search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "garbage warehouse fire"

    கோவை மாநகராட்சி குப்பை கிடங்கில் 2 நாட்களாக எரியும் தீயை மேலும் பரவாமல் தடுக்க ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    கோவை:

    கோவை மாநகராட்சியில் குவியும் குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டு மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

    இதனால் அங்கு மலை போல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இந்த குப்பை கிடங்கு அடிக்கடி தீப்பிடித்து எரிவதும் அதனை தீயணைப்பு வீரர்கள் அணைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நேற்று 2-வது நாளாக எரிய தொடங்கியது.

    இதற்கிடையே நேற்று இரவு மீண்டும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ மளமளவென்று பரவியது. இதனால் விண்ணை தொடும் அளவுக்கு புகை மூட்டம் ஏற்பட்டது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இன்று காலையும் தொடர்ந்து தீப்பிடித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதற்காக கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளது.

    தீவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கலெக்டர் ராஜாமணி இன்று காலை வெள்ளலூர் சென்று தீப்பிடித்து எரிந்த குப்பை கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தீயணைப்பு துறை டி.ஜி.பி. காந்திராஜன் நேற்று இரவு கோவை வந்தார். அவர் இன்று காலை வெள்ளலூர் குப்பை கிடங்கு சென்று ஆய்வு செய்தார். இணை இயக்குனர் விஜய சேகர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் 9 மாவட்ட தீயணைப்பு அதிகாரிகள் அங்கு முகாமிட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    9 மாவட்டங்களில் இருந்து 50 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெறுகிறது.

    மேலும் சூலூரில் இருந்து ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் தீ பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது. தீப்பிடித்த வெள்ளலூர் குப்பை கிடங்கை கோவை மாநகராட்சி கமி‌ஷனர் ஷ்ரவன் குமார் ஜடாவத், துணை கமி‌ஷனர் பிரசன்னா ராமசாமி ஆகியோரும் பார்வையிட்டு பணிகளை முடக்கி விட்டுள்ளனர்.
    கும்பகோணம் அருகே கரிக்குளம் பகுதியில் குப்பை கிடங்கில் தீ தொடர்ந்து எரிவதால் 2-வது நாளாக தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே கரிக்குளம் பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கு மற்றும் உரக்கிடங்கு 50 ஏக்கரில் அமைந்துள்ளது. மேலும் 25 ஏக்கரில் உரமும், பிளாஸ்டிக் குப்பைகளும் பிரித்து மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு அங்கு பிரித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியைச் சுற்றிலும் புகை மூட்டமாக காட்சி அளித்தது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவிடை மருதூர் மற்றும் கும்பகோணம் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் தீயை அணைக்க போராடி முயன்றனர். இரவு நேரம் என்பதால் தீ பிடித்த இடத்திற்கு செல்ல முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். இதனால் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் அந்த பகுதியில் உள்ளவர்கள் மூச்சு திணறல் மற்றும் துர்நாற்றத்தினால் அவதிபட்டனர்.

    குப்பை கிடங்கில் தீ தொடர்ந்து எரிவதால் 2-வது நாளாக இன்றும் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீவிபத்தினால் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிபட்டு வருகின்றனர்.

    ×