஆகியவற்றை ஆராய்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்வதாக கூறப்படுகிறது.
இதுவரை 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டாராம். அதில் டாக்டர் ஜெயவர்தன் (தென்சென்னை), எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை), ராயபுரம் மனோ (வடசென்னை), மா.பா.பாண்டியராஜன் (விருது நகர்), செம்மலை (சேலம்), சந்திரசேகர் (கோவை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு), ராஜ்சத்யன் (மதுரை), கண்ணன் (திண்டுக்கல்), கே.பி.எம்.சதீஷ்குமார் (கிருஷ்ணகிரி), ராதா கிருஷ்ணன் (கள்ளக்குறிச்சி), சண்முகநாதன் அல்லது சரவண பெருமாள் (தூத்துக்குடி) உள்பட 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்து விட்டாராம்.
தான் வேட்பாளராக முடிவு செய்திருப்பவர்களை அந்த அந்த தொகுதிகளில் தேர்தல் வேலையை தொடங்கும்படி ரகசியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
இதையடுத்து தொகுதி களில் வேலைகளையும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
- 16 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.
- அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் போட்டி.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சி 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகளை, சமாஜ்வாதி கட்சி ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், 16 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.
இதில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
லக்னோ, கோரக்பூர், பைசாபாத் உள்ளிட்ட 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் தொகுதியை தங்களுக்கே தரவேண்டும் என்று தினகரன் வலியுறுத்தி உள்ளதாக தெரிய வந்து உள்ளது.
- வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.
சென்னை:
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இடம் பெற்றுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் டி.டி.வி.தினகரன் எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அனைத்து தொகுதிகளிலும் அவரது கட்சிக்கு தோல்வியே கிடைத்தது.
இந்த தடவை பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்று கணிசமான வாக்குகள் பெற வேண்டும் என்பதில் டி.டி.வி.தினகரன் உறுதியாக உள்ளார். இதற்காக அவர் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் பா.ஜ.க.விடம் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் இருந்து 22 தொகுதிகளை குறிப்பிட்டு அவர் பட்டியல் தயாரித்து கொடுத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த 22 தொகுதிகளில் இருந்து அ.ம.மு.க.வுக்குரிய 2 அல்லது 3 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

டி.டி.வி.தினகரன் தரப்பில் இருந்து தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் இருக்கும் தொகுதிகள் கேட்கப்பட்டு உள்ளன. ராமநாதபுரம் தொகுதியை தங்களுக்கே தரவேண்டும் என்று டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளதாக தெரிய வந்து உள்ளது.
மற்றொரு தொகுதியாக தேனி அல்லது சிவகங்கையை கேட்டுள்ளார். இந்த தொகுதிகளில் தனது தீவிர ஆதரவாளர்களை களம் இறக்க டி.டி.வி.தினகரன் திட்டமிட்டு இருக்கிறார்.
பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கும் டி.டி.வி.தினகரன் இந்த தடவை பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிட்டாலும் தனது வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.
- கருத்து கேட்பு கூட்டத்தின்போது ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி மோதல் பிரச்சினைகளும் பூதாகரமாக வெடித்தது.
- பட்டியலை இன்னும் ஓரிரு நாளில் தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் குழு வழங்கும் என தெரிகிறது.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் யார்-யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று தி.மு.க. ஒரு சர்வே எடுத்து வைத்துள்ளது.
இந்நிலையில் ஒவ் வொரு மாவட்ட நிர்வாகிகளையும் அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து கடந்த சில நாட்களாக கருத்து கேட்டு வந்தது.
தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றிருந்த முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தினமும் காலை, மாலை என இரு நேரமும் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தின்போது ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி மோதல் பிரச்சினைகளும் பூதாகரமாக வெடித்தது.
ஆனாலும் உங்கள் பிரச்சினைகளை பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பேசி தீர்த்து கொள்ளலாம். இப்போது மேலிடம் அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். தொகுதிக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்று கேட்டறிந்தனர்.
28-ந் தேதி தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் அடுத்த கட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் யார்-யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற உத்தேச பட்டியலை இந்த குழு தயாரிக்க உள்ளது.
இந்த பட்டியலை இன்னும் ஓரிரு நாளில் தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் குழு வழங்கும் என தெரிகிறது.
இதற்கிடையே தி.மு.க.வில் யார்-யாருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.
1 மத்திய சென்னை-தயாநிதிமாறன், 2 வட சென்னை-கலாநிதி வீராசாமி, 3 தென்சென்னை-தமிழச்சி தங்கபாண்டியன், 4 ஸ்ரீபெரும்புதூர்-டி.ஆர்.பாலு, 5 காஞ்சிபுரம்-செல்வம், 6 அரக்கோணம்-ஜெகத்ரட்சகன், 7 வேலூர்-கதிர் ஆனந்த் (அமைச்சர் துரைமுருகனின் மகன்) 8 திருவண்ணாமலை-அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன், இவர் மாநில மருத்துவ அணி துணைத் தலைவராக உள்ளார். 9 கள்ளக்குறிச்சி-கவுதம் சிகாமணி (அமைச்சர் பொன்முடியின் மகன்), 10 கடலூர்-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன், 11 சேலம்-வீரபாண்டி ஆறுமுகம் பேரன் டாக்டர் தருண் அல்லது உதயநிதி ரசிகர் மன்ற மாநிலச் செயலாளர் பி.கே.பாபு, 12 நீலகிரி-முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, 13 பொள்ளாச்சி-சண்முக சுந்தரம் எம்.பி. அல்லது மக்கள் நீதி மய்யத்தில் இருந்து இணைந்த மகேந்திரன், 14 பெரம்பலூர்-அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண், 15 தர்மபுரி-முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அல்லது டாக்டர் செந்தில் குமார், 16 திண்டுக்கல்-வேலுசாமி எம்.பி., 17 தூத்துக்குடி-தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., 18 நெல்லை-மகளிரணி ஹெலன் டேவிட்சன் அல்லது கிரகாம்பெல், 19 தென்காசி-தனுஷ் எம்.குமார் எம்.பி., 20 தஞ்சை-முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.
தி.மு.க. வசம் உள்ள இந்த தொகுதிகளில் சிலவற்றை காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கேட்டு பட்டியல் கொடுத்துள்ளதால் தொகுதிகளை மாற்றிக் கொடுக்க வாய்ப்புள்ளது.
மேலும் சில தொகுதிகள் கூட்டணி வசம் இருப்பதால் அந்த தொகுதிகளில் சிலவற்றை தி.மு.க. கேட்டு பெறும் என தெரிகிறது. அதற்கேற்ப பட்டியல் மாற்றமும் இருக்கும் என்று நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.