என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Equipment"

    • பேரிடர் கால மீட்பு உபகரணங்களின் நிலை குறித்து நேரில் ஆய்வு.
    • கூடுதல் உபகரணங்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீர்காழி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய தீவிரமடைந்துள்ள நிலையில் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையங்களில் பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தலைவர் பி.கே.ரவி கடலோரப் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்

    இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகாரில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையத்துக்கு வருகை தந்த அவர் தீயணைப்பு நிலையத்தில் உள்ள பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் நிலை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார் மேலும் பேரிடர் காலங்களில் உதவுவதற்காக தேவையான உபகரணங்கள் குறித்தும் கேட்டறிந்த அவர் தேவையான கூடுதல் உபகரணங்களும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ஆய்வின்போது மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • தேத்தாக்குடி வடக்கு வடமழை மணக்காடு நடுநிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உபகரணங்களை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் வழங்கினார்.
    • நாகை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தாமோதரன் தலைமை வகித்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வட மழை மணக்காட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் 500 பேருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு நாகை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தாமோதரன் தலைமை வகித்தார்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தேத்தாக்குடி வடக்கு வடமழை மணக்காடு நடுநிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உபகரணங்களை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் வழங்கினார்.

    விழாவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சோபா மலர்வண்ணன். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைக்கோவன், துணை அமைப்பாளர் ஜோதி செல்லபாண்டியன், ரெத்தினசாமி, கவியரசன் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி மாவட்ட கவுன்சிலர் சோழன், ஒன்றிய தலைவர் ஏகாம்பரம், ஒன்றிய துணைச் செயலாளர் சேது ராஜன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் செந்தாமரைசெல்வன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் மோகனாதச மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காந்திமதி லோகநாதன், மாவட்ட பிரதிநிதி செல்வம் செந்தில், சார்பு அணி அமைப்பாளர் கலைக்கோவன், கவி இளவரசன் ஒன்றிய கிளைக் செயலாளர்கள் தசமணி, சாம்பசிவம், ஒன்றிய பிரதிநிதி காமராஜ், வேதரத்னம், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவ,மாணவிகளுக்கு. நோட்டு,பேனா,பென்சில் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரமத்தி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மற்றும் அட்மா தலைவர் தனராசு தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் மணி , துணைத் தலைவரும், பேரூர் கழக செயலாளருமான ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு. நோட்டு,பேனா,பென்சில் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட ,ஒன்றிய, பேரூர்கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கோடியக்–கரைக்கு தென்கிழக்கே 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
    • மீன்பிடி உபகரணங்களை பறித்து கொண்டதுடன் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன், பாலசுப்பிரமணியன், அருண்குமார், மாதவன், கார்த்தி, முருகன் ஆகிய 6 பேரும் பைபர் படகில் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் அனைத்து மீன்பிடி உப–கரணங்களையும் பறித்துக் கொண்டதுடன், இரும்பு பைப்பால் கொடூ–ரமாக தாக்கியுள்ளனர்.

    இதில் 6 மீனவர்களும் காயமடைந்தனர். தொடர்ந்து உடலில் ரத்த கட்டுக்கள் ஏற்பட்டதுடன் ஒரு மீனவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

    நேற்று கரை திரும்பிய மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்ட பின்பு மேல் சிகிச்சைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கிருந்து மீனவர் முருகன் தவிர்த்த மற்ற 5 மீனவர்களும் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ள்ளனர்.

    அவர்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா, வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, பேரூராட்சி தலைவர் சுகுண சுந்தரி ஆகியோர் சந்தித்து விவரங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.

    • சுயநினைவை இழத்தல் போன்ற நேரங்களில் எப்படி முதலுதவி செய்வது.
    • பல்வேறு உபகரணங்கள், நவீன முறைகள், குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கலைக்கல்லூரியில் 52-வது தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு காரைக்கால் காவேரிபடுகை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மலர்மதி தலைமை தாங்கினார். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மருத்துவர் இளவரசன் பேசுகையில்:-

    விபத்து, பேரிடர் காலங்களில் ஏற்படும் மயக்கம், சுயநினைவை இழத்தல் போன்ற நேரங்களில் எப்படி முதலுதவி செய்வது, இதயம் செயலிழக்கும் நேரங்களில் மூச்சு கொண்டு வருதல், எலும்பு முறிவு, ரத்த கசிவு, கண் பாதிப்பு, தீக்காயங்கள், விஷவாயு தாக்குதல், மின் தாக்குதல், பாம்பு, விஷ பூச்சிகள் கடித்தல் இவற்றிலிருந்து எப்படி தப்பிப்பது, மற்றவர்களை பாதுகாப்பது குறித்து எடுத்துரைத்தார்.

    தீயணைப்பு அலுவலர் காயத்ரி தீ விபத்தை எவ்வாறு தவிர்ப்பது குறித்து பேசினார். பின்னர், தீ பாதுகாப்பு குறித்த பல்வேறு உபகரணங்கள், நவீன முறைகள், குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பாதுகாப்பு சுற்றுச்சூழல் பிரிவு துணை பொதுமேலாளர் தியாகராஜன், தீயணைப்பு துணை பொது மேலாளர் ரமேஷ் காகிரோ, பொறியாளர் கிரிஷ் மிஷ்ரா, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர்கள் பன்னீர்செல்வம், நந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் ஒருங்கிணைத்தார்.

    • வேளாண்மை-உழவர் நலத்துறையின் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேட்டாம் பாடி கிராமத்தில் மானிய விலையில் பண்ணைக் கருவிகள் தொகுப்பு, தார்பாய்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • இரும்புசட்டி, அரிவாள், தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறையின் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேட்டாம் பாடி கிராமத்தில் மானிய விலையில் பண்ணைக் கருவிகள் தொகுப்பு, தார்பாய்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா முன்னிலை வகித்து வருகைபுரிந்த விவசாயிகளை வரவேற்று திட்டத்தின் நோக்கம் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

    அட்மா குழு தலைவர் பழனிவேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வேளா ண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண்மை கருவிகளான கடப்பாரை, மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புசட்டி, அரிவாள், தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கினார்.

    முகாமினை வேளாண்மை அலுவலர் மோகன், உதவி வேளாண்மை அலுவலர் கோபிநாத், வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • பருவமழை காலங்களில் நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை பணிகளை துரிதமாக செய்து வருகிறது.
    • பேரிடர் உபகரணங்கள் செயல்விளக்கம் குறித்து பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவனம் சார்பில் பேரிடர் மீட்புக்குழு தொடக்க நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை பணிகளை துரிதமாக செய்து வருகிறது. நகராட்சி நிர்வாகத்துடன் பாலம் சேவை நிறுவனம் இணைந்து பேரிடர் கால பணிகளை செய்து வருவதற்கும், தற்போது பேரிடர் மீட்புக்குழு அமைத்துள்ளதற்கும் நகராட்சி சார்பில் பாராட்டுகளை தெரிவிப்பதாக கூறினார்.

    மாவட்ட பேரிடர் ஆலோசனைக்குழு உறுப்பினர் செல்வகணபதி பேசுகையில்:-

    ஆபத்து காலங்களில் மீட்பு பணிகளில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும், அப்போது தான் பேரிடரி–லிருந்து அனைவரும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.

    பேரிடர் மீட்புக்குழு செயல்பாடுகள் குறித்து பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் கூறும்போது, திருவாரூர் மாவட்டத்தில் முதன்முறையாக பாலம் சேவை நிறுவனம் பேரிடர் மீட்புக்குழுவை மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி தொடங்கியுள்ளது.

    மேலும், ஒரு லட்சம் மதிப்பிலான நவீன ஒலிபெருக்கி மீட்புகயிறு, ஸ்ரெட்சர், லைப் ஜாக்கெட், நவீன டார்ச்லைட் வாங்கப்–பட்டுள்ளது. தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் மீட்புக்குழு அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இணைந்து கொள்ளலாம் என்றார்.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சக்திவேல், ரமேஷ்குமார், வாசிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசைதம்பி சரவணன், முன்கள மீட்பாளர் கண்ணதாசன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பேரிடர் உபகரணங்கள் செயல்விளக்கம் குறித்து பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

    • பள்ளிகளை மேம்படுத்துவதோடு எங்கள் ஊராட்சிகளுக்கான தேவையையும் பூர்த்தி செய்கிறது.
    • கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 4.38 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    ஓ.என்.ஜி.சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் அதிக அளவில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக 7 பள்ளிகளுக்கு ரூ. 26 லட்சத்தில் டேபிள், நாற்காலி, கம்யூட்டர், பிரிண்டர், ஸ்மார்ட் கிளாஸ் புரஜக்டர் மேஜை, மின்விசிறி மற்றும் சிறுவர்கள் அமரும் டெஸ்க் உள்ளிடட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    கவுரிசாமி நகராட்சி நடுநிலை பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட வட்டாரக்கல்வி அலுவலர் இளங்கோவன் பேசுகையில், அறம் செய் என்பதை ஓ.என்.ஜி.சி சரியாக பின்பற்றுகிறது.

    வட்டார பள்ளிகளில் பெரும்பான்மை பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஓ.என்.ஜி.சி அதிக அளவில செலவு செய்து வருகிறது என்றார்.

    மோசஸ் அரசு உதவிபெறும் பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட நகர்மன்ற உறுப்பினர் வாரை பிரகாஷ் பேசுகையில், மக்களின் தேவையறிந்து நேரிடையாக பிரதிநிதிகளை அனுப்பி ஓ.என்.ஜி.சி சேவையாற்றி வருவது பாராட்டத்தக்கது என்றார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ரஜினி சின்னா, உமா மகேஷ்வரி சிவக்குமார், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜ் கருனாநிதி, சொக்கலிங்கம், பள்ளி நிர்வாகி முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கொடிக்கால் பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஸ்ரீ வைஷ்ணவி தேவி, 4-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பெனாசிர் ஜாஸ்மின், 3-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரி மணிராவ், மருந்தாளுனர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தியானபுரம் நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முருகேசன், குளிக்கரை நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் மதிவாணன் கூறுகையில், ஓ.என்.ஜி.சி, சி.எஸ்.ஆர். நிதியை சரியாக பயன்படுத்தி பள்ளிகளை மேம்படுத்துவதோடு எங்கள் ஊராட்சிகளுக்கான தேவையையும் பூர்த்தி செய்கிறது என்றனர்.

    கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 4.38 லட்சம் மதிப்பிலும், கவுரிசாமி நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலும், மோசஸ் அரசு உதவிபெறும் பள்ளிக்கு ரூ. 5.2 லட்சம் மதிப்பிலும், கானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ. 1.2 லட்சம் மதிப்பிலும், குளிக்கரை மேற்கு நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 2.9 லட்சம் மதிப்பிலும், தியானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலும், சேமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 3.4 லட்சம் மதிப்பிலும் உபகரணங்களை நாகை சுவீட் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி துணை பொது மேலாளர்கள் வேணுகோபால், பிரபாகரன், சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரிகள்விஜய்கண்ணன், சந்திரசேகர், ஒருங்கி ணைப்பாளர் முருகானந்தம், தலைமை ஆசிரியர்கள் ராஜரெத்தினம், பிரபாவதி, ஆனந்தி, மாலதி, லதா, விநாயகராஜன், சுகந்திபாலா, சேமங்கலம் ஊராட்சி தலைவர் முருகானந்தம், சுவீட் என்.ஜி.ஓ. ராஜேந்திரன் அந்தந்த பள்ளி மேம்பாட்டு குழு தலைவிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • உலக ஆட்டிச தினத்தை முன்னிட்டு நடந்த விழாவிற்கு மேற்பார்வையாளர் உமாதேவி தலைமை தாங்கினார்.
    • ஆசிரியர் சிறப்பு பயிற்றுனர் இருதயராஜ் வரவேற்றார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி வட்டார வளமையத்தில் உலக ஆட்டிச தினத்தை முன்னிட்டு நடந்த விழாவிற்கு மேற்பார்வையாளர் உமாதேவி தலைமை தாங்கினார். நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, கவுன்சிலர் ரேவதி வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சிறப்பு பயிற்றுனர் இருதயராஜ் வரவேற்றார். பேரூராட்சி துணை தலைவர் பாலாஜி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கி பேசினார். இதில் மாற்றுத் திறனாளிகள், பெற்றோர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.41ஆயிரத்து 900 மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மேலூர்

    மேலூர் வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.41ஆயிரத்து 900 மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார கல்வி அலுவலர் அழகுமீனா தலைமையில் நடந்தது. இதில் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த 10 மாற்றுத்திறன் மாணவ-மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. வட்டார வள மைய மேற்பார்வையாளர் கீதா மற்றும் சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திற னாளிக ளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மாற்றுத்தி றனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் மனு வழங்கினர்.

    இந்த கூட்டத்தில் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.91 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ், அவர்களை பயன்பெறச் செய்து, உரிய பலன்களும் அவர்களுக்கு வழங்கும் பணி முனைப்புடன் நடைபெற்று வருகிறது. இதுதவிர, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடனும், பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிடவும், மாவட்ட நிர்வாகத்தினால் நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு, மாற்றுத்தி றனாளி களுக்கான பல்வேறு வகையான உதவி உபகர ணங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், இன்றையதினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தேசிய அடையாள அட்டை வேண்டுதல், ருனுஐனு பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு செய்தல், மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளுதல், பிற துறைகளின் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள், உதவி உபகரணங்கள், வங்கிக்கடனுதவிகள், வேலைவாய்ப்பு பயிற்சிகள், பராமரிப்பு உதவித்தொகை மற்றும் மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 71 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நேர்முக உதவியாளர் ரத்தினவேல், தனித்துணை கலெக்டர் சாந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் நேற்று குந்தா வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தார்.
    • ரூ.49.30 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடங்களை கலெக்டர் அம்ரித் பார்வயைிட்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்குகிறது. எனவே கனமழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக போக்குவரத்து சாலையில் முறிந்து விழும் மரங்கள் மற்றும் மண்சரிவு ஆகியவற்றை உடனடியாக சரிசெய்யும் வகையில், நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேரிடர் மீட்பு உபகரணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.

    அதன்படி குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட மேல்குந்தா, இத்தலார், பாலகொலா, முள்ளிகூர் ஊராட்சிகள், கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வருவாய்த்துறை சார்பில் பேரிடர் மீட்பு உபகரணங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    அதேபோல மஞ்சூர் சாலை கெத்தை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடப்பாரை, மண்வெட்டி, கயிறு, பார்ஷா எந்திரம், ஒலிபெருக்கி, ஜே.சி.பி வாகனம், மணல் மூடைகள் ஆகியவை தயாராக உள்ளன.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் நேற்று குந்தா வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டு உள்ள பேரிடர் மீட்பு உபகரணங்களை ஆய்வு செய்தார்.

    அப்போது அவை இயங்கும் நிலையில் உள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மஞ்சூர் அரசு தொடக்க கல்வி அலுவலர் முகாமில் ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை மற்றும் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.49.30 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடங்களை பார்வயைிட்டார். அப்போது மேற்கண்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுரை கூறினார்.

    ×