என் மலர்
நீங்கள் தேடியது "construction work"
- கலைஞர் நூலக கட்டுமானபணிகள் வருகிற டிசம்பருக்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மதுரையில் திறக்கப்படும் கலைஞர் நூலகம் தென் மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.
மதுரை
சென்னையில் ஆசியாவில் 2-வது பெரிய நூலகம் என்ற பெருமையை பெற்றது அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம். இதனை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2010-ம் ஆண்டு திறந்து வைத்தார்.
இந்த நூலகத்தை போல தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் 3- ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் கலைஞர் நூலக கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதற்காக 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது.
மதுரை புது நத்தம், ரோட்டில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 2 லட்சம் சதுரடி பரப்பளவில் இந்த பிரம்மாண்ட நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இரவு, பகலாக பணிகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் நூலக கட்டிடம் 90 சதவீத பணிக்கு மேல் நிறைவடைந்துள்ளது. சுமார் 7 தளங்கள் கொண்ட இந்த நூலகத்தில் 3 மாடிகள் உயரத்திற்கு அதன் முகப்பில் கண்ணாடி முகப்பு ஏற்படுத்தப்படுகிறது.
இது தவிர நூலகத்தில் டிஜிட்டல் திரைகள், சிற்றுண்டி கூடங்கள், 100 கார்கள், 200 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடங்கள் அமைகிறது. 3 இடங்களில் எஸ்கலேட்டர்கள் (நகர்வு படிகள்) அமைக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் செல்ல தனி பாதைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கலைஞர் நூலக கட்டுமானபணிகள் வருகிற டிசம்பருக்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரையில் கலைஞர் நூலகம் ஜனவரி மாதம் திறக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
நூலகத்திற்கு தேவையான தமிழ் மொழி, ஆங்கில நூல்கள், குழந்தைகளுக்கான நூல்கள், கணிதம், கணினி அறிவியல், பொறியியல், பொருளாதாரம், பொது நிர்வாகம், மருத்துவம், இலக்கியம், சுயசரிதை, தொடர்பான 12 ஆயிரம் அரிய நூல்கள்உள்ளிட்ட2.50 லட்சம் புத்தகங்கள் வாங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் போட்டி தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் தேவையான புத்தகங்களும் கலைஞர் நூலகத்தில் வைக்கப்படுகிறது.
மதுரையில் திறக்கப்படும் கலைஞர் நூலகம் தென் மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.
- பள்ளிப்பாளையத்தில் நடைபெற்று வரும் உயர்மட்டம் மேம்பாலம் கட்டுமான பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
- மேம்பாலம் கட்டுமான பணியை தரமாகவும், விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிப்பாளையம்:
பள்ளிப்பாளையத்தில் ஆசிரியர் காலனி பகுதியில் இருந்து 3 கீ.மீட்டர் துாரத்திற்கு 98 பில்லருடன் உயர் மட்ட மேம்பாலம், மற்றும் சாலை விரிவாக்கம் ரூ.200 கோடியில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தற்போது மேம்பாலம் பணிகள் 40 சதவீதம் முடிந்து விட்டது. பில்லர் மேற்பரப்பில் நேற்று கான்கீரிட் தளம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை நெடுஞ்சாலைதுறை சேலம் கோட்ட பொறியாளர் சசிகுமார் நேரில் ஆய்வு செய்தார். பணியை தரமாக நடக்க வேண்டும் எனவும், விரைவாக முடிக்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
அப்போது, திருச்செங்கோடு உதவி பொறியாளர் கபில் மற்றும் திட்ட மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.
- பாலம் வேலை நடைபெற்று வருவதால் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி.
- மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் வாங்க 3 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து ஆத்தாளூர் செல்லும் வழியில் உள்ள ஆண்டவன் கோயில் எல்சி 117 ரயில்வே கேட் எடுக்கப்பட்டு, கீழ்மட்ட பாலம் 300 மீட்டர் அளவில் கடந்த ஐந்து மாதங்களாக வேலை நடைபெற்று வருகிறது.
இதனால் ஆத்தாளூர், நாடாகாடு, முனி கோவில் பாலம், பூக்கொல்லை, முடச்சிக்காடு, கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த பகுதிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் பள்ளிக்கு வருவதற்கு சுமார் மூன்று கிலோமீட்டர் சுற்றி பேராவூரணி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வர வேண்டிய அவல நிலை உள்ளது.
இவ்வழியே ஆத்தாளுர் வீரமாகாளி அம்மன் கோவில் உள்ளது.
கோயிலுக்கு மாவடுகுறிச்சி, இந்திரா நகர், தென்னங்குடி, கொன்றைக்காடு, களத்தூர் கிராம பொதுமக்கள், பக்தர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
தற்போது பாலம் வேலை நடைபெற்று வருவதால் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆத்தாளூர் கிரா மத்திலிருந்து பேராவூரணி நகர் பகுதியில் மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் வாங்க 3 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே உடனடியாக பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்படுத்த திறந்து விட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கால் தவறி கீழே விழுந்தார்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் தூசி அடுத்த மாமண்டூர், தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் மணிகண்டன் (வயது 35). கட்டிட தொழிலாளி.
திருமண மாகவில்லை இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று மாலை வேலை செய்து கொண்டு இருந்தபோது திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மணிகண்டன் தந்தை தூசி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே பழமையான பாலம் ஒன்று உள்ளது.
- பணிகள் நடைபெறுவதால் பாலத்தின் மற்றொரு பகுதி வழியாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று செல்கின்றன.
செங்கோட்டை:
செங்கோட்டையை அடுத்த பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே பழமையான பாலம் ஒன்று உள்ளது.
புதிய பால பணி
கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய இணைப்பு பாலமாக அமைந்துள்ள இந்த பாலம் சேதமடைந்து காணப்பட்டதால் அதனை இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு கோரிக்கை வலுத்தது.
இதையடுத்து அந்த பாலத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு பகுதி வழியாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று செல்கின்றன.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தினமும் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பிரானூர் பார்டர் வழியாக செல்லும் வாகனங்கள், கனரக லாரிகள், அய்யப்ப பக்தர்களின் கார்கள் அனைத்தும் ெசங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி, கணக்கப்பிள்ளை வலசை, தேன்பொத்தை, பண்பொழி, குத்துக்கல்வலசை வழியாக வழியாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனால் பிரானூர் பார்டர் பாலம் பகுதியில் போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு இன்று முதல் போக்குவரத்து சீராக நடைபெற்றது.
- கட்டிட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோத்தகிரி
கோத்தகிரியில் உள்ள அரசு மருத்துவமனையின் பழைய அவசர சிகிச்சை பிரிவு போதிய வசதிகள் இல்லாததால் ஒரே சமயம் அதிக நோயாளிகள் வந்தால் முதலுதவி சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை சரி செய்யும் விதமாக மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவு கட்டுவதற்கான பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தொடங்கியது. தற்போது அந்த கட்டிட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவசர சிகிச்சைக்கான கட்டிட பணிகள் விரைவில் முடிந்து செயல்பாட்டிற்கு வர வேண்டும் என்பதே கோத்தகிரி சுற்றுவட்டார பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- கிருஷ்ணா நகர் பகுதியில் சாலை பள்ளமாக இருப்பதால் அடிக்கடி மழை நீர் தேங்கி அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
- இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் புதிய சாலை வசதி ஏற்படுத்தி தர செந்தில்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி:
பாகூர் தொகுதி மேற்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கணபதி நகர், கிருஷ்ணா நகர் பகுதியில் சாலை பள்ளமாக இருப்பதால் அடிக்கடி மழை நீர் தேங்கி அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் புதிய சாலை வசதி ஏற்படுத்தி தர செந்தில்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக செம்மண் சாலை ரூ.18 லட்சம் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், 100 நாள் வேலையில் ஈடுபடும் பெண்களிடம் பேசுவையில் கூடுதல் நாட்கள் தொடர்ந்து வேலை கிடைக்க அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், உதவி பொறியாளர் ராமன் மற்றும் துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பாகூர் பழைய காமராஜ் நகர் டோபிகானாவில் இருந்து தியாகி கேசவன் நகர் வரை தார் சாலை அமைக்கப்படுகிறது.
- இந்த பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
புதுச்சேரி:
மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.37.05 லட்சம் செலவில் பாகூர் பங்களா தெருவிற்கு வடிகால் வசதியுடன் கூடிய சிமெண்டு சாலை மற்றும் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ரூ.9.42 லட்சம் செலவில் தர்கா வீதியில் தார்சாலை, ரூ.17.23 லட்சம் செலவில் பாகூர் பழைய காமராஜ் நகர் டோபிகானாவில் இருந்து தியாகி கேசவன் நகர் வரை தார் சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் முத்துசிவம், இளநிலை பொறியாளர் புனிதவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம், வ.உ.சி. மைதானம் உள்ளிட்டவை புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா கண்டுள்ளன.
- மார்க்கெட் கட்டிடம் பகுதி பகுதியாக இடிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம், நேருஜி கலையரங்கம், வ.உ.சி. மைதானம் உள்ளிட்டவை புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா கண்டுள்ளன.
சீரமைப்பு பணி
இதுதவிர நவீன பஸ் நிறுத்தங்கள், பிரதான சாலைகளில் நவீன மின் விளக்குகள், வழிகாட்டி பலகைகள் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
தொடர்ந்து டவுன் எஸ்.என். ஹைரோட்டில் அமைந்துள்ள பொருட் காட்சி மைதானத்தில் நவீன தரத்தில் வர்த்தக மையம், டவுன் போஸ் மார்க்கெட் புதிதாக கட்டுதல் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன.
பாளை மார்க்கெட்
இதன் தொடர்ச்சியாக 60 ஆண்டுகள் பழமையான பாளை காந்தி மார்க்கெட் கட்டிடங்கள் மிகவும் பழுதாகி விட்டதாலும், போதிய இடவசதியின்றி நெரிசலாக இருப்பதாலும் அதையும் முழுமையாக இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் கட்ட மாநகராட்சி திட்டமிட்டது.
இதற்காக ரூ. 14.90 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில் மார்க்கெட் வியாபாரிகள் தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கிய பின்னரே காலி செய்ய முடியும் என அறிவித்தனர்.
மேலும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாலும் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
புதுப்பிக்கும் பணி
தொடர்ந்து வியாபாரிகளுடன் நிர்வாக தரப்பில் நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தற்போது மார்க்கெட் கட்டிடம் புதுப்பிப்பதற்கான பணிகளை மாநகராட்சி மீண்டும் துரிதப்படுத்தியுள்ளது.
இதற்காக வியாபாரிகளுக்கு தற்காலிக மாற்று ஏற்பாடாக அருகே உள்ள ஜவஹர் மைதானம் பகுதியிலும், பழைய காவலர் குடியிருப்பு மைதானத்திலும் தற்காலிக கடைகள் கட்டப்பட்டு படிப்படியாக அங்கு கடைகள் மாற்றப்பட்டு வருகின்றன.
90 சதவீதம்
இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த மார்க்கெட் கட்டிடம் பகுதி பகுதியாக இடிக்கப்பட்டு வருகிறது.
அந்த பணிகள் 90 சதவீதத்தை எட்டிவிட்டது. அங்கிருந்து வெளியேற்றப்படும் கட்டிட கழிவுகள் மாநகர பகுதியில் உள்ள தாழ்வான தெருக்களிலும் தேவைக்கேற்ப எடுத்து செல்லப்பட்டு கொட்டப்படுகிறது.
குளிர்சாதன வசதி
புதிதாக கட்டப்படும் மார்க்கெட்டில் 50 டன் வரையில் காய்கறிகள், பழங்களை பதப்படுத்தும் குளிர்சாதன வசதி கொண்ட குடோன்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் மார்க்கெட் வியாபாரிகள் தினமும் வியாபாரம் செய்துவிட்டு விற்காமல் மீதம் இருக்கும் காய்கறிகள், பழங்களை பாதுகாத்து விற்பனைக்கு பயன்படுத்த முடியும்.
மொத்தம் 3 ஆயிரத்து 877 சதுர மீட்டர் அளவில் தரைதளத்தில் புதிய மார்க்கெட் கட்டிடம் அமைக்கப்படுகிறது. தரைத்தளத்தில் 172 கடைகள் அமைக்கப்படுகின்றன.
அன்டர்கிரவுண்ட் பகுதியில் 3 ஆயிரத்து 553 சதுர மீட்டரில் 27 நான்கு சக்கர வாகனங்கள், 819 இரு சக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்யும் அளவிற்கு புதிய மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது.
- செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ,ஆதிதிராவிடர் நலத்துறைஅமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.
- நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தாராபுரம்:
தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணியினை கலெக்டர் வினீத் தலைமையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ,ஆதிதிராவிடர் நலத்துறைஅமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.
பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 62 நபர்களுக்கு 24.80 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன், தாராபுரம் ஆணையாளர் ராமர், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அரியலூரில் ரூ.7.80 கோடியில் மத்திய பேருந்து நிலைய கட்டிட பணிகள் விரைவில் தொடங்குகிறது
- கடைகளை காலி செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமாக திகழும் அரியலூர் 2010 முதல் 2-ம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகின்றது. 18 வார்டுகளை கொண்ட நகராட்சியின் பரப்பளவு 7.62 சதுர கிலோ மீட்டர் ஆகும். 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இங்கு 1975-ம் ஆண்டு சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக் கப்பட்டது.சுமார் 25 பேருந்து வழித்தடங்களில் தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வரு–கின்றது. சுமார்30 கி.மீ. சுற்றளவு பகுதிகளில் இருந்து தினசரி 10 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.
48 ஆண்டுகால பழைய கட்டிடங்கள் என்பதால் மழைக்காலங்களில் பயணி கள் நனைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி வெயில் காலங்களில் ஒதுங்ககூட போதுமான வசதிகள் இல்லாமல் இருந்தது. இங்கு சுமார் 60 கடைகள் ஏலம் விடப்பட்டாலும், 100 கடை–கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் பய–ணிகள், பொதுமக்கள் நிற்கவோ, ஒதுங்கவோ மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். எனவே மத்திய பேருந்து நிலையம் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அரியலூ–ரில் மத்திய பேருந்து நிலை–யம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்காக ரூ.7.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதற்கான டெண்டர் பணிகளும் முடிவ–டைந்த நிலையில் விரைவில் கட்டுமான பணிகள் துவங்க உள்ளது.இதற்கிடையே தற்போது பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் கடை–களை காலி செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் நோட் டீஸ் வழங்கியுள்ளது. அது–வரையில் தற்காலிக பேருந்து நிலையம் அரியலூர்-திருச்சி பூறவழிச்சாலை தனியார் இடத்தில் செயல்படவுள்ளது. கட்டு–மான பணிகள் முடிந்தவுடன் டெண்டர் மூலம் கடைகள் ஏலம் விடப்படும்.
அரியலூர் நகரில் நவீன வசதிகளுடன் மத்திய பேருந்து நிலையம் அமைக் கப்படுவதற்கு பொது–மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என நக ராட்சி நிர்வாகம் சார்பில் கேட் டுக்கொள்ளப்பட்டு உள் ளது. அரியலூர் நகரில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டு அரியலூர் நகரரை அழகுபடுத்தும் பணியிலும் நகராட்சி நிர் வாகம் ஈடுபட்டுள்ளது.மத்திய பேருந்து நிலை–யத்தின் கட்டுமான பணி–களுக்கான பூமி பூஜை நடைபெற்றது. வாரசந்தை பூதிய கட்டுமான பணிகளும் தொடங்கியுள்ளதால் அங்கு பழைய கட்டிடங்களை ஜேசிபி எந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி துவங்கியது.
- மாநிலம் முழுவதும் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாட்டில் நடைபெறும் கட்டுமான பணிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரின் வழிகாட்டுதலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுரையின்படி, கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக (கட்டிட மற்றும் இதர கட்டுமான பிரிவு) மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் (கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பிரிவு) த.ச.சஜின் தலைமையில், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விரிவாக்க கட்டுமான பணி வளாகத்தில் வைத்து பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் மேற்கண்ட கட்டுமான பணியிடத்தின் ஒப்பந்ததாரரான பிரியா என்ஜினீயரிங் புரோஜெக்ட்ஸ் நிறுவனத்தின் 100 தொழிலாளர்களும், நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இதர பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியில் கட்டுமான பணியிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுமான பணியிடங்களில் தொழிலாளர்களை பாதுகாக்கும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை உபயோகிக்கும் முறைகள் குறித்து தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவர்களின் கடமை என்றும் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.