என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Counseling"

    • மாணவரை தாக்கியவர்களில் 6 பேரை கைது செய்தனர்.
    • மாணவர் பாதிப்பில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.

    கோவை:

    கோவை அருகே தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவரும் படித்து வந்தார்.

    இந்த நிலையில் கல்லூரி விடுதியில் அடிக்கடி பணம் திருடுபோனது. எம்.எஸ்.சி. படிக்கும் சென்னை மாணவர் தான் இதில் ஈடுபட்டதாக நினைத்த, முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேர் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து சரமாரியாக தாக்கி சித்ரவதை செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, மாணவரை தாக்கிய 13 மாணவர்களையும் இடைநீக்கம் செய்தது. அத்துடன் நேற்று சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் க.க.சாவடி போலீசில் புகார் அளித்தது. அதன்பேரில் மாணவரை தாக்கியவர்களில் 6 பேரை கைது செய்தனர். இதில் 5 பேர் மைனர் என்பதால் அவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், ஒருவர் கோவை மத்திய ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட எம்.எஸ்.சி மாணவரை அவரது பெற்றோர் சென்னைக்கு அழைத்து சென்றனர்.

    மாணவர் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரி நிர்வாகமும், போலீசாரும் இணைந்து அந்த மாணவருக்கு கவுன்சிலிங் அளிக்க முடிவு செய்துள்ளனர். கவுன்சிலிங் அளித்து அவரை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    • விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடந்தது.
    • கிளை வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சிவகாசி,

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் திருத்தங்கல் பாலாஜி நகரில் நடந்தது. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார்.

    அவர் பேசுகையில், கடந்த 2 நாட்களாக வாக்காளர் சேர்ப்பது குறித்து சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாம் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெறுகிறது. தங்கள் பகுதியில் உள்ள 17 வயது பூர்த்தியடைந்தவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்க வேண்டும்.

    விடுபட்டுள்ள வாக்கா ளர்கள் பெயர்களை சேருங்கள். வெளியூர் மாறுத லானவர்கள், இறந்தவர்கள் உள்ளிட்டவர்கள் பெயர்களை நீக்கம் செய்யுங்கள். தற்போது உள்ள வாக்காளர்கள் பெயர்கள் உள்ளதா? எனவும் சரி பாருங்கள்,

    வாக்காளர்கள் சேர்க்கும்போது ஆதார் அட்டை ஜெராக்ஸ் இணைக்கவும். கூட்டத்திற்கு வந்துள்ள நகர ஒன்றிய, பேரூர், கிளை வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ஊராட்சி மன்ற தலை வர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பிற அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் தெரிவித்து வாக்காளர்கள் சேர்க்கும் முகாமில் அதிகப்படியான வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், கருப்பசாமி, சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், சாமி என்ற ராஜ அபினேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தரவரிசைப் பட்டியல் கடந்த 27-ந் தேதி அன்று வெளியானது.
    • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.

    கோவை,

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் போன்ற பட்டயப் படிப்புகளுக்கு 2022- 2023ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு 2,036 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.

    இதில் 2,025 விண்ணப்பங்கள் தகுதியானவையாக கருதப்பட்டு அவற்றுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 27-ந் தேதி அன்று வெளியானது.

    இதைத் தொடர்ந்து, இணையவழி கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இது ஜனவரி 30-ந் தேதி வரை நடை பெறுகிறது. கலந்தாய்வு தொடர்பான விரிவான தகவல், தகுதியுள்ள அனைத்து விண்ணப் பதாரர்களுக்கும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இணையவழி கலந்தாய்வின்போது விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

    சான்றிதழ் சரிபார்ப்பின் போது விண்ணப்பதாரர்களிடம் இருந்து கட்டணம் பெற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் www.tnau.ucan apply.com என்ற இணையதளம் மூலம் ஜனவரி 30-ந் தேதி மாலை 5 மணி வரை தங்களின் கல்லூரி, விருப்பப் பாடங்களை மாற்றிக்கொள்ளலாம். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 1-ந் தேதி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்றும் கலந்தாய்வுக் கான வழிமுறைகள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட மாணவர் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு 0422 6611345 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    • 4 ஏ.டி.எம்.களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
    • கூட்டத்திற்கு ஏற்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமை வகித்தார். இதில், 10 வங்களின் பொது மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ஏற்காடு:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம்.களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு ஏற்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமை வகித்தார். இதில், 10 வங்களின் பொது மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில், வங்கி, ஏ.டி.எம் மையங்களில் உள்ள பணத்தைக் கண்காணிக்க, மறைமுக காமிராக்களை நிறுவ வேண்டும். முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய காமிராக்களை அனைத்து ஏ.டி.எம்.களிலும் பொருத்த வேண்டும். ஏ.டி.எம்.களை உடைக்கப்படும்போது எச்சரிக்கை மணி வங்கியில் மட்டுமின்றி, அருகில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் ஒலிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அவற்றை உடனடியாக செயல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆனந்தன், குணசேகரன், பரந்தாமன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு மருத்துவ முகாம்கள் தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் நடத்த திட்டம்.
    • மறுவாழ்வு குறித்த ஆலோசனைகள் தகுந்த ஆலோசகர்களால் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் முதுகுத் தண்டுவடம் காயமடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் மூன்று கட்டமாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி முதல் கட்டமாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏ பிளாக் தரைத்தளத்தில் நாளை (வியாழக்கிழமை)

    காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை, மூளை நரம்பியல் மருத்துவம் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கு சிறப்பு நிபுணர்கள் சிகிச்சை அளிக்க உள்ளார்கள். மறுவாழ்வு குறித்த ஆலோசனைகள் தகுந்த ஆலோசகர்களால் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை முதுகுத் தண்டுவடம் காயமடைந்தவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முகாமில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.
    • நோய்களிருந்து கால்நடைகளை எப்படி பாதுகாப்பது? குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிராமத்தில் கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி 3-வது கட்ட முகாம் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா கணேஷ்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் கால்நடை டாக்டர்கள் மகேந்திரன் தலைமையில் மருத்துவ குழுவினர்கள் டாக்டர்கள் ராஜசேகர், ராஜேஷ் குமார், கால்நடை ஆய்வாளர் நிர்மலா, கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் பிரசன்னா, மாதவன், மகாலட்சுமி, வீரமணி சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும் நோய்களிருந்து கால்நடைகளை எப்படி பாதுகாப்பது? குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இதில் மக்கள் பிரதிநிதிகள், கிராம முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டி.ஐ.ஜி., விஜயகுமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் தலைமையில் நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

    கோவை,

    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கிடையே போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டில் இருந்து கல்லூரி மாணவர்களை மீட்டு நல்வழிப்படுத்த வேண்டி ஆரம்பிக்கப்பட்ட முன் முயற்சி திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் மாவட்டக் காவல் அலுவலகத்தில் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி., விஜயகுமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

    இதில் கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில் கல்லூரி நிர்வாகங்களின் ஒத்துழைப்பு மூலம் கல்லூரி மாணவர்களுக்கிடையே புழங்கும் போதைப் பொருள்களையும், விற்பவர்களையும் கட்டுப்படுத்த வருங்காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கல்லூரி நிர்வாகம் மாணவர்களைக் கொண்டு போதைப் பொருள்களுக்கு எதிரான வாட்ஸ்-அப் குழுக்களை தொடங்க வேண்டும். அத்துடன் மாதம் ஒருமுறை காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நல்லுறவு ஏற்படுத்தவும், போதைப்பொருள் உபயோகத்தை முழுமையாக கட்டுப்படுத்தவும் வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பேசுகையில், கல்லூரி மாணவர்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தி போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்லூரிகளுக்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும்.

    கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றும் காவலர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு பயிற்சி கொடுத்து அவர்கள் மூலம், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மறுவாழ்வு மையங்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

    நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை சித்திரை திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மேயர் ஆலோசனை நடத்தினர்.
    • குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    மதுரை

    மதுரை மாநகரில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    சித்திரை திருவிழா வருகிற 23-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வு களான தினந்தோறும் மீனாட்சியம்மன் 4 மாசி வீதிகளில் வீதிஉலா வருதல், மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், திக்குவிஜயம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    சுவாமி தரிசனம் செய்வதற்கும், திருவிழாவை காண்பதற்கும் மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், இதர மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள்.

    மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகள், மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகள் மற்றும் வைகை ஆற்றின் இரு கரைப்பகுதிகள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் சுழற்சி முறையில் தேவையான பணியாளர்களை கொண்டு சுத்தமாகவும், தூய்மை யாகவும் பராமரிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக மருத்துவ குழு, தீயணைப்பு ஆம்புலன்சு வசதி, தகவல் மையம், கண்காணிப்பு காமிராக்கள், தன்னார்வ லர்கள், மின்சாரம், மின்விளக்கு, சாலைகள் சீரமைத்தல் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக குடிநீர் மற்றும் நடமாடும் கழிவறை மற்றும் இ-டாய்லெட் வசதி ஏற்படுத்துவது, கொசு புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப் படும்.

    திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் வாகனங்களை போக்கு வரத்து இடையூறின்றி நிறுத்தி செல்வதற்கும், பொதுமக்கள் ஆங்காங்கே திருவிழாவை பார்க்க வசதியாக எல்.இ.டி. திரை வசதி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக டிரோன் மூலமாக கண்காணித்தல், வாகனங்கள் நிறுத்து வதற்கான இடங்கள், மருத்துவ சேவை வழங்குதல், அவசர உதவி எண்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சித்திரை திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் காவல் துணை ஆணையாளர் அரவிந்த், துணை மேயர் நாகராஜன், போக்குவரத்து உதவி ஆணையாளர்கள் (காவல்துறை) மாரியப்பன், செல்வின், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் முஜிபூர் ரகுமான், தயாநிதி, மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம், கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, நகரப்பொறி யாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி ஆணையாளர்கள் காளிமுத்தன், வரலட்சுமி, திருமலை, சையது முஸ்தபா கமால், மக்கள் தொடர்பு அலுவலர் மகேசுவரன், கல்வி அலுவலர் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வருகிற 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • வருகிற 6-ந்தேதி முதல் ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டு குழு செயல்பட உள்ளது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சியில் 10, 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய, தேர்வு எழுதாத, இடைநின்ற மாணவர்கள் தமது கல்வியை தொடர வாய்ப்பு அளிக்கும் பொருட்டு வருகிற 6-ந்தேதி முதல் ஒவ்வொரு அரசு மேல்நிலை பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டு குழு செயல்பட உள்ளது.

    இக்குழுவின் உறுப்பினர்க ளாகிய மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், உயர் கல்வி வழிகாட்டுதல் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் (கல்வியாளர்), கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் அனைவருக்குமான மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வருகிற 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் 3-ம் நாளான நேற்று முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், நாச்சிகுளம், இடும்பாவனம், இடையூர், புத்தகரம் ஆகிய பள்ளிகளுக்கான ஆலோசனை வழங்குதல் குழு கருத்தாளர்களுக்கான பயிற்சி வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

    இப்பயி ற்சியை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் தொடங்கி வைத்தார்.

    மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபாகரன் மற்றும் மன்னார்குடி வட்டார வள மைய மேற்பா ர்வையாளர் தனபாலன் ஆகியோர் முதன்மை கருத்தாளர்களாக கலந்து கொண்டனர்.

    இப்பயிற்சியில் 125 கருத்தாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர்கள் சுரேஷ், அன்புராணி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஏற்கனவே கடந்த 19-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் நாளை (22-ந்தேதி) பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஒன்றியத்துக்குள் மாறுதல் பெற்று செல்ல விரும்பும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்த மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது.

    இந்நிலையில் நாளை நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஏற்கனவே கடந்த 19-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • 19 ந் தேதி முதல் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங் நடக்கிறது.
    • காலை 10 மணிக்கு வரும் ஆசிரியர்கள் மாலை 4 மணியை தாண்டிய பின்பும் காத்திருக்க வேண்டியுள்ளது.

    திருப்பூர் :

    புதிய கல்வியாண்டு (2023 - 2024) துவங்க இன்னமும் 10 நாட்கள் மட்டுமே உள்ளதால், கவுன்சிலிங் மூலம் ஆசிரியர் பணியிட மாற்ற பணி துவங்கி நடந்து வருகிறது. மாவட்டத்துக்குள் மாறுதல் நிறைவடைந்த நிலையில், கடந்த 19 ந் தேதி முதல் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட கவுன்சிலிங் நடக்கிறது.9 தாலுகாவில் பாட வாரியாக 800 க்கும் அதிகமான ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர். ஆசிரியர் கவுன்சிலிங், இடமாற்ற விபரங்களை அப்டேட் செய்யும் எமிஸ் இணையதள வேகம் குறைவாக உள்ளது. காலை 10 மணிக்கு வரும் ஆசிரியர்கள் மாலை 4 மணியை தாண்டிய பின்பும் காத்திருக்க வேண்டியுள்ளது.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:- கலை, அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுக்கு 17க்கும் அதிகமான பாடங்கள் உள்ளது. 867 ஆசிரியர்கள் இடமாறுதல் ஒப்புதல் வழங்க வேண்டும். கவுன்சிலிங் துவங்கிய நாள் முதல்3 நாட்களில் 200க்கும் குறைவானவர்களுக்கு ஒப்புதல் கிடைக்க பெற்றுள்ளது. இப்படியே சென்றால் கல்வியாண்டு துவங்கும் வரை கவுன்சிலிங் நடத்த வேண்டி இருக்கும். சர்வர் பிரச்னைகளை கலைந்து கவுன்சிலிங் வேகப்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, கவுன்சிலிங் இணையதளம் வேகம் குறைவாக உள்ளது குறித்து தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் மூலம் சென்னைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். மாநிலம் முழுவதும் இதே நிலை இருப்பதாக பதிலளித்தனர். சர்வர் வேகத்தை அதிகரிக்க, சீராக இயக்க தொடர்ந்து கேட்டு வருகிறோம் என்றனர்.

    • 864 இடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • ஜூன் 12 முதல் 20 வரை இரண்டாம் பொது கலந்தாய்வு நடக்கிறது.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை, தமிழ், ஆங்கில இலக்கியம் உட்பட இளநிலையில் மட்டுமே 22 பாடப்பிரிவுகளுக்கு 864 இடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தற்போது தரவரிசைப்பட்டியல் மற்றும் கலந்தாய்வு தேதிகள் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் இன்று கல்லூரிக்கு அனுப்பப்படுகிறது.தொடர்ந்து 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், ஜூன் 1 முதல் 10 வரை பிற மாணவர்களுக்கான முதல் பொது கலந்தாய்வும், ஜூன் 12 முதல் 20 வரை இரண்டாம் பொது கலந்தாய்வும் நடக்கிறது. முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ந்தேதி துவங்குகிறது. 

    ×