என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chennai"
- நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது
- நாளை நடைபெற இருந்தது
ராணிப்பேட்டை:
ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் குறை தீர்வு நாள் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதாக இருந்தது.
நிர்வாக காரணங்களால் அன்று நடைபெற இருந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
அடுத்த கூட்டம் தேதி சென்னை ஓய்வூதியர் இயக்குனரிடம் ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும்.
ஏற்கனவே ஓய்வூதியர் குறை தீர்வு நாள் கூட்டம் தொடர்பாக விண்ணப்பம் செய்திருந்த ஓய்வூதியர்கள் மற்றும் விண்ணப்பம் தொடர்புடைய துறை அலுவலர்கள் யாரும் கலெக்டர் அலுவலகம் வரத் தேவையில்லை.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- விளையாட்டுக்களில் ஈடுபடும் மக்களுக்கு இந்த பகுதி பயன்படுத்தப்படும்.
- நிகழ்ச்சிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை பெசன்ட் நகர், 6வது அவென்யூ கிழக்கு பகுதியில் 32வது குறுக்கு தெருவிலிருந்து 3வது பிரதான சாலை சந்திப்பு வரை (வாகனமில்லா ஞாயிற்றுக்கிழமை) "Car-Free Sunday" நிகழ்ச்சியானது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படுகிறது.
அதாவது 04.09.2022, 11.09.2022, 18.09.2022, 25.09.2022, 02.10.2022, 16.10.2022 மற்றும் 23.10.2022 ஆகிய நாட்களில் காலை 06.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மேற்கண்ட பகுதியில் தி இந்து மற்றும் சென்னை பெருநகர போகுவரத்து காவல் துறையால் இணைந்து நடத்தப்படும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும் பொது மக்களுக்கு இந்த பகுதி பயன்படுத்தப்படும்.
இந்நிகழ்ச்சிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. அதன்படி 7வது நிழற்சாலையிலிருந்து 6வது நிழற்சாலை வரை எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல உத்தேசித்துள்ள வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் அவை இலக்கை அடைய 16வது குறுக்குத் தெரு வழியாக 2வது நிழற்சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.
16வது குறுக்குத் தெருவில் இருந்து 6வது நிழற்சாலையை நோக்கிச் செல்ல வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் அவை 2வது நிழற்சாலை மற்றும் 16வது குறுக்குத் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். 3வது மெயின் ரோட்டில் இருந்து 6வது நிழற்சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, 3வது மெயின் ரோடு மற்றும் 2வது நிழற்சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும்.
4வது மெயின் ரோடு மற்றும் 5வது நிழற்சாலையில் இருந்து 6வது நிழற்சாலை வழியாக எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன, அவை மேலும் 4வது மெயின் ரோடு மற்றும் 5வது நிழற்சாலை வழியாக திருப்பி விடப்படும். வாகன ஓட்டிகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 5 பேரிடம் போலீசார் விசாரணை.
- மருந்தகங்களுக்கு சப்ளை செய்யும் மருந்துகளை போதை மருந்துகளாக மாற்றி விற்பனை.
வேளச்சேரி:
சென்னை வேளச்சேரி பகுதிகளில் போதை மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் பேரில் கிண்டி உதவி கமிஷனர் சிவா மற்றும் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் கொண்ட தனிப்படையினர் வேளச்சேரி பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக 5 பேர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் 5 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் 4,400 போதை மாத்திரைகள் மற்றும் 90 போதை டானிக்குகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஜானகிராமன், முனீஸ்வரன், பாலுசாமி, சுல்தான் அலாவுதீன், நரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் சுல்தான் அலாவுதீனும், நரேசும் மருத்துவ பிரதிநிதிகளாக வேலை பார்த்து வருவதும் இவர்கள் மருந்துகளை மருந்தகங்களுக்கு சப்ளை செய்யாமல் அவற்றை போதை மருந்துகளாக மாற்றி கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
- 'சி' பிரிவில் தமிழகம், ஒடிசா, டெல்லி அணிகள் இடம் பெற்றுள்ளன.
- தினமும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறும்.
தமிழக அஞ்சல் துறை சார்பில் 34-வது அகில இந்திய அஞ்சல் துறை கால்பந்து போட்டி இன்று முதல் 26-ந் தேதி வரை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. தமிழகம், நடப்பு சாம்பியன் கேரளா, அசாம், டெல்லி, இமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 10 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.
௧௦ அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'சி' பிரிவில் தமிழக அணியுடன் ஒடிசா, டெல்லி அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள பிற அணிகளுடன் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். தினமும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறும்.
இன்று காலை 8 மணிக்கு நடக்கும் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். காலை 9.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழகம்-ஒடிசா அணிகள் மோதுகின்றன.
- சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
- பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை மாநகரில் புதிதாக 500 மின்சார பேருந்துகளை வாங்கி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 100 பேருந்துகள் விரைவில் வரவுள்ளது. சோதனை முறையில் இந்த மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்த முறை வெற்றியடைந்த பின் தமிழகம் முழுவதும் இயக்குவதற்காக மின்சார பேருந்துகள் புதிதாக வாங்கப்படும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முதற்கட்டமாக சென்னை போக்குவரத்துக்கழக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அது முழுமையாக நிறைவு பெற்ற பிறகு தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஓணம் பண்டிகை கொண்டாட பயணிகள் வசதிக்காக சிறப்பு ரெயில்.
- இதுவரை 6 சிறப்பு ரெயில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் :
செப்டம்பரில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக அவ்வப்போது சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.இதுவரை 6 சிறப்பு ரெயில் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் மேலும் ஒரு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டது.
அவ்வகையில், செப்டம்பர் 11-ந்தேதி மங்களூருவில் இருந்து இரவு 7மணிக்கு புறப்படும் சிறப்பு ெரயில் காசர்கோடு, பையனூர், கண்Èர், தலச்சேரி, சொரனூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று மறுநாள் மதியம் 1:45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
- 15 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
- முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் கூட்டாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை.
சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் பெடரல் வங்கிக்கு சொந்தமான நகைகடன் பிரிவு செயல்பட்டு வருகிறது. நேற்று பட்டப் பகலில் இந்த வங்கியில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வங்கியின் முன்னாள் ஊழியரான முருகன் என்ற நபரே இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 4 குற்றவாளிகள் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் இதில், பாலாஜி என்ற நபரை போலீசார் இன்று காலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக சக்திவேல் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அடிப்படையில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில், சுமார் 15 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனிப்படை போலீசார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் கூட்டாளிகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தில் மீதமுள்ள சுமார் 17 கிலோ தங்கத்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சேப்பாக்கம் மைதானத்தின் பெவிலியன் பகுதி புது பொலிவுடன் தயாராகி வருகிறது.
- அடுத்த மார்ச் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி நடைபெற வாய்ப்பு.
இந்தியாவில் பழமை வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பெவிலியன் உள்ளிட்ட சில பகுதிகள் இடிக்கப்பட்டு மீண்டும் புது பொலிவுடன் தயாராகி வருகிறது. விரைவில் ஸ்டேடியம் தயார் நிலைக்கு வர இருக்கிறது. இந்த மைதானத்தில் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் இந்த மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போல அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஒருநாள் போட்டி இங்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
அதற்கு முன்னதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் உள்ளூர் போட்டியான துலீப் டிராபி போட்டியை செப்டம்பர் 2-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடக்கிறது. இது தவிர ரஞ்சி டிராபி போட்டியின் சில ஆட்டங்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
- முன்னாள் வங்கி ஊழியர் நண்பர்களுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல்.
- வங்கி காவலாளியை கட்டிப் போட்டு விட்டு கொள்ளை.
சென்னை அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பெடரல் வங்கிக்கு இன்று பட்ட பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அதிரடியாக உள்ளே புகுந்தனர்.
அங்கிருந்த காவலாளி மற்றும் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டிய கட்டிப் போட்ட அவர்கள் வங்கியில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறை கூடுதல் ஆணையர் அன்பு, துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற் கொள்ளப்பட்டது. அந்த வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
முதல் கட்ட விசாரணையின் முடிவில் அந்த வங்கியில் வேலை பார்த்த முன்னாள் ஊழியரே தனது நண்பர்களுடன் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
கொள்ளையடிக்கப்பபட்ட பணம் மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு 20 கோடி ரூபாய் இருக்கும் என தெரிய வந்துள்ளது. கொள்ளைர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடைபெற்ற வங்கிக் கொள்ளை அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
- அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நடத்தப்படுகிறது.
- பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு ரத்து செய்யப்படாது.
சென்னையில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம் குறித்து தொழிற்சார் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டு மையத்தின் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 12.08.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாம், ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் 8- ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித் தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.
இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலையாளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
- மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் ஏனைய வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
9-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11-ந்தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் ஏனைய வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோர பகுதிகளில், குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதி, லட்சத்தீவு பகுதி, கேரளா-கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
- 66-வது காய் நகர்த்தலில் அஜர்பைஜான் வீரரை வீழ்த்தினார்.
- கிராண்ட் மாஸ்டரானார் தமிழக இளம் செஸ் வீரர் வி.பிரணவ்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியது. நேற்று நடைபெற்ற 9-வது சுற்று ஆட்ட ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, அஜர்பைஜான் வீரர் துரார்பெய்லி வாசிப்புடன் மோதினார். பிரக்ஞானந்தா 66-வது நகர்த்தலின் முடிவில் வாசிப்பை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர் வி.பிரணவ். ருமேனியாவில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்றதும் மூலம் கிராண்ட்மாஸ்டர் தரநிலையை வெற்றிகரமாக அடைந்துள்ளார். இதையடுத்து அவர் இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டரானார். தமிழ்நாட்டில் இருந்து கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டிய 27-வது வீரர் பிரணவ் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்