search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disabled youth"

    • கடலில் நீந்தி மாலை ஈஞ்சம்பாக்கம் சென்றனர்.
    • நாளை சென்னை மெரினா கடற்கரையை அடைகின்றனர்.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை வேவ்ஸ் ரைடர்ஸ் குழு இணைந்து சென்னை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு, நீச்சல் பயிற்சியளித்து வருகின்றனர்., இப்பயிற்சி பெற்றவர்கள், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மாநில ஆறுகள், மற்றும் கோவாவில் நடைபெற்ற கடல் நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.


    தற்போது கின்னஸ் சாதனை பதிவிற்காக, 11வயது முதல் 30 வயது வரையிலான ஒரு பெண் உட்பட 15 பேர், கின்னஸ் சாதனை பதிவிற்காக, தற்போது கடலில் சாகச பயணம் மேற் கொண்டு வருகின்றனர்., இவர்கள் கடந்த 5ம் தேதி, ராமேஸ்வரம் மண்டபம் பகுதி கடலில் இருந்து, சென்னை மெரினா கடற்கரை வரை 604கி.மீ தூரம் நீச்சல் சாகச பயணத்தை துவங்கினர்.


    இவர்கள் நேற்று மாலை மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்., அவர்களை தமிழ்நாடு மீனவ பேரவை தலைவர் அன்பழகனார் மற்றும் மாமல்லபுரம் மீனவ சபையினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து வரவேற்றனர். இன்று காலை மீண்டும் கடலில் நீந்தி மாலை ஈஞ்சம்பாக்கம் சென்றனர். நாளை சென்னை மெரினா கடற்கரையை அடைகின்றனர்.

    • அருள்பாண்டி வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி ஆவார்.
    • எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே உள்ள புத்தநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் பாண்டி (வயது 23).இவர் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு சொந்தமான நிலம் கெடிலம் ஆற்றுப்பகுதியில் உள்ளது. அந்த பகுதியில் விவசாய நிலத்திற்கு சென்று மாடு பிடித்துக் கொண்டிருந்த போது மாடு இழுத்து சென்றதில் அருள்பாண்டி எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் உயிர் பிழைக்க அபயக்குரலிட்டார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.

    உடனே அவர்கள் அருள்பாண்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார். இதுகுறித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருள் பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது.
    • தொலை தூரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டதால் மாற்றுத்திறனாளி அதிர்ச்சி

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள கன்னியாபுரத்தை சேர்ந்தவர் நாட்ராயன்(32). மாற்றுத்திறனாளியான இவர் அதேபகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.

    அவருக்கு ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இடையகோட்டை தேர்வு மையமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு ஹால்டிக்கெட் வந்துள்ளது. கால்கள் வளைந்த நிலையில் உள்ள அவரால் உதவியாளர் இல்லாமல் தொலைதூரங்களுக்கு செல்லமுடியாது. தேர்வுக்கு அவர் செல்ல வேண்டுமானால் தனது இருப்பிடத்தில் இருந்து திண்டுக்கல் வந்து பின்னர் ஒட்டன்சத்திரம் வரவேண்டும். அதன்பிறகு மார்க்கம்பட்டி செல்லும் பஸ்சில் ஏறி இடையகோட்டைக்கு வரவேண்டும்.

    காலை 9.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு இவரால் வந்து சேரமுடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் அதிகாரிகள் தனது தேர்வு மையத்தை மாற்றி திண்டுக்கல் அல்லது நத்தம் பகுதியில் ஒதுக்கீடு செய்வார்களா என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×