search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai"

    • கியாஸ் விலையை மாதந்தோறும் 1 ஆம் தேதி மாற்றியமைக்கப்படும்.
    • இன்று கியாஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டது.

    எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச சந்தை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை மாதந்தோறும் 1 ஆம் தேதி மாற்றியமைக்கப்படும். அந்த வகையில், ஜூலை 1 ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டது.

    அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 31 குறைந்துள்ளது. இதன் காரணமாக இதன் விலை ரூ. 1809.50 ஆக மாறியுள்ளது. இந்த மாதமும் விலை குறைக்கப்பட்டதை அடுத்து கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக 4 ஆவது மாதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. 

    • மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    • இந்திய வீரர்கள் மென்மேலும் வெற்றிபெற மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய கிரிக்கெட் வீரர் கள் 2007-ம் ஆண்டிற்கு பிறகு தற்பொழுது 2-வது முறையாக 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றிருப்பது பாராட்டுக்குரியது. இந்திய வீரர்களின் அசாத்திய திறமையாலும், கடின உழைப்பாலும் இந்தி யாவிற்கு வெற்றியும், பெருமையையும் தேடித்தந்தி ருக்கின்றார்கள். இந்திய கிரிக்கெட் வீரார்களின் இந்த சாதனைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    விளையாட்டுத் துறையில் இந்திய வீரர்கள் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார்கள். வருங்காலங்களிலும் அவர்களின் வெற்றி தொடர வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டுத் துறைக்கு தேவையான அனைத்து ஆக்கபூர்வமான உதவிகளையும், ஊக்கத்தையும் அளித்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இந்திய வீரர்கள் மென்மேலும் வெற்றிபெற மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது
    • தமிழகத்தில் சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது

    காலநிலை மாற்றம் :

    உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் தண்ணீர் பஞ்சம், வெப்ப அலை என்ற ரூபங்களில் ருத்ர தாண்டவம் ஆடத்தொடங்கியுள்ளது. ஒருபுறம் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்கள் தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள்  அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் காலநிலை குழப்பத்தால் வெயிலுடன் சேர்ந்து திடீரென கொட்டித்தீர்க்கும் கனமழையும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதிகரிக்கும் வெப்பத்தால் தமிழகமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழக   மக்களுக்கு பீதியைக் கிளப்பும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

     

    ஆய்வு முடிவுகள் :

    அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, தொடர் நகரமயமாக்கல் காரணமாக தமிழக நகரங்கள் உட்பட இந்தியாவில் உள்ள 21 நகரங்களில் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரித்து 2050 வாக்கில் தற்போது வெயில் காலத்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு வெப்பம் வருடத்தின் 8 மாதங்களுக்கும் வீசி மக்களை தாங்கமுடியாத அவதிக்குள்ளாக்கும் என்று தெரியவந்துள்ளது.

     

    தமிழகத்துக்கு என்ன பாதிப்பு? 

    தமிழகத்தில் கடந்த 30 வருடங்களாக சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது. மேலும் சராசரி மழைப்பொழிவு 763 மி.மீ முதல் 1432 மி.மீ ஆக உள்ளது.

    தற்போதுள்ள சராசரி வெப்பநிலை 2050 இல் 0.4 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும் என்றும் 2080 இல் 1.3 டிகிரி அளவுக்கு செல்ஸியஸ் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2100 ஆம் ஆண்டு வாக்கில் சராசரி வெப்ப நிலை 1.7 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும்.

     

    தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வரும் காலங்களில் அதிக வெப்பம் பதிவாகும். அதுமட்டுமின்றி சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் வெப்ப அலை தற்போது உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக வீசும். குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிக பாதிப்பு இருக்கும்.

     

    வெயில் மட்டுமின்றி வழக்கத்துக்கு மாறான மழைப்பொழிவும் தமிழகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் இயல்புக்கு மாறாக குறிகிய காலத்திலேயே அதிக மழை கொட்டித்தீர்க்கும். 2050 இல் சராசரி மழைப்பொழிவு 4 சதவீதமும், 2080 இல் 11 சதவீதமும், 2100 இல் 16 சதவீதமும் அதிகரிக்கும்.

     

    மாசுபாடு அதிகமாகும் பட்சத்தில் இதுவே 2050 இல் 7 சதேவீதமாகவும், 2100 இல் 26 சதவீதமாகவும் கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் இந்த சராசரி மழைபொழிவின் மாற்றம் கண்கூடாக தெரியும். 24 மணிநேரத்தில் 6 முதல் 7 சென்டிமீட்டர் என்ற அளவில் கூட மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று  ஆய்வில் தெரியவந்துள்ளது.

    • ஒவ்வொரு பரிசோதனைக்கும் தனித்தனி கட்டணங்கள் உள்ளது.
    • குற்றச்சாட்டுகளால் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும்.

    சென்னை:

    சைதாப்பேட்டையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் அந்த சிறுவனின் சகோதரிக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க ரூ.1000 லஞ்சம் கொடுத்ததாக அந்த சிறுமியின் தந்தை தெரிவித்த தகவல் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்ட போது கூறியதாவது:-

    எழும்பூர் ஆஸ்பத்திரியில் லஞ்சம் கேட்டார்கள் என்பது முற்றிலும் தவறா னது. வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் நமது அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற ரூ.1000 டெபாசிட் வாங்கப்படும். அதன் பிறகு பரிசோதனைகள் தேவைப் பட்டால் அதற்கும் ஒவ்வொரு பரிசோதனைக்கும் தனித்தனி கட்டணங்கள் உள்ளது.

    இது எல்லா மாநிலங்களி லும் நடைமுறையில் இருப் பதுதான். இந்த உண்மையை உணராமல் திரித்து சொல் வது வேதனை அளிக்கிறது. இந்த மாதிரி தவறான குற்றச்சாட்டுகளால் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும். அரசு ஆஸ்பத்திரி கள் நமது ஆஸ்பத்திரி. அவை சிறப்பாக நடக்க எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.

    சைதாப்பேட்டை சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலக்க வில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தொழிலாளர் முகாமில் 625 குடும்பங்கள் வசிக்கிறது. மொத்தம் 1300 பேர் இருக்கிறார்கள். வேறு யாருக்கும் உடல்நல பாதிப்பு இல்லை என்பதை வீடு வீடாக சென்று சோதனை நடத்தி கண்டறியப்பட்டு உள்ளது. சிறுமி உயிரிழந்த தற்கு காரணம் என்ன என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லி விமான நிலையத்தில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி.

    மீனம்பாக்கம்:

    டெல்லியில் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.

    டெல்லி விமான நிலையத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சென்னை-டெல்லி இடையே தினமும் இண்டிகோ ஏர்லைன்ஸ் 22 விமானங்கள் இயக்கப்படும். இதில் 2 வருகை மற்றும் 2 புறப்பாடு என 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய 9 விமானங்களும், டெல்லியில் இருந்து சென்னை வரக்கூடிய 9 விமானங்களும் சுமார் 30 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக சென்று வந்தன.

    ஆனால் டெல்லி விமானங்கள் குறித்த விவரங்கள் பயணிகளுக்கு முன் கூட்டியே தெரிவிக்காததால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். சென்னை-டெல்லி இடையே செல்லக்கூடிய மற்ற விமான நிறுவன விமானங்கள் பாதிப்பின்றி இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியுடன் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்." இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது.

    படத்தின் டிரைலர் லான்ச் ஈவண்ட் தற்பொழுது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. படத்தில் நடித்த பிரபலங்கள் இவ்விழாவில்  கலந்துக் கொண்டுள்ளனர். எப்பொழுதும் திரை பிரபலங்கள் அவர்களது பட நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக புதுப்புது கெட்டப்பில் வருவார்கள்.

    ஆனால் இம்முறை விஜய் ஆண்டனி யாரும் வராத ஒரு புதிய கெட்டப்பில் வந்துள்ளார். ஒரு பக்க முகம் மற்றும் கைகளில் கருப்பு சாயம் பூசியது போன்ற தோற்றம். அதற்கு காரணம் மற்றொரு படத்தின் ஷூட்டிங்கிள் இருந்து அப்படியே வந்ததால் இப்படி இருக்கிறது என்று கூறினார்.

     

    படத்தின் டிரைலர்  தற்பொழுது வெளியாகியுள்ளது. படம் வரும் ஜூலை மாதம்  திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முழுநேரம் தண்ணீர் கிடைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
    • புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பது குறித்து ஆய்வு.

    சென்னை:

    சட்ட சபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தி.நகர் பஸ் நிலையம் அருகே உள்ள முத்துரங்கன் சாலை பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்படுமா எனவும் தியாகராய நகர் தொகுதியில் உள்ள ஏழு வார்டுகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சனை இருப்பதாகவும், எனவே புதிய சேம்பர்கள் அமைத்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ. (தி.மு.க.) கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது:-

    தியாகராய நகரில் குடிநீர் கட்டமைப்பை மேம்படுத்த ஒடிசா நிறுவனத்துடன் ஆலோசித்து 24 மணி நேரமும் முழுநேரம் தண்ணீர் கிடைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

    முத்துரங்கன் சாலை பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உடனே கட்டிக்கொடுக்கபடும். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கல் வாரியத்திற்கு இந்தாண்டு ரூ.900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

    தியாகராயநகர் தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பது குறித்து ஓரிரு நாட்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுத்தமான குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    முன்னதாக ஜெ. கருணா நிதி பேசுகையில், தி. நகர் கண்ணம்மா பேட்டை பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினை இருக்கிறது. லாரி மூலம் தான் சப்ளை ஆகிறது.

    இந்த இடம் கடைசி பாயிண்ட். வள்ளுவர் கோட்டத்தில் இருந்து தண்ணீர் வரும்போது இங்கு குறைந்து விடுகிறது. எனவே மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்றார். அத்துடன் தொகுதி முழுவதும் பம்பிங் ஸ்டேசன் சரிவர இயங்காததால் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாகவும் தெரிவித்தார்.

    ஜெ/கருணாநிதி கூறிய இரு பிரச்சினைகளையும் உடனே நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார்.

    • ஜூலை 5-ந்தேதி தொடங்குகிறது.
    • 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 5-ந்தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல், சென்னை ஆகிய 5 இடங்களில் போட்டி நடக்கிறது. குவாலிபையர் -1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் திண்டுக்கல்லிலும், குவாலி பையர்-2 மற்றும் இறுதிப்போட்டி சேப்பாக்கம் மைதானத்திலும் நடக்கிறது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    போட்டிகள் தினசரி இரவு 7.15 மணிக்கு தொடங்கும். ஒரே நாளில் 2 ஆட்டங்கள் இருந்தால் பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கும். 7 நாட்கள் மட்டுமே 2 போட்டிகள் நடக்கிறது.

    டி.என்.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். 2-வது இடத்துக்கு ரூ.30 லட்சம் கிடைக்கும். 3-வது மற்றும் 4-வது இடங்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பரிசு தொகை கிடைக்கும்.

    டி.என்.பி.எல். போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • தனிநபர் ஒருவருக்கு ஒருமுறை எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும்?
    • ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணம் பெற்று மது விற்க வேண்டுமா?

    சென்னை:

    தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் கூறியதாவது:-

    மது வாங்க வருவோர், ஒரு பாட்டில், இரு பாட்டில் என வாங்குவர். மதுக் கூடங்களுக்கு மது அருந்த வருவோர், நேரடியாக மதுக்கூடத்திற்கு சென்று, அங்கு பணிபுரியும் ஊழியரிடம் மது வாங்கி வரச்சொல்லி அனுப்புகின்றனர்.

    அவர்களும் ஒரு மேஜைக்கு இரண்டு, மூன்று பாட்டில் வீதம், 4-5 மேஜைகளுக்கு சேர்த்து, ஒரே சமயத்தில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். இது, மது அருந்த வந்தவர்களுக்கு வாங்கப்படுகிறதா? அல்லது பதுக்கி விற்க வாங்கப்படுகிறதா? என்பது, மதுக்கடை ஊழியர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

    கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்கும் போது, போலீசாரிடம் பிடிபட்டு விசாரணையில், 'எங்கிருந்து இவ்வளவு பாட்டில் வந்தது' என்று கேட்டால், ஊழியர்களை கைகாட்டி விடுகின்றனர். இதனால், டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, தனிநபர் ஒருவருக்கு ஒருமுறை எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை டாஸ்மாக் உருவாக்கி, விரைவில் வெளியிட வேண்டும். மதுக்கூடத்தில் பணிபுரிவோருக்கு, 'ஆதார்' உள்ளிட்ட அடையாள ஆவணம் பெற்று மது விற்க வேண்டுமா? எனவும், டாஸ்மாக் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சர்வதேச அரசியல் படிப்புக்காக வெளிநாடு பயணம்.
    • தனியாக ரகசிய ஆய்வும் செய்துள்ளது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வருகிற செப்டம்பர் மாதம் லண்டன் செல்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர்.

    இதற்காக லண்டன் செல்லும் அண்ணாமலை 6 மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார். இந்த 6 மாதங்களும் தலைவர் இல்லாமல் இருந்தால் கட்சி பணி தொய்வடையும் என்று கருதுகிறார்கள்.

    இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டாக்டர் தமிழிசை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது என்ன பேசினார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

    ஆனால் புதிய தலைவரை நியமிப்பது பற்றி டெல்லி மேலிடம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

    ஆனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் இதை மறுத்தனர். ஏற்கனவே இதேபோல் அண்ணாமலை 3 மாதம் லண்டன் சென்றிருந்தார். அப்போது புது தலைவர் நியமிக்கப்படவில்லை. எனவே அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவரை நியமிப்பது சாத்தியமில்லை என்கிறார்கள்.

    ஆனால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது கட்சி மேலிடத்தை யோசிக்க வைத்துள்ளது. தோல்விக்கான காரணங்கள் குறித்து தமிழக பா.ஜ.க. தலைமையிடமும் அறிக்கை பெற்றுள்ளது. தனியாக ரகசிய ஆய்வும் செய்துள்ளது.

    அதன் அடிப்படையில் கட்சியை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் நாடு முழுவதும் ௧௦-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கவர்னர்கள் பதவி காலியாக உள்ளது. அது தொடர்பாகவும் பல தலைவர்கள் பெயர்களை டெல்லி மேலிடம் பரிசீலிக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் கவர்னர்களாக இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் கூடுதலாக யாருக்காவது கவர்னர் பதவி வழங்கப்படுமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

    • அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது.
    • இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணி புரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2023-24-ம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்கள் தொகுக்கப்பட்டு 1.7.2024 அன்று காலை 10 மணிக்கு அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது.

    cps.tn.gov.in/public என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கோயம்பேடு அருகே தலைமறைவாக இருந்த அனோவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • ஹபிபுல்லா என்ற பயங்கரவாதியை மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னை கோயம்பேட்டில் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த மேற்குவங்கத்தை சேர்ந்த அனோவர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அன்சார் அல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்புடன் அனோவர் தொடர்பில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த வழக்கில் ஏற்கனவே ஹபிபுல்லா என்ற பயங்கரவாதியை மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், ஹபிபுல்லா கொடுத்த தகவலின் பெயரில் கோயம்பேடு அருகே தலைமறைவாக இருந்த அனோவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து, உபா சட்டம், இந்திய அரசுக்கு எதிராக போர் தொகுக்க நினைத்தல் அல்லது தாக்குதல் நடத்த திட்டமிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மேற்குவங்க போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் குடியிருப்பு வளாகம் அருகே கட்டுமான இடத்தில் பணிபுரிந்து வந்த அனோவரை மேற்குவங்க போலீசார் கைது செய்தனர்.

    "அன்சார் அல் இஸ்லாம்" அமைப்பு அல்கொய்தா, வங்காளதேசம் நாட்டிற்கு ஆதரவாக உள்ள இயக்கமாக செயல்பட்டு வருவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ×