search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "district education office"

    • பெரம்பலூர் கடைவீதியில் இயங்கி வரும் மாவட்ட கல்வி அலுவலகத்தை தற்போது வேறு இடத்திற்கு மாற்ற–ப்படுவதாக கூறப்படுகிறது.
    • எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகளில் முக்கிய பங்காற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் தொடர்ந்து கடைவீதியிலேயே இயங்க வேண்டும்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் மாவட்ட பள்ளி முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிப்பதாவது:

    பெரம்பலூர் கடைவீதியில் கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வரும் மாவட்ட கல்வி அலுவலகத்தை தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக கூறப்படுகிறது.

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகளில் முக்கிய பங்காற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் தொடர்ந்து கடைவீதியிலேயே இயங்க வேண்டும். வேறு இடத்திற்கு மாற்றும் முடிவினை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மணப்பாறையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2018-ம் ஆண்டு முதல் மாவட்ட கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது.
    • தற்பொழுது மணப்பாறை மாவட்ட கல்வி அலுவலகம் நீக்கப்பட்டு. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலமாக திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி,

    மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மணப்பாறையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2018-ம் ஆண்டு முதல் மாவட்ட கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு 71 அரசுப் பள்ளிகள், 21 அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆகியவை இயங்கி வருகின்றன. தற்பொழுது மணப்பாறை மாவட்ட கல்வி அலுவலகம் நீக்கப்பட்டு. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலமாக திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் கலை, இலக்கிய போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கு மாணவர்கள் திருச்சி வரை செல்ல வேண்டி உள்ளது. ஆசிரியர், தேர்வுத்தாள் திருத்துவதற்காக திருச்சி வரை சென்று வர வேண்டியுள்ளது. ஆசிரியர் கூட்டங்கள், பயிற்சிகள் தற்போது மணப்பாறையில் நடந்து வருகிறது.

    பிற்காலத்தில் இப்பயிற்சிகள் திருச்சியில் நடைபெற்றால் ஆசிரியர்கள் மாவட்டத்தின் கடைகோடியிலிருந்து 95 கிலோமீட்டர் வரை வர வேண்டி இருக்கும். நலத்திட்டங்கள் (பாடநூல், பாட குறிப்பேடு) தற்பொழுது மணப்பாறையில் பெற்றுக் கொண்ட நிலையில் இனி திருச்சியில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

    தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் இனி திருச்சி வரை சென்று தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்படும். மாணவர்கள் மாவட்டக் கல்வி அலுவலகத்தை அணுகி குறைபாடுகளை களைய மணப்பாறையில் அலுவலகம் இருப்பின் ஏதுவாக இருக்கும். மாவட்டக் கல்வி அலுவலகம் சுமார் ரூ.35 லட்சம் செலவில் கட்டப்பட்டு, திறக்கப்படாத சூழலில், மணப்பாறை கல்வி அலுவலகம் நீக்கப்பட்டுள்ளது.

    எனவே, மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி மணப்பாறை மாவட்டக் கல்வி அலுவலகம் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்க ஆவண செய்ய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • கூடுதல் மாவட்ட கல்வி அலுவலகம் ஏற்படுத்த வேண்டுமென ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    • 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடத்துவதிலும் குளறுபடிகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த காலங்களில் பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலைக்கல்விக்கு ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி என 2 கல்வி மாவட்ட அலுவலகங்களும், தொடக்கக்கல்விக்கு ராமநாதபுரம் முழுவதும் ஒரு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகமும் இயங்கி வந்தன. இவைகளை முழுமையாக கண்காணிக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் செயல்பட்டு வந்தது. கடந்த ஆட்சியில், தொடக்கக் கல்வித்துறையிலுள்ள பள்ளிகளை கண்காணித்து ஆய்வு செய்து வந்த மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை ரத்து செய்து விட்டு, மாவட்ட நிர்வாகத்தில் தனித்தனியாக இயங்கி வந்த பள்ளிக்கல்வி (இடைநிலைக்கல்வி) பள்ளிகள் மற்றும் தொடக்க க்கல்வி பள்ளிகளை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து, அதனை மாவட்டக்கல்வி அலுவலரே நிர்வாகம் செய்வார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக பல குளறுபடிகளுடன் இயங்கி வந்தன.

    தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிக்கல்வி துறையிலுள்ள இடைநிலைக்கல்விக்கு மாவட்டத்திற்கு தேவையான மாவட்டக்கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்த ப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்ட த்தில் உயர்நிலை, மேல்நிலைப்ப ள்ளிகள் 196 பள்ளிகள் இயங்கி வருகின்றன. சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய ராமநாத புரத்தை மையமாக வைத்து அரசாணை 151 ன்படி ஓரே ஒரு மாவட்டக்கல்வி அலுவலகம் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட எல்லைகளிலுள்ள பள்ளிக ளுக்கும் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்க்கும் இடைப்பட்ட தூரம் மிக அதிகமாக இருக்கிறது, இதனால் மாணவர்களின் அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.

    அதேபோல் பள்ளி ஆசிரியர்களின் பணப்பலன்க ளை பெற்று வழங்குவதிலும் தாமதம் ஏற்படும், மேலும் அலுவலக பணியாளர்களின் வேலையை ஆசிரியர்கள் செய்ய நேரிடும், இதனால் மாணவர்களின் கற்றல், கற்பித்தில் பணியில் இடர்பாடுகள் ஏற்படும், ஒரே ஒரு மாவட்டக்கல்வி அலு வலரால் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்வது என்பது இயலாத காரியம். மேலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடத்துவதிலும் குளறுபடிகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பு இருந்தது போல் இடைநிலைக் கல்விக்கு பரமக்குடியை மையமாக வைத்து கூடுதல் மாவட்டக்கல்வி அலுவலகத்தை ஏற்படுத்தி தரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×