search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fingerprint experts"

    • இவரது மனைவி சுகித்ரா அன்னம்புத்தூர் கிராமத்தில் உதவி தலைமை ஆசிரியராக உள்ளார்.
    • திண்டிவனம் டி.எஸ்.பி.அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்பு அருகே உள்ளது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜெயபுரம் கர்ணாவூர் பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால கண்ணன் (வயது 47). இவர் நடுவனந்தல் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி சுகித்ரா அன்னம்புத்தூர் கிராமத்தில் உதவி தலைமை ஆசிரியராக உள்ளார். இவர்களது குழந்தைகளும் பள்ளிக்குச் சென்று விட்டு டியூசனுக்கு சென்று விட்டனர். தலைமை ஆசிரியர் கோபாலக்கண்ணன் காலை பள்ளிக்குச் சென்று விட்டு மீண்டும் இரவு 7.30 மணியளவில் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது வீடு உடைக்க பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே அறைக்கு சென்று பார்த்தபோது அவரது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 25 பவுன் தங்க நகை கொள்ளை போனது தெரிய வந்தது

    .இது குறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். திண்டிவனம் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் கைரேகை மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.மேலும் இந்த கொள்ளை குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதி திண்டிவனம் டி.எஸ்.பி.அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்பு அருகே உள்ளது. மேலும் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியாகும். போலீசாரும் பொதுமக்களும் அதிகம் அளவில் நடமாடும் பகுதியில் கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உரிமையாளர் வேலைக்கு சென்ற நிலையில் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அடுத்த கத் தாரி ஊராட்சி வ.உ.சி. நகர் பகு தியைச் சேர்ந்தவர் வினோத்குமார்.

    இவரது மனைவி நிர்மலா (33). இவர், நாட்டறம்பள்ளி யில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை செய்து வருகிறார்.

    வழக்கம் போல் சம்பவத்தன்று காலை 8 மணிக்கு வீட்டைப் பூட்டிவிட்டு, நிர்மலா வேலைக்குச் சென்றார்.

    வேலைகள் முடிந்து இரவு மீண்டும் வீட்டுக்கு வந்தார்.அப்போது, வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் உள்ள பொருட்கள் சிதறிக்கிடந்திருந்தது. அதிலிருந்த நகை மற்றும் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து நிர்மலா திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழை க்கப்பட்டு இறகுகளை பதிவு செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • சிலம்பரசன் குடும்பத்தினருடன் புதுச்சேரிக்கு குடும்ப நிகழ்ச்சிக்காக சென்று விட்டார்.
    • போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திண்டி வனத்தில் பூக்கடைக்காரர் வீட்டை உடைத்து 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தீர்த்த குளம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35 இவர் திண்டிவனத்தில் பூக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இவர் குடும்பத்தினருடன் புதுச்சேரிக்கு குடும்ப நிகழ்ச்சிக்காக சென்று விட்டார். இந்த நிலையில் பூட்டிய வீட்டில் இருந்து சத்தம் வந்ததை கண்டு அக்கம் பக்கம் தினர் உள்ளே சென்று பார்க்க முற்பட்டபோது சிலம்பரசன் வீட்டில் இருந்து மர்ம நபர் ஒருவர் தப்பி ஓடினார்.

    இதையடுத்து இது சம்பந்தமாக சிலம்பரசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிலம்பரசன் திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் தகவலின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் மர்ம நபரை தேடி தேடினர். மேலும் சிலம்பரசன் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இது சம்பந்தமாக சிலம்பரசன் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×