search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "COP28 Summit"

    • துபாயில் வசிக்கும் இந்திய மக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • பிரதமர் மோடி துபாய் பயணம் முடிந்து இன்று அதிகாலை டெல்லி திரும்பினார்.

    புதுடெல்லி:

    ஐ.நா. உலக பருவநிலை உச்சி மாநாடு துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 180 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 97 ஆயிரம் பங்கேற்பாளர்கள், நிபுணர்கள் மற்றும் பருவநிலை மாறுபாடு ஆர்வலர்கள் என மொத்தம் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டார். துபாய் பால்ம் பகுதியில் நடந்த இந்திய சமூகத்தினரைச் சந்திக்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். அப்போது துபாயில் வசிக்கும் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி மாநாடு நடைபெறும் துபாய் எக்ஸ்போ நகர வளாகத்திற்கு நேற்று சென்றார். அவரை அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நயான் மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் ஆகியோர் வரவேற்றனர். அதன்பின், அவர்கள் இருவருடன் கைகோர்த்து பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வரும் 2028-ம் ஆண்டில் COP33 உச்சி மாநாட்டை நடத்த இந்தியா ஆவலாக உள்ளது என்றார். மேலும், மாநாட்டிற்கு வருகை தந்த உலக தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

    இந்நிலையில், துபாயில் நடந்த 2-வது நாள் உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை டெல்லி திரும்பினார்.

    • உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இஸ்ரேல் அதிபர் ஐசக் எர்சோகை சந்தித்தார்.
    • மேலும், பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    துபாய்:

    உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அந்நாட்டின் துணை பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    இதற்கிடையே, உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் 2028-ம் ஆண்டில் COP33 உச்சி மாநாட்டை நடத்த இந்தியா ஆவலாக உள்ளது என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இஸ்ரேல் அதிபர் ஐசக் எர்சோகை சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

    இதையடுத்து, கடந்த அக்டோபர் 7-ம் தேதி பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதை வரவேற்றார் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    • துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு ஐக்கிய எமிரேட்ஸ்வாழ் இந்தியர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
    • மாநாட்டில் பங்கேற்க வந்த பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    துபாய்:

    உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அந்நாட்டின் துணை பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு செல்லும் வழியிலும், ஹோட்டலுக்கு வெளியேயும், பிரதமர் மோடிக்கு ஐக்கிய எமிரேட்சில் வாழும் இந்தியர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

    மாநாட்டில் பங்கேற்க வந்த பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    இந்நிலையில், உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    வரும் 2028-ம் ஆண்டில் COP33 உச்சி மாநாட்டை நடத்த இந்தியா ஆவலாக உள்ளது.

    இன்று சூழலியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையிலான சமநிலைக்கு இந்தியா ஒரு சிறந்த உதாரணத்தை உலகின் முன் வைத்துள்ளது.

    உலக மக்கள்தொகையில் 17 சதவீதம் இந்தியா இருந்தாலும், உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தில் அதன் பங்களிப்பு 4 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும்.

    புதைபடிவமற்ற எரிபொருள் இலக்குகளை அடைவதில் நாங்கள் வேகமாக முன்னேறி வருகிறோம். உண்மையில், காலக்கெடுவுக்கு 9 ஆண்டுக்கு முன்பே எங்களின் புதைபடிவமற்ற எரிபொருள் இலக்குகளை அடைந்தோம் என தெரிவித்துள்ளார்.

    ×