என் மலர்
நீங்கள் தேடியது "family dispute"
- திருமணமான நாளில் இருந்தே என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்.
- கணவன், மனைவி இடையிலான பிரச்சனையில் 2 பேரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி பிந்துஸ்ரீ. இந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்திருந்தது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஸ்ரீகாந்த், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆனால் திருமணமான நாளில் இருந்தே தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும், தத்தெடுத்து குழந்தையை வளர்க்கலாம் என்றும் பிந்துஸ்ரீ கூறி வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தன்னை தொட முயன்றாலோ, தன்னிடம் நெருங்கி வந்தாலோ தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி பிந்துஸ்ரீ மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.
தற்போது ஸ்ரீகாந்துடன் வாழ பிடிக்காமல் தனது பெற்றோர் வீட்டில் பிந்துஸ்ரீ வசித்து வருகிறார். இந்த நிலையில், தனது மனைவி மீது வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீகாந்த் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், 'எனக்கும், பிந்துஸ்ரீக்கும் 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்குள் தாம்பத்யம் நடக்கவில்லை. குழந்தை பெற்றுக் கொண்டால், தனது அழகு கெட்டுப்போய் விடும், அதனால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று பிந்துஸ்ரீ கூறுகிறார். 60 வயதுக்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார். அதையும் மீறி அவரிடம் நெருங்கினால், என்னை தொட்டால், உங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டுகிறார். என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டு தொல்லை கொடுக்கிறார், விவாகரத்து வழங்கவும் ரூ.45 லட்சம் கேட்கிறார். மனைவியின் தொல்லையால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்று கூறி இருந்தார்.
அந்த புகாரை போலீசார் பெற்றுக்கொண்டார்கள். அதே நேரத்தில் குழந்தை பெறும் விவகாரம், தினமும் ரூ.5 ஆயிரம் கேட்டு மிரட்டுவது போன்ற வீடியோ காட்சிகளையும் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், தன் மீது புகார் அளித்த கணவர் ஸ்ரீகாந்த் மீது அதே வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் பிந்துஸ்ரீ நேற்று மதியம் ஒரு புகார் அளித்தார். அதில், தன்னிடம் வரதட்சணை கேட்டு ஸ்ரீகாந்த் மிரட்டுவதாகவும், தன்னை தாக்குவதாகவும் பிந்துஸ்ரீ கூறி இருந்தார்.

பின்னர் போலீஸ் நிலையம் முன்பு வைத்து பிந்துஸ்ரீ நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
என் மீது கணவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை இல்லை. திருமணமான நாளில் இருந்தே என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். எனது வீட்டில் இருந்து பணம் வாங்கி வராததால், என்னை அடித்து, தாக்கி துன்புறுத்தினார். குழந்தை பெற்றுக் கொண்டால், அவரை விட்டு என்னால் செல்ல முடியாது, அவர் செய்யும் கொடுமைகளை நான் தாங்கி கொண்டு இருக்க வேண்டும் என நினைத்தார். இந்த விவகாரத்தில் நான் பேசியதை கத்தரித்தும், சித்தரித்தும் ஸ்ரீகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஒரு ஆண்டாக பெற்றோர் வீட்டில் வசிக்கிறேன். அங்கு வந்தும் ஸ்ரீகாந்த் சண்டை போட்டார். அவரிடம் விவாகரத்திற்காக ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டவில்லை. திருமணத்திற்காக பெற்றோர் செலவு செய்த பணத்தை கொடுக்கும்படி தான் கேட்டு இருந்தேன். என்னை கொடுமைப்படுத்தி வந்ததால், அவருடன் சேர்ந்து குழந்தை பெற்று, அதன் வாழ்க்கையையும் வீணடிக்க கூடாது என்பதால், 60 வயதிற்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னேன்', என்றார்.
கணவன், மனைவி இடையிலான பிரச்சனையில் 2 பேரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ஸ்ரீகாந்த், பிந்துஸ்ரீ அளித்த புகார்களின் அடிப்படையில் வயாலிகாவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை அடித்து கொலை செய்தார்.
- போலீசார் சந்தேகத்தின் பேரில் பிரதீப் குர்ஜாரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் அடுத்த குவாலியரை சேர்ந்தவர் பிரதீப் குர்ஜார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இதனால் தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார். டி.வி. நாடகங்களில் வரும் குற்ற சம்பவங்களை பார்த்து அதன்படி மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை அடித்து கொலை செய்தார்.
பின்னர் மனைவியின் பிணத்தை தனது பைக்கில் எடுத்து சென்று தேசிய நெடுஞ்சாலையில் வீசினார். அந்த வழியாக வந்த வாகனங்கள் பிணத்தின் மீது ஏறி இறங்கி சென்றதால் உடல் சிதைந்தது.
இதுகுறித்து பிரதீப் குர்ஜார் கம்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தானும் தனது மனைவியும் பைக்கில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது. இதில் எனது மனைவி இறந்து விட்டார். எனக்கு காயங்கள் ஏற்பட்டது என போலீசாரிடம் தெரிவித்தார்.
போலீசார் விபத்து என வழக்கு பதிவு செய்தனர். பிரதீப் குர்ஜாரின் மனைவிக்கு இறுதி சடங்குகள் நடந்த போது அவரது உறவினர்கள் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்து வந்தார். இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர்.
போலீசார் சந்தேகத்தின் பேரில் பிரதீப் குர்ஜாரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மனைவியை கொலை செய்து விபத்து நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரதீப் குர்ஜாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- திண்டிவனத்தில் குடும்பத்தகராறில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- அப்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் குடிசை பாளையம் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன். வேன் டிரைவர். இவர் திண்டிவனம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வாடகை வீட்டில்அவரது மனைவியை மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் வேலையை முடித்துவிட்டுவீட்டிற்கு குடித்துவிட்டு வந்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர். இந்த நிலையில் பூமிநாதன் வீட்டின் அறை கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு சென்றவர் வெளியே வரவில்லை.
அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பூமிநாதன் வெகு நேரம் ஆகியும் வராததால் அக்கம் பக்கம் உதவியுடன் அறையை உடைத்து பார்த்தார். அப்போது பூமிநாதன் தூக்கில் பிணமாக தொடங்கினார். இது குறித்து ரோசனை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வந்தனர். பூமிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காக்காபாளையத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்த சக்திவேல், அதில் கிடைத்த பணத்தை வைத்து அவிநாசிபட்டியில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்தார்.
- அங்கே வீடு கட்டி சக்திவேல், கலைச்செல்வி தம்பதியினர் தங்கி இருந்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள கருமனூர் கூத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 60), விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி (55). இவர்களது மகன் விஜய கிருஷ்ணராஜ் (32). இவர் ராசிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் திட்ட அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த நந்தினி என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதை அடுத்து பள்ளிப்பாளையம் அருகே வெப்படை பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான வினிதா (27) என்பவரை விஜய் கிருஷ்ணராஜ் 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் காக்காபாளையத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்த சக்திவேல், அதில் கிடைத்த பணத்தை வைத்து அவிநாசிபட்டியில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்தார். அங்கே வீடு கட்டி சக்திவேல், கலைச்செல்வி தம்பதியினர் தங்கி இருந்தனர்.
இதற்கிடையே 2-வது மனைவி வினிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்த விஜய கிருஷ்ணராஜ், கல்லூரிக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். வினிதா தனது குழந்தைகளுடன் கருமனூரிலுள்ள வீட்டில் தங்கி இருந்தார். குடும்ப சண்டை குறித்து ஏற்கனவே திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வினிதா புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து மகன், மருமகளை சமரசப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கிய சக்திவேல், கலைச்செல்வி தம்பதியினர் தீபாவளி பண்டிகையின்போது கருமானூர் சென்று வினிதாவிடம் பேசியுள்ளனர்.
இருவரையும் சேர்த்து வைக்க முயன்றும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் சக்திவேல் கவலை அடைந்தார். மேலும் இருவரையும் அழைத்து பேசி மீண்டும் சேர்த்து வைக்கலாம் என மனைவி கலைச்செல்வியிடம் கூறினார். ஆனால் கலைச்செல்வி மறுத்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஏற்பட்ட மோதலில் கலைச்செல்வி விசைத்தறிக்கு பயன்படுத்தும் இரும்பு ராடால் கணவரை சராமாரியாக தாக்கினார். அதில் தலையின் பின்பகுதியில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த எலச்சிப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கலைச்செல்வியை கைது செய்தனர். தொடர்ந்து சக்திவேலின் சடலத்தை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது கலைச்செல்வி போலீசாரிடம் கூறியதாவது, எனது மகனும் மருமகளும் பிரிந்து சென்ற நிலையில் எனது கணவர் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தார். இதில் எனக்கு விருப்பமில்லாததால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான் இரும்பு ராடால் அவரை தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பின்னர் கலைச்செல்வியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- திண்டிவனம் அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சங்கீதாவின் கணவர் செல்வராஜை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நெகனூர் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் .இவரது மகள் சங்கீதா (வயது28) என்பவருக்கும், திண்டிவனம் அடுத்த செங்கனிக் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்(32) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த சிலநாட்களாக சங்கீ தாவிற்கும் செல்வ ராஜிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்தது. இந்நிலையில் சங்கீதா நேற்று மாலை செங்கனி குப்பத்தில் உள்ள தனது கணவரின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வெள்ளிமேடுப் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்ககு நேரில் சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காகஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் சங்கீதாவின் கணவர் செல்வராஜை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். வரதட்சனை கொடுமையால் சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.
- ஒரே சேலையில் தாய்-மகள் இருவரும் 2 முனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருந்தனர்.
- குடும்ப பிரச்சினைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள வெங்கடாசலபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 30). இவர் தனது தந்தைக்கு உதவியாக இருந்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் முத்துப்பாண்டி என்பவரது மகள் பிரவீனாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1 வயதில் அகிமா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று மகேந்திரன் மற்றும் அவரது பெற்றோர் ஊருக்கு அருகே உள்ள தோட்டத்திற்கு காலையிலேயே புறப்பட்டு சென்றுவிட்டனர். பிரவீனாவும், அவரது குழந்தையும் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். மாலை நேரத்தில் முத்துப்பாண்டி தனது மகள் பிரவீனாவை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள அறையில் ஒரே சேலையில் தாய்-மகள் இருவரும் 2 முனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருந்தனர். இதனை பார்த்த முத்துப்பாண்டி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
தகவல் அறிந்த தேவர்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பிரவீனா, அவரது குழந்தை அகிமா ஆகியோரின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சமீப காலமாக பிரவீனாவுக்கும், மகேந்திரன் மற்றும் அவரது பெற்றோருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதங்கள் எழுந்து வந்துள்ளது. அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரவீனா தனது குழந்தையின் கழுத்தில் சேலையை கட்டி இறுக்கி கொலை செய்துவிட்டு, அந்த சேலையின் மற்றொரு முனையில் தனது கழுத்தை கட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
எனினும் குடும்ப பிரச்சினைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
- சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ஆத்துவழி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த முருகன்(வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவரும், மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த மீனா(27) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா முமீனாள்(6), முகிஷா முமீனாள்(2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே முருகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். சிறிது நேரம் கழித்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு மீனாவையும், 2 குழந்தைகளையும் காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர் வீடுகளில் சென்று தேடிப்பார்த்தார். ஆனால் அவரை காணவில்லை. அவரது வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள ஒருவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தேடிப்பார்த்தார். அப்போது அவரது மூத்த மகள் தியா கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்று மிதந்து கொண்டிருந்த தியா உடலை மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிணற்றில் தேடியபோது அதில் இருந்து மீனாவும், 2-வது மகளான முகிஷாவும் பிணமாக மீட்கப்பட்டனர்.
இதுதொடர்பாக கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், குடும்ப தகராறில் மீனா தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கம்மர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாசி(வயது60). ஓய்வுபெற்ற மின் ஊழியர். இவரது மனைவி பூங்கொடி(55). இவர்களுக்கு பாரதி என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 10-ந்தேதியும் மாசி, பூங்கொடி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பூங்கொடி தற்கொலை செய்யப்போவதாக கூறி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் மாசி, நீ மட்டும் தான் விஷம் குடிப்பியா, நானும் குடிப்பேன் என்று கூறி மனைவியின் கையில் மீதம் இருந்த விஷத்தை அவரும் பிடுங்கி குடித்தார்.
இதில் இருவரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூங்கொடி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கும் மாசிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மாசியும் உயிரிழந்தார்.
குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் விசாரணையில் பெர்த்தோஸ் குடும்ப பிரச்சினை காரணமா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
- செஞ்சி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்எடையாளம் கிராம பஞ்சாயத்துக்குட்ட கடக்கால்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்லா. அவரது மனைவி பெர்த்தோஸ் (வயது 22). இவர் இன்று காலை தனது கைக்குழந்தையுடன் அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்கு சென்றார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் பெர்த்தோஸ் தனது குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்தார். சிறிது நேரத்தில் 2 பேரின் உடல்கள் கிணற்றில் மிதந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெர்த்தோஸ் குடும்ப பிரச்சினை காரணமா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
- அவனியாபுரத்தில் குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- திருமணமாகி 2 ஆண்டில் முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
மதுரை
அவனியாபுரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் 108 ஆம்புலன்சில் மெடிக்கல் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 23). 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகனும், பிறந்து 7 மாதமே ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நேற்று இரவு முத்துலட்சுமி பக்கத்து வீட்டில் டி.வி. பார்த்துள்ளார்.
அப்போது சதீஷ்குமார் மீன் வாங்கி வந்து அதனை சமைத்து தரும்படி கேட்டுள்ளார். அதற்கு முத்து லட்சுமி மறுத்துள்ளார். இதில் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த முத்துலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய புகாரின் பேரில் அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார். திருமணமாகி 2 ஆண்டில் முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்த சம்பவம் அவனியாபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவலிங்கேஸ்வரி கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த 2 மகன்களையும் ஒருவர் பின் ஒருவராக தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார்.
- மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த இந்திர சேனா மனைவி மற்றும் மகன்கள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், நரசராவ் பேட்டை, பெடசெருவு பகுதியை சேர்ந்தவர் இந்திர சேனா. இவருக்கும் ரொம்பி சர்லா, நல்கர்ல பாடு பகுதியை சேர்ந்த சிவலிங்கேஸ்வரி (வயது 27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தம்பதிக்கு சரண் சாய் (8), ஜிதின் (4) என 2 மகன்கள் இருந்தனர். இந்திர சேனா குண்டூரில் உள்ள தனியார் டிராக்டர் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.
இந்திர சேனா திருமணத்திற்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். திருமணத்திற்கு பின்னரும் இந்திர சேனா அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டிக்காததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டபோது இந்திர சேனா, சிவலிங்கேஸ்வரியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவலிங்கேஸ்வரி நேற்று காலை கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த 2 மகன்களையும் ஒருவர் பின் ஒருவராக தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் சிவலிங்கேஸ்வரியும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த இந்திர சேனா மனைவி மற்றும் மகன்கள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப பிரச்சனை காரணமாக சத்குருவிற்கும் தனலட்சுமிக்கும் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
- பிரச்சனை காரணமாக சத்குரு நேரடியாக பிரகாஷின் வீட்டிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடலூர்:
கடலூர் செல்லங்குப்பம் வெள்ளிப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35). இவரது மனைவி தமிழரசி (31). இவர்களுக்கு ஹாசினி என்ற 4 மாத குழந்தை உள்ளது. தமிழரசியின் தங்கை தனலட்சுமி, இவரது கணவர் சற்குரு. இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.
இதில் சற்குரு, தனலட்சுமி ஆகியோர் கடலூர் தேவனாம்பட்டினத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சற்குருவிற்கும், தனலட்சுமிக்கும் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு தனலட்சுமி அவரது அக்கா தமிழரசி வீட்டிற்கு வந்தார்.
இதன் பின்னர் இன்று காலை பிரகாஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த தனலட்சுமியிடம் சற்குரு போனில் பேசினார். பின்னர் சற்குருவுக்கும், தனலட்சுமிக்கும் இடையே உள்ள பிரச்சினை காரணமாக சற்குரு நேரடியாக பிரகாஷின் வீட்டிற்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் சிறிது நேரத்தில் இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.
உடனே சற்குரு தான் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை எடுத்து வீட்டில் இருந்தவர்கள் மீது வீட்டை பூட்டி கொண்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். பின்னர் தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் அந்த இடம் முழுவதும் தீயினால் புகை மண்டலமாக காணப்பட்டது.
இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த முதுநகர் போலீசார் ஆபத்தான நிலையில் அவர்களை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த தீ விபத்தில் தமிழரசி அவரது குழந்தை ஹாசினி, மற்றும் 6 மாத ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. மேலும் தீ விபத்தில் படுகாயம் அடைந்த சற்குரு அவரது மனைவி தனலட்சுமி, தனலட்சுமியின் தாய் செல்வி ஆகியோரை ஆபத்தான நிலையில் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.