என் மலர்
நீங்கள் தேடியது "Council Meeting"
- கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
- நிர்வகிகள் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஜெகதளா பேரூர் நிர்வாகிகள் மற்றும் ஜெகதளா பேரூராட்சி மன்ற தி.மு.க உறுப்பினர்கள் கூட்டம், குன்னூர் நகர கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது.குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, ஜெகதளா பேரூர் செயலாளர் சஞ்சீவ்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், முன்னாள் பேரூர் செயலாளர் கிருஷ்ணகுமார், ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஜெகதளா பேரூர் அவைத்தலைவர் லியோன், பேரூர் பொருளாளர் பாபு, மாவட்ட பிரதிநிதிகள் வில்லியம் ஆல்பர்ட், தினகரன், ஒன்றிய பிரதிநிதிகள் கேசவமூர்த்தி, செபாஸ்டின் அமல்ராஜ், மூர்த்தி, சையது பாஷா, நேரு, ஜெகதளா பேரூராட்சி மன்ற தி.மு.க உறுப்பினர்கள் சாலினி, திலீப்குமார், ஆஷா, யசோதா, பிரமிளா, மோசஸ், சுகுணாம்பாள் உள்பட நிர்வகிகள் கலந்து கொண்டனர்.
- மங்கலம் ஊராட்சியை பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத ஊராட்சியாக மாற்றுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டமானது மங்கலத்தை அடுத்த வேட்டுவபாளையம் பகுதியில் உள்ள ரேசன் கடை வளாகத்தில் நடைபெற்றது. மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் ,திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட்மணி, திருப்பூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் மங்கலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மங்கலம் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவது எனவும், மங்கலம் ஊராட்சியை பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத ஊராட்சியாக மாற்றுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பூசாரிகளுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும்.
- பல பூசாரிகள் பயனடைந்து உள்ளனர்.
வடவள்ளி,
தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கிராம பூசாரிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதிய தொகை வழங்க வேண்டும். மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் படி பல பூசாரிகள் பயனடைந்து உள்ளனர். இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்ளப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக பேரூர் பட்டீஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் சிவாஜல சிவசுந்தர குருக்கள் கலந்து கொண்டார். கோவை மாவட்ட கோட்ட அமைப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாணிக்கவாசகம், மேற்கு மண்டல இணை அமைப்பாளர் அருணாச்சலம், மேற்கு மண்டல அமைப்பாளர் வேலுச்சாமி, தொண்டாமுத்தூர் ஒன்றிய அமைப்பாளர் சாந்தலிங்கம், தொண்டாமுத்தூர் ஒன்றிய இணை அமைப்பாளர் முத்துக்குமார், சைவத் தலைவரும் திருப்பூர் தெற்கு அமைப்பாளர் சிவா ஆனந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், பூசாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்திட வேண்டும்.
- காலை சிற்றுண்டி உணவை அந்தத் துறையில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே சமைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர், நவ.24-
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 15-வது மாவட்ட பேரவை கூட்டம் இன்று தஞ்சை இந்திரா நகரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்தி ரன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்வாணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட இணை செயலாளர் அறிவழகன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் அம்சராஜ் தொடக்க உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் ரெங்கசாமி வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் வரவு செலவு அறிக்கையும், மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் செல்வி மகளிர் அறிக்கையும் தாக்கல் செய்து பேசினர்.
மாநில செயலாளர் கோதண்டபாணி சிறப்புரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட இணை செயலாளர்கள் மகேஷ், செந்தில்குமார், தமிழ்வாணன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர் .
இந்த பேரவை கூட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் , சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
பள்ளி சத்துணவு மையங்களில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி உணவை அந்தத் துறையில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே சமைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலை பணியாளர்களில் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
கொரோனா காலத்தில் முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை திரும்ப வழங்கிட வேண்டும், கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் முன்னாள் மாநில செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, அகில இந்திய இன்சூரன்ஸ் சங்கம் கோட்டத் தலைவர் செல்வராசு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயலாளர் ஹேமலதா, மாவட்ட துணை தலைவர் முருகன் ஆகியோர் நன்றி கூறினர்.
- 109 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- வாகன நிறுத்துமிடம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா்.
ஊட்டி,
கூடலூா் நகா்மன்ற கூட்டம் தலைவா் பரிமளா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் சிவராஜ், ஆணையா் பிரான்சிஸ் சேவியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நகா் மன்ற உறுப்பினா்கள் ராஜேந்திரன் (திமுக) பேசியதாவது:- நகரில் வாகன நிறுத்துமிடம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். இதனால் வியாபாரிகளுக்கு வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், செம்பாலா பள்ளி அருகே சாலையின் இருபுறமும் மாணவா்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காக தடுப்புக் கம்பிகளை அமைக்க வேண்டும். என கூறினார். ஷகீலா (மு.லீக்) முதல் மைல் உள்ளிட்ட பகுதியில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அடிப்படைப் பணிகளை விரைந்து செய்யவும், எந்த பணி செய்தாலும் அது குறித்து உறுப்பினா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். வா்கீஸ் (காங்): மாக்கமூலாவில் உள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்துக்குச் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா். இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என கூறினார். இதுபோல அனைத்து உறுப்பினா்களும் தங்களது வாா்டுகளில் உள்ள குறைகளை எடுத்துரைத்தனா். கூட்டத்தில் அடிப்படை தேவைகள் குறித்த 109 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- வாழப்பாடி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் கவிதா சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது.
- இக்கூட்டத்தில், தம்மம்பட்டி சாலையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதிக்கு ரூ.1 கோடி செலவில் வாய்க்கால் அமைத்தல், கிழக்குக்காடு பகுதிக்கு ரூ.1.25 கோடியில் புதிய தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் கவிதா சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் கணேசன், துணைத் தலைவர் எம்.ஜி.ஆர்.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், சத்தியக்குமாரி சரவணன், வசந்தி வெங்கசேன், சத்தியா சுரேஷ், பெரியம்மாள், ரஞ்சித்குமார், வெங்கடேஷ்வரன், லட்சுமி செல்வம், புவனேஸ்வரி மதியழகன், ராணி மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், தம்மம்பட்டி சாலையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதிக்கு ரூ.1 கோடி செலவில் வாய்க்கால் அமைத்தல், கிழக்குக்காடு பகுதிக்கு ரூ.1.25 கோடியில் புதிய தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.
வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கும், திட்டத்தை செயல்படுத்த பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு கொடுத்து வரும் அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
- கமுதி யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
- குடிநீர் திட்டபணிகள் நடைமுறைபடுத்தப்பட்டு வருவதால் விரைவில் குடிநீரில் தன்னிறைவு பெறுவோம்.
பசும்பொன்
கமுதி யூனியன் கவுன்சில் கூட்டம் சேர்மன் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணிமேகலை, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபாண்டியன், துணை சேர்மன் சித்ராதேவி அய்யனார் முன்னிலை வகித்தனர். மேனேஜர் ராமச்சந்திரன் வரவேற்றார். 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-
தமிழ் செல்வி போஸ் (சேர்மன்): குடிநீர் தேவையை உடனுக்குடன் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் கவுன்சிலர்கள் கோரிக்கைகளை துணிச்சலுடன் கேளுங்கள். அனைத்தும் செய்து கொடுக்கப்படும். அன்பரசு (பேரையூர்): பேரையூர் கண்மாய்கரை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும். தேசிய ஊரக வேலையில் அரசு அறிவித்துள்ள ரூ.294-ஐ வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையாளர்: 100 நாள் வேலை திட்டத்தில் அரசு விதிமுறைப்படி வழங்குகிறோம்.அன்பரசு (பேரையூர்): வேளாண் காலங்களில் 100 நாள் வேலை நடத்தப்படுவதில் வேளாண்மை பாதிக்கப்படுகிறது. ஆணையாளர்: 100 நாள் வேலை பணியாளர்களை வேளாண் பணிக்கு பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாக்குவெட்டி குடிநீர் திட்டபணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் குடிநீர் சப்ளை தொடங்கும். பல்வேறு குடிநீர் திட்டபணிகள் நடைமுறைபடுத்தப்பட்டு வருவதால் விரைவில் குடிநீரில் தன்னிறைவு பெறுவோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- போகலூர் யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
- முதல் கட்டமாக ரூ.50 லட்சத்தில் 3 சாலைகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பூமிநாதன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சிவசாமி வரவேற்றார். கவுன்சிலர் காளிதாஸ் பேசுகையில், கொடிக்குளம், உரத்தூர்,கோரை குளம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி கூட்டு குடிநீரை முறையாக விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர். அதிகாரிகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றார். துணைத் தலைவர் பூமிநாதன் பேசுகையில், அரியக்குடி, முத்துச்செல்லாபுரம், அ.புத்தூர், முஸ்லிம் குடியிருப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் காவிரி கூட்டுக் குழு நீர் வரவில்லை என்றார்.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட உதவி பொறியாளர்: சாலை அமைக்கும் பணியின் போது காவிரி குடிநீர் குழாய் உடைந்து உள்ளது. கோடையை காலம் என்பதால் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. விரைவில் சரி செய்யப்படும் என்றார். தலைவர் சத்யா குணசேகரன் பேசுகையில், முதலமைச்சரின் சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 கோடி போகலூர் யனியனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.50 லட்சத்தில் 3 சாலைகள் அமைக்கும் பணி நடைபெறும். தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு மழை காலத்திற்குள் அனைத்து சாலைகளும் அமைக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள பழுதடைந்த சாலைகள் பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழை காலத்திற்கு முன்பாக அனைத்து அத்தியாவாசிய தேவைகளுக்கான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா? என்பதை அலுவலர்கள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதில் கவுன்சிலர்கள் தேன்மொழி, முருகேசுவரி, காளீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.
- திருப்பத்தூர் யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
- உதவியாளர் மாணிக்கராஜ் தீர்மானங்களை வாசித்தார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் யூனியன் கவுன்சிலின் மாதாந்திர கூட்டம் தலைவர் சண்முகவடிவேல் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள் பிரகாசம், இளங்கோ, துணைத்தலைவர் மீனாள் வெள்ளைசாமி முன்னிலை வகித்தனர். உதவியாளர் மாணிக்கராஜ் தீர்மானங்களை வாசித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பிரசாந்த் நன்றி கூறினார். கவுன்சிலர்கள் கருப்பையா, சரவணன், ராமசந்திரன், ராமசாமி, பழனியப்பன், சுமதி செல்வகுமார், கலைமகள் ராமசாமி, பாக்கியலட்சுமி, சகாதேவன், ராமேசுவரி கருணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய தலைவர், இன்னும் 2 ஆண்டு காலத்திற்குள் விடுபட்டுள்ள மற்றும் புதிதாக அமைக்க வேண்டிய கிராம இணைப்பு சாலைகள் குறித்து துரிதமாக பதிவு செய்து சாலைகள் போடுவதற்கு வழிவகை செய்யுமாறு கவுன்சிலர்களிடம் வலியுறுத்தினார். கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தினர். உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க யூனியன் சேர்மன் சண்முகவடிவேல் அலுவலர்களிடம் கூறினார்.
- 352 கிலோமீட்டர் தூரத்திற்கு குடிநீர் இணைப்பு விடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
- ரூ.99 கோடியே 80 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி அவசர கூட்டம் இன்று காலை மேயர் தினேஷ் குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:- திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த தெரு விளக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக முதல் கட்டமாக 3 மற்றும் 4 வது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் 4755 தெரு விளக்குகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் 1 மற்றும் 2-வது மண்டலம் உட்பட்ட பகுதிகளில் 4,238 தெரு விளக்குகளுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் மின் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் சோடியம் விளக்குகளுக்கு பதிலாக எல்இடி., விளக்குகள் பொருத்தும் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.இந்தப் பணிகள் அனைத்தும் நாளை தொடங்கப்பட உள்ளது.மாநகர் முழுவதும் சுமார் 14,000 தெரு விளக்குகள் பொருத்தப்பட உள்ளது.
இதே போல் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் எடுக்கப்பட்ட பிரத்யேக ஆய்வில் 352 கிலோமீட்டர் தூரத்திற்கு வீடுகள்இ வணிக வளங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குழாய்கள் பதிப்பது மற்றும் குடிநீர் இணைப்பு வழங்குவது விடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ரூ.56 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜூன் இறுதிக்கு முன்பாக இந்த பணிகள் தொடங்கப்படும்.மாநகர் முழுவதும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.99 கோடியே 80 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
மாநகர் பகுதிகளில் பாதாள திட்டப்பணிகள் 89 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை இல்லாத வகையில் நான்கு நாட்களுக்கு ஒரு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்திலேயே நமக்கு நாமே திட்டத்தில் அதிக நிதியை திருப்பூர் மாநகராட்சி பெற்றுள்ளது தற்போது ரூ.1கோடியே 80 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. மழைநீர் பிரச்சனைக்கு தீர்வாக தண்ணீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது என்றார்.
- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. செங்கம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாஷா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், குடிநீர், கழிவுநீர்கால்வாய், தெருவிளக்குகள், சாலை வசதிகள் உட்பட அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றது.
வளர்ச்சி திட்ட பணிகளுக்கான 24 தீர்மானங்கள் இந்த கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்வில் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முடிவில் இளநிலை எழுத்தர் பிரசாந்த் நன்றி கூறினார்.
- வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
- வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள் நன்றி கூறினார்.
மதுரை
மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் குமரகுருபரன் அறிவுறுத்த லின் படி வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடை பெற்றது. செல்லம்பட்டி வட்டார மருத்துவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்துராமன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
கூட்டத்தில் விக்கிர மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர், மற்றும் ஜென ரேட்டர் வசதி செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு ஏ.சி., சுகாதார ஆய்வாளருக்கு பிறப்பு இறப்பு பதிவாளருக்கு கணினி வழங்குதல் மற்றும் செல்லம்பட்டி பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும், நாட்டாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை பேருந்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவ லர்கள், செல்லம்பட்டி, நாட்டாபட்டி, தும்மக்குண்டு, விக்கிரமங்கலம் மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர்கள் மற்றும் மருத்து வமில்லா மேற்பார்வை யாளர், கோவிலாங்குளம், முதலைக்குளம் ஊராட்சி செயலாளர்கள் ஜெயபால், பாண்டி, வாய்ஸ் டிரஸ்ட் தன்னார்வலர்கள், அங்கன்வாடி மற்றும் அனைத்து துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள் நன்றி கூறினார்.