என் மலர்
நீங்கள் தேடியது "Doctor"
- 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றெடுத்தார்.
- பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது
உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது மருத்துவரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 ஆண்டுகளுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் ஷி மெடிக்கல் கேர் என்ற மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார். அதன்பின் பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சமீபத்தில் லக்னோ மருத்துவக் கல்லூரியில் சந்தியா எடுத்த எக்ஸ்ரேயில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. மார்ச் 26 ஆம் தேதி அவரது வயிற்றிலிருந்த கத்திரிக்கோலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
இதனையடுத்து தனது மனைவி சந்தியாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வால் மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், 17 ஆண்டுகளாக தனது மனைவி வேதனைப்பட்டதற்கு மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வாலின் அலட்சியம் தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
- பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும்மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
- திருபுவனம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் வரவேற்றார்.
மெலட்டூர்:
அம்மாபேட்டைஒன்றியம், திருபுவனம் ஊராட்சியில் தஞ்சை விஷ்ணு மருத்துவமனை, வசந்தம் லயன்ஸ் சங்கம் மற்றும் திருபுவனம் ஊராட்சி இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் மாரிமுத்து தலைமை வகித்தார்.
அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
ஒன்றிய கவுன்சிலர் வெங்கட், சமூக ஆர்வலர், வில்லியம் ஸ்டீபன்சன், குந்தவை நாச்சியார் கல்லூரி கண்காணிப்பாளர் பாலசு ப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
திருபுவனம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் வரவேற்றார்.
முகாமில் தஞ்சை விஷ்ணு மருத்துவமனை, மருத்துவ குழுவினர் சர்க்கரைநோய், ரத்த கொதிப்பு, தைராய்டு, வயிறு சம்மந்தமான பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை, மார்பக நோய் பிரச்சனை, உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும்மருத்துவ ஆலோசனை வழங்க ப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் விஜய லெட்சுமி,கோகிலம், கிருஷ்ணமூர்த்தி, ஜோதியம்மாள் கலைச்செல்வன் மற்றும் வசந்தம் லயன்சங்க நிர்வாகிகள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருபுவனம் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், மற்றும் வசந்தம் லயன்ஸ் சங்கத்தினர் செய்து இருந்தனர்.
- தவறுகள் நேரிடாமல் பணியாற்ற வேண்டும்.
- அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் புதியதாக திருத்தி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
அறுவை சிகிச்சைகளின் போது பெரும்பாலும், ஒருமுறை பயன்படுத்தும் சாதனங்களையே உபயோகப்படுத்த வேண்டும். தவறுகள் நேரிடாமல் பணியாற்ற வேண்டும் என அரசு டாக்டர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர், மருத்துவக் குழுவினர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு:- அறுவை சிகிச்சைக்கு நோயாளி தகுதியானவரா என்பதை உறுதி செய்த பிறகே அது தொடர்பான நடவடிக்கைகளை துவங்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளியின் ரத்த சர்க்கரை அளவு 200க்கும் குறைவாகவும், ரத்த அழுத்தம் குறைந்தபட்சம் 90. அதிகபட்சம், 150க்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். அறுவை சிகிச்சைக்கு முன், சிகிச்சையின் தன்மை உள்ளிட்ட பிற விபரங்களை நோயாளியிடம் அல்லது அவர்களது உறவினர் ஒருவரிடம் தெளிவாக எடுத்து கூறி, ஒப்புதல் பெற வேண்டும்.
அறுவை சிகிச்சை அரங்கு கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஒன்றுக்கு இருமுறை வழிகாட்டுதல்களை சரிபார்த்து அதனடிப்படையில் சிகிச்சைகளை துவங்க வேண்டும். அறுவை சிகிச்சைகளின் போது பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்தும் சாதனங்களையே உபயோகப்படுத்த வேண்டும். தவறுகள் நேரிடாமல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் அடைந்ததையடுத்து, அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் புதியதாக திருத்தி வழங்கப்பட்டுள்ளது.அவை குறித்து அரசு டாக்டர்கள், அறுவைசிகிச்சை பிரிவில் பணியாற்றுவோருக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றனர்.
- வேலை முடிந்து வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கலாம் என்றபோது சேவல் கூவி தூக்கம் கெடுகிறது.
- அது முற்றிலும் தமக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது என டாக்டர் புகாரில் தெரிவித்துள்ளார்.
போபால்:
இந்தூரின் பலாசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் மருத்துவமனை அருகே வசித்து வருகிறார் அலோக் மோடி. இவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியதாவது:
எனது அண்டை வீட்டில் உள்ள ஒரு பெண் ஒருவர் கோழி, சேவல் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். அந்த சேவல் கோழிகள் தினமும் அதிகாலை தவறாது 5 மணிக்கெல்லாம் கூவுகிறது. இதனால் வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கலாம் என்றபோது சேவல் கூவி தூக்கத்தைக் கலைத்து விடுகிறது. அது முற்றிலும் தமக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அலோக் மோடியின் புகாரை பலாசியா காவல் நிலைய பொறுப்பாளர் சஞ்சய் சிங் உறுதிப்படுத்தி உள்ளார்.
இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் சேவல் கூவும் சிக்கலை தீர்க்க குற்றவியல் நடைமுறையைப் பின்பற்றுவோம். பொது இடத்தில் சட்டவிரோதமாக தொந்தரவு செய்வது என்ற சட்டப்பிரிவு 133ன் படி நடவடிக்கை எடுப்போம் என சஞ்சய் சிங் தெரிவித்தார்.
- அரிதினும் அரிதான நிகழ்வாக குழந்தை 4 கால்களுடன் பிறந்தது.
- கூடுதலாக உள்ள 2 கால்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் குழந்தை மொத்தம் 4 கால்களுடன் பிறந்துள்ளது.
அரிதினும் அரிதான நிகழ்வாக குழந்தை 4 கால்களுடன் பிறந்ததால் பெற்றோர், உறவினர்கள் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதேவேளை, குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர். குழந்தை 2.3 கிலோ எடையுடன் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதேவேளை, கூடுதலாக உள்ள 2 கால்கள் செயல் இழந்த நிலையில் உள்ளது.
மேலும், கருமுட்டை பிரிதலின்போது ஏற்பட்ட குறைபாட்டால் குழந்தை 4 கால்களுடன் பிறந்துள்ளதாகவும், கூடுதலாக உள்ள 2 கால்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என்றும் டாக்டர்கள் கூறினர்.
- களக்காடு-நாங்கு நேரி சாலையில் அரசு மருத்துவ மனை அமைந் துள்ளது. இங்கு 2 மருத்துவர்கள் உள்பட செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
- தினசரி 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வரும் நிலையில் 1 மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளதால் நோயாளிகள் சிகிச்சை பெற நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது
களக்காடு:
களக்காடு-நாங்கு நேரி சாலையில் அரசு மருத்துவ மனை அமைந் துள்ளது. இங்கு 2 மருத்துவர்கள் உள்பட செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற 30 படுக்கைகளும் உள்ளன.
இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு இங்கு பணி புரிந்து வந்த இரு மருத்துவர்களில், ஒரு மருத்துவர் வேறு இடத்திற்கு பணி மாறுதலாகி சென்று விட்டார். அதன் பின் அந்த பணியிடத்திற்கு மருத்துவர் நியமிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் 1 மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளார். தினசரி 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வரும் நிலையில் 1 மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளதால் நோயாளிகள் சிகிச்சை பெற நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இதனால் நோயாளிகள் கடும் தவிப்பு அடைந்துள்ளனர்.
தற்போது களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் காய்ச்சல் பரவி வருகிறது. இதை யொட்டி மருத்துவ மனைக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 1 மருத்துவர் மட்டுமே சிகிச்சை அளிப்பதால் உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் தொய்வு ஏற்படுவதாக கூறப்ப டுகிறது. எனவே களக்காடு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர் பணி யிடத்தை நிரப்ப வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- டாக்டர் சக்திவேல் தனது உடலில் ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே உள்ள மேவாணி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(39). சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரான இவர் ஈரோடு நியூ டீச்சர்ஸ் காலனியில் வசித்து வருகிறார். மேலும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். அவரது மனைவி அகமதாபாத்தில் படித்து வருகிறார். இன்று காலை டாக்டர் சக்திவேல் நீண்ட நேரமாகியும் ஆஸ்பத்திரிக்கு செல்லவில்லை. இதனால் ஆஸ்பத்திரியில் இருந்து அவரது செல்போனை தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து ஊழியர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் உள்பக்கம் தாழ்போடப்பட்டு இருந்தது.
இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது டாக்டர் சக்திவேல் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது டாக்டர் சக்திவேல் தனது உடலில் ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டாக்டர் சக்திவேல் சாவுக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஷேக் அப்துல்லா அங்கு உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
- ஷேக் அப்துல்லாவை தாயகம் அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர் வேண்டுகோள்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர் சையது அபுல் ஹாசன் மகன் ஷேக் அப்துல்லா. இவர் சீனாவில் உள்ள கடந்த 2017-18 ஆம் ஆண்டு மருத்து மாணவராக சேர்ந்து அதன் பின் கொரோனா பாதிப்பால் சொந்த ஊருக்கு திரும்பினார்.
பின்னர் அவர் ஆன்லைன் கல்வி மூலமாகவே மருத்துவ கல்வியை முடித்து கடந்த 11-ந்தேதி மீண்டும் சீனாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு பயிற்சிக்காக சென்றார்.
அப்போது ஷேக் அப்துல்லா அங்கு உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சீனாவில் உயிரிழந்துள்ளார். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சீனாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் அப்துல்லாவை தாயகம் அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கடந்த மாதம் 26-ந்தேதி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சேலம் அருகே ஆட்டையாம்பட்டி டாக்டர் வீட்டில் கதவை உடைத்து 5 பவுன், ரூ.2.15 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
- டாக்டர் வீட்டின் அருகே இருந்த மற்றொரு டாக்டர் வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வக்கீல் வினோத் சேவியர். இவரது மனைவி ஆர்த்தி மரியா. இவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள தங்களது பண்ணை வீட்டின் தோட்டத்திற்கு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டி்ன் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது.
மர்ம நபர்கள் வீட்டில் நுழைந்து, கொள்ளையடித்துச் சென்றதை அறிந்த அவர்கள், சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே கடந்த 12-ந் தேதி, இவர்களது வீட்டின் அருகில் உள்ள மற்றொரு டாக்டர் வீட்டில் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்ம நபர்களின் இந்த தொடர் திருட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- ஒன்றரை வயது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
- குழந்தைக்கு சி.டி., ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் அடுத்த சின்னக் கரையை சேர்ந்த ஒருவரின் ஒன்றரை வயது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் /அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை துறையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சி.டி., ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் குழந்தையின் மூச்சுக்குழாயில் குறுமிளகு சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து டாக்டர்கள் குழுவினர் பிரான்ஸ்கோபி மூலம் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த குறுமிளகு அகற்றப்பட்டது. மேற்கொண்ட சிகிச்சைக்கு பின் குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது.
- சிவகங்கை அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
- இதில் அதிர்ஷ்டவசமாக டாக்டர் உயிர் தப்பினார்.
நெற்குப்பை
சிவகங்கை அரசு மருத்துவ மனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ராஜ்குமார்.இவர் காலையில் பணிக்கு சென்று விட்டு மதியம் 1 மணியளவில் காரில் திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். திருக்கோஷ்டியூரை அடுத்த கே.பிள்ளையார் பட்டி அருகே கார் வந்த போது எதிரே பேரீச்சம் பழம் ஏற்றிக்கொண்டு லாரி வந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது பயங்கர மாக மோதியது. இருந்தபோதிலும் காரில் உள்ள உயிர் காக்கும் பலூன் உடனடியாக விரிந்தது. இதனால் காரை ஓட்டி வந்த டாக்டர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
இருப்பினும் லாரி கார் மீது கவிழ்ந்து விழுந்தது. இதனால் லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த டிரைவர் சுல்தான் மற்றும் உதவியாளர் மகேஸ்வரன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த திருக்கோஷ்டியூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அவர்களை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீரிழிவு நோயாளி நடுரோட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பா.ஜ.க. நிர்வாகிகள் டீனிடம் புகார் தெரிவித்தனர்.
மதுரை:
மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணவறை வாசலில் நோயாளி ஒருவர் மயங்கி கிடந்தார். அவரது கால் அழுகிய நிலையில் இருந்தது. இது குறித்து பா.ஜ.க. நிர்வாகி முத்துக்குமாருக்கு தெரிய வந்தது. அவர் நிர்வாகிகளுடன் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பிணவறை வாசலில் கிடந்த முதியவரை மீட்டு விசாரணை நடத்தினார்.
அதில் அவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (வயது 36) என்பது தெரிய வந்தது. இவருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தது. இதற்காக கடந்த ஒரு மாதமாக மதுரை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் பாதிப்பு குறையவில்லை.
இதற்கிடையே நோயாளி பிரகாஷ்ராஜின் உறவினர்கள் கைவிட்டு சென்றனர். இதையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் பிரகாஷ்ராஜை ஆஸ்பத்திரி வாசலில் விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் டீனிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் பிரகாஷ்ராஜ் மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நீரிழிவு நோயாளி நடுரோட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், இது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த குழுவினர் விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட வார்டில் வேலை பார்த்த 2 டாக்டர்கள், ஒரு நர்சு, தூய்மை பணியாளர் ஆகிய 4 பேர் பணியில் ஒழுங்கீனமாக செயல்பட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 2 டாக்டர்கள், நர்சு உள்பட 4 பேரையும் மதுரை பாலரங்காபுரம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக இடமாற்றம் செய்து டீன் உத்தரவிட்டார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி நடுரோட்டில் வீசப்பட்ட விவகாரத்தில், 2 டாக்டர்கள் உள்பட 4 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.