search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai"

    • சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில்.
    • காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக இருந்தது

    சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக காற்று வாங்கிக் கொண்டு நிம்மதியாக குடியிருந்தாள்.

    ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்க கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது.

    இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது.

    பின்னர் 1640-ல் ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்துவிட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.

    ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்புசெட்டித் தெருவிற்கு இடம்மாறினாள் இந்த அம்மன். தம்புசெட்டித் தெருவில் உள்ள கோவிலை முத்துமாரி ஆச்சாரி என்பவர் நிர்மாணித்தார். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டே இருந்தனர். இன்றும் அதே நிலை நீடிக்கிறது.

    இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுதல் என்பது கற்பக விருட்சத்திற்கு வேண்டுவது மாதிரி என்கிறார் காளிதாஸ் சிவாச்சாரியார். ''ஒரு முறை வந்து அம்பாளை வழிபட்டாலே வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உணரமுடியும்.

    கேட்ட வரம் கிடைப்பதால்தான் கடவுள் இல்லை என்று வெளியே சொல்கிறவர்களும் அம்பாளை வழிபடுகிறார்கள்.

    அம்பாளை வேண்டுவதன் மூலம் திருமணத்தடை நீங்குகிறது. அதனால் நீண்ட நாள் திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

    புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளை வணங்கிவிட்டு அவள் பாதத்தில் வைத்து எடுத்த மஞ்சளை தினமும் வெறும் வயிற்றில் பச்சைத் தண்ணீரில் கலந்து உட்கொண்டு வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது. அப்படி புத்திர பாக்கியம் பெற்றவர்கள் அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்து வருகிறார்கள்'' என்கிறார்.

    இங்கு வீற்றிருக்கும் இறைவனுக்கு கமடேஸ்வரர் என்று பெயர். இப்பெயர் வந்த வரலாறு ஒரு புராணச் செய்தியை உள்ளடக்கியது.

    கைலையில் உமா, மகேஸ்வரன் இருவரில் அழகில் சிறந்தவர் யார் என்று சிவ பெருமான் தெரிந்துகொள்ள விரும்பினார்.

    இக்கேள்விக்கு எந்த விடையை அளித்தாலும் அது இருவரில் ஒருவரை வருத்தப்படுத்தும் என்பதால் கேள்விக்கு விடையளிக்க ஒருவரும் முன்வரவில்லை.

    அதற்கு அவர் தான் ஏற்படுத்தியுள்ள ஒரு தாமரைத் தடாகத்திற்கு சென்று அதன் எழிலைக் கண்டு வருமாறு பின்னர் விடையளிப்பதாகவும் கூறினார். பெருமானும் இறைவியுடன் சென்று பார்த்தபோது அந்த சூழல் தவம் மேற்கொள்ளத் தகுந்த இடமாக தோன்றவே சிவபெருமான் அங்கமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.

    இறைவி எழில் மிக்க அந்த சூழலால் கவரப்பட்டு அங்குள்ள மலர்களாலும் மற்றும் பட்டுத் துகிலாலும் தன்னை மேலும் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டாள்.

    இருவரும் புறப்பட்டு வரும் வழியில் பரப்ரம்மத்தால் சிருஷ்டிக்கப்பட்ட பெரியதொரு நிலைக்கண்ணாடியில் அவர்கள் தங்கள் உருவத்தை பார்க்க நேரிட்டது.

    அதில் பாம்பணி, சுடலைப்பொடி, வெள்ளெருக்கு மாலை, புலித்தோல் என்றிந்த விதமான தன் தோற்றத்தைக் கண்டவுடன் பரப்ரும்மம் எவ்வளவு அழகாகத் தம்மை தர்மசங்கடத்தில் இருந்து விடுவித்துக் கொண்டார் என்பது புரிந்தது.

    பரப்ரம்மம் நிலையில்லாத அழகின்மேல் ஆசை கொண்ட மனம் அருவுருவமாக `லிங்க' வடிவில் அமைவதாக என்று கூறினார்.

    கமம் என்றால் நிறைவு (தொல்காப்பியம் கூறும் பொருள்) ஆன்மாக்களுடன் அருவருவாய் லிங்க வடிவில் கலந்திருக்கும் நிலை என்ற பொருளில் கமடேஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

    உலக அளவில் பரபரப்பாக பேசப்படும் கோவில்களுள் ஒன்றாக தற்போது விளங்கி வருகிறது, திருவந்தபுரம் பத்ம சுவாமி கோவில். அதற்குக் காரணம் கோவிலில் இருக்கும் தங்கப் புதையலே ஆகும்.

    இருப்பினும் பத்மநாப சுவாமியின் அளப்பெரிய சக்திக்கு அரசர்களால் கொடுக்கப்பட்ட காணிக்கை தான்இந்தப் பொன்னும் பொருளும் என்றால் அது மிகையாகாது. இந்த ஆலயத்தின் கருவறையில் முதலில் மூல விக்கிரகம் தான் இருந்து வந்தது. அது மரத்திலிருந்து தோன்றிய விக்கிரகம் ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த விக்கிரகத்திற்கு தான் பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

    நிர்வாகப் பிரச்சினை காரணமாக 1673 -ம் ஆண்டு முதல் 1677 -ம் ஆண்டு வரை கோவிலில் பூஜை நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்தப் பிரச்சினை நடைபெறுவதற்கு முந்தைய நாளில் பூட்டிய அறையில் இருந்து ஒரு பெரிய நாகப் பாம்பு வெளிப்பட்டதாகவும் அதுவே வரப்போகும் சம்பவத்திற்கு எச்சரிக்கையாக அமைந்ததாகவும் தெரிய வருகிறது.

    அதன் பின்னர் 1678 -ம் ஆண்டு கோவில் நடை திறக்கப்பட்டு மீண்டும் பூஜைகள் வழக்கம் போல நடைபெற்றன. இதற்கு இடையே 1680-ம் ஆண்டு இறுதியில் ஆலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கோவில் கர்ப்பகிரகத்தின் மேற்கூரையில் தீ வேகமாக பரவி எரிந்தது.

    இதில் இலுப்ப மரத்தால் செய்யப்பட்ட பத்மநாப சுவாமியின் மூல விக்கிரகத்தின் மீதும் தீ விழுந்தது. இதில் பெருமானின் இடது கையில் உள்ள மூன்று விரல்களும் இடது காலில் உள்ள விரல்கள் முழுவதும் தீக்கரையாகின. அதிர்ஷ்டவசமாக பெருமானின் திருமேனியும் மற்ற பாகங்களும் தீயிலிருந்து தப்பின.

    திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்

    திருவனந்தபுரம் ஆலயம் தீயில் சேதமடைந்ததைத் தொடர்ந்து 1729- ஆம் ஆண்டு விஷ்ணு பக்தரான ராஜா மார்த்தாண்ட வர்மா ஆலயத்தைப் புதுப்பித்து 30 மீட்டர் உயரம் கொண்ட ஏழுநிலை கோபுரத்தைக் கட்டினார். பின்னர் கருவறையில் புதிய விக்கிரத்தையும் பிரதிஷ்டை செய்தார்.

    அதன்படி கோவிலில் பாம்பனையில் 18 அடி நீளத்தில் பத்மநாப சுவாமி பள்ளி கொண்டுள்ளது பான்ற அழகுமிக்க சிலை வடிவமைக்கப்பட்டது. நேபாளத்தில் கண்டகி நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட 12,000 சாலிக் கிராமம் கற்களால் பத்மநாப சுவாமி சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன் மீது டு சர்க்கரா யோகம் என்ற ஆயுர்வேத ரசாயனமும் பூசப்பட்டுள்ளது. இதனால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. எனவே அருகில் திசனரி அபிஷேக பூஜைக்காக மற்றொரு தங்க விக்கிரகரத்தை வைத்துள்ளனர்.

    மும்மூர்த்திகள்:- விக்கிரகத்திற்குள் சாலிக்கிராமங்களை நிரப்பி விட்டால் தனியாக சக்தி பிரதிஷ்டை செய்ய வேண்டாம் என்ற மரபு உள்ளது. 12 சாலிக்கிராமங்களை ஒரு சேர பூஜித்தால் ஒரு சேத்திரத்தின் கோவில் மகிமை வந்து சேரும் ஒர விக்கிரகத்தில் 120000 சாலிக் கிராமங்கள் அடங்கி இருப்பதால் ஆயிரம் மஹா சேடத்திரங்கள் மகிமை கொண்டதாகும்.

    பத்மநாப சுவாமியை முழுமையாக தரிசிக்க வேண்டும் என்றால் மூன்று வாசல் வழியாகத்தான் பாரக்க் வேண்டும். முதல் வாசல் வழியாக பகவானின் தலையையும் மற்றும் அவரது கரங்கள் சிவலிங்கத்தின் மீது இருப்பதையும் தரிசிக்கிலாம்.

    மகாலட்சுமி, திராகரமுனி, பகவானின் தொப்புளில் புறப்பட்ட தாமரையில் அமர்ந்துள்ள பிரம்மா, தினசரி அபிஷேகம் செய்யப்படும் தங்க விக்கிரகம் உற்சவ வேளையில் அருள் பாலிக்கும் வெள்ளி விக்கிரகம் ஆகியவற்றை, இரண்டாவது வாசல் வழியாகவும் பகவானின் பாதக் கமலத்தையும், கவுண்டியன் முனிவரையும் மூன்றாவது வாசல் வழியாகப் பார்த்து தரிசிக்கலாம்.

    ஆதிசேஷனின் ஐந்து தலைகள் உள்முகமாக வளைந்துள்ளன. விஷ்ணுவின் வலது கரம் சிவலிங்கத்தின் மீது உள்ளது. பகவான் இரு தேவியருமான ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் அருகில் நிற்கின்றனர்.

    பகவான் விஷ்ணு இடது கரத்தில் தங்கியுள்ள தாமரை மலரின் நறுமணத்தை ஆதிசேஷன் நுகர்கின்றார். சிவன், பிரம்மா விஷ்ணு என மும்மூர்த்திகளும் ஒரு சேர இங்கு அமைந்துள்ளதால்... சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாய் இந்த ஆலயம் விளங்கி வருகிறது.

    பலராமம் தரிசித்த புனித தலம்:& பிரமாண்ட புராணமும் அனந்த சயன மகாத்மியமும், ஸ்ரீமத் பாகவதமும் இந்த பத்மநாப சுவாமி கோவில் பெருமையைப் பற்றி எடுத்துக் கூறுகின்றன. ஸ்ரீமத் பாகவதத்தில் அனந்தனின் அவதாரமான பலராமர் திரவனந்தபுரம் வந்து பத்ம தீர்த்தத்தில் நீராடி விஷ்ணுவை தரிசித்து விட்டு, பிராமணர்களுக்கு 10 ஆயிரம் பசுக்களை தானம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    கலியுகத்தின் முதல் கோவில்:& இந்தக் கோவில் கலியுகம் பிறந்த முதல் நாளில் அதாவது சுமார் 5000 வருடங்களுக்கு மன்பு ஏற்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. அதாவது குமரி மாவட்டம் திரவட்டாரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவில் திரேதாயுகத்தில் கட்டப்பட்டது.

    அந்த கோவில் கட்டப்பட்டு 1084 ஆண்டுகளுக்குப் பிறகு பத்மநாப சுவாமி கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    அதனால்தான் பத்மநாப சுவாமியின் மூத்த சகோதரர் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் என்றும் அடுத்த மூத்த சகோதரர் கேரளத்தில்உ ள்ள வர்க்கலை ஸ்ரீ ஜனார்த்தனன் சுவாமி என்றும் நம்பப் படுகிறது. 12 ஆழ்வார்கள் எழுதிய நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற நூலில் இந்த ஆலயத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தமிழ் இலக்கியக்களான பதிற்றுப் பத்து, சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் கூட பத்மநாப சுவாமி கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளன.

    அதிசய நிகழ்வுகள்:- திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி பாற்காலில் அனந்தசயனத்தில் பள்ளி கொண்டிருப்பது பாற்கடலின் மேல் என்று நம்பப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாக கடந்த காலங்களில் சில அற்புத அதிசய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

    1563 -ம் ஆண்டு ஆதித்ய வர்மா ஆட்சிக்காலத்தில் கோவில் முன் மண்டபத்தின் பால் வழிந்ததாகவும், அடுத்த ஆண்டு மண்டபத்தின் தெற்கு பாகத்தில் பால் வழிந்ததற்காகவும் மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்து மண்டபத்திற்கு அருகே தரையில் பால் பொங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • நாகூர் தர்காவில் கந்தூரி விழா வருகிற 19-ந் முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • நாகூருக்கு மாலை 3.30 மணிக்கும், காரைக்காலுக்கு மாலை 3.50 மணிக்கும் சென்றடைகிறது.

    திருவாரூர்:

    நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து வரும் 21-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ெரயில்வே அறிவித்துள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து வரும் சிக்கல் சிங்காரவேலர் கோயில், வேளாங்கண்ணி மாதா கோயில் மற்றும் நாகூர் தர்கா ஆகிய மூன்றும் மும்மாதத்திற்கான ஆன்மீக தளம் மட்டுமன்றி சுற்றுலா தளமாகவும் இருந்து வருகிறது.

    இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடாகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் இந்த சிங்காரவேலர் கோயில் வேளாங்கண்ணி மாதா கோயில் மற்றும் நாகூர் தர்கா ஆகியவகைகளில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களின் போது வழக்கத்திற்கு மாறாக கூடுதலான அளவில் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கமாகும்.

    இது போன்று நடைபெறும் திருவிழாக்களின் போது சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இதனையொட்டி நாகூர் தர்கா(சின்ன ஆண்டகை) கந்தூரி விழாவானது வரும் 19-ம் தேதி துவங்கி 21-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் முக்கிய விழாவானது 21-ம் ேததி இரவு நடைபெறுவதையொட்டி அந்த விழாவில் சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொள்ளும் வகையில் 21-ம் தேதி காலை 8.15 மணி அளவில் சென்னை தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயிலானது புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் வழியாக நாகூருக்கு மாலை 3.30 மணிக்கும் மற்றும் காரைக்காலுக்கு மாலை 3.50 மணி அளவிலும் சென்றடைகிறது.

    இதே ரயிலானது மீண்டும் 22-ம் ேததி காலை 6.00 மணியளவில் காரைக்காலில் இருந்து புறப்படும் மதியம் 1.30 மணி அளவில் தாம்பரத்தை சென்றடைகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது.
    சென்னை:

    சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என மாநகர போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

    சென்னையில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் மரணம் தொடர்பாக மாநகர போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தினர்.

     இதில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் போது ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலை நசுங்கி உயிரிழப்பது தெரிய வந்தது.

    இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் கடந்த 15-ந்தேதி வரையில் ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் சென்று 98 பேர் உயிரிழந்திருப்பதும். 841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது. 

    இவர்களில் 80 பேர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்கள் என்பதும், மீதம் உள்ள 19 பேரும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற 714 பேரும், பின்னால் அமர்ந்து சென்ற 127 பேரும் காயம் அடைந்து இருக்கிறார்கள்.

    இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்காக இன்று முதல் சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை ஒட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து விபத்தில்லா சென்னையை உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாநகர போலீஸ் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னையில் உள்ள 312 போக்குவரத்து சந்திப்புகளிலும் இன்று மறுநாள் முதல் அதிரடி சோதனை நடத்தப்படும். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது. எனவே மோட்டார் சைக்கிளில் செல்லும் இருவருமே கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    அனைத்து வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக  சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரின் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

    வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (23.05.2022) சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாததற்காக 1,903 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீதும், 2,023 வழக்குகள் பின்னிருக்கை பயணிகள் மீதும் பதியப்பட்டுள்ளது. 

    எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது.  ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சிறப்பு தணிக்கை மேலும் தொடரும்.

    அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நகரை அடையவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடினர்.
    சென்னை:

    சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில், நேற்றிரவு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. 

    இந்த தீயை அணைக்கும் பணியில் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

    அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ வேகமாக பரவியதால், 2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 

    முன்னதாக அந்த கட்டிடத்தின் உள்ளே இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.  மேலும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக அந்த பகுதி புகை மூட்டமாக காட்சி அளித்தது.  

    தீ விபத்திற்கான காரணம் உடனடியாக வெளியாகவில்லை. இந்த தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அம்மாபேட்டை அருகே பஸ் மீது சுற்றுலா வேன் மோதி சென்னை வாலிபர் பலி, 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்மாபேட்டை:

    சென்னை மணலி ஆண்டாள் குப்பம் பகுதி யை சேர்ந்தவர்கள் ராஜேஸ்குமார் (வயது 26), பிரபு, ரூபன் குமார், சந்தோஷ் உள்பட 14 பேர் ஒரு சுற்றுலா வேனில் வெள்ளியங்கிரிக்கு வந்தனர். வேனை சென்னையை சேர்ந்த சந்திர சேகர் ஓட்டி வந்தார்.

    அவர்கள் வெள்ளி யங்கிரி சென்று விட்டு நேற்று இரவு வேனில் சென்னைக்கு சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் பவானி அருகே அம்மாபேட்டை அடுத்த குதிரைக்கல் மேடு என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவி தமாக அந்த வழியாக வந்த அரசு பஸ் மற்றும் சுற்றுலா வேன் மோதி கொண்டது. இதில் ராஜேஸ்குமார், பிரபு, ரூபன் குமார், சந்தோஷ் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்கு பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்குமார் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    பலியான ராஜேஸ்குமார் என்ஜினீயரிங் படித்து விட்டு விவசாயம் பார்த்து வந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பஸ் தினமும் இரவு 10 மணிக்கு சுவாமிமலையில் இருந்து புறப்படும்.
    • சென்னையிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கும்பகோணத்தை வந்தடையும்.

    சுவாமிமலை:

    சுவாமிமலையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. இந்த பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி கல்யாணசுந்தரம் எம்.பி., அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.

    இதை ஏற்று மேற்கண்ட பஸ்சை மீண்டும் இயக்கும் நிகழ்ச்சி சுவாமிமலை கீழ வீதியில் நடந்தது. இதில் சுவாமிமலை தி.மு.க. பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    ராமலிங்கம் எம்.பி., தமிழக அரசின் தலைமை கொறடா செழியன், சண்முகம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஜவாஹிருல்லா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன், பொது மேலாளர் ஜெயராஜ் நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்யாணசுந்தரம் எம்.பி. பஸ் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் முத்துச்செல்வன், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் அய்யாராசு, அரசு வக்கீல் விஜயகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா மற்றும் பலா் கலந்து கொண்டனர்.

    முடிவில் பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார் நன்றி கூறினார்.

    இந்த பஸ் தினமும் இரவு 10 மணிக்கு சுவாமிமலையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு சென்னையை சென்றடையும். இதேபோல், சென்னையிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கும்பகோணத்தை வந்தடையும்.

    • சென்னை வானிலை மையம் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று தெரிவித்து இருந்தது.
    • சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதை அடுத்து நகரில் வெப்பம் தணிந்துள்ளது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்கு கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை செண்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், மதுரவாயல், முகப்பேர் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணி நேரமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

    • மண்டல அளவிலான சாராஸ் மேளா வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 15ந் தேதி வரை சென்னையில் உள்ள தீவுத்திடலில் நடக்கிறது.
    • கண்காட்சியில் கொண்டு வந்து அறிமுகப்படுத்த மற்றும் விற்பனை செய்ய வாய்ப்பு தரப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும், தயாரிக்கப்பட்ட பொருட்களை அனைத்து மக்களுக்கும் அறிமுகப்படுத்தவும் கண்காட்சிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2023-24-ம் ஆண்டு மண்டல அளவிலான சாராஸ் மேளா வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை சென்னையில் உள்ள தீவுத்திடலில் நடக்கிறது.

    இந்த மேளாவில் கலந்து கொள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை தேர்வு செய்து அனுப்பப்பட உள்ளது. எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினரால் உற்பத்தி செய்யப்படும் தரம் வாய்ந்த கைவினை பொருட்கள், எம்பிராய்டரி துணி வகைகள், ரெடிமேடு ஆடைகள், பரிசு பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், பூவகைகள், தரமான ஊதுபத்தி, தேன், மூலிகை பொருட்கள், அலங்கார சங்கு பொருட்கள், கைப்பைகள், உணவு பொருட்கள், சணல் பொருட்கள் மற்றும் பல பொருட்களை இந்த கண்காட்சியில் கொண்டு வந்து அறிமுகப்படுத்த மற்றும் விற்பனை செய்ய வாய்ப்பு தரப்–படும்.

    மண்டல அளவிலான விற்பனை கண்காட்சியில் கலந்து கொண்டு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விவரங்களுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் அறை எண்.305-ல் வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளரை 97901 64775 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் புகைமண்டலமாக காட்சி அளித்தது.
    • சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் இருந்தது.

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி பொதுமக்கள் இன்று காலை முதல் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். மாலையில் நிகழ்ததப்பட்ட வாணவேடிக்கையால் சென்னை நகரமே வண்ணமயமாக காட்சி அளித்தது. சில இடங்களில் இரவு 10 மணிக்கு பிறகும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பொதுமக்கள் தொடர்ச்சியாக பட்டாசு வெடித்து வந்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புகைமண்டலமாக காட்சி அளித்தது.

    நள்ளிரவு வரை சென்னை நகரம் முழுவதும் புகையால் சூழப்பட்டது போல் காணப்பட்டது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். புகை மண்டலத்தால் விமான போக்குவரத்து, ரெயில் போக்குவரது பேருந்து போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.

    சென்னையில் காற்று மாசு அபாயகரமான அளவிற்கு அதிகரித்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 4 மணி அளவில் காற்றில் நுண் துகள்களின் அளவு 109 என இருந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் 192 என்ற அளவாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • கனமழை பெய்து அதிக அளவு தண்ணீர் வந்தால் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற 719 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
    • மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோவில் குளங்களை சீரமைத்து வைக்க வேண்டும்.

    மழை வருது...

    மழை வருது...

    என்றால் இது ஒரு மேட்டரா...?

    மாதம் மும்மாரி மழை பெய்து செழித்த பூமிதானே நம்ம பூமி என்று கிராமத்து விவசாயி சிரிப்பான்.

    அட உங்களுக்கு என்னப்பா ஊரு பக்கம் எவ்வளவு மழை பெய்தாலும் கவலை இல்லை. சென்னையில் அப்படியா? ஒரு மணிநேரம் வெளுத்து வாங்கிச்சுன்னா தண்ணீரில் மிதந்து தான் போகணும். இதுதான் இதுவரை நடந்த மழைக்கால அனுபவங்கள். இந்த ஆண்டாவது விடிவு காலம் பிறக்குமா என்பதுதான் சென்னைவாசிகளின் எதிர்பார்ப்பு.

    அதற்கு முக்கிய காரணம் சென்னையில் எந்த பக்கம் திரும்பினாலும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மாத கணக்கில் நடக்கிறது. சின்ன சின்ன தெருக்களை கூட விட்டு வைக்க வில்லை. மழைநீர் கால்வாய் பணிகள் என்று தோண்டி போட்டுள்ளார்கள்.

    எனவே இந்த பணிகள் முற்று பெற்று விட்டால் மழைநீர் தேக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்று கருதுகிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? பருவமழை தொடங்கட்டும் பார்ப்போம் என்கிறார்கள்.

    பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மேயர் பிரியா கூறியதாவது:-

    மழைநீர் வடிகால்வாய் பணிகள் வருகிற 15-ந்தேதிக்குள் முடிந்துவிடும். சிங்கார சென்னை முதல் பகுதி திட்டத்தில் 1354 கிலோ மீட்டர் நீளத்துக்கான கால்வாய் சீரமைப்பு பணிகளில் 95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. 1030 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடைப்புகள் நீக்கப்பட்டு தூர்வாரி முடிக்கப்பட்டுள்ளது. 10-ந்தேதிக்குள் இந்த பணிகள் முடிவடையும். எங்கும் தண்ணீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எங்காவது தண்ணீர் தேங்கினால் 1913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். கடந்த ஆண்டை போல பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்கவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கூறும்போது, 'பணிகள் முடிந்த இடங்களில் உடனடியாக குழிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. குழிகள் உள்ள இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

    கனமழை பெய்து அதிக அளவு தண்ணீர் வந்தால் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற 719 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதில் 400 மோட்டார்கள் 100 குதிரை திறன் சக்தி கொண்டது. இந்த மோட்டார்கள் ஒவ்வொன்றும் நிமிடத்துக்கு 11,700 லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் திறன் கொண்டவை.

    கால்வாய்கள் இணைக்காத இடங்களில் ஏற்படும் தண்ணீர் தேக்கத்தை சமாளிக்க இந்த மோட்டார்கள் பயன்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள இடங்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் கண்டறியப்பட்டுள்ளது.

    34 இடங்களில் வெள்ளம் சூழ்வது தவிர்க்க முடியாது என்று கூறி உள்ளார்கள். அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மழைவெள்ள பாதுகாப்பு தொடர்பான தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சேகர் ராகவன் கூறும்போது, 'நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், கழிவு பொருட்களால் நிரம்பியும் கிடக்கின்றன. இந்த நிலையில் தண்ணீர் எப்படி போகும்?

    மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோவில் குளங்களை சீரமைத்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றினாலும் எங்கே போகும். மீண்டும் பழைய நிலைதான் ஏற்படும்' என்றார்.

    சிவில் என்ஜினீயரான தயானந்த கிருஷ்ணன் கூறியதாவது:-

    இணைக்கப்படாத கால்வாய்களை இணைப்பதில் இவ்வளவு காலதாமதம் ஏன்? 5 செ.மீ. மழை தண்ணீரை தங்கும் அளவுள்ள கால்வாய்களில் 10 செ.மீ. மழை வந்தால் எப்படி சமாளிப்பது? அதிலும் இப்போது மேக வெடிப்பு மூலம் மழை கொட்டுவதும் ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 11-ந்தேதி இரவு 7 மணிக்கு மங்களூருவில் இருந்து சிறப்பு ரெயில் புறப்படும்.
    • 12-ந் தேதி காலை 4:55 மணிக்கு கோவைக்கும், காலை 5:28 மணிக்கு திருப்பூருக்கும் வரும்.

    திருப்பூர் :

    ஓணம் பண்டிகை நிறைவு பெற்றுள்ள நிலையில், கேரளா சென்றவர்கள் திரும்ப வசதியாக கூடுதலாக ஒரு சிறப்பு ெரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாளை 11-ந்தேதி இரவு 7 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ெரயில் மறுநாள் மதியம் 1:45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.இந்த ெரயில், காசர்கோடு, பையனூர், கண்ணுர், கோழிக்கோடு, பாலக்காடு ரெயில் நிலையங்களில் நின்று 12-ந் தேதி காலை 4:55 மணிக்கு கோவைக்கும், காலை 5:28 மணிக்கு திருப்பூருக்கும் வரும்.சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக தாம்பரம் சென்றடையும் என்று சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×