என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cattle"

    • மயிலாடுதுறை மாவட்டம் செறுதியூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • தடுப்பூசி 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமை இனங்களுக்கு போடப்படுகிறது.

    தரங்கம்பாடி:

    தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டம் செறுதியூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு நாகப்பட்டினம் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் விஜயகுமார் வழிகாட்டுதலின்படி உதவி இயக்குனர் மருத்துவர் ஈஸ்வரன் தலைமையில் மருத்துவர்கள் அன்பரசன் கவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மருத்துவர் தர்மராஜ் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் மகாபாரதி முகாமை துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் இதுவரை இந்த தடுப்பூசி அனைத்து கிராமம் மற்றும் நகர் புறப்பகுதிகளில் போடப்படுகிறது .

    இதற்காக சுமார் 40 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள தாகவும் தடுப்பூசி 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமை இனங்களுக்கு போடப்படுகிறது.

    கால்நடை வளர்ப்போம் தங்களின் அனைத்து கால்நடை இனங்களுக்கும் கட்டாயம் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

    இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் கால்நடை களுக்கு வெயில் மட்டும் மணி நேரங்களில் வேகமாக பரவும் கோமாரி நோயிலிருந்து பாதுகாக்க முடியும்.

    தடுப்பூசி போடாமல் இருந்தால் நோய் ஏற்பட்டால் மாடுகளின் வாய் மற்றும் குழம்பு பகுதிகளில் கொப்பளம் மற்றும் புண் ஏற்படும் மாடுகள் தீவனம் உட்கொள்ள முடியாது.

    மாடுகளின் பால் உற்பத்தி பாதிக்கப்படும் சினை மாடுகள் கன்று வீழ்ச்சி ஏற்படும் நோயுற்ற மாடுகளின் பால் இளங்கன்றுகள் குடிப்பதால் கன்றுகள் இறப்பு ஏற்படும். பொதுமக்களின் வேலை திறன் பாதிக்கப்படும்.

    பாதிக்கப்பட்ட மாடுகள் சில நேரம் இறப்புகள் கூட ஏற்படும்.

    எனவே கால்நடை வளர்ப்புக்கு தடுப்பூசி போடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மருத்துவ ஜோதிலட்சுமி மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் முருகன், ராஜ் சிவரஞ்சனி, கயல்விழி மற்றும் உதவியாளர்கள் உஷா, மூர்த்தி, ஸ்டீபன் ஆகியோர் கால்நடைகளுக்கு தடுப்பு ஊசி அளித்தனர்.

    முகாம் ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி நெடுஞ்செழியன் துணை தலைவர் சவீதா கணேசன் ஆகியோ செய்தனர். முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது.

    • தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • இந்த முகாம் வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோ ட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மாதாக்கோட்டை சாலையில் இன்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்இந்த முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார் .

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இன்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த முகாம் வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் 2 லட்சத்து 92 ஆயிரம் கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

    ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    விடுதல் இன்றி அனைத்து கிராமங்களிலும் இந்த பணி நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் நர்மதா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் தமிழ்செல்வம், உதவி இயக்குனர் சையத் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன், தாசில்தார் சக்திவேல், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், எஸ்.பி.சி.ஏ அலுவலர் சாரா உறுப்பினர்கள் எட்வர்ட் ஆரோக்கியராஜ், முகமது ரபி, விஜயலட்சுமி பாரதி, முனைவர் சதீஷ்குமார், ஆடிட்டர் ராகவி, கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கால்நடை தீவன பற்றாக்குறையினால் கரூர் விவசாயிகள் பரிதவிப்பு
    • பலமடங்கு விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை

    கரூர்,

    பருவமழை சரிவர பெய்யாததால் க.பரமத்தி யூனியன் பகுதியில் கால்நடைக்கு தீவனம் கிடைக் காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். க.பரமத்தி யூனியன், கரூர் மாவட்டத்தில் மிகவும் வறட்சியான பகுதியாக உள்ளது. இங்கு, கிரஷர் மற்றும் ஜல்லி தொழிலுக்கு அடுத்தபடியாக, கால்நடைகளை நம்பியே பெரும்பாலான மக்கள் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கான கால்ந டை கள் இப்பகுதி விவசா யிகளுக்கு வாழ்வாதாரமாக உள் ளது. பருவ மழையை நம்பியே, கால்நடை தீவன பயிர்களை விவசாயிகள் வளர்க்கின்றனர். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை, தொடர்ந்து பற்றாக்குறையாக உள்ளது. இதனால் தீவன பயிர்கள் வளர்ப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது.

    மழை இல்லாமல் கால்நடைகளுக்கு கடலை கொடி, சோளத்தட்டு போன்ற பயிர்களை விலைக்கு வாங்கி, தீவனம் அளிக்க வேண்டியுள்ளது. இவற்றின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    • கால்நடை வளர்ப்பு தொழில் மக்களுக்கு வருவாய் ஈட்டித் தருகிறது.
    • வெப்ப நிலையால் வாய் திறந்த நிலையில் சுவாசித்தல் உள்ளிட்டவை வெப்ப அயர்ச்சி பாதிப்பு அறிகுறிகள்.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் கால்நடை வளர்ப்புத்தொழில் முக்கிய வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. விவசாயம் அல்லாத காலங்களில், கால்நடை வளர்ப்பு தொழில் மக்களுக்கு வருவாய் ஈட்டித் தருகிறது.தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால், கால்நடைகளுக்கு வெப்ப அயர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது.

    சுத்தமான தண்ணீரை வழங்குவதன் வாயிலாக, வெப்ப அயற்சி வராமல் தடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:- நிழலில்தஞ்சம் அடைதல், அதிகமானதண்ணீர் பருகுதல், பசியின்மை, அதிகமானஉமிழ்நீர் வடிதல், அதிக உடல் வெப்ப நிலை யால் வாய் திறந்த நிலையில் சுவாசி த்தல் உள்ளிட்டவை வெப்ப அயர்ச்சி பாதிப்பு அறிகுறிகள்.கலப்புத் தீவனத்தை தண்ணீரின் மேல் சிறிதளவு துாவும் போது,மாடுகளின் தண்ணீர் குடிக்கும்அளவு அதிகரிக்கும்.வறண்ட வெப்ப நிலையின்போது கால்நடைகள்அதிக ப்படியான உலர் மற்றும் நார் சத்துக்களையும், குறை வாக செரிக்க கூடிய தீவனங்களையும் உட்கொ ள்கின்றன.சுத்தமான தண்ணீரை முறையாக பருகினால் கால்நடை களுக்கு வெப்ப அயர்ச்சி நோய் ஏற்பட வாய்ப்பில்லை.இவ்வாறுஅவர்கள் கூறினர்.

    • கன்றுக்குட்டி இறந்து 4 அல்லது 5 நாட்கள் கழித்து பார்த்துள்ளனர்.
    • சிறுத்தை வேட்டையாடும்போது தனது உணவை கடித்து பல அடி தூரம் இழுத்து செல்லும்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே நாட்டார்பாளையம் பகுதியில் உள்ள பெரியசாமி என்பவரது விவசாய தோட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கட்டியிருந்த கன்றுக்குட்டி இறந்து கிடந்தது. எனவே ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் சிறுத்தைதான் கன்று குட்டியை கொன்று இருக்கலாம் என்று பொதுமக்களும், விவசாயிகளும் சந்தேகம் அடைந்தனர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கன்றுக்குட்டியின் உரிமையாளர் காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே காங்கயம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கன்றுக்குட்டியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின்னர் வனத்துறையினர் கூறியதாவது:- கன்றுக்குட்டி இறந்து 4 அல்லது 5 நாட்கள் கழித்து பார்த்துள்ளனர். மேலும் கன்றுக்குட்டியின் உடல் பகுதியில் சிறுத்தையின் கால் நகங்களோ அல்லது பற்களின் தடயங்கள் ஏதும் இல்லை. அப்பகுதியில் சிறுத்தையின் கால்தடங்களும் இல்லை. மேலும் கன்றுக்குட்டியின் கால் பகுதியில் சிறிய அளவிலான பற்களின் தாரைகள் உள்ளது.இது நாய்களின் பற்கள் போல் உள்ளது. இது வெறி நாய்கள் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் அல்லது நோய்வாய் பட்டு உயிரிழந்து அதை கன்றுக்குட்டியின் உரிமையாளர் 3 அல்லது 4 நாட்கள் பார்க்காமல் இருந்திருக்கலாம். எனவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். சிறுத்தை வேட்டையாடும்போது தனது உணவை கடித்து பல அடி தூரம் இழுத்து செல்லும். கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கியதாக இருந்தால் அங்கு இருந்து வேறு பகுதிக்கு கன்று குட்டியை சிறுத்தை கடித்து இழுத்து சென்று இருக்கும். ஆனால் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. எனவே வெறிநாய்கள் கடித்துதான் கன்றுக்குட்டி இறந்திருக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கடந்த சில நாட்களாக தக்காளி விலை சந்தையில் குறைந்துள்ளது.
    • இறுதி காய்ப்பு தருணத்தில் உள்ள செடிகளை, அப்படியே அழித்து வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.குழித்தட்டு முறை நடவு, சொட்டு நீர் பாசனம், நீரில் கரையும் உரங்கள் என புதிய தொழில்நுட்பங்களால் மகசூல் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் சீசன் சமயங்களில் விலை கிடைப்பதில்லை.குறிப்பாக கோடை காலத்தில் சந்தைக்கு வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சியடைகிறது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை சந்தையில் குறைந்துள்ளது. விளைநிலங்களில் இருந்து பறித்து வாடகை கொடுத்து சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் செலவுக்குக்கூட கட்டுபடியாகாத விலை நிலவரம் உள்ளது.

    எனவே இறுதி காய்ப்பு தருணத்தில் உள்ள செடிகளை, அப்படியே அழித்து வருகின்றனர். மேலும் சிலர் விளைநிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு தக்காளி செடிகளை தீவனமாக வழங்குகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஆண்டுதோறும் முக்கிய சீசனில் தக்காளி விலை வீழ்ச்சியடைவது தொடர்கதையாக உள்ளது. இருப்பு வைத்து விற்பனை செய்யவும் வசதியில்லை. போதிய தொழிலாளர்கள் கிடைக்காததால் அறுவடை செலவும் அதிகரித்து விட்டது.எனவே கட்டுப்படியாகாது என்ற நிலை ஏற்படும் போது தக்காளி அறுவடையை நிறுத்தி விட்டு செடிகளை அழித்து விடுகிறோம். தக்காளியை மதிப்பு கூட்டி விற்பதற்கான தொழில்நுட்பங்கள் எளிதானால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றனர். 

    • ஊட்டியின் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகப்படுத்தும் வகையில் மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் நடுரோட்டில் சுற்றி திரிகின்றன.
    • கால்நடைகளை ரோட்டில் விட்டால் சம்மந்தப்பட்ட உரிமையாளருக்கு தலா ரூ.1500 வீதம் அபராதம்

    ஊட்டி,

    தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாதலங்களில் குறிப்பிட்டத்தக்கது ஊட்டி, இங்கு உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு சவாரி இல்லம், காட்சி முனையம் மற்றும் பச்சைப்பசேல் இயற்கை காட்சிகள் ஆகியவை சுற்றுலாபயணிகளை வெகுவாக கவரும் வகையில் உள்ளன.

    சமவெளி பகுதியில் கோடை வெயில் சுட்டெரித்தாலும் ஊட்டியில் எப்போதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையே நிலவும். இதனால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்து, அங்கு உள்ள குளிர்ச்சியான சீதோஷ்ண சூழ்நிலையை அனுபவித்து செல்கிறார்கள். இதனால் அங்கு கோடைகாலம் மட்டுமின்றி எப்போதும் கூட்டம் அலைமோதும்.

    எனவே ஊட்டியில் எப்போதும் வாகன நெரிசல் சற்று அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் ஊட்டியின் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகப்படுத்தும் வகையில் மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் நடுரோட்டில் சுற்றி திரிகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. மேலும் ஒருசில மாடுகள், சுற்றுலா பயணிகளை முட்ட வருகின்றன. எனவே அவர்கள் ஒருவித அச்சத்துடன் வெளியே சென்று திரும்ப வேண்டி உள்ளது.

    ஊட்டி சாலையில் கால்நடைகளின் கழிவுகள் ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே சுற்றுலா பயணிகள் மூக்கை பிடித்து கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. ஊட்டி குளிர்பிரதேசம் என்பதால் இங்கு மூடுபனி இருக்கும். பக்கத்தில் வந்தால் தான், எதிரில் நிற்பது யார் என்பது தெரிய வரும். ஊட்டி சாலையில் திரியும் கால்நடைகளால், வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திக்க வேண்டி உள்ளது.

    கால்நடைகளும் படுகாயம் அடைகின்றன. இதுதவிர ரோட்டில் திரியும் கால்நடைகள் வேறுவழியின்றி சாலையோரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு வருகின்றன. இதனால் அவற்றின் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே ஊட்டி சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை உரிமையாளர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

    பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை போக்குவரத்து ரோட்டில் திரியவிடக்கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளருக்கு தலா ரூ.1500 வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.

    அதன்பிறகும் போக்குவரத்து சாலையில் கால்நடைகளின் நடமாட்டம் குறையவில்லை. எனவே நகராட்சி ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஊட்டி ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து, மார்க்கெட் பகுதியில் கட்டி வைத்தனர். அதன்பிறகு சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உரிய அபராதம் செலுத்தி கால்நடைகளை மீட்டு செல்லலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் எவரும் அபராதம் செலுத்த முன்வரவில்லை. இதற்கிடையே ஊட்டி மார்க்கெட் பகுதியில் அடைத்து வைத்து இருந்த கால்நடைகளை மாநகராட்சியால் சரிவர பராமரிக்க முடியவில்லை. எனவே அவை வேறுவழியின்றி திறந்து விடப்பட்டன.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஊட்டியில் மார்க்கெட், பஸ் நிலையம், காபிஹவுஸ் சதுக்கம் ஆகிய பகுதிகளில் கால்நடைகள் நடமாட்டம் அதிகம் தென்படுகிறது. இதேபோல ஊட்டி-கூடலூர் நெடுஞ்சாலை, ஹில்பங்க், பைக்காரா, தலைகுந்தா, பைன் பாரஸ்ட் ஆகிய பகுதிகளில் மாடுகள் உடன் குதிரைகளும் சர்வசாதாரணமாக நடுரோட்டில் ஹாயாக படுத்து கிடப்பதை பார்க்க முடிகிறது. எனவே ஊட்டியில் சுற்றி திரியும் கால்நடைகளின் தொல்லைக்கு நகராட்சி நிர்வாகம் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ஊட்டி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஊட்டியை சேர்ந்த விவசாயிகளில் சிலர் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். ஆனாலும் இவற்றுக்கு அவர்களால் உரிய நேரத்தில் தீனி போட முடியவில்லை.

    எனவே கால்நடைகளை தொழுவத்தில் இருந்து அவிழ்த்து விட்டு விடுகின்றனர். காலை-மாலை நேரங்களில் மட்டும் பசு மாடுகளை ரோட்டில் இருந்து வீட்டுக்கு கூட்டிசென்று பால் கறந்து கொள்கின்றனர். அதன்பிறகு அவர்கள் பசுமாடுகளை கண்டுகொள்வது இல்லை.

    ஊட்டியை சேர்ந்த விவசாயிகள் மலைக்காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்காக குதிரைகளை வளர்த்து வருகின்றனர். அறுவடைகாலம் முடிந்த பிறகு, குதிரைகள் அப்படியே விடப்படுகின்றன. இதனால் அவை சாலையில் அனாதையாக திரியும் நிலை ஏற்பட்டு உள்ளது.போக்குவரத்து சாலைகளில் கால்நடைகளை திரிய விடாமல் வீட்டில் கட்டிவைத்து வளர்க்க வேண்டும். ஆனால் இங்கு வசிக்கும் பலர் அப்படி செய்வது இல்லை. எனவே அவை வேறுவழியின்றி போக்குவரத்து ரோட்டில் சுற்றி திரிகின்றன. எனவே நகராட்சி நிர்வாகம் சார்பில் ஊட்டி ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து மார்க்கெட்டில் கட்டி வைத்து அபராதம் விதிக்க முயன்றோம். ஆனால் எவரும் கால்நடைகளை மீட்க வரவில்லை. எனவே அவற்றை மீண்டும் அவிழ்த்துவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கோசாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே ஊட்டி சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து அங்கு கொண்டு சென்று பராமரிப்பது என்று முடிவு செய்து உள்ளோம் என்று தெரிவித்து உள்ளனர்.

    • விளாச்சேரியில் கால்நடை தடுப்பூசி முகாம் நடந்தது.
    • தகுதியான கன்றுகளுக்கு கால்நடை மருந்தகத்தின் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை விளாச்சேரி பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் கால்நடை களில் ஏற்படும் 'புருசெல்லா' எனும் கன்று வீச்சு நோய்க்கு 2-வது சுற்று தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. தகுதியான கன்றுகளுக்கு கால்நடை மருந்தகத்தின் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. டாக்டர் சிவக்குமார் மற்றும் ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, செந்தாமரை ஆகியோர் இந்த பணியை மேற்கொண்டனர்.

    முகாமில் அவர்கள் கூறியதாவது:- புருசெல்லா ேநாய் கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. இது புருசெல்லா எனும் நுண்ணுயிர் கிருமியால் ஏற்படுகிறது. இந்த நோய் மனிதர்களின் மூட்டு மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. 4-ல் இருந்து 8 மாத வயதுடைய பெண் பசு, எருமை கன்றுகளுக்கு உரிய பாதுகாப்பு முறை களை பின்பற்றி ஒருமுறை தடுப்பூசி செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் அவைகளை இந்த நோயில் இருந்து காப்பாற்றுவதோடு மனிதர்களுக்கு பரவுவதையும் தவிர்க்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • இந்த தகவலை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெரிய அளவிலான கால்நடை மருத்துவ முகாமானது நாளை (28-ந்தேதி) அலங்காநல்லூர் வட்டாரம், முடுவார்பட்டி கிராமத்தில் நடைபெற உள்ளது. முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை பணி, குடற்புழு நீக்கம், தடுப்பூசி பணி, சிணை பரிசோதனை, மலட்டுதன்மை நீக்கம் மற்றும் கால்நடை பரிசோதனை, ஊட்டசத்து வழங்குதல், தீவனக் கன்றுகள் விநியோகித்தல் ஆகியவைகள் வழங்கப்பட உள்ளது. எனவே முடுவார்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர்கள் இதில் பங்கேற்று பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • முகாமில் 156 மாடுகளுக்கு குடல் புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • ப்ரூஸசெல்லா தடுப்பூசி 20 மாடுகளுக்கும், பி. பி .ஆர் தடுப்பூசி 250 மாடுகளுக்கும் செலுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடமேலையூரில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

    இந்த முகாமை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

    நீடாமங்கலம் ஒன்றிய குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் ஹமீது அலி, துணை இயக்குனர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் 156 மாடுகளுக்கு குடல் புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ப்ரூஸசெல்லா தடுப்பூசி 20 மாடுகளுக்கும், பி. பி .ஆர் தடுப்பூசி 250 மாடுகளுக்கும், மினரல் மிக்சர் 75 மாடுகளுக்கும் செலுத்தப்பட்டது.

    சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட ஒன்பது மாடுகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

    இதில் ஓய்வு பெற்ற கால்நடை துறை துணை இயக்குனரும் மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவருமான டாக்டர் பாலகிருஷ்ணன், உழவர் பயிற்சி மைய டாக்டர் கதிர்செல்வம், ஆவின்பால் பொது மேலாளர் டாக்டர் ராஜசேகரன், டாக்டர் மகேந்திரன், ஆவின் விஜயலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் கோமளா மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காலை 8 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • முகாமில் அனைத்து கால்நடை விவசாயிகளும் கலந்து கொண்டு பயனடையலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவிடைமருதூர் தாலுக்கா நாகரசம்பேட்டை

    கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நாளை ( சனிக்கிழமை ) காலை 8 மணிமுதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்), பால்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பல்கலைகழகம் ஆகியன இணைந்து நடத்தும் இச்சிறப்பு மருத்துவ முகாமில் கால்நடை மருத்துவ வல்லுநர்களால் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல், சினைப்பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல், சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை அளித்தல் ஆகியன இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளன.

    மேலும், முகாம் வளாகத்தில் கண்காட்சிகள், பால் உற்பத்தி மற்றும் தரம் அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்க கூட்டம் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு முகாமில் அனைத்து கால்நடை விவசாயிகளும், கலந்துக்கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமருகல் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது.
    • கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகலில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது.

    இந்த மருத்துவமனைக்கு திருமருகல், கரையிருப்பு, சேகல், வள்ளுவன்தோப்பு, ஆண்டிதோப்பு, கட்டலாடி மற்றும் சுற்று வட்டா பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கால்நடைக்கு மருத்துவம் பார்க்க திருமருகல் அரசு கால்நடை மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

    மேலும் மழைக்காலங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் வேகமாக பரவுகிறது.

    இந்தநிலையில் திருமருகல் அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவர், நிரந்தர கால்நடை பராமரிப்பு உதவியாளர், நிரந்தர கால்நடை ஆய்வாளர் இல்லாத காரணத்தால் கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே உடன் நடவடிக்கை மேற்கொண்டு மருத்துவரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×