என் மலர்
நீங்கள் தேடியது "Demand"
- நாள்தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் பழைய குற்றாலம் - மத்தளம்பாறை சாலையை கடந்து செல்கிறது.
- சாலை இப்போது மிகவும் குறுகலாகவும் குண்டும் குழியுமாகவும் காட்சியளிக்கிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் - மத்தளம்பாறை சாலை சுமார் 5 கிலோ மீட்டர் நீளம் உள்ளது.
இந்த சாலை மிகவும் குறுகலாகவும், குண்டும் குழியுமாகவும் காட்சியளிக்கிறது. கடந்த காலங்களில் விசாலமாக இருந்த சாலையை இருபுறமும் உள்ள நில உரிமையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து இன்றைக்கு சாலை மிகவும் குறுகலாக ஒரு வாகனம் மட்டுமே செல்லும் நிலையில் உள்ளது.
இந்த சாலையில் ஆண்டு தோறும் சீசன் காலங்களில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் பயன்படுத்துகிற முக்கியமான சாலையாக உள்ளது. நாள்தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்கிறது.
மேலும் கடையம் - அம்பாசமுத்திரம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் தென்காசி நகருக்குள் சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மத்தளம்பாறை, பழைய குற்றாலம், குற்றாலம் சாலையை தான் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இந்த சாலையில் 24 மணி நேரமும் வாகனங்கள் அணிவகுத்து வருவதை காண முடிகிறது.
இப்போது கடந்த சில மாதங்களாக அண்டை மாநிலமான கேரளாவிற்கு 16 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனங்கள் தென்காசி - நெல்லை மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளில் இருந்து குண்டு கற்கள், ஜல்லிகற்கள், எம்.சாண்ட் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக ஏற்றிக் கொண்டு இந்த சாலை வழியாகவே கேரளாவுக்கு கொண்டு செல்கிறார்கள்.
தூத்துக்குடி துறை முகத்தில் இறக்குமதியாகும் மரத்தடிகளை ஏற்றி வரும் கனரக லாரிகளில் இந்த சாலை வழியாகவே பிரானூர் பார்டர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிகமாக பயன்படுத்தி வரும் முக்கியமான சாலையாக இருந்து வரும் இந்த சாலை இப்போது மிகவும் குறுகலாகவும் குண்டும் குழியுமாகவும் காட்சியளிக்கிறது. மேலும் 50, 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் இந்த சாலையில் குற்றாலம் முதல் மத்தளம்பாறை வரை இருபுறமும் அதிக அளவில் நெருக்கமாக இருந்து வருகிறது.
சாலை ஓரங்களில் இருந்து வரும் பழமையான மரங்களில் அடிக்கடி வாகனங்கள் மோதி விபத்துக்கு உள்ளாகி தொடர்ந்து உயிர் பலிகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த பழமையான மரங்களின் கிளைகள் சாலை முழுவதும் படர்ந்து இருப்பதால் கனரக உயர்ந்த கண்டெய்னர் வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு மரக் கிளைகளுக்கு பயந்து கண்டெய்னர் வாகன ஓட்டிகள் வாகனங்களை வேகமாக திருப்பும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
மரக்கிளைகள் எதிரில் வரும் வாகனங்களை மறைப்பதாலும் விபத்துகள் ஏற்படுகிறது. இந்தச் சாலையில் குற்றாலம் முதல் மத்தளம்பாறை வரை இரவு நேரங்களில் தெருவிளக்கு களும் இல்லை.
மேலும் இந்தச் சாலையில் சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என். ரவி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது வேகத்தடைகளை நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகு அந்த வேகத்த டையை அமைத்துக் கொடுக்க நெடுஞ்சாலைத்துறை இதுவரை முன்வரவில்லை.
எனவே குற்றாலம் - புலியருவி - பழைய குற்றாலம் - மத்தளம்பாறை வரை உள்ள சாலையை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு பழமையான மரங்களை அப்புறப்படுத்தி விட்டு, சாலையை அகலப்படுத்தி, தரமான தார் சாலை அமைப்பதோடு, தேவையான இடங்களில் வேகத்தடையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெக ன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
- புதுவை காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிட தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
புதுச்சேரி:
மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெக ன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
புதுவை காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிட தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தில் காவலர்களுக்கு தனி ஒதுக்கீடு உள்ளது. அதனை பின்பற்றி புதுவை காவல்துறை சப்- இன்ஸ்பெக்டர் தேர்வில் காவலர்கள் போட்டியிட நியமன அறிவிக்கை மற்றும் அரசாணையில் திருத்தம் செய்து, தேர்வுக்கான அறிவிக்கை வெளியிட வேண்டும்.இவ்வாறு ஜெகன்நாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- மாணிக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி வருகிறது.
- இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் இடறி விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழைக்காலங்களில் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மேலும் தற்போது பெய்து வரும் பருவ மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்கின்றனர். பல ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே மழைநீர் தேங்குவதை தடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று மாணிக்கம்பட்டி கிராம மக்கள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- அபிராமத்தில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் தொடங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
- அரசு நடுநிலைப்பள்ளியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. பெயரளவிற்கு மட்டுமே செயல்படுகிறது.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம், அபிராமம் பேருராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அரசுப்பள்ளியே இல்லாத அவலம் தொடருகிறது.
அபிராமம் பேருராட்சி மற்றும் சுற்றுபுற கிராமங்களில் உள்ள மாணவர்கள் அபிராமத்தில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். அபிராமத்தில் 1905ம் ஆண்டு தொடங்கப்ட்ட அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. ஆனால் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. பெயரளவிற்கு மட்டுமே செயல்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயி கூறுகையில், அபிராமத்தை சுற்றிலும் கிராமங்கள் அதிகம் உள்ள பகுதி ஆகும். விவசாய கூலி வேலை செய்து பிழைத்து வரும் எங்கள் குழந்தைகளாவது படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடுதான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். 8-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளி உள்ளது. மேல்நிலை, உயர்நிலை படிக்க 10.கி.மீட்டர் தூரம் சென்று 2 பஸ்கள் மாறி சென்று படிக்கும் நிலை உள்ளது.
அரசுப்பள்ளியில் படித்தால்தான் அரசு வழங்கும் சலுகைகள் பெறமுடியும். குறிப்பாக மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு, கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்பட பல திட்டங்கள் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிடைக்கிறது.
அபிராமம், அதன் சுற்றுவட்டார பகுதி மாணவர்களின் துயர்துடைக்க தமிழக அரசும், பள்ளி கல்வி துறையும், மாவட்ட நிர்வாகமும் துரிதமாக செயல்பட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அபிராமம் பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, அபிராமம் இந்த பேருராட்சிகளிலேயே அபிராமம் பேருராட்சி பகுதியில்தான் அரசுப்பள்ளியே இல்லாத நிலை உள்ளது.
தற்போது 117 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட அரசுப்பள்ளி 8-ம் வகுப்பு வரை இருக்கிறது. மேல்நிலை படிப்புக்கு வெளியூர் செல்லும் நிலையில் இருக்கிறோம். தமிழக அரசும், பள்ளி கல்வி துறையும் நேரிடையாக தலையிட்டு ராமநாதபும் மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின்பேரில் உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தினால் அபிராமம் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறுவதுடன், அபிராமத்தை சுற்றியுள்ள மாணவர்களின் கல்வி தரம் மேம்படும். எனவே நடவடிக்கை எடுத்து உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் தொடங்க அரசு நடவடிக்க எடுக்க வேண்டும் என்றார்.
- பஸ் நிலையம் முழுவதும் தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
- வாக்குவாதத்தில் ஈடுபட்டு சில நேரம் கைக்கலப்பாக மாறுவது வழக்கமாக உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அண்ணா பஸ்நிலையத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பஸ் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல கோடிக்கணக்கில் செலவு செய்து பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பஸ் நிலையம் முழு வதும் 150 -க்கும் மேற்பட்ட தள்ளு வண்டிகளில் காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்டவை பஸ் நிலையம் முழுவதும் தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். பஸ் நிலையம் அருகில் காய்கறி மார்க்கெட் உள்ளது.தள்ளு வண்டியில் போட்டி போட்டுக் கொண்டு பஸ் நிலையம் முழுவதையும் தள்ளுவண்டி வியாபாரிகள் தங்கள் வசம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் அரசு பஸ் ஓட்டுனர்கள் மற்றும் தனியார் பஸ் ஓட்டுனர்கள், திட்டக்குடி பகுதியை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறு குரு விவசாயிகள், வணிகர்கள் பல தரப்பினரும் திட்டக்குடி பஸ்நிலையம் உள்பகுதியில் செல்ல முடியாமல் அன்றாடம் தள்ளுவண்டிகாரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சில நேரம் கைக்கலப்பாக மாறுவது வழக்கமாக உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பலமுறை திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. போலீசார் மாலை நேரத்தில் 15 அல்லது 30 நிமிடங்கள் மட்டுமே பஸ் நிலையத்திற்கு வருகை தந்து விட்டு சென்று விடுவார்கள். இதனால் எந்த பலனும் இல்லை. போலீசார் மாலை 5 மணி முதல் 7 மணி வரை பேருந்து நிலையத்தில் பணியில் இருந்தால் மட்டும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மாலை நேரங்க ளில் அரசு பள்ளி மாணவ, மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாண வர்கள் அதிக அளவில் பஸ் நிலையத்திற்கு வருகை தருவ தால் மாணவிகள், மாண வர்கள் நின்று பஸ் ஏற முடியாத சூழ்நிலை அன்றாட காட்சி பொருளாக உள்ளது. பஸ்நிலையத்தில் அன்றாடம் பயணிக்கும் பெண்களிடம் பையில் உள்ள பொருட்கள் திருடுவது அவர்கள் போலீசில் புகார் அளிப்பது தொடக்கதையாக உள்ளது. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பஸ் நிலையத்தில் தினந்தோறும் குறைந்தது மாலை நேரத்தில் 3 மணி நேரம் போலீசார் பணியில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிலைய த்தில் உள்ள தள்ளுவண்டி அகற்றி வேறு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பென்சன் தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கட்டுமான தொழிலாளர்களுக்கு
கரூர்
கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி.யின் 5-வது மாநாடு நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். இதில் 27 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பென்சன் தொகையை மாதம் ரூ.6000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு மாதாந்திர பென்சன் தொகையை காலதாமதமின்றி மாதம் மாதம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் நலவாரியத்தை முடக்க மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளர் பதிவுகளை தமிழகத்தில் பதியாமல் மாநில நலவாரியத்தை மேலும் சிறப்பாக நடத்திட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட செயலாளர் வடிவேலன், பொருளாளர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 3 அங்கன்வாடி கட்டிடங்கள் மிகவும் பழுதுஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாக மனுவில் கூறியிருந்தனர்.
- இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்தனர்.
அப்போது, உடன்குடி பேரூராட்சி மன்ற தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசியின் கோரிக்கை மனுவை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ முன்னிலையில், உடன்குடி கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் 13- வது வார்டு கவுன்சிலர் அஸ்ஸாப் கல்லாசி, மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது வார்டு கவுன்சிலர் முகம்மதுஆபித், 2-வது வார்டு கவுன்சிலர் பாலாஜி, மருதூர்கரை கவுன்சிலர் முத்துராமலிங்கம் மாவட்ட பிரதிநிதி , ஜெயபிரகாஷ், தி.மு.க. 16-வது வார்டு செயலாளர் சுபியான் மற்றும் தமீம் ஆகியோர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட புதுமனை மேலத்தெரு, வைத்திலிங்கபுரம் மாரியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் அமைந்துள்ள 3 அங்கன்வாடி கட்டிடங்கள் மிகவும் பழுதுஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.
விரைவில் 3 கட்டிடங் களையும் புதுப்பித்து கட்ட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும் மனுவை அமைச்சரிடம் கொடுத்து கோரிக்கையை நிறைவேற்ற வற்புறுத்தினர்.
மனுவைபெற்றுக் கொண்ட அமைச்சர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி கூறினார்.
- லாரிகள் மூலம் தண்ணீர் திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- நொய்யல் பகுதியில் தண்ணீர் திருடும் கும்பல்
கரூர்
கரூர் மாவட்ட நொய்யல் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் கிணற்றில் இருந்து டேங்கர் லாரிகளுக்கு கிணற்றின் உரிமையாளர் தண்ணீரை விற்பனை செய்து வருகிறார்கள். லாரி மூலம் அந்தப் பகுதியில் இருந்து ஏராளமான நடை தண்ணீர் லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீரூற்று குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொது மக்களுக்கும் குடிநீர் வினியோகம் தடைபடும் அபாயமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்டுள்ள லாரிகளை பறிமுதல் செய்து தண்ணீர் விற்பனை செய்யும் நபர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அதிகாலை கரையை கடந்ததின் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்து கன மழை பொழிந்தது.
- விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் சுற்றுவட்டா ரங்களில் மாண்டஸ் புயல் அதிகாலை கரையை கடந்ததின் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்து கன மழை பொழிந்தது. இந்நிலையில் செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் செஞ்சி, ஊரணிதங்கள், அனந்தபுரம், மேல்ம லையனூர், அவலூ ர்பேட்டை ஆகிய பகுதி களில் பயிரிடப்பட்ட சுமார் 200 ஏக்கர் நெற்பயி ர்கள் நீரில் மூழ்கி காற்றின் வேகத்தன்மையால் நெல் பயிர்கள் சாய்ந்தது. இத னால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்து ள்ளனர்.
இந்நிலையில் ஊரணி தாங்கல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருடைய விளைநிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்யிர்கள் நீரில் மூழ்கியதால் கடும் வேதனை அடைந்துள்ளனர். ஆறு மாதமாக பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த நெற்கதி ர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு வேளாண்துறை சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- மழை கால நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.
- கூரை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும்.
சீர்காழி:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சீர்காழி அடுத்த பச்சை பெருமா நல்லூரில் பொதுமக்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் சாலை மறியல் ஈடுப்பட்டுள்ளனர்.
தொடர் மழையால் வேலை வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாய கூலி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மழை கால நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.
கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், அனைத்து கூரை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது.
இது குறித்து தகவல் அறிந்ததும் வட்டாட்சியர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட வில்லை.
தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடை பெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
- நெல்லையில் இருந்து மூலக்கரைப்பட்டி. ஸ்ரீயந்தூர், ராமானுஜம்புதூர், சிந்தாமணி, மீரான்குளம், பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக உடன்குடிக்கு அரசு பஸ் தடம் 137டி இயங்கி வருகிறது.
- திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம், கலுங்குவிளை, கருங்குளம் வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட தடம் எண் 232 அரசு பஸ்சும் கடந்த 6 ஆண்டுகளாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம்:
நெல்லையில் இருந்து மூலக்கரைப்பட்டி. ஸ்ரீயந்தூர், ராமானுஜம்புதூர், சிந்தாமணி, மீரான்குளம், பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக உடன்குடிக்கு அரசு பஸ் தடம் 137டி இயங்கி வருகிறது. இந்த பஸ் காலை, மாலை இருவேளை இந்த வழித்தடத்தில் இயங்கி வருகிறது.
ஆனால் தற்போது காலை 4.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் பஸ் ஸ்ரீயந்தூர், ராமானுஜம்புதூர் செல்லாமல் மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி சிந்தாமணி,மீரான்குளம் வழியாக நேரடியாக பேய்க்குளம் வந்து செல்கிறது. இதனால் இந்த பஸ்சை எதிர்பார்த்து ராமானுஜம்புதூர் மக்கள் ஏமாற்றமடையும் நிலை ஏற்படுகிறது.
இந்த பஸ் இல்லாததால் ராமானுஜம்புதூர் பகுதி மக்கள் 8 கிலோமீட்டர் தூரமுள்ள பேய்க்குளம் வர கருங்குளம் சென்று வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதே போல் ராமானுஜம்புதூர் வழியாக பேய்க்குளம், சாத்தான்குளம், புத்தன்தருவைக்கு இயக்கப்பட்ட தடம் எண் 305 அரசு பஸ் கடந்த 4ஆண்டுகளாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம், கலுங்குவிளை, பேய்க்குளம், சிந்தாமணி, ராமானுஜம்புதூர், கருங்குளம் வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட தடம் எண் 232 அரசு பஸ்சும் கடந்த 6 ஆண்டுகளாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பஸ்சை பயன்படுத்தி வந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ராமானுஜம்புதூரை புறக்கணித்து செல்லும் தடம் 137டி அரசு பஸ்சை மீண்டும் அதே வழியாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்கிட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- கால நேரமும், கூடுதல் எரிபொருள் செலவும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது.
- தினந்தோறும் விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பேரவை கூட்டம் கொரடாச்–சேரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார்.
பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்து மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி பேசினார். கூட்டத்தில் கலந்துகொண்ட சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி, கே.சீனிவாசன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் சிபிஎம் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது,
தஞ்சாவூர் முதல் நாகை வரையில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணி நீண்ட வருடங்களுக்கு பின் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனாலும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.
இதனால் வேளாங்கண்ணி மற்றும் நாகப்பட்டினம், திருவாரூரில் இருந்து தஞ்சாவூர், திருச்சி மற்றும் பல நகரங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் தற்போது திருவாரூரில் இருந்து மன்னார்குடி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் கால நேரமும், கூடுதல் எரிபொருள் செலவு வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது. மேலும் தற்போது பெய்த மழையில் பல இடங்களில் சாலை சீர் குலைந்து, குண்டும், குழியுமாக மாறி அபாயகரமான சாலையாக காட்சியளிக்கிறது. தினந்தோறும் விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.
ஆகவே தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி திருவாரூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி இந்த தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து மேற்கோண்டு மக்கள் பயன்பாட்டு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.